Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:39:50 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 201
#KOTWEM201
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 9, 2016
விருந்தோம்பல் செய்வோமா...?

இந்த பக்கம் 2929 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வாய் கொழுப்பு சீலையில் வடிந்த கதை உங்களுக்கு தெரியுமா?

ஒரு யாசகர் தினமும் தான் வசிக்கும் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மதிய வேளையில் செல்வது வழக்கம்.

அப்போது ஒவ்வொரு வீடாக சென்று, “அம்மா... தாயே... சோறு போடுங்கம்மா...”ன்னு கேட்பாராம்.



ஒரு நாள் அவ்வாறு ஒரு வீட்டில் கேட்டபோது, “இன்னும் சோறு வடிக்கல! கொஞ்சம் பொறுங்க!!”ன்னு வீட்டிலுள்ள அம்மா சொன்னாங்களாம்.

அதற்கு அந்த யாசகர், “எவ்ளோ நேரம் நிப்பேன்...? அடுத்த வீடு போக வேண்டாமா...?” அப்படி இப்படின்னு கொஞ்சம் கூடுதலா பேசிட்டாராம்.

இதைக் கேட்ட வீட்டிலிருந்த அம்மா வெந்து கொண்டிருந்த சோற்றிலிருந்து வடிக்காமலேயே எடுத்து வந்து யாசகர் நீட்டிய சீலையில் போட்டாராம்.

சீலையில் வடிந்த கஞ்சியின் சூடு பொறுக்காமல் “ஃபூ”, “அஃபூ”னு ஊதிக்கொண்டே நடந்து செல்ல, அவரை வீதியில் பார்த்த ஒருவர் என்னவென்று கேட்டதற்கு, “வாய் கொழுப்பு சீலையில் வடியிது!”ன்னு அந்த யாசகர் சொன்னாராம்.

என்ன, கதை புரிந்ததா?

இப்போ விசயத்திற்கு வருவோம்...

முப்பது வருசத்துக்கு முன்னாடிலாம் கதையில் சொன்னது போல நிறைய யாசகர்கள் இவ்வாறு நம் வீடுகளுக்கு வந்து போவது சகஜம். பள்ளிக்கூடத்திலிருந்து மதிய உணவுக்கான பெல்லடித்ததும் வீதிகள் தோறும் இதை நமதூரில் அன்று காண முடிந்தது.

ஒவ்வொரு வீட்டுலயும் ஆளாளுக்கு தாம் சமைத்ததிலிருந்து ஒரு பிடி சோத்தைக் கொண்டுபோய் மிஸ்கீன்களுக்குக் கொடுப்பார்கள். யாசிப்பவரோ சோற்றின் அளவு கூடிவிட்டால், “கொஞ்சம் கறிப்புளி ஏதேனும் கொடுங்கம்மா”ன்னு தேவைக்கேற்றார் போல மெனுவை மாத்துவார்.



குளிர் சாதனப் பெட்டி வீடு வீடாக வரத் துவங்கியது முதல், இன்று அக்காட்சிகள் வெகுவாக குறைந்து போய்விட்டன. அது முதல் உண்மையிலேயே மிஸ்கீன்களாக அப்பெட்டிகள்தான் இன்றுவரை இருந்து வருகின்றன. “பிச்சைக்கார பெட்டி” என்ற இன்னொரு சிறப்பும் இப்பெட்டிக்கு உண்டு.



உணவில் மிஞ்சியதையெல்லாம் பத்திரமாக அப்பெட்டிக்குள் பூட்டி வைப்பது நிகழ்கால வழமையாகவே மாறிவிட்டது.
விளைவு வீடுகளுக்கு வரும் மிஸ்கீன்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது.

“நீ நல்லா இருப்பேமா...” என அடிமனதிலிருந்து இறைஞ்சுதலாக வேண்டிச் செல்லும் யாசகர்கள் குறைந்ததாலோ என்னவோ - “என்கிட்டேர்ந்து எடுத்து எடுத்து சாப்பிட்டால் நீ நல்லாவே இருக்க மாட்டா...!” என்ற குளிர்சாதனப் பெட்டிகளின் கூக்குரல் பல்வேறு நோய்கள் உருவில் நம்முடலைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன.



அறிந்தோருக்கும், அறியாதோருக்கும் விருந்தோம்பல் செய்வது மனித நாகரிகத்தில் பன்னெடுங்காலமாகவே இருந்து வருகின்ற ஒன்றாகும். நம் மார்க்கத்தின் தந்தை செய்யிதினா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் காண்பதற்காக இறைச் செய்தியுடன் வந்த வானவர்கள் பற்றி இறைமறைவசனங்கள் பின்வருமாறு கூறுகின்றன.

11:69 மேலும் (பாருங்கள்!) நம்முடைய வானவர்கள் இப்ராஹீமிடம் ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தார்கள்; “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்!” என்றார்கள். அதற்கு, “உங்கள் மீதும் சாந்தி நிலவுக!” என்று இப்ராஹீம் பதிலளித்தார். பிறகு சிறிது நேரத்திற்குள் (அவர்களுக்கு விருந்தளிப்பதற்காக) வறுத்த கன்றின் மாமிசத்தைக் கொண்டு வந்தார்.

மற்றுமொரு அத்தியாயத்தில்:

51:24 (நபியே!) இப்ராஹீமிடம் வந்த கண்ணியத்துக்குரிய விருந்தாளிகளின் செய்தி உமக்குக் கிடைத்ததா?

51:25 அவர்கள் அவரிடம் வந்தபோது, “உம்மீது சாந்தி நிலவட்டும்!” என்று அவர்கள் கூறினார்கள். அவர் கூறினார்: “உங்கள் மீதும் சாந்தி நிலவுக! அறிமுகமில்லாத ஆட்களாக இருக்கிறார்களே!”

51:26 பின்னர், அவர் சந்தடியில்லாமல் தம் வீட்டாரிடம் சென்றார்; (பொரிக்கப்பட்ட) கொழுத்த காளைக்கன்றைக் கொண்டு வந்து

51:27 அதனை விருந்தினர் முன்வைத்தார். பிறகு கூறினார்: “சாப்பிடாமல் இருக்கின்றீர்களே!...”


என அருள்மறை உரைக்கின்றது.

யாரென்றே தெரியாதவர்களுக்கு விருந்து படைத்த நம் தந்தை அவர்களிடம் எத்தனை முன்மாதிரிகள் உள்ளன.

அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விருந்தோம்பலிலும் பற்பல முன்மாதிரிகள் நமக்குண்டு. யாராவது ஒரு புதியவர் நபியவர்களைக் காண வந்து விட்டால் உடனடியாக தம் மனைவியரிடம், “அவர்களுக்கு உணவளிக்க ஏதேனும் உண்டா?” எனக்கேட்டு அதற்கான ஏற்பாட்டையும் செய்வார்கள். உணவருந்திய பின்னரும் வெகுநேரம் நபி கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் இல்லத்திலிருந்து பேசிக்கொண்டிருந்த நபித்தோழர்கள் குறித்து கூறும் இறைவசனம் பின்வருமாறு:

33:53 நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் அனுமதியின்றி நுழையாதீர்கள்;உணவு தயாராகும் நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டும் இருக்காதீர்கள். ஆனால், நீங்கள் உணவு உண்பதற்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்லுங்கள்; சாப்பிட்டு முடிந்ததும் பிரிந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஈடுபட்டு விடாதீர்கள்; உங்களுடைய இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், வெட்கத்தின் காரணத்தால் உங்களிடம் அவர் எதுவும் சொல்வதில்லை. ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.

நபியவர்கள் போன்றே நபித்தோழர்களில் பலரும் தம்மிடம் இருந்தபோதும் இல்லாதபோதும் தாம் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் அதிகமதிகம் விருந்தோம்பல் செய்தது பற்றி ஹதீஸ்களில் ஏராளமாக காணக்கிடைக்கின்றன.

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபித்தோழர் ஒருவரின் விருந்தோம்பல் பற்றி அறிவிக்கும் சுவாரஸ்யமான செய்தி இதோ:

ஒருமுறை ஒருமனிதர் நபிகளாரின் அவைக்கு வந்து தாம் கடுமையாக பசித்திருப்பதாகவும் தமக்கு உணவளிக்குமாறும் வேண்டினார். அதற்கு காருண்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் தம் மனைவியரிடம், “ஏதேனும் இருக்கிறதா?” என வினவியதற்கு நம்பிராட்டிமார் ஒவ்வொருவரும், “சத்தியத்துடன் உங்களை அனுப்பி வைத்த அல்லாஹ்வின் மீதாணையாக வீட்டில் கொடுப்பதற்கு தண்ணீரைத் தவிர வேறொன்றுமில்லை!” எனக் கூறியதையடுத்து, “யார் இவருக்கு உணவளிக்கிறாரோ அல்லாஹ் அவர் மீது கருணை புரிவான்!” என நபிகளார் கூற, அன்சாரித் தோழர் ஒருவர் அவையிலிருந்து எழுந்து தாம் அவரை தம்வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

பின்னர் அந்த நபரை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று தம் மனைவியிடம், “விருந்தாளிக்கு உணவளிக்க ஏதேனும் உள்ளதா?” எனக் கேட்டார்.

அதற்கவர், “குழந்தைகளுக்கென வைத்துள்ள ஒரு சிறு அளவைத்தவிர வேறொன்றும் வீட்டில் இல்லை!” எனப் பகர்ந்தார்.

அன்ஸாரித் தோழரோ தம் மனைவியிடம், “பிள்ளைகளின் கவனத்தை வேறு விசயங்களில் திருப்பிவிட்டுவிட்டு வீட்டினுள் விருந்தாளி வரும்போது விளக்கையும் அனைத்துவிட்டு விருந்தாளிக்கு நாம் உணவுன்பதைப் போல நடித்து வீட்டிலுள்ளதை அவரை உண்ணச்செய்வோம்!” என்றார்.

அவ்வாறே இருவரும் செய்ய வந்திருந்தவரும் (தம் வயிறு நிறையும் அளவு) உணவருந்தினார்.

பிறகு காலையானதும் அண்ணலாரைச் சந்திக்கச் சென்ற அத்தோழரிடம், “இன்றிரவு விருந்தாளிக்கு நீங்களிருவரும் செய்த உபகாரத்தைக் கண்டு அல்லாஹ் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்!” எனக் கூறினார்கள்.

59:9 மேலும், தாங்களே தேவையுள்ளவர்களாய் இருந்தாலும்கூட, தங்களைவிடப் பிறருக்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள். உண்மை யாதெனில், யார் தங்கள் மனத்தின் உலோபித்தனத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்களோ அவர்களே வெற்றி பெறக்கூடியவர்களாவர்.

உலகிலுள்ள ஏனைய எல்லா மக்களையும் விட அரபுகளின் விருந்தோம்பல் பழக்கம் சிலாகிக்கக் கூடியதாகவும் அனைவராலும் போற்றப்படக் கூடியதாகவும் இருந்தது. தங்களிடம் ஒன்றுமில்லாத நிலையிலும் தம் வீடு நோக்கி முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் வந்தால் கூட அவரை வீட்டில் தங்க வைத்து உணவளித்து உபசரித்து வந்தவரின் மனதை குளிர்வித்து அனுப்புவது அவர்களின் பரம்பரை வழக்கமாக இருந்தது.

தம்மிடம் ஒன்றுமில்லாதபோதும் கடன் பெற்றாவது வந்தவருக்கு உபகாரம் செய்யும் ஒப்பில்லா மனம்படைத்தவர்களாக அரபுகள் விளங்கினர்.

இன்றும் அது தொடரும் நற்செயலாகவே அவர்களிடம் இருந்து வருகிறது.

கல்லூரியில் படித்த நாட்களில் அவ்வாறு அனுபவித்த தருணங்கள் இக்கட்டுரையாளருக்கும் உண்டு. மட்டுமல்லாது அவர்கள் அழைப்பை ஏற்க மறுத்தால் சினங்கொள்ளக் கூடியவர்களாகவும் நம்மிடம் பேசாதவர்களாகவும் மாறிவிடுவர்.

உலக வரலாற்றில் விருந்தோம்பல் மூலம் ஆட்சியாளர்களிடம் பற்பல காரியங்களை சாதித்த பல தொழிலதிபர்களும் உண்டு. வீட்டில் ருசியான உணவை சமைத்து அதை அண்டை வீட்டாருக்கு அனுப்பி வைப்பதின் மூலம் உருவான உறவுகளும் நட்புகளும் எண்ணிலடங்காதவை.

முறிந்த உறவுகளை சரிசெய்த விருந்தோம்பல்கள் ஏராளம்.

இஸ்லாத்தில் எது சிறந்தது என ஒரு நபித்தோழர் வினவியதற்கு ‘நீ (பிறருக்கு) உணவளிப்பதும் நீ அறிந்தோருக்கும் அறியாதோருக்கும் ஸலாம்கூறுவதுமாகும்’ என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்.

பிறருக்கு உணவளிக்காமலும் செல்வ செல்ழிப்பான நிலையிலும் அல்லாஹ் கொடுத்த அருள் வளங்களிலிருந்து பிறருக்கு உதவாமலும் இருந்தோர் பற்றி அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

விண்ணுலக பயணத்தின் (மிஃராஜ்) போது தலைகள் கீழாகவும் கால்கள் மேலாகவும் தொங்கிக் கொண்டிருக்க பறவைகள் அதனின்று சாப்பிட்டுக் கொண்டிருந்ததை கண்ணுற்ற நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் செய்யிதினா ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ‘யார் இந்த மனிதர்கள் என் சகோதரரே’ எனக் கேட்டதற்கு இவர்கள் கடும் கஞ்சத்தனம் கொண்டவர்களாகவும் சங்கைபொருந்தியவர்களுக்கு மாற்றமானவர்களாகவும் இருந்தனர் என பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்).

மேலோன் அல்லாஹ் நம்மிடம் இருக்கும்போதும் இல்லாதபோதும் தாராளமாக மற்றவருக்கு உணவளித்து நல்லமல்கள் செய்யும் சிறந்தவர்களின் கூட்டத்தில் நம்மனைவர்களையும் ஆக்கி அருள்புரிவானாக, ஆமீன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: kulam moahmed salih k.k.s (seychelles) on 09 August 2016
IP: 197.*.*.* | Comment Reference Number: 44390

சகோதரர் மிக அருமையான கட்டுரையை கொடுத்துள்ளார் ..

நாம் இதை படிப்பதும் மட்டும் இல்லாமல் பழைய முறையை படி விருந்தோம்பல் செய்வோமா.. அல்லாஹ் போதுமானவன் ..

என்றும் அன்புடன் ,
குளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ்
செய்செல்லெஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தானத்தில் சிறந்தது அன்னதானமட்டுமல்ல நிதானமும்கூட இல்லையென்றால் வாய்க்கொழுப்பு சீலையில்தான் வடியும்..
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 09 August 2016
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44396

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

தர்மம் தலைகாக்கும்,தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதெல்லாம் தலைகீழாக நிலைமாறிவிட்டது விட்டத்தில் உறியில்வைத்ததெல்லாம் அன்று எலிகளுக்கும்,பூனைகளுக்கும் பயந்தே.

ஆனால் இன்று ஏழைகளுக்கும்,புண்ணியங்களுக்கும் பயந்துவிட்டான் அதாவது மனிதனே மனிதனுக்குப்பயந்துவிட்டான் அதனால் குளிர்சாதனப்பெட்டிகளிலெடுக்கி வைத்துவிட்டு கூ...லாக சூடாக ஒன்றுமில்லை வாய்கூசாமல் சொல்லிவிடுகிறான் மனம்வரண்டுவிட்டது குணமும் புரண்டுவிட்டது அதனாலேயே ஆரோக்கியத்தையிழந்து நோய்களுக்குத்தாய்மையாகிறான் மருத்துவத்திற்கும் மருத்துவர்களுக்கும் அடிமையாகிறான் .

என்னைப்பொறுத்தவரை தானத்தில் சிறந்தது நிதானம்தான் பிறகுதான் அன்னதானம் நம்மிடம் கொடுக்க ஒன்றுமில்லையென்றாலும் இசைவாயில்லையம்மா என்று சொல்வதுதான்உத்தமமாயிருந்தது இன்றுஅதுவும்மாறி நிதானம்இறந்துவருகிறது கோபம்சிறந்துவிளங்குகிறது இறைவன் பிழைபொறுக்கக்கூடியவன்.

எனதுசிறுபிராயத்தில் நடந்த ஒருசம்பவத்தை இங்கு நினைவுகூருகிறேன்

ஒருநாள் காளை பள்ளிக்கூடம்விட்டு சாப்பிடுவீட்டுக்கு வரும்போது வழியில் ஒருவீட்டில் கணவன்,மனைவிக்குள் ஏதோவாய்த்தகராறு நடந்துகொண்டிருந்தது அப்பொழுது அந்தப்பக்கம்வந்த ஒருமிஸ்கீன்ப்பெண் 'உம்மா சோறுபோடுங்கம்மா' என்றுகுரல்கொடுத்தார் உடனே அந்தவீட்டுப்பெண்மணி சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஒருதட்டில் சோறுஎடுத்துவந்துகொடுத்தார்கள் அந்தமிஸ்கீனும் வாங்கிக்கொடு வாழ்த்திவிட்டு சென்றுவிட்டார்கள் நான் அதைவேடிக்கைபார்த்துக்கொண்டு கொஞ்சநேரம் அங்கேயே நின்றேன் பிறகுசப்தமேவரவில்லை, அந்தவீட்டில் நல்லமாற்றம் எனக்குஏமாற்றமே சின்னவயசுதானே வேடிக்கைபார்க்கும்வயது இறைவன் மன்னிக்கக்கூடியவன் அன்று அந்தவீட்டில் வழங்கப்பட்ட ஒருபிடிசோறு சண்டையை துண்டித்துவிட்டது இந்த சம்பவம் அனுபவரீதியாக நல்லநிகழ்வு அல்ஹம்துலில்லாஹ்.

இன்றும் பலவீடுகளில் சண்டை நடக்கிறது நிறையச்செய்யாதே அப்படிசெய்தால் மீதியையாருக்காவதுகொடு சும்மா பிரிட்ஜில அடுக்காதே அது அல்லாஹ்வுக்கு அடுக்காதென்று வாதிட்டுக்கொடுப்பவர்களுமுண்டு.

இயற்கையாக நாம் ஒருஉண்மையை இன்னும் நாம் உணர்ந்துகொள்ளவில்லை உண்ணுவதெல்லாம் உணவென்றும் மின்னுவதெல்லாம் பொன்னென்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம் உணவென்றபெயரில் வெறும்பொருள்களைசாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம் அதாவது சக்கைகளை மட்டுமே மீண்டும்,மீண்டும் ஒருஉணவைசுடவைத்து சுடவைத்து சாப்பிடுவதால் அதன் மெய்க்காரணிகள் மாறிவிடுகின்றன.

வாயார வாழ்த்திய மிஸ்கீன்கள்மாறி, சபிக்கும் பக்ஹீல்பெட்டிகள் வாழத்தொடங்கிவிட்டன. அஸ்திக்ஹ்பிருல்லாஹுல் அழீம்.

கட்டுரை ஆசிரியர் தம்பி ஷமீமுல் இஸ்லாம் இறைவசனங்களோடும்,ஹதீதுகளோடும் திரும்பிப்பார்க்கவைத்திருக்கிறார் எளியநடை மாஷா அல்லாஹ் தொய்வில்லாது தொடரட்டும் வாழ்த்துக்கள் வல்ல இறைவன் நாம்பயன்படுத்தும் உபகரணங்களையும்,செயல்களையும் நற்சாட்சி பகரும் நிலையைத்தந்தருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...புன்சிரிப்பும் உபசரிப்பும்
posted by: mackie noohuthambi (kayalpatnam ) on 10 August 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44409

புன்சிரிப்பும் உபசரிப்பும் எங்கள் தந்தை அவர்கள் வாழ்ந்து எங்களுக்கும் வழி காட்டிய வாழ்வியல் தத்துவங்கள். அவர்கள் அந்த உதார குணங்களை கற்றது இலங்கை திருநாட்டிலிருந்துதான். அந்த நடை முறை அங்கு இன்றும் தொடர்கிறது. அதனாலேயே அங்கு நடைபெறும் சில மார்க்க விரோதமான காரியங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான் என்று சொல்பவர்களும் உண்டு.

MANN KAANA YU 'UMINU BILLAAHI FAL YUKRIM LAIFUHU

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் கொண்டு விசுவாசிப்பவர்கள் அவர்கள் விருந்தாளிகளை கண்ணிய படுத்தவும் என்ற திரு நபி மொழிகளை உலமாக்கள் சொல்லிக் காட்டுவார்கள்.

எனது சிறிய வயதில் எனது தாயார் அருகில் நான் இருந்த போது ஒரு வயதான மிஸ்கீன் என் தாயாரிடம் ''ஏதாவது தாமா'' என்று கேட்டார்கள். எனது உம்மா ''வெசவா இல்லை பொறவு வாங்கோ'' என்றுதான் சொன்னார்கள். அவள் விடுவதாக இல்லை எனக்கு கோபம் வந்தது, ''சொல்றாங்க தானே திரும்ப திரும்ப கேக்குறியளே வேற எடத்துல போய் கேளுங்களேன்'' என்றேன். அதற்கு அந்த மிஸ்கீன் சொன்ன வார்த்தை என்னை பகீரென்று சிந்திக்க வைத்தது. ''தர்றவல்ட்தானே வாப்பா கேப்பேன்''...

அப்போ எல்லோரிடமும் கேட்கமுடியாது. மிஸ்கீன்களுக்கும் மானம் ரோஷம் இருக்கிறது அவர்களும் மனிதர்கள்தானே... எங்க உம்மாவும் உடனே மனம் இறங்கி அவள் முந்தானையில் இருந்த சுருக்குப் பையிலிருந்து எதையோ எடுத்துக் கொடுத்தார்கள்.

இதை இப்போது இங்கு பதிவு செய்யும்போதும் எனக்கு கண்ணீர் வருகிறது. அல்லாஹ்வும் அப்படிதான் சொல்கிறான். உங்களுக்கு கொடுக்க வசதி இல்லை என்றால் அழகிய வார்த்தைகளை சொல்லி அவர்களை அனுப்புங்கள். கொடுத்ததை சொல்லிக் காட்டுவதைவிட அழகிய வார்த்தைகளை சொல்லி அவர்கள் மனம் புண்படாமல் அனுப்பி வைக்கலாம், இப்போதும்கூட மிஸ்கீன்களை கடிந்து கொள்ளத்தான் செய்கிறோம் என்ன செய்வது.

ஆசிரியரின் கட்டுரை சிந்திக்க வைக்கிறது. ஆனால் பிரசவ வைராக்கியம் மயான வைராக்கியம் என்பதுபோல் இந்த இடத்திலிருந்து எழுந்து போகும்போது அந்த வைராக்கியம் எழுந்து போய்விடுகிறது என்ற உண்மையை மறைக்க முடியவில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் ஈந்துவைக்கும் உள்ளங்களை நமக்கு தந்தருள்வானாக.

சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப் பழக்கம்
நடக்கும் நடையும் நடைப் பழக்கம்
கொடையும் தாயையும் பிறவிக்கு குணம் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: binth misbahi (kayalpatnam) on 10 August 2016
IP: 223.*.*.* India | Comment Reference Number: 44410

மாஷாஅல்லாஹ் ஆசிரியரின் கட்டுரை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வாழ்வதை நினைவுபடுத்தி விருந்தோம்பலை செயற்படுத்த தூண்டுகிற ஓர் அருமையான பதிப்பு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) on 10 August 2016
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44411

"அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரக்காத்துஹு. "

மாஷா அல்லாஹ்!!!

கட்டுரை மிகவும் அருமையாக உள்ளது.

மச்சான் தொடர்ந்து எழுதுங்கள், எல்லோர்ருக்கும் நிச்சயம் பயன் இருக்கும்.

வாழ்த்துக்கள்!!!

அன்புடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by: moinudeen (kayalpatnam) on 13 August 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44442

மாஷா அல்லாஹ் ... அருமையான படைப்பு ...

"உலகம் சுருங்கிவிட்டது" என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் உலகம் சுருங்க வில்லை ... மனிதர்களின் உள்ளம் சுருங்கிவிட்டது ... எப்படியிருந்தாலும் பிச்சை காரர்கள் வேறு... விருந்தாளிகள் வேறு ... இருவரையும் அவரவர் தரத்தில் முஸ்லிம்களாகிய நாம் கண்ணியப்படுத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை...

விசாலமான கொடையாளனாக அல்லாஹ்வை நாம் நம்பியிருக்கிறோம் மற்றும் அவன் அளித்த பொருளாதாரத்தை அவன் சந்தோசப்படும் விஷயத்திற்காக செலவு செய்தால் அவன் மிகையாக தருவான் என்பதையும் நம்பியிருக்கிறோம் ..ஆனால் பொருளாதாரத்தை அவ்வாறு செலவிடுவதில் என்ன தயக்கம் மக்களாகிய நமக்கு என்பது புரியாத புதிராகவே உள்ளது ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: அ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டினம்) on 23 August 2016
IP: 115.*.*.* Lao People's Democratic Republic | Comment Reference Number: 44476

அழகிய வார்த்தைகள்... ஆளமான சிந்தனை... அவசியமான பதிவு...

குளிர் சாதனப் பெட்டி (உங்களது வார்த்தைகளில் "பிச்சைக்கார பெட்டி") உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளிலும் கேடு விளைவிக்க கூடியதே! இயற்கை உணவியல் மருத்துவர் சிவகாசி மாறன் G இதனை "எச்சிப் பெட்டி" என்று அழைப்பார்.

மார்க்கம் கூறும் கொடைப் பண்பையும் விருந்தோம்பலையும் பின்பற்றினால் நோயில்லாமல் வாழலாம் எனும் கருத்தை அற்புதமாக கூறியுள்ளீர்கள், காக்கா!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved