Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:10:37 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7146
#KOTW7146
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 31, 2011
நோன்புப் பெருநாள் 1432: சிங்கை கா.ந.மன்றத்தினரின் பெருநாள் ஒன்றுகூடல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3944 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் ‘காயலர் சங்கமம்‘ நிகழ்ச்சி, அம்மன்றத்தின் நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் 30.08.2011 அன்று (நேற்று) 19.00 மணிக்கு நடைபெற்றது.

இதுகுறித்து அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

மகிழ்வான ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாளை முன்னிட்டு, எமது சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் ‘காயலர் சங்கமம்‘ நிகழ்ச்சி, மன்றத்தின் நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் 30.08.2011 அன்று (நேற்று) 19.00 மணிக்கு நடைபெற்றது. ஆர்வத்துடன் வருகை தந்த அனைவருக்கும் துவக்கமாக குளிர்பான வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர் மஃரிப் தொழுகை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றப்பட்டது. ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் தொழுகையை வழிநடத்தினார்.

பின்னர், நீண்ட இடைவெளிக்கும் பின் சந்தித்துக்கொண்ட காயலர்கள் அனைவரும் தமக்குள் மகிழ்ச்சியுடன் கதைத்தனர்.





பின்னர், ‘பெற்றோர் மீது பிள்ளைகளின் கடமைகள்‘ என்ற தலைப்பில் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் இரத்தினச் சுருக்கமாக உரையாற்றினார்.



பொருள் சேர்ப்பதற்காக குடும்பத்தைப் பிரிந்து கடல் கடந்து வந்திருக்கும் நாம், நம்மைப் பிரிந்திருக்கும் பெற்றோரின் மனதைக் குளிர்விக்கும் வகையில் நமது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்… அன்றாடம் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்துக்கொள்ள நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்...

அவர்களின் தேவைகளையறிந்து இயன்றளவுக்கு அதை நிறைவேற்றித் தர ஆவன செய்திட வேண்டும்...

காலையில் விழித்ததிலிருந்து இரவு உறங்கச் செல்லும் வரை இயந்திரத் தனமாக உழைத்துக்கொண்டு, ஓய்வைத் தேடி அலையும் சிங்கை காயலர்களாகிய நீங்கள், ஒரு திட்டம் வகுத்து, அனைவரும் ஒரே இடத்தில் தங்கும் வகையில் உங்கள் சூழலை அமைத்துக்கொண்டால், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் இருக்க அது வழிகோலும் என்பது மட்டுமின்றி, வயது முதிர்ச்சியடையும் காலத்தில் நமது உடல் நலனைப் பாதுகாக்கும் ஒரு கருவியாகவும் அது அமையும்.


இவ்வாறு அவர் உரையாற்றினார்.





பின்னர், ‘தாருத்திப்யான் நெட்வர்க்‘ நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் உரையாற்றினார்.



புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி செவ்வனே செய்து முடிப்பதில் சிங்கை காயல் நல மன்றத்தின் நேர்த்தி, இக்ராஃவின் தலைமைப் பொறுப்பை அனைவரும் பாராட்டும் வகையில் அலங்கரித்த பாங்கு ஆகியவற்றைப் பாராட்டிப் பேசிய அவர், இன்னும் பல நல திட்டங்களைத் தீட்டி, நகர்நலப் பணிகளை தொய்வின்றி செய்ய விரும்பும் இம்மன்ற நிர்வாகத்திற்கு, கருத்து வேறுபாடுகளின்றி அனைத்து காயலர்களும் எல்லா ஒத்துழைப்புகளையும் மனமுவந்து செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



ஹாஃபிழ் அஹ்மத் துஆவுடன் அந்த அமர்வு நிறைவுற்றது.



பின்னர், இரவு உணவு விருந்துபசரிப்பு துவங்கியது. ஹாஜி ‘அமைப்பு‘ ஷம்சுத்தீன் அவர்களின் சமையல் மேற்பார்வையில், ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், செய்யித் முஹ்யித்தீன், உதுமான், ஹஸன் உள்ளிட்ட மன்ற அங்கத்தினர் உணவு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.





அனைவருக்கும் ஸஹன் முறையில் காயல்பட்டினம் களறி சாப்பாடு பரிமாறப்பட்டது. முற்கால நடைமுறைப்படி ஸஹனுக்கு மூவர் என்ற முறையில் விருந்துபசரிப்பு நடைபெற்றது.











நிறைவாக, பெருநாளை முன்னிட்டு சிரமம் பாராமல் இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகளை ஆர்வத்துடன் செய்து தந்தமைக்காக, ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களுக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர். அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

உணவுண்ட பின்னரும் சிறிது நேரம் கலந்துரையாடிய காயலர்கள், மீண்டும் சந்திக்கும் நாளை எதிர்பார்த்தவர்களாக 22.00 மணிக்கு அவரவர் இல்லம் சென்றனர்.

இந்நிகழ்வில், சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஃபாழில் ஜமாலீ, அதே பள்ளியின் இமாமும், அப்பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் மத்ரஸா மிஃப்தாஹுல் உலூம் பாடசாலையின் தலைமையாசிரியருமான மவ்லவீ நஹ்வீ ஏ.எம்.முஹம்மத் இப்றாஹீம் மஹ்ழரீ, ஹாஜி அஹ்மத் ஃபுஆது, இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பைச் சார்ந்த ஹாஜி ஷாஜஹான் உட்பட திரளான காயலர்கள் பங்கேற்றனர். குடும்பத்துடன் வசிக்கும் காயலர்கள் தம் மனைவி, மக்களுடன் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.



இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காயலர்கள் நேற்று காலை 08.00 மணிக்கு சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளி, ஹாஜ்ஜா ஃபாத்திமா பள்ளி, மஸ்ஜித் அப்துல் கஃபூர், மஸ்ஜித் பென்கூலன் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

ஜாமிஆ சூலியா பள்ளியில் பெருநாள் தொழுகையை நிறைவுசெய்த பின் காயலர்கள் தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட காட்சிகள் பின்வருமாறு:-







படங்கள்:
ஹாஜி அஹ்மது ஃபுஆது,
மற்றும்
S.I.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ,
சிங்கப்பூர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நோன்புப் பெருநாள் 1432: ச...
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [31 August 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 7544

அஸ்ஸலாமு அழைக்கும். அன்பின் சிங்கை வாழ் காயலர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள். எங்களது அன்பான அழைப்பை ஏற்று எமது பள்ளியின் இப்தார் ,பெருநாள் போன்ற நிகழ்சிகளில் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.ஜசகல்லாஹு ஹைரா.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரின் நாட்டங்களை நிறைவேற்றி வைப்பானாக ! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நோன்புப் பெருநாள் 1432: ச...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [31 August 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 7546

மாஷாஹ் அல்லாஹ்... சந்தோசமான நிகழ்வு..வாழ்த்துக்கள்.

- கிளியரான போட்டோக்கள்.. பார்க்க பார்க்க பரவசம்.. கலரி கறிக்கு காரம் கொஞ்சம் அதிகமோ..கலர் தூக்கலாக உள்ளதே.

- இந்த ஒற்றுமை, ஒருவர் மற்றவருக்கு உணவை ஊட்டும் நெருக்கம், அனைவர்களின் முகத்தில் பிரதிபலிக்கும் மகிழ்ச்சி, அன்பு நண்பன் பேபி சுஹைப் அவர்களின் (அவனின்) அடக்கம், சகோ. S.K.S உடைய பூரித்த முகம்...etc ..அனைத்தும் கலக்கல்.

- சகனுக்கு 3 நபர்கள் என்று சொல்லிவிட்டு, பால்குடி மறக்காத 2 குழந்தைகளை கணக்குக்கு சேர்த்த மாதிரி தெரிகிறது.

- மச்சான் மொஹுதூம் - பெருநாளைக்கு புதிய சட்டை போடவில்லையா, இரவு போட்ட அதே சட்டைதானா..மனைவி, குழந்தை அருகில் இல்லாத கவலையோ.!!. பலரும் அதே மாதிரி தானோ.

- சகோ. S.K.ஸாலிஹ் அவர்களுக்கு, அங்கு ஒரு நல்ல வேலை அரேஞ் பண்ணி அருகிலே வைத்துக்கொள்ளுங்களேன்.

அனைவர்களுக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

மகிழ்வுடன்,

சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நோன்புப் பெருநாள் 1432: ச...
posted by Magdoom Muhamed (Kish Island - Iran) [31 August 2011]
IP: 217.*.*.* Iran, Islamic Republic of | Comment Reference Number: 7549

Salam to all.

It was memorable holy month of Ramadhan with Suhaib Noohu Alim from HK & SK Salih from Kayal. Last 10days with "Organization" Samsudeen kaka is amazing.

Hi SK Salih, U will not forget the dream world group which is headed by Suhaib Alim.

Thanks to our Mentor Haji Palaym Mohamed Hasan for organizing this event every year.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நோன்புப் பெருநாள் 1432: ச...
posted by vilack syed mohamed ali (Kangxi, Jiangmen , China) [31 August 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 7550

சந்தோசமான நிகழ்வு . வாழ்த்துக்கள். தம்பி உமர் ரிழ்வான் , நீங்க சாப்பாட்டுல , பேபி ஆலிம்சாவோட இருக்கிறியலே , அவரு எல்லாத்தையும் " ரவுண்டு " கட்டியிருப்பாரே ! நீங்க நல்லா சாப்பிட்டியலா?

அப்புறம் , " உலகம் சுற்றும் வாலிபன் " நம்ம S .K .Salih kaka , இப்போ எங்க இருக்கியோ ? இவ்வளவு தூரம் வந்துட்டியோ , அப்புடியே பொடிநடையா ஹாங்காங் பக்கம் வந்துட்டு போங்களேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நான் ஊரில் இருப்பது பிடிக்கலையா?
posted by S.K.Salih (Singapore) [01 September 2011]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 7552

எனது பாசத்திற்குரிய ஜியா காக்காவுக்கு என் மேல் என்ன கோபமோ தெரியலை... ஊரில் இருந்தவாறு நான் வெளியிட்டு வரும் செய்திகள் அவருக்கு போர் அடிசிரிச்சி என்று நினைக்கிறேன்.

I'm on the way to Hong Kong. Dear V.S.M.Ali kaka, pls come to HK Airport to receive me...

S.K.Salih from Singapore Airport.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நோன்புப் பெருநாள் 1432: ச...
posted by MUHAMED SHUAIB (KAYALPATNAM) [01 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7556

அடடேய் ....ஹரீஷ் ..நோன்பு பிடித்தவனுக்கு அல்லவா பெருநாள்....?உனக்கு என்ன பெருநாள் ....?போடோவுக்கு போஸ்கொடுப்பதில் உன்னை மிஞ்ச ஆல் இல்லை...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved