Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:17:52 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 85
#KOTWEM85
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 18, 2013
மாற்றுகளைத் தேடும் மருத்துவம்!

இந்த பக்கம் 4108 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலகெங்கும் நடைமுறையிலிருக்கும் பெரும் போக்கான (mainstream) விஷயங்களில் மக்கள் சலிப்படைந்துள்ளனர். அந்த சலிப்பு என்பது நீண்ட காலமாக ஒரு விஷயத்திலேயே புழங்கியதால் ஏற்பட்டதல்ல. மாறாக அவை ஏற்படுத்தும் கேடு பாடுகளின் அழுத்தமான பிடியிலிருந்து விடுபட ஏதேனும் மாற்று வழியை தேடுகின்றனர்.

அதன் விடையாக மாற்று பண்பாடு, மாற்று அரசியல், மாற்று ஊடகம், மாற்று சினிமா, மாற்று கலை இலக்கியம் என நதி போல குமிழ் விட்டு பெருக்கெடுக்கின்றது. இதில் மாற்று முறை மருத்துவமும் தப்பவில்லை.

அலோபதி உட்பட அனைத்து மருத்துவ முறைகளும் இறைவன் மனித குலத்திற்கு அளித்த அருட் கொடைகள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இங்கு பிரச்சினை என்பது தனிப்பட்ட மருத்துவர்களையோ அல்லது ஒரு குறிப்பிட்ட மருத்துவ முறையை மட்டுமோ சார்ந்தது அல்ல. மொத்தமாகவே அலோபதி மருத்துவமுறையை பயன்படுத்தி மக்களை சுரண்டும் போக்கைத்தான் கேள்விக்கு உள்ளாக்க வேண்டியுள்ளது. ஏனெனில் மற்றெந்த மருத்துவ முறையையும் விட அலோபதி மருத்துவத்தை முறை கேடாக பயன்படுத்தி மனித குலத்திற்கு இழைக்கப்படும் தீங்கு கூடுதல் என்பதால் அதுவே இங்கு பேசு பொருளாக மாறியுள்ளது.

அலோபதியை சிறைப்பிடித்திருக்கும் தீய வளையத்தைத்தான் நாம் குற்றஞ்சாட்டுகின்றோமோ தவிர அலோபதி மருத்துவ முறையை பழிப்பது நோக்கமல்ல.

அலோபதி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பெரும்பாலான ஆங்கில மருத்துவர்களுக்கும் இடையே ஒரு புனிதமற்ற கூட்டு நிலவுகின்றது. பல மருத்துவர்களுக்கு மருந்து நிறுவனங்கள் மருந்தின் உயர்ந்தபட்ச சில்லறை விற்பனை விலையிலிருந்து 25% - 50% க்கும் அதிகமான தரகு (commission) கொடுக்கின்றனர்.

இன்னும் சில மருந்து நிறுவனங்கள் மகிழுந்து (car), வீடு, சுற்றுலா போக்கிடம் (resort) என மிக விலை உயர்ந்த அன்பளிப்புகளை மருத்துவர்களுக்கு அள்ளிக்கொடுக்கின்றனர். மருந்து நிறுவனங்களின் விற்பனை பேராளர்களின் (medical rep) நேரடி வாக்கு மூலத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் இவை.

மருந்து நிறுவனங்களின் கொள்ளைக்கு அரசின் சட்டங்களில் உள்ள ஓட்டையை காரணம் காட்டுவது சரியல்ல. ஏனெனில் மருந்தை வாடிக்கையாளராகிய நோயாளியிடம் கொண்டு சேர்ப்பது மருத்துவர்கள்தான். எனவே மருத்துவர்கள் அனுமதிக்காமல் நோயாளிகளை சுரண்ட மருந்து மாஃபியாக்களால் ஒரு போதும் முடியாது என்பது தெளிவு.

நோய் கண்டு பிடிக்கும் தொழில் நுட்பமான ஸ்கேனை பரிந்துரைக்கும் மருத்துவருக்கும் ஸ்கேன் மையத்திலிருந்து தரகு கொடுக்கப்படுகின்றது. ஈ.சி.ஜி , டாப்ளர் சோதனை, அல்றா ஸவுண்ட் சோதனை ... உள்ளிட்ட எண்ணற்ற சோதனைகளுக்கும் இது பொருந்தும். {எ.கா.: எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கான கட்டணம் : 8000/=. இதில் மருத்துவருக்கு அந்த மையம் கொடுக்கும் தரகு 3000/=. இது சென்ற வருடத்து சென்னை மா நகர கட்டண நடப்பு.) இதில் நேரடி அனுபவம் உண்டு. இவை மருத்துவரின் சேவைக்கு கொடுக்கப்படும் சன்மானமா? அல்லது கிடைத்த லாபத்தில் பங்கா? அல்லது தொடர்ந்து பணம் கறக்கும் பலி ஆடுகளை அனுப்பி வைப்பதற்கான ஊக்கத் தொகையா?

சன்மானத்திலும், லாப பங்கிலும், ஊக்கத்தொகையிலும் நிறைவடையாத பல மருத்துவர்கள் தங்களது மருத்துவ மனையிலேயே மருந்துக்கடைகளை வைத்துள்ளனர். இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.

தொடர்புடைய மருத்துவர் எழுதித் தரும் மருந்தானது இந்த மருந்துக் கடையை விட்டால் வேறு எங்கும் கிடைக்காது. இதன் நோக்கம் மருந்தின் முழு லாபமும் தங்களின் பைக்கே வந்து விட வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன?

ஆங்கில மருந்தின் வெளிப்படைத்தன்மை, மூலக்கூறு, மூலப்பொருள் சேர்மான விவரம் (composition, formula), உற்பத்தி & காலாவதி தேதி – போன்ற விஷயங்கள் மாற்று முறை மருந்துகளில் கடைப்பிடிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

சித்த மருத்துவம், ஆயூர் வேதம் போன்றவை இந்த மண்ணின் மைந்தர்களின் சொந்த வாழ்வியல் அனுபவங்களிலிருந்து தோன்றி வளர்ந்தவை. அவை குடும்பப் பாங்கானவை என்பதால் பொதுவாக குற்றஞ்சாட்டப்படுவது போல் பெயர், உற்பத்தி விவரங்கள் இல்லாமல் சில மருத்துவர்களிடம் அவை கிடைக்கக்கூடும். பாட்டி வைத்தியத்திற்கும், வர்ம முறைக்கும் மூலக்கூற்றையும், உற்பத்தி முறையையும் கேட்க முடியுமா?

ஆனால் ஹோமியோபதி மருந்துகள், ஹம்தர்த் தவா கானா, டாபர் நிறுவனங்களின் யூனானி மருந்துகள், கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையின் ஆயூர் வேத மருந்துகள், இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் கூட்டு மருந்துகள் போன்றவை அனைத்தும் வெளிப்படைத் தன்மையோடும், மூலக்கூறு & மூலப்பொருள் சேர்மான விவரம், உற்பத்தி & காலாவதி தேதி போன்றவற்றுடனும்தான் சந்தையில் கிடைக்கின்றன.

ஆங்கில மருந்துகளின் வானாளாவிய விலையுடன் ஒப்பிடும்போது மாற்று முறை மருந்துகளின் விலை அப்படி ஒன்றும் குடும்பத்தின் மொத்த பொருளாதாரத்தையும் தகர்க்கக் கூடியதாக இல்லை.

மருத்துவம் பார்க்க வீட்டையும், வயலையும், நகையையும், சொத்துக்களையும் விற்று அழிக்கச் செய்த பெருமை, கந்து வட்டிக்கும் மீட்டர் வட்டிக்கும் காசு வாங்கச் செய்த அவலம் ஆங்கில மருத்துவத்தை விட்டால் வேறு மருத்துவ முறைகளுக்கு உண்டா?

ஆதாரத்தை தேடுவதற்கு வேறு எங்கும் போக வேண்டாம். பெரிய சிறிய அலோபதி மருத்துவமனைகளின் வாயிலில் காத்து கிடக்கும் கவலை தோய்ந்த முகங்களிடம் சென்று பேச்சு கொடுத்தாலே போதும். அருவி போல் கொட்டும். இதிலும் நேரடி அனுபவம் உண்டு. மருத்துவம் உரிய குணத்தை தராமல் போகும் நிலை ஆங்கிலம் மருத்துவம் உள்ளிட்ட எல்லா மருத்துவ முறைகளுக்கும் சில சமயங்களில் ஏற்படுவதுண்டு. ஆனால் ஆங்கில மருத்து முறையில் பெரும் பண விரையத்திற்குப் பின்னர்தான் மருத்துவம் பலனளிக்காத செய்தியை நாம் உணரவே முடியும்.

இவ்வளவு ஏன்? ஏற்கனவே செத்துவிட்ட நோயாளியின் சடலத்தை தீவிர மருத்துவ பிரிவில் வைத்து, ஏமாற்றிப் பணம் பறித்த அலோபதி மருத்துவமனைகளும் உண்டு. இன்று உலகு முழுக்க ஆங்கில மருத்துவம் செல்வாக்கு பெற்றிருக்கின்றது என்பதற்காகவே அதில் உள்ள கேடுபாடுகளை விமர்சிக்கக்கூடாது என்றில்லை. மனித குலத்தின் மீதான கரிசனத்தின் அடிப்படையில்தான் எந்த மருத்துவ முறையையும் அணுக வேண்டும்.

நமது தாய் நாட்டில் கல்வியை மட்டுமல்ல; மருத்துவத்தையும் எல்லா மக்களுக்கும் இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்கச் செய்த பெருமை கிறிஸ்தவ மிஷனரிகளைச் சாரும். இன்று கேரளத்தில் அமிர்தானந்த மயி அறக்கட்டளையின் சார்பில் நலிந்த பிரிவினருக்கான உயர்ந்த மருத்துவ சேவையை வரைமுறைக்குட்பட்ட கட்டணத்தில் அளிக்கின்றனர்.

வணிகத்தையும், லாபத்தையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழும் மார்வாடி குஜராத்தி பனியா சமூகமானது அனைத்து மக்களுக்குமான இலவச அலோபதி, ஆயூர்வேத மருத்துவ நிலையங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள ஒரு மார்வாடி ஆயூர்வேத வைத்திய சாலையின் கட்டணம் வெறும் இரண்டு ரூபாய்களே.

நமதூரில், பொதுமக்களின் பணத்திலும் ஏராளமான மனித உழைப்பிலும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனையானது இன்று முடங்கிப் போயுள்ளது. நம்மவர்கள் நடத்தும் பல மருத்துவமனைகள் சுறுசுறுப்பாக இயங்கத்தான் செய்கின்றன. ஆனால் கட்டணம் என வரும்போது கொள்ளை அடிக்கும் பிற மருத்துவமனைகளுக்கும், இவற்றுக்கும் பெரும்பாலும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. அத்துடன் மருத்துவ சேவையிலும் கனிவும், பண்பும், அன்பும், ஆறுதலும் தென்படுவதில்லை.

கிறிஸ்தவ, ஹிந்து மிஷனரி மருத்துவமனைகளின் அரசியலையும், பின்னணி நோக்கங்களையும் ஒதுக்கிவிட்டு பார்க்கும்போது, அவர்களிடம் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கின்றது.

தற்காலத்தில் அற்புதமான அலோபதி மருத்துவ முறையை பிடித்தாட்டும் கேடுகளின் கூட்டணி மிக வலுவானது.

--- மருந்துகளையும், மருத்துவக் கருவிகளையும் பெரும் முதலீட்டிலும் கொள்ளை லாப நோக்கிலும் தயாரிக்கும் பன்னாட்டு வணிக நிறுவனங்கள்

--- பொது சுகாதார முறையின் கீழ் வரும் அரசு மருத்துவமனைகளையும், சேவைகளையும் முடக்கிப்போடத் துடிக்கும் உலகமயமாக்கமும் அதன் அடியொற்றி நடக்கும் இந்திய அரசின் கொள்கைகளும்

--- அலோபதி மருத்துவக் கல்வியை பணம் காய்க்கும் மரமாகப் பார்க்கும் உள்ளூர் அரசியல்வாதிகள்

--- மருத்துவக் கல்லூரிகளை, கொழுத்த வணிகமாக மாற்றியுள்ள கருப்புப் பண முதலைகள்

--- இயந்திரமயமான, நுகர்வு வெறி நிறைந்த மக்களின் மன நிலையும், வாழ்க்கை முறையும்

--- மருத்துவம் என்பது சேவைத்துறைதான் என்பதை மறந்த மருத்துவர்கள்

என பல கட்டங்களுடைய சிக்கல் இது.

ஏதாவது ஓர் இடத்தில் வேகத்தடை போட்டாக வேண்டும். தீர்வை அரசுகளிடமும், அரசியல்வாதிகளிடமும், கறுப்பு முதலைகளிடமும், பன்னாட்டு பெரு வணிக நிறுவனங்களிடமும், எதிர்பார்ப்பதை விட - மக்களிடமிருந்தும், மருத்துவர்களிடமிருந்தும் தொடங்குவதுதான் எளிதானது.

தாயும், மருத்துவரும் இறைவனின் பேராளர்கள் என சொல்வதுண்டு. அதனால்தான் நமதூரைச் சார்ந்த குழந்தைகள் நல அலோபதி மருத்துவர் காலஞ்சென்ற ஆனந்தன் அவர்கள் இன்றளவும் நினைவு கூரப்படுகின்றார். மதம், சாதி, தான் பயின்ற மருத்துவ முறை போன்றவற்றைக் கடந்த மனித நேயர் அவர். அவ்வளவு எளிதில் ஊசி போட சம்மதிக்க மாட்டார். 10, 20, 25 பைசாக்கள் விலையுள்ள மாத்திரைகளையே பரிந்துரைப்பார். நோயாளிகளோடு உடன் வருபவர்களின் நெருக்குதலுக்கு ஆட்படவே மாட்டார்.

மாற்றங்களை நாடும் இன்றைய சூழலில் நமக்கு தேவை ஆனந்தன்களும், மக்கள் மயப்பட்ட மாற்று மருத்துவ வழிகளும் வலுப்படுத்தப்பட்ட பொது சுகாதார முறைகளுமே!!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...உண்மை
posted by: b.a.buhari (chennai) on 18 April 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26925

நோய் கண்டு பிடிக்கும் தொழில் நுட்பமான ஸ்கேனை பரிந்துரைக்கும் மருத்துவருக்கும் ஸ்கேன் மையத்திலிருந்து தரகு கொடுக்கப்படுகின்றது. ஈ.சி.ஜி , டாப்ளர் சோதனை, அல்றா ஸவுண்ட் சோதனை ... உள்ளிட்ட எண்ணற்ற சோதனைகளுக்கும் இது பொருந்தும். {எ.கா.: எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கான கட்டணம் : 8000/=. இதில் மருத்துவருக்கு அந்த மையம் கொடுக்கும் தரகு 3000/=.

இதை படிக்கும் பொழுது எனக்கு நடந்த ஒரு சம்பவம் நீனைவுக்கு வருகின்றது.

2 வருடத்திற்கு முன் நான் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ortho hospital ஒரு டாக்டர் இடம் காண்பித்து அவர் எனக்கு MRI ஸ்கேன் (KNEE) மவுண்ட் ரோடு இல் உள்ள ஒரு CENTER கு எழுதி கொடுத்தார், நானும் அந்த center இல் ஸ்கேன் எடுத்து விட்டு Rs 3,500 பணமும் கட்டி ரெசிப்ட் பெற்று கொண்டேன். எனக்கு dr சொன்னது RS 7,000. ஸ்கேன் center இல் வாங்கியது 3,500 ஒன்லி. அடுத்த நாள் ஸ்கேன் center இல் இருந்து எனக்கு போன் வந்தது நாங்கள் தெரியாமல் CT ஸ்கேன் உடைய பீஸ் உங்களிடம் இருந்து வாங்கி விட்டோம், ஆகவே நீங்கள் இன்னும் 3,500 எக்ஸ்ட்ரா பணம் கட்டவேண்டும் எண்டு சொன்னார்கள், நான் அவர்களிடம் நீங்கள் reciptil " MRI ஸ்கேன்" எண்டு தெளிவாக பிரிண்ட் அவுட் பண்ணி உள்ளீர்கள். ஆகவே முதலில் அதுக்கு விளக்கம் தரவும் எண்டு சொனவுடன் அவர்கள் டாக்டர் எங்களுக்கு போன் பண்ணி மீதி AMOUNT ஐ வாங்க சொன்னார் எண்டு அந்த ஸ்கேன் center பதில் சொல்லுகின்றார்கள். அத்துடன் நான் அந்த டாக்டர் ரை மறந்து விட்டேன்.

அலாஹ் எல்லா மக்களையும் காப்பானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: Abu Huraira (Abu Dhabi) on 18 April 2013
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26928

மாஷா அல்லாஹ். தாங்கள் கூறும் கருத்து அனைத்தும் உண்மையானவை.

copy and paste
"நமதூரில், பொதுமக்களின் பணத்திலும் ஏராளமான மனித உழைப்பிலும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனையானது இன்று முடங்கிப் போயுள்ளது. நம்மவர்கள் நடத்தும் பல மருத்துவமனைகள் சுறுசுறுப்பாக இயங்கத்தான் செய்கின்றன. ஆனால் கட்டணம் என வரும்போது கொள்ளை அடிக்கும் பிற மருத்துவமனைகளுக்கும், இவற்றுக்கும் பெரும்பாலும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. அத்துடன் மருத்துவ சேவையிலும் கனிவும், பண்பும், அன்பும், ஆறுதலும் தென்படுவதில்லை."

கடந்த 13/04/2013 அன்று எனது குடும்பத்தில் ஒரு சிறுவனுக்கு ஜுரம் 104.5 டிகிரி. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனைக்கு போனால் 1 வருடம் அனுபவமுள்ள மருத்துவர் (பெண்) இருக்கிறார். அடுத்த நாள் 14/04/2013 இரவு 10 மணிக்கு ஜுரம் 105 டிகிரி இருக்கும். அதே பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனைக்கு போனால் duty doctor கூட இல்லை.

இது சம்பந்தமாக நான் மேனேஜர் இடம் மறுநாள் டெலிபோன் மூலம் பேசினேன். மருத்துவர்கள் பார்த்து கொண்டு இருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.

எனது குழந்தைக்கு 6 days fever. 3 நாள் திருச்செந்தூர் சென்று காட்டிவிட்டு வருகிறார்கள். பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனைக்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறுகிறார்கள். நாம் ஆதரவு கொடுத்தால் மருத்துவர்கள் இல்லை. " மருத்துவமனை நிர்வாகிகள் நமது ஊரில் கருத்து கணிப்பு முதலில் நடத்தட்டும். அப்போது மக்கள் மத்தியில் அந்த மருத்துவமனை மீது உள்ள அபிப்ராயம் என்ன என்று தெரிய வரும்.

என் மனதில் பட்டவை நான் எழுதி விட்டேன். யாரையும் குறை கூற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: shajahan m.m (chennai) on 19 April 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26943

சாளை பஷீர் அவர்களின் இந்த கட்டுரை, ஷமீமின் கட்டுரைக்கு நமதூர் டாக்டர்கள் கொடுத்த விளக்கத்திற்கு , கௌண்டர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியதாகவே தெரிகிறது.. கொடுத்த விளக்கத்தையே திரும்ப திருச்சி கூறியுள்ளார்..

இதுபோன்ற தொடர்ச்சியாக அல்லோபதி மருத்துவத்திற்கு எதிரான கட்டுரைகளை இந்த இணைய தளம் வெளியிடுவதன் மூலம், தான் இந்த மருத்துவ முறையை எதிர்பாதாக எடுத்துக்கொள்ளலாமா.?

சென்ற விளக்கத்தில் மருத்துவர்கள் , மருந்துகளின் விலையை நிருனயிப்பது மருத்துவர்கள் அல்ல, அது மத்திய இரசாயன மற்றும் உர மைச்சகத்தின் கீழ் வரும் மருந்தியல் துறை தான் என்றும்,அந்த சட்டத்தில் உள்ள ஓட்டைகள தான், இந்த மருந்துகளின் விலையேற்றத்திற்கு காரணம் என்று அழகாக விவரித்து விட்டு, அருத்துவர்கள், நோயாளிகளின் மனநிலை மற்றும் பணநிலை அறிந்து தான் மருந்து தருகிறார்கள் என்று விளக்கம் கொடுத்த பின்னும் , மீண்டும் மருத்துவர்களை சாடுவது,

ஓரினசேர்க்கையினால் AIDS வருகிறது, அதனால் ஓரினசேர்க்கையில் ஈடு படாதீர் என்றால்,இல்லை மருத்துவர்களின் சிகிச்சை முறையால் தான் AIDS வருகிறது என்பது போல் உள்ளது..

மாற்று முறை மருத்துவத்தில்,ஹம்தர்த்,டாபர் , இம்ப்கோப்ஸ், உள்ளிட்டட பல மருந்து நிறுவனங்கள் வெளிப்படை தன்மையை கடைபிடித்தாலும் ஒரு சில மருத்துவர்கள் தவிர மற்றவர்கள் தரும் மருந்து கலீல் பெயரோ, விலையோ இல்லை..அல்லது இந்த மருந்து நிறுவங்களின் லேபல் கிழிக்க பட்டு , தன இஷ்டம் போல் உள்ள விலை தான் ..

மருத்துவர்கள் தங்கள் மருத்துவ மனைகளில் , மருந்துகடை வைத்து லாபம் சம்பாதிப்பதில் என்ன தவறு..ஹலாலான முறையில் எந்த பிசினஸ் இருந்தால், ஒரே இடத்தில் எத்தனை வருமானம் பெறுவதில் என்ன தவறு...airticket பிசினஸ் செய்பவர்கள், கூட சேர்ந்து forex பிசினஸ், பண்ணினால் . எல்லா வருவாயும் தன பைக்கே எடுக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா..

இந்த இணையதளம் டாக்டர்கள் மீது வெறுப்பு கொட்டும் கட்டுரைகளை வெளியிடுவதை இத்துடன் நிறுத்தினால் நல்லது அல்லது இது பற்றி parallel விளக்கம் கொடுக்க அந்த துறை மருத்துவர்களையும் கலந்து ஆலோசிக்கலாம்.

என் மனதில் பட்டவை நான் எழுதி விட்டேன். யாரையும் குறை கூற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பாதிக்கப்பட்டவர்கள்
posted by: Mauroof (Dubai) on 29 April 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27113

சகோ. சாளை பஷீர் ஆரிஃப் அவர்கள் தனது சகோதரிக்கு அலோபதி மருத்துவம் பெற்றபோது நேரடியாகவே பாதிக்கப்பட்டவர். (மருத்துவ மனையா? மரண மனையா? என்ற அவரது கட்டுரையை படித்தால் புரியும்). அவர் அலோபதி மருத்துவ முறையைச் சாடியதை விட இந்த மருத்துவ முறையில் பணக் கோலோச்சும் சில அரக்க குணம் கொண்ட மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் சாடியதை ஆராய்ந்துப் பார்த்தால் அதில் 50% சதவிகிதமாவது உண்மை இருக்கத்தான் செய்யும்.

இந்த கட்டுரைக்கு கருத்து பதிந்துள்ள சகோ. B.A. புஹாரி அவர்களது சிறிய அனுபவம் எல்லாம் இந்த மருத்துவ முறையில் ஒரு கொசுறு என்றால் மிகை ஆகாது.

மருத்துவம் தொடர்பாக சகோ. ஷமீமுல் இஸ்லாம் எழுதிய மற்றொரு கட்டுரையில் கூறப்பட்ட சில விடயங்களுக்கு காயல்மண்ணின் சில மருத்துவர்கள் அழகிய முறையில் பதில் அளித்திருந்தனர். இதுதான் ஆரோக்கியமான ஒன்று. அதை விடுத்து ஒரு துறையில் இருக்கும் தவறுகளை வெளிக்கொணரவே கூடாது என்று கூறுவது சரியாகாது.

மருத்துவமும் கல்வியும் சேவை என்ற நிலை மலையேறி பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது என்றாலும், அலோபதி மருத்துவ முறையில் மட்டுமில்லை, மற்ற மருத்துவ முறைகளிலும் பல்வேறு குறைபாடுகளும் இருக்கத்தான் செய்யும். அதே சமயம் மனித நேயம் கொண்ட சில மருத்துவர்களும் அங்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. கீழ்காணும் குர்ஆனின் வசனங்களுக்கு யார்தான் விதிவிலக்கு?

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். (அல்குர்ஆன் - 99:7)

அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (அல்குர்ஆன் - 99:8)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved