Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:21:59 AM
புதன் | 8 மே 2024 | துல்ஹஜ் 1742, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்05:52
மறைவு18:28மறைவு18:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1619:42
அமாவசை @ 04:29
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 62
#KOTWEM62
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 23, 2012
THANK YOU!

இந்த பக்கம் 3373 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“எல்.கே.மேனிலைப்பள்ளி காவலர் சுடலை காலமானார்!” என்ற செய்தியைப் படித்தவுடன் மனதில் தோன்றியது... பொறுமையான மனிதர்... மாணவப்பருவத்தில் செய்த சேட்டைகளையெல்லாம் சகித்துக்கொண்டு... தேர்வு காலங்களில் மாணவர்கள் கண்விழித்து படிக்கின்றார்களா என்று கண்காணித்து... ஒரு காவலர் என்பதனையும் தாண்டி மாணவர்கள் பரிட்சைகளில் பாஸாக - வாழ்வில் முன்னேற ஒரு மறைமுகக் காரணமாக இருந்தவர்.

இதனை கமெண்ட்டாக பதிவதற்கு முன், என் மனதில் ஒரு கேள்வி தோன்றியது. இவற்றை ஒருமுறை கூட அவரிடம் நேரில் பரிமாறியது கூறியது கிடையாதே என்று. ஒருவரின் நற்செயல்களை ‘உளப்பூர்வமான’ கருத்துக்கள் வாயிலாக நினைவு கூறுகின்றோம். இன்னும் சிலரோ மனித நேயர்களின் (உதாரணத்திற்க்கு ஆனந்தன் டாக்டர்... எஸ்.கே. மாமா...) மரணத்துயரம் தாங்காது சொட்டு கண்ணீர் கூட சிந்துகின்றனர். ஆனால் நம்மில் எத்தனை பேர் நம் உணர்வுகளை சம்பந்தபட்டவர் வாழ்நாளிலேயே அவரிடமே கூறுகின்றோம் ?

இன்று அவைகளை அறிய / காதால் கேட்டுணர அப்புண்ணியவாளர்களுக்கு வாய்ப்பில்லையே. அப்புண்ணியவாளர்கள் நமது பெற்றோராக, உறவினராக, நண்பராக, பக்கத்து வீட்டுக்காரராக, பணியாளனாக கூட இருக்கலாம். நன்றியுடன் இன்று நினைவுகூர்வனவற்றை அவர்களிடமே நேரில் கூறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...?

நம்மைப் போன்று மிகச் சாதாரண நிலையிலிருந்த அம்மனிதர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்...? நம்மை மற்றவர்கள் இவ்வளவு உயர்வாக நினைக்கின்றார்களே, நம் சிறு உதவிகளையும் நினைவு கூறுகின்றார்களே அல்லது நம்மை சுற்றியுள்ளவர்கள் உயர்வாக நினைக்கும் அளவுக்கு அடியேனும் வாழ்கின்றேனே என்று!

மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசயங்களில் ஒன்று நன்றி சொல்லுதல். அப்பழக்கம் நம்மிடம் பரவலாக காணப்படுகின்றதா?

பொதுவாக பிற நாட்டு பிரவேசத்தில் அந்நாட்டு மக்களின் சில நல்ல பழக்கங்கள் நம்மை ஈர்க்கும். தினசரி வாழ்க்கையில் இங்கே (அமெரிக்காவில்) அதிகம் பயன்படுத்தும் ஒரு வார்த்தை என்றால் அது Thank You / Thanks என்பதாகவே இருக்கும். ஒருவர் செய்த உபகாரத்துக்கு 'நன்றி' என்று கூறாவிட்டால் அவரை மரியாதையற்றவர் (Rude) என்று எண்ணுகின்றனர்.

காரில் பயணிக்கும் போது ஒருவர் மற்றவரை முந்திச் செல்ல வழிவிட்டால், அவர் உடனே 'நன்றி' என்று ரியர் வீவ் வழியாக சைகை செய்வார். பாதசாரி சாலையை கடப்பதற்காக நம் வாகன வேகத்தை குறைத்துச் சென்றால் அவர் 'நன்றி' என்பார். கடையில் ஒரு பொருள் வாங்கும் போது கூட கடைக்காரருக்கு `நன்றி' சொல்வார்கள். இதுபோன்ற வழக்கம் பிற நாட்டின (மனித)ரிடத்தும் கூட இருக்கலாம்.

நன்றி சொல்லும் வழக்கம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு கலாச்சாரமாகவே உள்ளது எனலாம். இவ்வார்த்தையை ஒருசிறு உதவி / பணிவன்புகளுக்கெல்லாம் கூட பயன்படுத்துகிறார்களே என்ற வியப்பும், “அட போங்கப்பா! சப்பை மேட்டர்கெல்லாம் போய் நன்றி சொல்லனுமா?” என்று ஆரம்பத்தில் தோன்றியதுண்டு.

நன்றி சொல்வதற்கு கூச்சப்பட்டு பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டு விடுகிறோம். காலம் கடந்து ‘நன்றி’ என்று உரக்க கத்திக் கொண்டிருப்போம். ஆனால் அவர் நம்மை விட்டும் பிரிந்திருப்பார். சில நேரங்களில், நன்றி கூறும் அளவுக்கு அப்படியென்ன ஒரு உதவி உபகாரம் செய்துவிட்டார்? என்று எண்ணுவோம். பின்னொரு தருணத்தில் அதனை நினைத்துப் பார்க்கும்போது மிகப்பெரிய ஒன்றாகக் கூட அது திகழ்ந்துவிடும்!

சிறுபிராயத்தில் புறையூருக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றிருந்தபோது டேமில் நின்று கொண்டு, மற்றவர்களைப் போல் நானும் டைவ் அடித்தேன். டேமின் மரப்பலகை (தண்ணீரில்) அருகே வந்தவுடன் யாரோ ஒருவர் என் தலை அம்மரப்பலகையில் மோதிவிடாதவாறு தண்ணிக்குள் அமுக்கிவிட்டார். பின்னொரு காலத்தில் அதை நினைத்தபோது முகமறியா ஒருவர் செய்த உதவி எவ்வளவு பெரியது என்று நினைக்க தோன்றியது.

காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப்பெரிது

என்றார் வள்ளுவப் பெருந்தகை.

நன்றி, பாராட்டு, நேசத்தையெல்லாம் மனதில் நினைத்தால் மட்டும் போதாது! உடனே அதை வெளிப்படுத்த வேண்டும்!! அதனை தள்ளிப்போடவே கூடாது. “உனக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது என்றால், அதனை அவரிடம் வாய்விட்டுச் சொல்லிவிடு!” என்ற கருத்தில் நபிகளாரின் பொன்மொழி கூட இருப்பதாக அறிந்துள்ளேன்.

நன்றி என்பது ஒரு சின்ன வார்த்தைதான். ஆனால் அது மனதளவில் தரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அளவிட முடியாதது. அது ஒரு வார்த்தையாய் நின்று விடாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுத்து வெளிவர வேண்டும்.

சின்னச் சின்ன விஷயங்களில் நன்றி சொல்லத் தெரியாதவர்களால் பெரிய விஷயங்களிலும் நன்றி சொல்ல முடியாது என்கிறது எஸ்தோனிய பழமொழி ஒன்று. நம்முடைய நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவருக்கு அதை உடனே தெரிவித்துவிட வேண்டும். நன்றி, பாராட்டு மற்றும் மதிப்பை உரியவருக்கு கொடுக்கும் போதுதான் அவர்கள் மீண்டும் அதை கூடுதல் மதிப்புடன் திருப்பிக் கொடுப்பார்கள்.

ஜசாக்கல்லாஹ் / நன்றி என்று சொல்லும்போது அதை உளமார - உண்மையாக - தெளிவாக - திருத்தமாக - மகிழ்ச்சியுடன் - நேருக்கு நேர் பார்த்துச் சொல்லுங்கள்.

நன்றியைச் சொல்ல இந்த நவீன யுகத்தில் ஏகப்பட்ட வழிகள் உண்டு. ஓர் எஸ்.எம்.எஸ், ஒரு சின்ன மின்னஞ்சல் வரி கூட போதும். ஓர் ஆய்வின் படி 'நன்றியுடையவர்களாய் நன்றி பாராட்டுபவர்களாய் இருப்பவர்கள் மன அழுத்தமற்றவர்களாகவும், நிம்மதியான தூக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள்' என்கின்றது.

நாம் செய்யும் மிகப்பெரிய தவறு… கூட இருப்பவர்களுக்கு நன்றி பாராட்டாமல் / சொல்லாமல் விடுவதுதான். உதாரணத்திற்க்கு, தாயாரிடமோ அல்லது மனைவியிடமோ, சிரத்தையுடம் சமைக்கும் உன் சமையல் ருசியாக உள்ளது என்று நன்றி பாராட்டாமல் இருப்பது.

நம் கூடவே இருப்பதால் அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லக்கூடாது என நினைத்து விடுகிறோம். நன்றி (Thanks Note) என்பது அலுவல் சமாச்சாரங்களுக்கு மட்டுமானது அல்ல. கணவன், மனைவி, பெற்றோர், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள், ஆசான்கள் பணியாட்கள் என எல்லோருக்கும் கூட பொருந்தும்.

இளம்பருவத்திலே குழந்தைகளுக்கு, யாருக்கும் எதற்கும் நன்றி சொல்ல பழகிக் கொடுங்கள்! அதற்கு முன்னுதாரணமாக முதலில் அக்குழந்தைகள் முன் பெற்றோரும் சொல்லிப் பழகுங்கள்!! அது மற்றவருடைய இறுக்கத்தைத் தளர்த்தி முகத்தில் புன்னகையை கொடுக்கும். ஒரே ஒரு வார்த்தை பிற மனிதரை ஒரு கணம் மகிழ்வுறச் செய்கிறது என்றால், ஒரு நன்றி என்ன... ஆயிரம் நன்றி சொல்லிகொண்டே இருக்கலாம்.

அட... இதுபோன்ற பழக்கங்கள் நமது நாட்டிற்க்கு ஒவ்வாத - நடைமுறை படுத்த முடியாத ஒன்று அல்லது பிறர் கேலியுடன் நம்மைப் பார்ப்பார்கள் என்று கூட எண்ணலாம். எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு முறையும் 'நன்றி' என்று சொல்லாவிட்டால் கூட பரவாயில்லை. வாழ்வில் ஒரு முறையாவது 'ஜசாக்கல்லாஹு கைரா... உங்களால்தான் இந்தச் செயல் நிறைவேறியது அல்லது இந்த நற்குணத்தைக் கற்க முடிந்தது” என்று கூறுவதில் தப்பு ஏதும் இல்லையே...?

மனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி பகர்வது, பாராட்டுவது, இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கு அடிப்படையாய் அமையும். மனிதனுக்கு மனித நன்றி பாராட்டாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி பாராட்டியவனாக மாட்டான் என்பது நபிமொழி. சரியான இடத்தில் முறையாக நன்றி சொல்லும் பழக்கம் வாழ்நாள் முழுமைக்குமான ‘சொத்தாக’ இருக்கும்.

ஒரு நல்லவரை நல்லவர் என அவர் மரணத்திற்குப் பின்னர் நன்றி பாராட்டுவது நினைவுகூர்வது, பிறர் அறிவதற்கான ஓர் அழகிய வாய்ப்பாக இருந்தாலும் அவற்றை சம்பந்தபட்டவர் நம்முடன் இருக்கும்போதே அவரின் நற்பண்புகள், செய்த உபகாரங்கள் அல்லது நாம் செய்த சேட்டைகளை தீமைகளை அமைதியாகப் பொருந்திக் கொண்டமைக்காக அவர்களிடமே நன்றி பாராட்டுவது நினைவுகூர்வது அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு இனிமையாக உணர்வுப்பூர்வமானதாக இருக்கும்...? சிந்தியுங்களேன் !!

இறந்தோரின் நலவுகளை நினைவுகூருங்கள் என்று சொன்ன நபிகளார்தான், இருப்போரிடம் உங்கள் நேசத்தை வெளிப்படுத்துங்கள் என்றும் போதித்திருக்கிறார்கள்... எனவே, இரண்டையும் நாம் கருத்திற்கொள்வோம்.

நன்றி சொன்னால் பேரழகு... நன்றி செய்தால் பாரழகு !!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 23 October 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23025

Thank You MAC முஹியித்தீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...நன்றி
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 23 October 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23026

உங்கள் கட்டுரைக்கு நன்றி.

இது பழக்க தோஷம். நம் நாட்டிலே எந்த துறையில் முன்னணியில் இருப்பவருக்கும், அவர் முன்னணியில் இருக்கிறார் என்பது நன்றாக தெரிந்தாலும் அவரை பாராட்டுவதால் நாம் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற தாழ்வு மனப்பான்மை. பெரிய சாதனைகளை செய்தவர் அவர் மரணித்த பிறகுதான் அவருக்கு பாரத ரத்னா என்ற இந்திய அரசின் மிக உயரிய விருதை வழங்குகிறார்கள்.

நான் இறந்த பிறகு ஒரு தாஜ்மஹால் கட்ட வேண்டாம். நான் இருக்கும்போது நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு குடிசை கட்டி தாருங்கள் என்று ஒரு புது கவிதை சொல்கிறது. நன்றி சொல்வது என்ற நற்பண்பு இஸ்லாத்தில் அதிகம் சொல்லப்பட்ட ஒன்று, வலியுறுத்த பட்ட ஒன்று. தமிழ் கூறும் நல்லுலகம் சொல்லும் நன்றியை பற்றி. திருக்குறள் திருவாசகம், இராமாயணம். மகாபாரதம் என்றெல்லாம் எந்தெந்த புராணங்கள் இருந்தாலும் அங்கெல்லாம் இந்த நன்றி சொல்லல் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். வாழ்த்தி வணங்குகிறோம் என்றெல்லாம் வசனங்கள் பெரிய பெரிய பதாதைகளில் எழுதப்பட்டு மின் அலங்காரம் செய்து காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். வாழ்த்துவதற்கு வயதும் தேவை இல்லை. வணங்கவும் தேவை இல்லை. உயர்ந்த உள்ளம் இருந்தால் போதும்.

ஒருவன் பெரிய வீடு மாளிகைபோல் கட்டி அதில் புதுமனை புகும் விழா நடத்தினான். விருந்தை சாப்பிட்டு விட்டு வெளியே வந்த நண்பன் வீட்டின் பெயரை பார்த்தான்..."அன்னை இல்லம்". உன் அன்னை மீது எவ்வளவு பாசம். உன் அன்னையை நான் பார்க்க வேண்டுமே என்றானாம். அவள் இங்கே இல்லை. அப்படியானால்? எங்கே அவள்? அவள் முதியோர் இல்லத்தில் என்றான் அந்த மாளிகையின் மன்னன். உனது வீட்டுக்கு பெயரோ அன்னை இல்லம், ஆனால் அந்த அன்னை இருப்பதோ முதியோர் இல்லம் என்ன போலி வாழ்க்கை,... காறி துப்பி விட்டுபோனான் நண்பன்....

நன்றி சொல்வோம்.
THANK YOU, MR MUHAMMAD MUHIYIDHEEN........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:.தேங்க்ஸ்.......
posted by: ceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.) on 23 October 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23029

Thanks a Lot MR MUHAMMAD MUHIYIDHEEN........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நன்றி , நன்றி
posted by: A.S.L.SULAIMAN LEBBAI (SAUDI ARABIA) on 24 October 2012
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23032

மிகவும் அற்புதமான கட்டுரையை தந்த சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களுக்கு நன்றிகள் பல.

நமது அருமை பிள்ளைகளுக்கு சிறு வயது முதல் பழக்கி கொடுக்க வேண்டிய ஒரு பாடம் தான் இது.

பொதுவாக அரபு நாடுகளிலும் நாம் பிறருக்கு உதவி செய்யும் போது அவர்கள் நமக்கு தரும் ஒரு மரியாதை "ஜசாக்கல்லாஹு கைரா" ( நன்றி உடன் இணைந்த ஒரு துவா ) நமக்காக அவர்கள் அல்லாஹ்விடமும் துவா செய்கிறார்கள் .

உலகில் மிகவும் மகா கஞ்சன் யார் என்றால் பிறரின் உதவிக்கு பதில் நன்றி சொல்லாதவன் தான்.

வல்ல நாயன் நம் எல்லோர்களையும், அவன் நமக்கு தந்த அருள்கொடைக்காக அவனுக்கு முதலில் நன்றி சொல்பவர்களாகவும், பிறர் நமக்கு செய்யும் உதவிக்கு நாம் அவர்களுக்கும் நன்றி சொல்வதுடன் அவர்களின் நல்வாழ்விற்காக அல்லாஹ்விடம் நாம் துவா செய்வோமாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: A.R.Refaye (Abudhabi) on 24 October 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23033

'ஜசாக்கல்லாஹு கைரா... உங்களால்தான் இந்தச் செயல் நிறைவேறியது, இந்த நற்குணத்தைக் கற்க முடிந்தது.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. THANK YOU ....
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் - காயல்பட்டினம்... (காயல் - 97152 25227) on 24 October 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23036

நல்ல தெளிவான கட்டுரையை தந்த சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களுக்கு நன்றிகள் பல....

இக்கட்டுரைக்கு கருத்தின் மூலம் பல நல்ல விசியங்களை பகிர்ந்து பதிவு செய்து இருக்கும் சகோதரர் மக்கி நூகு தம்பி அவர்களுக்கு THANK YOU ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: Mauroof (Dubai) on 24 October 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23039

நன்றி பகர்வது குறித்தான நல்லதோர் கட்டுரை வழங்கியிருக்கும் நண்பர்/சகோ. M.A.C. முஹம்மது முஹ்யித்தீன் அவர்களுக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. THANKS, EXCUSE ME,=NOT AT ALL.
posted by: T,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852) on 25 October 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23045

News ID # 9443
செவ்வாய், அக்டோபர் 23, 2012
எழுத்து மேடை: THANK YOU! சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை!!
செய்தி: காயல்பட்டணம்.காம்
This page has been viewed 305 times
அஸ்ஸலாமு அலைக்கும்.!! அல்ஹம்து லில்லாஹ்.

இந்த கட்டுரையை டாட்காமில் எண்டர் பண்ணிய மொடரேட்டருக்கு நன்றி.

எழுதிய வருக்கு நன்றி,. வாசிப்பவர்களுக்கும் நன்றி, கமண்ஸ் எழுதிய வர்களுக்கும் நன்றி, அழகான இந்த கட்டுரையைப் போல் அடிக்கடி கூ வேண்டிய -மண்ணிக்கனும் என்ற வார்த்தைகள்.- உங்களுக்கு சிரமம் தந்த தற்க்கு வருந்து கிறேன் –நன்றி-எனும் வார்த்தை களும் நமது பழக்கவழங்களில்,,இல்லை. என்ன செய்வது நடை முறைப்பழக்கங்களில் ஒழுங்கீனம் மிகைத்த நம் நாட்டினருக்கு கட்டுரையில் கண்ட உபதேசங்கள் யாவும் கேலிக்கூத்தாகவே தெரியும்.

நானும் சென்ற 25 வருடங்களுக்கு முன் லண்டன் மாநகரம் சென்றபோது இவ்வித பேச்சுப் பழக்கங்கள்ளில் அதிக மாக THANK YOU, EXUSE ME ,.PLEASE, I BEG YOUR PARDEN, OH GREAT. ,WELL DONE, PLEASE FORGIVE ME . போன்ற நாகரீக உயர்தர வார்த்தை களும் பரிமாறுவதும், சொன்னவருக்கு பதில் OH NOT AT ALL தங்கள் தங்கள் பணிவைக் காட்டும்போது எவ்வளவு சந்தோஷம் வருகிறது. இதெல்லாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்? ....என்றால் ஸிபத்துக்களில் பணிவே இல்லாத ஆண்டவன் கூறுகிறான்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
86- -4 وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيْءٍ حَسِيبًا

4:86. உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

மேலும் ஸலாம் கூறும் வற்ண்ணைகளியும் ஆதாபு களையும் உலமாக்கள் இன்னும் அதிகமதிக மாகவே பயான் களில் வலியுறுத்தவும் வேண்டும். ஏனெனில் அல்லாஹ் ஊறுவதைப் பாருங்கள்.

وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

14:7. “(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).

எனவே கடுரையாளருக்கு மீண்ட்டும் நன்றி கூறி மேர்கண்ட ஆயாத்துகள்படியும் மறு கட்டுறைகல் எழுதினால் எழுத்து மேடை வஷகர் சார்பாக நாங்கள் எளோரும் நன்றி உடையவர் களாகு வோம். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved