செய்தி: குப்பை மேட்டை அகற்றித் தந்தால், கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைத்து தரப்படும்! நகர்மன்றத் தலைவர், அதிகாரிகளிடம் 04ஆவது வார்டு உறுப்பினர் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நூறு நன்மைகள் கிடைக்கும். posted byN.S.E. மஹ்மூது (KAYALPATNAM)[30 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12567
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பல வருடங்களாக கிடக்கும் இந்த குப்பை மேட்டை அகற்ற முயற்சி எடுப்பது பாராட்டுக்குரியது.
அதில் சிறுவர் பூங்கா அமைக்கிறீர்களோ! இல்லையோ அந்த குப்பைகளை அகற்றினால் வல்ல அல்லாஹ்! அதற்காக பாடுபடும் அனைவருக்கும் அருள்புரிவான்.
இந்த நிலம் தனி நபர்களுக்கு சொந்தமானது , அதற்கு வழக்குகள் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மைதான் என அறிந்தும் நமக்கு ஏன் இந்த வேலை என்று சும்மா இருந்துவிடாமல், அந்த நிலம் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி ஒத்தக் கருத்தின் அடிப்படையிலே செயல் திட்டத்தை வகுத்து செயல்பட இருப்பது அவர்களின் உயர்ந்த தொண்டுள்ளத்தை பறைசாற்றுகிறது மாஷா அல்லாஹ்!.
-----------------------------------------------
இந்த குப்பை மேட்டை அகற்றி சுத்தப்படுத்துவதினால் நூறு நன்மைகள் கிடைக்கும்.
அந்த இடம் சுத்தமாகும் ..............
அந்த இடங்களை சூழ்ந்துள்ள துர்நாற்றம் நீங்கும் ..........
சுற்றி உள்ளவர்கள் சுகாதாரக்காற்றை சுவைப்பார்கள்............
விச ஜந்துகளின் ஆபத்திலிருந்து பாதுகாப்பை பெறலாம்......
நாய் , பூனை போன்ற மிருகங்களின் தொல்லை நீங்கும்...........
பகலிலும் இருண்ட நிலை நீங்கி வெளிச்சமாகும் .................
கொசுக் கடியிலிருந்து விடுதலை .............
இரவில் ஏற்படும் பயம் அகலும் ............
சுற்றி உள்ள வீடுகளின் ஜன்னல்கள் திறக்கப்படும் .............
அந்த குப்பையினால் பரவக்கூடிய நோய்கள் தடுக்கப்படும்................
அந்த நிலத்திற்காக நடந்துக் கொண்டிருக்கும் வழக்கு முடிவுக்கு வரும்...............
வழக்காடும் இரு தரப்பினரும் அல்லாஹ்! அருளால் ஒற்றுமையாவார்கள்...............
இன்னும்
...............................................
.............................................
...........................................
நூறாவதாக அந்த பகுதியில் குப்பைக் கொட்டும்போது ஏற்படக்கூடிய வசை மொழிகள் ஒழிந்துப் போகும்.
-----------------------------------------
இந்த நூறு நன்மைகளும் ஏற்பட எல்லா முயற்சிகளையும் செய்கின்ற நல்லுள்ளம் கொண்ட உங்கள் அனைவருக்கும் இறைவனின் அருள் குறைவின்றி கிடைக்கட்டுமாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross