Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:42:13 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
தலையங்கம்
அனைத்து தலையங்கங்களையும் காண|அனைத்து கருத்துக்களையும் காண
Previous EditorialNext Editorial
தலையங்கம் எண் (ID #) 40
#KOTWEDIT40
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 9, 2011
பொது சேவை: அன்றும், இன்றும்!
இந்த பக்கம் 4757 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நமது முன்னோர் பூமிப்பந்தின் ஒரு கோடியிலிருந்து இக்கடற்கரைப் பட்டினத்திற்கு பல சிரமங்களைப் பொருட்படுத்தாமல் பயணப்பட்டதன் விளைவாக நாம் இன்று பூர்வீக முஸ்லிம்களாக நடமாடிக்கொண்டிருக்கின்றோம். இதில் நம் முன்னோரின் பங்கை நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் தங்களது சொந்த நாட்டில் தங்களது குடும்ப நலன்களை மட்டுமே பார்த்துக்கொண்டு ஒரு தன்னலமிக்க வாழ்க்கையை வாழத் தலைப்பட்டிருந்தால் நமது நிலை என்னவாகியிருக்கும்? அன்று பிறர் விதைத்ததை நாம் இன்று அறுவடை செய்கிறோம்.

நமதூரின் காலச் சக்கரத்தை ஐம்பது வருடங்களுக்குப் பின்னே சுழற்றிச் சென்றால் இன்ற நாம் காணும் காயல்பதியைவிட மிகவும் மாறுபட்டதாக அது இருக்கும்.

கல்வி, சாலை, குடிநீர், வங்கி, அஞ்சலகம் என பொதுமக்களின் அன்றாட வாழ்வின் இயக்கத்திற்கு தேவையான உள்கட்டுமான விஷயங்களில் அன்றைய நம்மூர் பெரியவர்கள், செல்வந்தர்கள், படித்தவர்கள் என மிகவும் தாராளமாக கொடைத்தன்மையுடன் செயல்பட்டதால் அவைகளை நாம் தங்குதடையின்றி தாராளமாக நுகர்ந்துவருகிறோம். இத்தனைக்கும் அன்று செல்வச் செழிப்பு ஓரிருவரிடம் மட்டுமே இருந்தது. ஆனால் பொது விஷயங்களில் கரிசனையும், தாராள மனமும் அனைவரிடமும் இருந்தன.

ஆனால் இன்று... ?

இன்று சராசரியாக அனைவரிடமும் பணப்புழக்கமிருக்கின்றது. அன்றிருந்ததைப் போல் வணிகத்தை மட்டும் சார்ந்திருக்காமல், கல்வியின் வாயிலாக பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளை நமதூர் மக்கள் அடைந்து அனுபவித்து வருகின்றனர். அன்று இலங்கை, ஹாங்காங், வளைகுடா போன்ற நாடுகளில் பணிபுரிந்த நம் மக்கள். இன்று இப்பூவலகின் எல்லாக் கண்டங்களிலும் பரவியிருக்கின்றனர். சுருங்கக் கூறின், இன்று நாம் ஒரு பன்னாட்டுச் சமூகம் என்று கூறிக்கொள்ளலாம்.

உண்மை எது எனில் நாம் புறப்பார்வைக்கு மட்டும்தான் பன்னாட்டுச் சமூகம். பன்னாட்டு வாழ்வியல் அனுபவங்களும், பயணங்களும், விரிந்து பரந்த கல்வி வாய்ப்பும் நம்முடைய சிந்தனையை விரிவாக்கிவிடவில்லை. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் விரவி, பரவி வாழும் முஸ்லிம் ஊர்களோடு நம்மை நாம் அடையாளப்படுத்திக்கொள்வதில்லை என்பது இதற்கு சாட்சி.

நான், எனது வீடு என்பதைத் தாண்டி சராசரி காயல்வாசி சிந்திப்பதில்லை. நானொரு காயல்வாசி என்கிற எண்ணம் நம்முள் தூக்கலாக இருக்கின்றதே, அந்த எண்ணத்திற்காகவாது குறைந்தபட்சம் நாம் உண்மையாக இருக்கின்றோமா? நமது வீட்டின் வாசற்படியைத் தாண்டி வெளியிலுள்ள எந்த ஒரு விஷயத்திற்காகவும் நாம் கவலைப்படுவது மிகக்குறைவு. கல்வி போன்ற விசயங்களில் உதவிப்புரிவதர்க்கு பல செல்வந்தர்கள் காட்டும் தயக்கம், அலட்சியம் இதற்கு சாட்சி.

ஒட்டுமொத்த ஊர் மக்களையும் குறைகூறுவது நமது நோக்கமல்ல. இத்தலையங்கத்தின் நோக்கம் பெருவாரியான மக்களின் அசிரத்தைப் பற்றி பேசுவதுதான்.

உலகெங்கும் பரவி உள்ள காயல் நல மன்றங்களின் அரிய பணிகளை நாம் காண்கிறோம். காயல் நகரில் இருந்து பல நல்ல காரியங்களில் செயல்படும் அமைப்புகளையும் நாம் காண்கிறோம். பொதுப்பணிகளில் தம்மை அர்ப்பணித்து அங்கொன்றும், இங்கொன்றுமாக செயல்படும் தனி நபர்களையும் நாம் காண்கிறோம். அக்காட்சிகள் நம்மை பெருமிதம் கொள்ள செய்கின்றன. ஆனால் உண்மை என்னவெனில் - அவைகள் யானை பசிக்கு சோளப்பொரி என்ற பழமொழி போன்றதுதான். இந்த அவலநிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு நம்மனைவரின் மீதும் உள்ளது.

Previous EditorialNext Editorial
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பொது சேவை: அன்றும், இன்று...

முதல்ல நம்ம எங்க 100 % முஸ்லிம்களாக இருக்கிறோம் . அப்புறம் நமூரில் உள்ள பிரிவினையை முடிவுக்கு கொண்டுவாங்க. அப்புறம் மீதி எல்லாம் தன்னால வரும்


posted by: yoosuf (dubai) on 09 August 2011
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20328

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பொது சேவை: அன்றும், இன்று...

இறைவனின் அதிகாரத்தை நம் கையில் எடுத்து நமது சொந்த சகோதரர்களை பள்ளியில் தொழ தடுப்பதை முதலில் நாம் ஒன்றுபட்டு தடுக்க முன் வர வேண்டும். மற்றவை இறைவனின் அருளால் தானாக சரி ஆகிவிடும்


posted by: SyedAhmed (HK) on 09 August 2011
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 20329

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வெட்கத்தை (நாணம்) உடையவர்களாக வாழ்ந்தால்...........

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நமதூரின் காலச் சக்கரத்தை ஐம்பது வருடங்களுக்குப் பின்னே சுழற்றிச் சென்றால் இன்று நாம் காணும் காயல்பதியைவிட மிகவும் மாறுபட்டதாக அது இருக்கும் என்பது உண்மையே.

ஏன் மாறுபட்டதாக இருந்தது? அன்றைய மக்களில் பெரும்பாலோர் மார்க்கத்திற்கு கட்டுபட்டார்கள், மார்க்க அறிவை கற்றார்கள் , ஹலாலான வருவாய்க்கு மதிப்புக் கொடுத்தார்கள் , பெற்றோர்களையும், பெரியவர்களையும் மதித்தார்கள் , கடைகளிலோ வேறு ஏதும் தொழில் துறைகளிலோ வேலை செய்து வந்தாலும் எப்படியும் நாம் சொந்தமாக ஒரு வியாபாரம் செய்யணும் - வியாபாரம்தான் பரக்கத்தானது என்று முயற்சி செய்தார்கள் அதிலே மிகுதமானவர்கள் வெற்றிக்கண்டார்கள் - மேலும் மக்களிடம் வெட்கம் (ஹயா) என்பது குடிகொண்டிருந்தது.

ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழ்தான் பெரும்பாலோரிடம் :

மார்க்கத்திற்கு கட்டுப்படுவதில்லை, மார்க்க அறிவை முறையாக கற்பது இல்லை ஆனால் மார்க்கம் பற்றி மிக அழகாக பேசுவார்கள். சம்பாத்தியம் ஹலாலா? அல்லது ஹராமா? என்பதைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை வருவாய் வந்தால் சரிதான்.

பெற்றோர்களையும் , பெரியவர்களையும் மதிப்பதில்லை என்பது மட்டுமில்லாது அவர்களுக்கு பிள்ளைகள் / இளைவர்கள் புத்தி சொல்கிறார்கள் ஏன் என்றால் இவர்கள் (உலகக் கல்வியை) படித்தவர்களாம்.

வியாபாரியாக இருந்தவர்கள் , இருப்பவர்கள் அது ஏன் இன்னும் நல்ல நிலையிலே வியாபாரத்தை செய்து கொண்டிருப்பவர்கள் கூட அவர்களுடைய பிள்ளைகள் பெரிய கம்பெனிகளிலோ அல்லது வெளி நாடுகளுக்கோ சென்று சம்பாதிப்பதை கெளரவமாக நினைக்கிறார்கள் ஏன் என்றால் அவர்கள் மேல் படிப்பு படித்திருக்கிறார்களாம்.

இன்று வெட்கம் (ஹயா) என்பது ஈமானில் ஒரு பகுதி என்பதை மறந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

---------------------------------------------------

மக்களே!

பணம் பெரும்பாலோரிடம் இருந்தாலும் அவை இறைவனின் கட்டளைக்கு உட்பட்டு சேர்ந்திருக்கிறதா ? என்பதை பார்க்க வேண்டும்.

எவர் ஒருவர் ஹலாலான உணவு உட்கொள்ளாமலும் "ஹயா" என்னும் வெட்கத்தை பேணாமலும் இருக்கிறாரோ அவரிடம் நாம் எந்த ஒரு நியாயத்தையோ, நேர்மையையோ எதிர் பார்க்க முடியாது. வீண் விதண்டா வாதங்களும் - சர்ச்சைகளும்தான் மிஞ்சும்.

இதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் - சுயமாக சிந்தித்து செயல்பட்டால் - அந்த குடும்பமும் , ஊரும் முன்னேற்றமடையும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் ஹலாலான உணவுகளை உட்கொண்டு , வெட்கத்தை (நாணம்) உடையவர்களாக வாழ்ந்தால் அன்று என்ன இன்றும் ஏன் ? நாளையும் நம்ம ஊர் சிறந்த ஊராகவே திகழும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நமக்கும் நம் ஊருக்கும் நல்ல முன்னேற்றத்தை தருவான் ஆமீன்.

வஸ்ஸலாம்.


posted by: N.S.E. மஹ்மூது (Kayalpatnam) on 10 August 2011
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20332

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:பொது சேவை: அன்றும், இன்று...

நம்முடைய மக்கள் மார்கத்தை இழந்து வருகிரர்ஹல் பணம் சம்பாதிக்கிறேன் என்று. இரண்டாவது, மார்கத்துக்கு அப்பாற்பட்டு ஒரு ஒற்றுமை இருக்க வேண்டும்.


posted by: Rizvan (Jeddah) on 22 August 2011
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20334

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:பொது சேவை: அன்றும், இன்று...

அல்லாஹ் மிக வல்லமை படைத்தவன்.
காயல் முஸ்லிம்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்,

சிரியவனில் நான் செய்த தவறுகள் :

ரமலான் மாதங்களில் தொழுகை நேரங்களில் எனது நண்பர்களோடு uno கார்டும், கேரம் போர்டும், தாம் போர்டும் ,விளையாண்டு நேரத்தை வீணடித்த காலங்களை நினைத்து இன்று வெட்க்க படுகிறேன். அன்று கண்காணிக்க சங்க பொது நபர்கள் இருந்தும் இன்றைய அளவுக்கு சேவைகள் கிடையாது. இந்த விசய்யத்தை பொது நலனாக நினைத்து சிறார்களின் நேர் வளர்ச்சிக்கு காயல் மேம்பாட்டு சங்கம் உதவிடலாமே!

ரமலான் முடிந்து அனுப்பும் செய்தி தான், இருந்தாலும் வரக்கூடிய ஹதிஸ்களில் இதை ஒரு topic ஆஹா எடுத்து பேசலாம். ஒங்கள் குழந்தைகளை கண்காணீயுங்கள் பெற்றோர்களே!

இப்படிக்கு

அரபி அப்துல் சக்கூர்


posted by: arabi abdulsakkur (trichy) on 01 September 2011
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20335

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:பொது சேவை: அன்றும், இன்று...

சற்று தாமதாமான கமண்ட்தான்...இன்றுதான் முழுமையாக படித்தேன்... __________________ ஆசிரியரின் வருத்தம் நியாமனதுதான். ஒற்றுமை நன்மை பயற்கும் என்பதை யார்தான் மறுக்கமுடியும். நலமன்றங்கள் தனித்தனியாக செய்யும் சேவைகளை ஒன்று சேர்த்தாலே பெரிய மாற்றங்கள் சாத்தியம். இதற்காக சில முயற்சியும் மேற்க்கொள்ளப்பட்டது நம்மில் பலரும் அறிவர். தாங்கள் குறிப்பிட்டது போல அன்று செல்வம் ஓரிருவரிடம் இருந்தபோது நல்ல முன்மாதிரியாக இருப்பதில் "போட்டி" நிலவியது. ஆனால் இன்று எது செய்தாலும் எந்த "பார்ட்டி" என்னும் நிலை நம்மிடம் வந்து விட்டது - இது ஓர் வேதனையான உன்மை. CONTEXT -ல் எதையும் பார்ப்பதில்லை - யார் சொல்கிறார் என்பதின் அடிப்படையில்தான் அதன் பொருள் எடுத்துக்கொள்ளப்படும் - இது நம் சமூகத்தின் ஒரு வகையான PHOBIA. எதிலும் ஒத்த கருத்து எற்படுவது நீங்கள் குறிப்பிடும் அந்த காலத்திலும் இருந்தது இல்லை. தண்ணீர் தொட்டி, ஜும்மா, பள்ளிக்கூடம் என தொடங்கி சமீபத்திய பைத்துல்மால் இந்த போட்டியில் உருவான நன்மைகளும் பல உண்டு. நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த 73 கூட்டத்தில், அவர்கள் இலக்கணம் வகுத்துத்தந்த ஒன்றை பேணுவதை விட்டு, 72 யார் என கண்டு பிடிப்பதில் நாம் காலத்தை வீணாக்கி கொண்டு இருக்கும் வரை ஒற்றுமை என்பது மொத்த முஸ்லிம் சமுதாயத்திலுமே வெறும் கானல்நீர்தான். ஏதோ இதாவது நடக்கிறதே என இறைவனுக்கு நன்றி சொல்வோம்..


posted by: M. Sajith (DUBAI) on 13 September 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20336

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved