Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:46:48 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 185
#KOTWEM185
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 14, 2015
நான்... நான் மட்டுமே! (Me And Me Only!)

இந்த பக்கம் 3704 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எனது ஒன்பது வயது மகளுக்கு எப்பொழுதும் கையில் ஏதாவது புத்தகம் வேண்டும். பாடப்புத்தகங்களைத் தவிர மற்ற எல்லா புத்தகங்களும் அவளுக்குப் பிடிக்கும். அவளுக்கான உலகம் புத்தகங்களால் சூழ்ந்தது என்பதை அவளது ஆறாவது வயதிலிருந்தே உணர்ந்த நாங்கள், துவக்கத்தில் - அவளது ஆங்கில மொழியறிவுத் திறன் வளர வேண்டும் என்பதற்காக அவள் வயதிற்கேற்ற கதைப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள்... இஸ்லாமிய நூல்கள் என வாங்கிக்கொடுக்கத் துவங்கினோம். அவள் பிடிக்குள் புத்தகங்கள் இருந்த நிலை மாறி, இன்று புத்தகங்களின் பிடிக்குள் அவள் என்ற நிலையாகிவிட்டது.

வாசிப்பு... இன்றைய Genz தலைமுறையால் மறக்கப்பட்ட ஒரு விஷயம். அந்த ஒன்றுக்காகவே அவளை வாசிப்புத் தளத்தில் வளர விட்டோம். ஆனால் இப்போதோ, அவளும் - அவள் புத்தகங்களுமாய் ஓர் உலகத்திற்குள் ஒன்றிவிட்டாள். கவனிக்கப்பட வேண்டிய விஷயமாய் அது இன்று எங்கள் கண்களை உறுத்துகிறது.

அது சரி! அது என்ன Genz தலைமுறை? 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்களே Genz தலைமுறையினராம். அதற்கு முந்தைய தலைமுறை (1975 - 1995) Geny தலைமுறையினராம். அதற்கும் முன்னாள் உள்ளவர்கள் Genx தலைமுறையினர். (நீங்கள் இவற்றில் எதில் சேர்த்தி???)

இந்த Genz தலைமுறைப் பிள்ளைகள் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்கும் (multi tasking) திறன் கொண்டவர்களாம். அதாவது முன்பெல்லாம் ‘தசாவதாணி... சதாவதாணி’ என்று சொல்வார்களே அதுபோல இவர்களை ‘பாஞ்சாவதாணி’ (‘பாஞ்ச்’ என்றால் இந்தியில் ஐந்து என்றுதானே பொருள்?)



இவர்களின் இயல்புகளாக என்னென்னவோ பாஸிட்டிவ் பாய்ண்ட்டுகளைச் சொல்கிறார்கள். கையில் ஃபோனுடன் வாட்ஸ்அப்பில் சேட் செய்துகொண்டே எப்படி பாடத்தையும் படிக்கிறார்கள்? ஆச்சரியமாக இருக்கிறதே? நானெல்லாம் ப்ளஸ் 2 படித்தபோது ஒரே பாடத்தை மாய்ந்து மாய்ந்து நூறு முறைகளாவது படித்துவிட்டு, ரிவிஷன் எழுதி எழுதிப் பார்த்தும் திருப்தியடையாமல், “பப்ளிக் எக்ஸாம்ல ஒழுங்கா மார்க் ஸ்கோர் பண்ணுவோமா...?” என்று டென்ஷனாக இருந்தவள். ஆனால் இந்தப் பிள்ளைங்களோ... காலையில் தேர்வு என்றால் முந்திய இரவில்தான் புத்தகத்தையே தொடுகின்றனர்! இந்த அலட்சியம் எங்கிருந்து வந்தது?

என் நான்கு வயது மகனைப் பார்த்து, “எப்பப் பார்த்தாலும் என்ன கம்ப்யூட்டர்...?” என சப்தமிடும் என் உம்மாவை, “ம்..மா... ஒனக்கு ஒன்னும் தெரியாது! கொஞ்சம் பேசாம இருக்கியா?” என்று அதட்டுகிறான். சென்ற ஆண்டு வரை பேசத் தெரியவில்லையே என்று கவலைப்பட்ட எங்களுக்கு, இன்று இவன் பேசுவதைப் பார்த்து சிரிப்பதா, கவலைப்படுவதா என்று தெரியவில்லை.



இரவெல்லாம் விழித்திருந்து, ப்ளைன் டீ போட்டு, தூக்கம் தொலைத்துப் படித்த நம் காலங்கள் எங்கே...? இப்போதுள்ள பிள்ளைகளோ, நாளைக்கு பப்ளிக் எக்ஸாம் என்றால் கூட, அதையும் ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று எடுத்துக்கொள்ளும் கூ.......ல் தலைமுறையினர். எதக்கும் பதற்றப்படுவது Genzஇன் குணமல்லவாம்! ஆமாம்! பாய்ஞ்சு... பாய்ஞ்சு படிச்சிட்டு... காலையில எக்ஸாம் போற அவசரத்துலயும் மாமாக்கு... மாமிக்கு என்று உறவினர்களுக்கெல்லாம் ஃபோன் செய்து (அப்போ லேண்ட்லைன் ஃபோன் மட்டும்தான்!), “நான் பப்ளிக் எக்ஸாம் எழுதப்போறேன்... துஆ செய்ங்க மாமி...” என்று சொன்னது ஒரு காலம்... இன்றோ, எது எதுக்கெல்லாமோ மொபைல் ஃபோனைப் பயன்படுத்தும் நம் பிள்ளைகளிடம், “உறவினர்களுக்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லிட்டு போங்க” என்று சொன்னால், கரண்டியும் கையுமா நிக்கிற நம்மள ஒரு காமெடி பீஸாகவே பார்க்கிறாங்க! அவங்க ஏதாவது நல்ல மார்க் வாங்கி அதை நாம பெருமையா வெளியில சொன்னோம்ன்னு தெரிஞ்சா அவ்வளவுதான்! சீறிக்கிட்டுப் பாய்ஞ்சு அடிக்கிற குக்கர் விசிலைக் கரண்டியால் தலைல தட்டி அடக்குற மாதிரி “ம்...ம்...மா......”ன்னு ஒரே வார்த்தையில நம்மள அடக்கி வச்சிடறாங்க! ஆனா, எல்லா உம்மாக்களுக்குமே - ஈன்ற பொழுதின் பெரிதுவக்க ஆசை இருக்காதா என்ன? அதற்காகத்தானே இந்தப் பன்னிரண்டு வருஷங்களும் பாடாய்ப்படுத்திப் படிக்க வைக்கிறோம்...?

Genz தலைமுறை டெக்னாலஜியில் எங்கேயோ போயிருக்காம்... மறுக்கவில்லை! எங்கோ அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் அரங்கேறும் கலாச்சார மாற்றங்கள் இங்கிருக்கும் ஆண்டிப்பட்டிகளின் உள்ளங்கைகளுக்குள் வந்து ஒரே நிமிடத்தில் தஞ்சம் புகுந்து விடுகிறது. ஒன்றை வினாடியில் உலகமே என் கைக்குள் என தானும் தன் மொபைலுமாய்... Me and me only என்ற செல்ஃபி தலைமுறையும் இந்த Genzஇன் அடையாளம்.



ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தபோது, என் தோழியின் மகள், கூட்டம் நெட்டித் தள்ளிக்கொண்டிருந்த ஏணிப்படியில் நின்றுகொண்டு, தன் தோழியுடன் செல்ஃபி க்ளிக்கிக் கொண்டிருந்தாள். சுற்றியிருக்கும் கூட்டம், அவர்கள் படமெடுத்து முடிக்கும் வரை நெரிசலில் காத்திருக்கும் கூட்டம் என எதையும் அவர்கள் பொருட்படுத்தவேயில்லை. நான்... நான் மட்டுமே என்ற ஒரு கூண்டுக்குள்தான் மகிழ்ச்சியோ, துக்கமோ என எல்லாமுமான அவர்களின் உலகம் அடங்கி விடுகிறது.



இந்தத் தலைமுறை பிள்ளைகளுக்கு உறவுமுறைகள் பற்றிய புரிதலும் இல்லை; புரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் இல்லை. தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ... வீட்டிற்கு வரும் அனைத்து ஆண்களுமே அவர்களுக்கு ‘அங்கிள்’கள்தான்! பெண்கள் எல்லாம் ‘ஆண்ட்டி’கள்தான்! எனது முப்பதுகளில், நான் சென்னைக்கு வந்த புதிதில், பக்கத்து ப்ளாட்டிலிருந்த இருபத்து இரண்டு வயது பெண் என்னைப் பார்த்து ‘ஆண்ட்டி, ஆண்ட்டி’ என்று என்னை அழைத்ததும், பூமியே பிளந்து என்னை உள்வாங்கிக்கொண்டது போன்ற அதிர்ச்சியைச் சந்தித்தேன். அது ஒரு காலம்! இன்றோ அது பழகிப்போய்விட்டது.

நமது இளமைக் காலத்தில், நம் உறவுமுறைகளில் இல்லாதவர்களைக் கூட, ‘மாமி’, ‘சாச்சி’, ‘பெரிமா’ என வாயார உறவுமுறை சொல்லியழைத்து நெருக்கமாக்கிக் கொண்டது நம் நினைவூஞ்சல்களில் அழியாத காவியங்கள்... ஆனால் இன்றோ... உறவினர்களே வந்தால் கூட, ஆமை ஓட்டுக்குள் தலையைப் புகுத்திக்கொள்வது போல அறைக்குள்ளேயே தங்களைப் புதைத்துக்கொள்கிறார்கள்.

தொலைவிலிருக்கும் உறவுகளை அருகில் இணைப்பதாகத்தான் தொலைபேசி நமக்கு அறிமுகமானது. தொலைபேசி வழி சப்தங்களின் ஊடாக உறவுகளின் உணர்வுகளை உணர்ந்தோம். இன்றும்... குடும்ப பாரங்களை முதுகில் சுமந்துகொண்டு, பாலைவனப் பெருவெளியில் பாடுபடச் சென்றிருக்கும் பலரது வாழ்க்கை தொலைபேசியிலேயேதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘தொலைபேசி’ என்று ‘அலைபேசி’யானதோ அன்றே - அருகிலிருக்கும் உறவுகளெல்லாம் ஆளுக்கொரு திசையாய் ஃபோனில் மூழ்கிக்கொண்டு தொலைவில் சென்றுவிட்டனர்.

“இன்றைக்கு வீட்டில் பூரி... கிழங்கு... ம்... யம்மி!” என்று ஸ்டேட்டஸ் தட்டும் Genz தலைமுறையினர், அந்த பூரியையும், கிழங்கையும் கால் கடுக்க நின்று செய்த ‘மம்மி’யின் கரம் பற்றி ‘நன்றி’ ஒன்று ஒரு வார்த்தை...??? “நல்லாயிருக்குமா...” என்று அங்கீகரிப்பதெல்லாம் கொஞ்சங்கொஞ்சமாய்த் தொலைந்து வரும் நாகரிகங்கள்... என்று டெக்னாலஜியின் பிடிக்குள் சிக்கிய ஓர் உலகத்திற்குள், திருவிழாவில் தொலைந்த குழந்தை போல என்ன செய்வதென்று தெரியாமல் நாம் தேங்கி நிற்கின்றோம். ஈர்க்கும் இரு எதிர்த்துருவங்களாய்ப் பிணைந்திருக்கும் அவர்களையும் - டெக்னாலஜியையும் பிரிப்பதற்கு என்ன வழியென்று நாம் ஆராய வேண்டியதில்லை.

வெள்ளமாய் ஓடிவரும் மிகை நீரைப் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தோடச் செய்யும் வாய்க்காலை வெட்டுவது போல, தொழில்நுட்பத்துடனான அவர்களது உறவு போகும் பாதையை வேறு வழியில் திசை திருப்பிட வேண்டும். இந்த டிஜிட்டல் யுகம் இஸ்லாமை மூலை முடுக்குகளிலெல்லாம் கொண்டு சேர்க்கும் வேலையை மிகச் சிறப்பாய்ச் செய்து வருகிறது. பர்மா முஸ்லிம்களின் துயரத்தைப் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது... சிரியாவின் ஐலன் குர்த்தியை ஐ.நா. வரை அடையாளம் காட்டியது... ஃபலஸ்தீனத்தின் பதற்றச் சூழலை நமது ஒவ்வொரு துஆவிலும் இடம்பெறச் செய்தது... மாட்டுக்கறி அரசியலைக் கூட பாமரன் வரை கொண்டு சேர்த்தது... இப்படி அனைத்துமே இத்தொழில்நுட்பத்தால் சாத்தியமெனில், இதன் துணைகொண்டு மவுனப் புரட்சிகளை வெடிக்கச் செய்திட - அதற்கான செயலிகளையும். செயல்திட்டங்களையும் உருவாக்கும் நுண்ணறிவும், செயல்திறனும் கொண்டவர்களாய் அவர்களை உருவாக்கிக் கையாளுதல் நம் கரங்களில்தான் உள்ளது.

அழைப்புப் பணிகள், ஆன்மிகப் பணிகள் ஆகியனவற்றை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டுமெனில், இன்றைய இளைய தலைமுறையினரின் Genz வேகம் நமக்கு அவசியம். சமூகப் பங்களிப்புகளில் தடைகளைத் தாண்டி இலக்கை அடைய, அவர்களின் ‘ஜஸ்ட் லைக் தட்’, ‘கூ.......ல்’ மனப்பான்மை மிகவும் அவசியம்.

“நான்... நான் மட்டுமே!” எனும் கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் அவர்களை, “நானும், எனது சமூகமும்” என்ற கோட்டின் வெளிநின்று, உலகைக் காட்டும் வழிகாட்டிகளாய் நாம் களமிறங்குவோம்! அவர்களது தளங்களில் அவர்களோடு கைகோர்த்து இயன்ற வரை நாமும் சளைக்காது ஓடுவோம்!!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...தலைமுறை இடைவெளியை தலைமுழுக வைத்து விட்டது,
posted by: A.R.Refaye (Abudhabi) on 15 December 2015
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42412

சம காலம் !!!! பெற்றுடுத்த செல்வன் ஐலனை காப்பாற்ற கடல் நீரில் மிதக்க விட்டாள் சிரியாவின் அன்னை ஒருவள் ,யூனுஸ்சை பெற்றுடுக்க வெள்ள நீரில் மிதந்தாள் சென்னை சித்ரா தமிழன்னை

புரியாமல் தவிக்கிறேன் இவர்கள் எந்த தலைமுறை Genz, Geny, Genx ???

ஒன்று மட்டும் உறதி சீறிப்பாய்ந்த வெள்ளத்தை மக்களின் உள்ளங்கள் தலைமுறை இடைவெளியை தலைமுழுக வைத்து விட்டது,

எல்லா தலைமுறை இடைவெளியும் முதல் முறையாய் தமிழ் தாயின் தலை ஊரில் தகர்ந்தே போனதே!!

ஆடிப்போன சென்னையும் ,கடலூரையும் தூக்கி பிடித்த தமிழர்களின் கரங்களை கண்டு உலகமே வியக்கும் விந்தை தலைமுறைகளை கடந்ததல்லவா.

கட்டுரையாளர்க்கு பாராட்டுக்கள்!!!

A.R.Refaye-அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: Musthafa MIN (Dubai-UAE) on 15 December 2015
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42414

Assalamu Alaikum,

Interesting Article. first time come to know about this Gen XYZ. I'm in Gen Y category. now the Gen Z kids are own tabs and pads. they are learning alphabets,numeric s and rhymes through tabs. the app which is most popular among Gen Z kids is YouTube. they clearly open YouTube without their parents help. is technology boon or bane? confusion exist.

Regards,
Musthafa MIN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3.
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 15 December 2015
IP: 37.*.*.* | Comment Reference Number: 42417

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

நம் சுற்றுச்சூசலோடு நாம் உரையாடிக்கொன்றுக்கும்போது நம்மோடுடிருக்கும் குழந்தைகளுக்குமத்தியில் நாம்,நாமென்பதைவிட்டுவிட்டு பகிர்ந்துகொள்ளும்விஷயங்கள் எப்படியோ அதன்படியே குழந்தைகள் பிரதிபலிக்கும் என்பது மறைந்து நான் நீ அவன்/அவள் என்று ஆகும் போது குழந்தைகளும் தான் என்ற ஒருஉலகத்தை நாடுகிறது அப்பொழுது உறவுகளை உலகத்திற்குத்தகுந்தார் போல் தன்னைமாற்றிக்கொள்கிறது அதாவது நமக்குப்பழகிய அழகுதமிழ் உறவுச்சொற்கள் கொடியறுந்து கொக்கியில் ஒற்றைப்படையில் தொங்குகிறது அதாவது நீங்கள் (ஆசிரியை) குறிப்பிட்டுள்ளது போல் மும்மி,டாடி,அங்கிள்,ஆண்ட்டி ஈ ஆகிவிடுகிறது.

சமூகமே உலகைத்தனக்குத்தகுந்தாற்போல் வளைத்துக்கொள்கிறது உலகம் சமூகத்தை வளைப்பதில்லை,முகமன்கள் வெறும் பெரும்பாலும் முகஸ்துதியாகிவருகிறது என்பதை மறுப்பதற்கில்லை

ஜீன்களில் மாற்றம்வருவதில்லை ஆனால் ஜெனரேசனில் ஏன்மாற்றம்வருகிறது .எல்லாம் அறிவியலாளர்கள் புதுப்புதுகண்டுபிடிப்புகளென்று தம்மைவெளிப்படுத்திக்கொள்ள Genx,GenY,Genz என்று வரிசைப்படுத்தி பிரிக்கிறார்கள் இன்னும் பிரிக்கவிருக்கிறார்கள் Alphas,BetaS,GamaS என்று பிரித்துக்கொண்டேபோவார்கள்

இறைவன் சொல்கிறான் உங்களை நாம் ஒரே உடலிலிருந்து படைத்தோம்

இறைவன்படைத்த ஒன்றை மனிதன் பிரிக்கும்போது பலப்பலவிஷங்கள் மறைந்துகொண்டேபோகின்றன அறிவியல் வளர்ச்சிதேவைதான் நம்மைஅடகுவைக்குமளவிற்கல்ல

ஒரு ஆற்றைக்கடக்க படகிலும் பயணிக்கலாம் பாலத்தின்மேலிருந்தும்கடக்கலாம் காலவித்தியாசமிருக்கலாம் ஆனால் கடப்பது ஆற்றைத்தான் செவ்வாய்க்கிரகத்தையல்ல

நமது பள்ளிக்கல்விப்பாடங்களில் அன்பு என்ற ஒரு தனிப்பாடத்தை ஆரம்பபக்கல்வியிலிருந்து எத்தனை உயர்கல்விக்குச்சென்றாலும் அன்பு என்ற பாடத்தின் தொடர்ச்சியிருந்துகொண்டேயிருக்கவேண்டும் அப்பொழுதுதான் சமூகப்பினைப்பும் உறவுகளும் உயிரோடுவாழும். உதாரணத்திற்கு சென்னையின் மழைப்பேரிடர் சம்பவம் உலகம் சமூக உறவுகளை உற்றுனோக்கவைத்தது நமக்குள் எத்தனை சுமூகத்தை உண்டாக்கியது அல்ஹம்துலில்லாஹ்.

ஏ பார் ஆப்பிள் என்று இருக்கிறது,

அ என்றால் அன்பு என்று இல்லை

"மறைந்த நம் முன்னாள் குடியரசுத்தலைவர் அறிவியலறிஞர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் தனது அக்னிச்சிறகில் இப்படிச்சொல்லியிருக்கிறார் நீங்கள் நல்ல அறிவுசார்ந்த நூல்களைத்தேர்ந்தெடுத்துப்படித்துவந்தால் சில ஆண்டுகளில் ஒரு அறிவாலியாகிவிடமுடியுமென்று" ஆனால் அது உலக அறிவுசார்ந்ததாக மட்டுமிருந்து பயனில்லை அதில் இறையாண்மையும்,வலுவான அறநெறிகளும் அன்பும் மலிந்திருக்கவேண்டும் என்பது எனது கருத்து..

அறிவியல் உலகின் தந்தைஎனப்படும் ஐன்ஸ்டீன் சொன்னார் ஜெர்மானியர்கள் அனுகுண்டைதயாரிப்பதற்குமுன் நாம் தயாரித்துவிடவென்டுமென்று அமரிக்க அரசைத்தூண்டினார் இதில் இறையாண்மை எங்கே இருக்கிறது அவர் இப்படிச்சொல்லியிருக்கவேண்டும் உலகத்தை பேரழிவிலிருந்து நாம் பாதுகாக்கவேண்டும் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.

மாஷா அல்லாஹ் ஆசிரியர் உம்மு நுமைரா M.A., M.Phil., (P.hD.)] அவர்கள் மிக அழகிய எளிய நடையில் கட்டுரையைதொய்வில்லாமல் தந்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் தனது பில்லைகளைவைத்தே அவர்களின் அனுகுமுறைகளைக்கொண்டே அழகுபடுத்தியிருக்கிறார் மப்ரூக் உங்களிடம் இன்னும் இதுபோன்ற நல்ல படைப்புகளை எதிர்பார்ப்பவனாக இன்ஷா அல்லாஹ்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...சொலுஷன்
posted by: AbdulRazak (Chennai) on 17 December 2015
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42455

நல்ல கட்டுரை, தீர்வுகள் (solutions ) இன்னும் விரிவாக அலசப்பட்டிருந்தால் அருமையிலும் அருமை.

இதில் குழந்தைகளை குறை சொல்ல ஒன்றும் இல்லை. நாம்(பெற்றோரும்,சமூகமும்) பூனையை காட்டி யானை என்று சொன்னால் அது அப்படித்தான் சொல்லும். மாமியை பார்த்து மம்மி என்று கூட சொல்லும் , Short ஆக இருக்கிறது என்பதற்காக , அதான் ஆல்ரெடி மம்மிதான் மம் என்றாக்கப்பட்டு விட்டதே.. இன்னும் Short ஆக "ம்" என்று மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஆசிரியர் கவனத்திற்கு,

இதுபோன்ற கட்டுரைகளில் தீர்வுகள் பலமாக அலசப்படும் போது இதன் பலன் பன்மடங்காகலாம் இன்ஷா அல்லாஹ்.. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள், தீர்வுகளை மட்டும் இதன் தொடர்ச்சியாக கூட எழுதலாம்..

இது போன்ற பயன்தரும் கல்வியை விட்டுச்சென்று அதை மற்றவர்கள் பார்த்து பலனடையும் போது அந்த நன்மை நம் மௌத்திற்கு பிறகும் பலன் தரும் என்பது ஆசிரியருக்கு அறியாத ஹதீஸ் ஒன்றுமில்லை..

அலசப்பட வேண்டியது "நாம்(பெற்றோரும்,சமூகமும்) இதற்கு செய்ய வேண்டியது என்ன?"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அழகிய பதிவு...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) on 17 December 2015
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 42463

கால மாற்றத்தில் கடந்து வந்த சூழலை கண்ணாடி போல் பிரதிபலிக்கச் செய்யும் அருமையான கட்டுரை!

படு வேகமாக சுழலும் உலகின் ஓட்டத்திற்கேற்ப ஈடுகொடுக்க நான்கு பதிற்றாண்டுகளுக்கு முன்னர் பிறந்த நாம் தினறத்தான் செய்கின்றோம். நவீன யுகத்தின் நரம்புகள் பின்னிய நாகரீகத் தொட்டிலில் வளரும் தலைமுறையைப் பார்த்து நாம் வாய் பிளந்து நிற்கத்தான் முடியும்.

நான்கு வயது குழந்தை அலைபேசியில் ஆண்ராய் சிஸ்டத்தில் புகுந்து விளையாடுவதை எண்ணி பெருமை படுவதா? இல்லை அந்த வாய்ப்பு அன்று நமக்கு கிட்வில்லை என எண்ணி ஆதங்கப்படுவதா? என்று தெரியவில்லை! என்னதான் ஐ பேட் ஆளுமை கூடினாலும் நம் நாட்டில் சிறார்களுக்கு புத்தகச் சுமை இன்னும் குறைந்தபாடில்லை!

தெளிவான எழுத்து நடை, பொருத்தமான வார்த்தைகள், ஆழமான கருத்துச் செரிவு ஆக மொத்தத்தில் அழகிய பதிவு! ஆசிரியைக்குப் பாராட்டுக்கள்...!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved