Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:40:34 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 63
#KOTWEM63
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 2, 2012
குப்பைக் கொட்டுதலும்! குணங்கெட்ட மக்களும்!!

இந்த பக்கம் 6570 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சுத்தம் ஈமானில் பாதி என்பதை ஹதீது வாயிலாக அறிகிறோம் . சுத்தத்தை ஈமானில் ஒரு பகுதி என்றோ, ஓர் அம்சம் என்றோ கூறவில்லை ஈமானில் பாதி என்றே மார்க்கம் போதிக்கிறது. அப்படியானால் நாம் சுத்தத்தை பேணுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட கடமைப்பட்டிருக்கிறோம்.

இன்று நம்மிலே எத்தனை மக்கள் தன் வீட்டையும் , சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்திருக்கிறார்கள் ?. " சுத்தம் சோறுபோடும் - சுத்தம் சுகம் தரும் - சுகாதாரம் பேண வேண்டும் " என்றெல்லாம் சுத்தமாக, சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பள்ளிக்கூடத்தில் படித்தோமே , அதன்படி எத்தனை பேர் செயல்படுகிறோம். தன் வீட்டிலே குப்பை சேர்ந்து விட்டால் அதை எந்தவித தயக்கமும், வெட்கமுமின்றி ரோட்டிலே கொட்டிவிடுகிறார்கள். நகராட்சியால் குப்பைத் தொட்டிகள் சில இடங்களில் வைக்கபட்டிருந்தாலும் அதில் குப்பையைக் கொட்டுவதில்லை , வெளியிலேதான் பெரும்பாலும் கொட்டுகிறார்கள். நகராட்சி நிர்வாகம் குப்பைக் கொட்டுவதற்கென்று குப்பைத் தொட்டிகளை பெரும்பாலான இடங்களில் வைக்கவில்லை என்பது மிகப்பெரிய குறைதான் அதை மறுப்பதற்கில்லை.

நகரில் வெகு காலமாக இருந்து வந்த குப்பைத் தொட்டிகள் இப்போது பல வருடங்களாக இல்லை என்பதும் அவைகள் என்னவாயிற்று ஏன் மீண்டும் அந்தந்த இடங்களில் அந்தக் குப்பைத் தொட்டிகள் வைக்கப் படவில்லை என்பதையும் கேட்பதற்கு ஆளில்லை. நம் நகர் மன்றமும் , நகராட்சி நிர்வாகமும் அதை பொருட்படுத்துவதில்லை.

நகராட்சி சுகாதாரத்துறை குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை, நகரில் பெரும்பாலான தெருக்கள் ஒவ்வொன்றுக்கும் குப்பை எடுக்கும் லாரிகள் தினமும் வருவதில்லை என்றாலும் ஒருநாள் விட்டு மறுநாள் வந்து குப்பைகளை அள்ளிச் செல்வதை பார்க்க முடிகிறது. அவர்கள், குப்பைகளை தொய்வின்றி சேகரித்து செல்லத்தான் செய்கிறார்கள் என்பது உறுதியே. முக்கிய வீதிகளில் தினமும் வருகிறார்கள் ஆனால் நம் மக்கள்தான் ஒத்துழைப்பதில்லை.

குப்பை லாரிகள் ஒவ்வொரு தெருவிற்கும் வந்து, முடுக்கு, முடுக்காக சென்று குப்பைகளை சேகரிக்கத்தான் செய்கிறார்கள். முடுக்கிற்கு உள்ளே அவர்கள் வருவதில்லை ஆனால் வீடுகளிலிருந்து வந்துக் கொடுக்கப்படும் குப்பைகளை ஒவ்வொரு முடுக்கின் முனையிலும் வந்து வாங்கிச் செல்கிறார்கள். குப்பை லாரிகள் வருவதை அறிவிப்பதற்காக லாரியின் ஒலிப்பான்களை ( HORN ) ஒலித்துக்கொண்டேதான் வருகிறார்கள். அப்படியிருந்தும் நம் மக்களில் பலர் குப்பைகளைக் கொண்டு வந்து கொடுத்து, நகராட்சி ஊழியர்களுடன் ஒத்துழைப்பதில்லை.

குப்பை லாரி வருவதற்கு முன்பே குப்பைகளை ரோட்டில் கொட்டிவிட்டு செல்கிறார்கள் அரை மணி நேரம் அல்லது ஒருமணி நேரம் பொறுத்திருக்க இயலவில்லை போலும் அல்லது குப்பை லாரி வந்துவிட்டு போனப்பிறகு குப்பைகளை ரோட்டில் கொட்டுகிறார்கள், கேட்டால் குப்பை லாரி வரவில்லை என்று சொல்கிறார்கள் - வரவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் அவர்கள் எழுப்பும் ஒலிப்பான்களின் சத்தம் மிக, மிக அதிகமாக இருக்கிறது. 120 டெசிபலுக்கு அதிகமாக உள்ளது காதை கிழிக்கிறது, அதன் மூலம் ஒலிமாசு ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது.

ஒலிமாசு ஏற்படுவதை காரணம்காட்டி அவர்களை ஒலி எழுப்ப வேண்டாம் என்று சொல்ல முடிவதில்லை ஏனெனில் ஒவ்வொரு முடுக்கின் கடைக்கோடியில் உள்ள வீட்டிற்கும் குப்பை லாரியின் வருகையைத் தெரியப்படுத்தி, குப்பையை சேகரித்து செல்லவே அவ்விதமாக ஒலியை எழுப்புகிறார்கள். அவ்வளவுக்கு அதிகமாக ஒலியை எழுப்பியும் அந்த நேரத்திற்கு வந்து குப்பையை கொடுக்காமல் , தாமதமாக வந்து ரோட்டில் குப்பையை கொட்டி செல்கிறார்கள். அதுவும் அன்றைய தினத்து அல்லது முந்திய தினத்துக் குப்பை அல்ல , 4 - 5 நாட்கள் சேமித்து வைக்கப்பட்ட கெட்ட வாடை நிறைந்த குப்பை. ரோட்டில் போவோர், வருவோர் மூக்கை பொத்திக்கொண்டு செல்கிறார்கள் மேலும் அருகில் உள்ள வீடுகளுக்கும் காற்றின் மூலமாக அந்த துர்வாடை வந்து, அவர்களை கஷ்டப்படுத்துகிறது. இந்த விதமாக மக்களுக்கு கேடுகளை விளைவிக்கும் மக்களின் குணத்தை என்னெவென்று சொல்வது.

குப்பைகளை வீடுகளுக்கருகில் கொட்டினால் பக்கத்து வீட்டுக்கார்கள் சண்டைக்கு வருவார்களாம் அதனால் பள்ளிவாசல்களின் ( நுழைவு வாசலுக்கு ) அருகிலும் , பள்ளிக்கூடங்களின் ( வாசலுக்கு ) அருகிலும் கொட்டுகிறார்கள். அவ்விடங்களில் குப்பைகளை கொட்டுகிறதால் கோழி, ஆடு, மாடு என்பது மட்டுமல்லாது நாயும் அந்த குப்பையை கிளறுகிறதே! அது தொழப் போகும் மக்களுக்கு இடைஞ்சல் என்பதையும், பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறார்களுக்கு சுகாதாரக் கெடுதி என்பதையும் உணராத அல்லது உணர முடியாத இந்த மக்களின் குணத்தை என்னவென்று சொல்வது.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, ஒரு நாள் காலை வேலைக்காரப்பெண் ஒருவர், பள்ளிக்கூடத்தின் அருகில் குப்பையைக் கொட்டி விட்டு வந்தார். ஏனம்மா பள்ளிக்கூடத்திற்கருகில் கொட்டனும், குப்பை லாரிதான் வருகிறதே என்றதற்கு , லாரி வர இல்லைங்கோ, அதான் இங்கே கொட்டுகிறேன் என்றார். இதோ பாரும்மா ,எனக்கும் இந்த தெருவுதான் தினமும் குப்பை லாரி வருது , இப்பவும் குப்பை லாரி வந்துதான் போய் இருக்கிறது என்பதற்கு சாட்சி நீங்க இப்போ குப்பையை கொட்டின இடம். அங்கே , நீங்க கொட்டினதைத்தவிர வேறு குப்பை எதுவுமில்லை என்றதும், என்னை சொல்லி குற்றமில்லை அய்யா , வீட்டுக்கார அம்மாதான் கொட்ட சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று அந்த வேலைக்காரப்பெண் பதில் சொல்கிறார். இதே நிலைதான் பள்ளிவாசல் நுழைவு வாயிலருகிலும் ஏற்பட்ட அனுபவம்.

வீட்டு வேலைக்காரிகளை வைத்து கொட்டுவதல்லாமல் வீட்டுக்கார அம்மாக்களும் பள்ளிவாசலுக்கருகில் வந்து கொட்டுகிறார்கள் , அதை பார்க்கும் தெருவாசிகள் பலரும் கண்டிக்கத்தான் செய்கிறார்கள் - இருந்தும் பலனில்லை – நாங்க மட்டுமா கொட்டுறோம் எல்லாரும்தான் கொட்டுகிறார்கள் என்ற மறுமொழிதான் வருகிறதே தவிர , தான் செய்வது தவறு என்பதை புரிந்து, திருத்திக்கொள்ள மனமில்லை.

பள்ளிக்கூடத்திற்கு அருகில் மற்றவர்கள் குப்பைக் கொட்டுவது போக , பள்ளிக்கூடத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரே ( துண்டுத் துண்டாக கிழிக்கப்பட்ட பேப்பர் ) குப்பைகளை கொட்டி பறக்கவிட்டு சென்றார். பள்ளிக்கூடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளைகளிலும் அந்த பக்கம் குப்பையை சேகரிக்க லாரி வரத்தான் செய்கிறது - அந்நேரம் அவர்கள் கையில் கொடுக்கலாம் அல்லது அந்த துண்டுத் துண்டாக்கப்பட்ட பேப்பர்களை ஒரு பொட்டலமாக கட்டி பள்ளிக்கூட வாயிலில் வைத்துவிட்டால்கூட குப்பைகளை சேகரிப்பவர்கள் அதை எடுத்து செல்வார்கள். சுத்தம் சுகாதாரத்தை பேண வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியிலே வேரூன்ற வேண்டும் - அந்த எண்ணம் மக்களிடம் இல்லை என்றால் நோய்க்கு பஞ்சம் இருக்காது.

மக்கள், தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை, குப்பை லாரி வரும்போது அவர்களிடம் தவறாது கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்க தவறும் பட்சத்தில் அந்த குப்பைகளை தங்கள் வீட்டிலேயே வைத்திருந்து மறுநாள் கொடுக்கலாம். அது வீட்டிலிருந்தால் கெட்ட வாடை வரும் என்றால் வீட்டிற்கு வெளியே வைக்கவும். வீட்டிற்கு வெளியே வைத்தால் பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டைக்கு வருவார்கள் அல்லது பூனை மற்றும் மற்ற மிருகங்கள் நாசப்படுத்துமே என்று சொல்லாதீர்கள். அப்படி ஒரு சிரமம் உங்களுக்கு ஏற்படுவதை, நீங்கள் சகித்துத்தான் ஆக வேண்டும். காரணம் நீங்கள் அதை தெருவில் வீசி எறிந்தால் அதே கஷ்டம் மற்றவர்களுக்கு ஏற்படுகிறதல்லவா. ஆகையால் குப்பைகளை அள்ள வரும்போது சரியான நேரத்தில் அவர்களிடம் கொடுத்து நகராட்சி ஊழியர்களுடன் ஒத்துழையுங்கள்.

நகராட்சியால் குப்பைத் தொட்டிகள் பரவலாக எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டு அதில் குப்பைகளை கொட்டிச் செல்வதுதான் சிறந்த முறை. அதை நகராட்சி நிர்வாகம் விரைவில் செய்ய வேண்டும். அப்படி குப்பைத் தொட்டிகளை வைத்தாலும் குணங்கெட்ட மக்கள் தொட்டியின் வெளியேதான் கொட்டிச் செல்வார்கள் என்பதும் அறிந்ததே. குணங்கெட்ட மக்களுக்கு பயந்து, சுகாதாரத்தை பேணக்கூடிய நல்ல குணம் உள்ள மக்களுக்கு அசெளகரியம் ஏற்பட்டுவிடக்கூடாது. ஆகையால் விரைவாக குப்பைத் தொட்டிகளை ஆங்காங்கே முறைப்படி வைக்கத்தான் வேண்டும்.

மேலும், குப்பைத் தொட்டிகளில் திடப்பொருட்களைத்தான் போடவேண்டும் - திரவப் பொருட்களை போடக்கூடாது. அப்படி போடப்படும் திரவப்பொருட்களால் குப்பைகளை அள்ளக்கூடிய தொழிலாளர்களுக்கு அதிருப்தியையும், சுகாதாரக் கேடுகளையும் ஏற்படுத்துவதுடன் குப்பைத் தொட்டிக்கும், குப்பையை அள்ளிச் செல்லும் வாகனத்திற்கும் கேடு உண்டாகும். சுற்றுப்புறச் சூழலும் கெடும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்து திரவப் பொருட்களை குப்பையில் போடாது இருக்க வேண்டும்.

நகராட்சியிலிருந்து, குப்பைகளை அள்ளவரும் தொழிலாளர்களுக்கு முறையான சீருடை இல்லை. காலணி, கையுறை போன்ற சுகாதாரக் கேட்டிலிருந்து பாதுகாக்கக் கூடிய எந்த ஒரு சாதனமும் இல்லை என்பது தெரிகிறது. இவைகள் எல்லாம் நகராட்சியால் கொடுக்கப்பட்டு அவைகளை, அவர்கள் உபயோகிக்கவில்லையா? - இல்லை நகராட்சி நிர்வாகத்திடம் சுகாதாரத்தை பேணக்கூடிய வகையில் உள்ள செயல் திட்டங்கள் எதுவும் இல்லையா? என்பது கேள்விக்குறியாக இருக்க, அந்த தொழிலாளர்கள் தங்கள் சுகாதாரத்தை பற்றி கவலைப்படாமல் துர்நாற்றத்துடனே தங்கள் கடமையை செய்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.

தினமும் குப்பைகளை கொடுக்க, குப்பைத் தொட்டியில் கொட்ட பழகிக்கொள்ள வேண்டும். 2 - 3 நாட்கள் வைத்திருந்து கொடுப்பதால் அவைகள் துர்நாற்றைத்தை ஏற்படுத்துகிறது. இதிலே ஒரு விசயத்தை மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும் – இந்த குப்பைகளை அள்ளுபவர்கள் / சேகரிப்பவர்கள் “ மனிதர்கள் “ தான், அவர்கள் மெஷின்கள் அல்ல. அந்த மனித தொழிலாளர்கள், குப்பைகளை லாரியில் அள்ளிக்கொட்டுவதையும் அதன்மீதே நின்று, மக்கும் குப்பை – மக்காத குப்பை என்று தரம் பிரிப்பதையும் நேரில் பார்த்தால் நல்ல உள்ளம் படைத்த எவருக்கும் குப்பைகளை நாள் கணக்கில் தேக்கி வைத்திருந்து கொட்ட மனம் வராது.

ஊரெங்கும் குப்பைகள் நிறைந்துக் கிடக்கிறது, நகராட்சி நிர்வாகம் அதை அள்ளுவதில்லை என்று குறைகளை நகராட்சி மீது சுமத்துகிறோமே தவிர, நம் மக்கள் முறையாக குப்பைகளை கொட்டுகிறோமா ? அந்த ஊழியர்களுடன் ஒத்துழைக்கிறோமா ? என்பதை சிந்திப்பதில்லை. மேலும் குப்பை அள்ளப்படாததைப் பற்றி அவரவர் பகுதியில் உள்ள கவுன்சிலரிடம் சொல்கிறோமா என்றால் 90 சதவீதத்திற்கு மேல் இல்லை என்ற பதிலே கிடைக்கும்.

எனவே சுகாதாரத்தை பேணிக்காக்க, பொது மக்களாகிய நாம், குப்பைகளை ஒவ்வொரு நாளும் குப்பைத் தொட்டியில் கொட்ட அல்லது குப்பை லாரி வரும்பொழுது அவர்களிடம் கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும். மேலும் குப்பைகள் அள்ளப்படாமல் இருந்தால், நமது வார்டு கவுன்சிலரிடம் சொல்லி குப்பைகளை அள்ளிச்செல்ல ஏற்பாடு செய்யும்படி வற்புறுத்த வேண்டும்.

ஒவ்வொரு கவுன்சிலரையும் மக்கள் வற்புறுத்தினால்தான் அவர்கள், நகராட்சி நிர்வாகத்திடமும் , நகர்மன்றத்திலும் வாதாடி குறைகளை, அசெளகரியங்களை களைய ஏற்பாடு செய்வார்கள். ஆகையால் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டிய வழிகளை மக்கள் கடைபிடித்து சுகாதாரமான நகராக நம் நகர் திகழ நாம் ஒத்துழைப்போமாக.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Vilack SMA (Nha Be , Vietnam) on 02 November 2012
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23407

அஸ்ஸலாமு அழைக்கும் மாமா .

நீங்கள் சொன்ன குப்பை தொட்டி மேட்டர் ..... இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லாத ஒன்று . முன்பு நமதூரில் , தெருக்களில் அனேக இடங்களில் குப்பை தொட்டிகள் இருந்ததுதான் . அப்போதெல்லாம் தெருவில் அதிக அளவில் வீடுகள் இல்லை . அதனால் ஆட்சேபனைகள் அதிகம் இல்லை . ஆனால் இப்போதோ வீடுகளின் பெருக்கம் அதிகம் . குப்பை தொட்டிகள் வைக்க இடமும் இல்லை . அப்படியே வைத்தாலும் அருகில் இருக்கும் வீட்டுக்காரர் ஆட்சேபனை செய்வார் . உங்கள் வீட்டுமுன் குப்பை தொட்டியை வைக்க நீங்கள் அனுமதிப்பீர்களா ?

ஆக , இதற்கு நகராட்சியால் கொண்டுவரப்பட்ட மிகச்சிறந்த வழி , குப்பை அல்லும் லாரி . ஆனால் இதற்கு மக்களுடைய ஒத்துழைப்புதான் இல்லை . குப்பையை வாளியுடன் கையில் எடுத்து செல்வதால் அவர்களுடைய அந்தஸ்து குறைந்துவிடும் என்று நினைக்கிறார்கள் . மற்றபடி லாரி வரவில்லை என்று சொல்வது பொய் . குப்பையை அடுத்தவர் வீட்டுமுன் வீசி எறிந்துவிட்டு செல்பவர்கள் , தங்கள் வீடு தெருவில் இருந்து அடுத்தவர்கள் இதுபோன்று செய்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் .

மேலும் நீங்கள் சொன்னதுபோல் , லாரியில் வரும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லைதான் . நகராட்சி அவர்களுக்கு , Mask , Eyemask , Hand gloves , Boots போன்ற உபகரணங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் . அவர்களை அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 03 November 2012
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23413

நானும் சகோதரர் Vilak SMA அவர்களின் கருத்தை ஆதரிக்கிறேன். குப்பைத்தொட்டிகளின் காலம் மலை ஏறி ரொம்ப வருஷங்களாச்சு.

முன்பு நமது வீடுகளில் உரக்குழி என்று ஒன்று இருக்கும். அவைகளில் இடப்படும் குப்பையும் சாணமும் ஒன்றாக மக்கி நல்ல உரம் நமக்கு கிடைத்த காலம் அது. ஆனால், தற்போது வீடுகளுக்கு பின்னுள்ள தோட்டங்கள் எல்லாம் நம் பெண் மக்களுக்கு வீடுகளாக ஆகிவிட்டபடியால், உரக்குழிகளுக்கு இடம் இல்லாது போய்விட்டது.

இந்த குப்பை பிரச்னைக்கு தீர்வு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்தான் உள்ளது. அது நகராட்ச்சியால் மட்டுமே முடியும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின்போது குப்பைகளை அவற்றின் மக்கும் தன்மையின் அடிப்படையில் தரம் பிரிப்பது முதல், குப்பைகளின் அளவை குறைப்பது, குப்பையிலும் மறுசுழற்சி செய்ய முடியுமான பொருட்கள் உள்ளன போன்ற எண்ணங்களை மக்கள் மனதில் பதிய வைப்பது மிக முக்கியமான இன்றைய காலத்தில் மிகவும் அவசியமான ஒரு சிந்தனையாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: AHAMED SULAIMAN (UAE) on 03 November 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23417

அஸ்ஸலாமு அழைக்கும்

இஸ்லாத்தையும் அதன் வழி முறைகளும் பெற்ற மக்கள் இப்படி நடந்து கொள்வது வருத்தமான ஒன்று.

எல்லாரும் சுத்தத்தையும் சுஹாதரத்தையும் காக்க ஒத்துழைக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: Mauroof (Dubai) on 03 November 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23418

நல்லதோர் கட்டுரை. "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா" என்ற கா.மு. ஷெரீப் அவர்களின் பாடல் வரிகளுக்கு காயல் மாநகரம் மட்டும் விதிவிலக்கா என்ன!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இறை அச்சம் அறவே இல்லாதவர்கள் தான் இந்த மாதிரி காரியங்களை செய்ய கூடியவர்கள்...
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (KAYALPATNAM ) on 04 November 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23458

கட்டுரை ஆசிரியர் - N.S.E..மஹ்மூது அவர்களின் ஆதங்கத்தை மன வேதனையுடன் avar வெளிப்படுத்தி உள்ளார்...!

நாம் மக்களுக்கு சுகாதாரத்திற்காக நகரில் எத்தனை விழிப்புணர்வு செய்தாலும் அதை புரிந்து கொண்டு நடக்காதது மிக வேதனை அளிக்கிறது...!

தனது வீட்டு குப்பைகளை பிறர் வீட்டு முன் கொட்டுகிறோமே... அதனால் ஏற்படும் நாற்றங்கள்...! நோய்கள்..! சுகாதார கெடுகள்..! இவைகளை பற்றி சிறு அளவுக்கு கூட மனதில் நினைப்பது கிடையாது... மேலும் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் அவர்கள் மனதால் வேதனைப்பட்டு பதுவா செய்வார்களே என்ற பயம் கூட கிடையாது...

இறை அச்சம் அறவே இல்லாதவர்கள் தான் இந்த மாதிரி காரியங்களை செய்ய கூடியவர்கள்...

இறைவன் இவர்களுக்கு (நல்ல செயல் புரிய) ஹிதாயத்தை கொடுக்க துவா செய்வோமாக... ஆமின்...

சகோதரர் - கட்டுரை ஆசிரியர் N.S.E..மஹ்மூது அவர்களின் ஆற்றல் சிந்தனையை அதிகமாக்கி நல்ல ஆரோக்கியமான சுகத்தை கொடுத்தருள்வானாக ஆமின்.. இவரின் நகர் நலன் குறித்த கட்டுரைகள் அதிகம் இந்த இணையதளத்தில் வர வேண்டும்... மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்...

வாழ்த்துக்கள் ... வஸ்ஸலாம்... நட்புடன் தமிழன்.
முத்து இஸ்மாயில்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved