Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:40:48 AM
வெள்ளி | 3 மே 2024 | துல்ஹஜ் 1737, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:59
மறைவு18:27மறைவு14:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
தலையங்கம்
அனைத்து தலையங்கங்களையும் காண|அனைத்து கருத்துக்களையும் காண
Previous EditorialNext Editorial
தலையங்கம் எண் (ID #) 43
#KOTWEDIT43
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 25, 2011
காயல்பட்டினத்தில் ஓர் அக்டோபர் புரட்சி!
இந்த பக்கம் 8449 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (41) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சுமார் ஒரு மாதத்திற்கு முன் - பி.எம்.ஐ. ஆபிதா சேக், 38 வயது நிரம்பிய, மழலையர் பள்ளிக்கூடம் நடத்தும் ஒரு குடும்பத் தலைவி. பொது விஷயங்களில் ஆர்வமுள்ளவர் என சிலருக்கு மட்டும் அறிமுகமானவர். ஆனால் இன்றோ, அவர், 45,000 மக்கள் வாழும் ஒரு நகர்மன்றத்தின் தலைவியாக பதவியேற்க உள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று கூறினால் அது மிகையாகாது.

கடந்த ஒரு மாதத்தில் வேட்பாளராக ஆபிதா எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். அவற்றை அவர் எதிர்கொண்ட விதம் அவரின் சீரிய சிந்தனையையும்,பக்குவத்தையும், தனது திறமை மீது அவர் கொண்டிருந்த அளவிலா நம்பிக்கையையும் காண்பிக்கிறது. தினமும் காலை முதல் இரவு வரை அவர் மேற்கொண்ட தொய்வில்லா பிரச்சாரம், மக்களை அவர் அணுகிய விதம், நகர பிரச்சனைகளை புரிந்துகொண்டு அவர் வழங்கிய வாக்குறுதிகள் பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி, பலரையும் சிந்திக்கவும் தூண்டியது.

வேட்பாளராக ஆபிதா எதிர்கொள்ள வேண்டியிருந்தது சாதாரண சக்திகளை அல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்னர் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொது நல அமைப்புகளின் கூட்டமைப்பாக துவக்கப்பட்ட காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை. அவ்வமைப்புடன் இணைந்து செயல்புரிந்தவர்கள் முழு நேர அரசியல்வாதிகள் மற்றும் பலதரப்பட்ட செல்வந்தர்கள். அவர்கள் எடுத்து வைத்த வாதங்கள், பிரசார முழக்கங்கள், கையாண்ட யுக்திகள் - நிகழ்கால காயலுக்கு எவ்வித தொடர்பும் இல்லாது இருந்தது மட்டுமின்றி, குறுகிய கால இலக்குகள் அடிப்படையில் அமைந்திருந்தது.

நகர்மன்றத் தலைவியாக ஆபிதாவின் தேர்வு - பலருக்கு, பல பாடங்களைப் புகட்டியிருக்கிறது.

செல்வத்தால் அனைத்தையும் சாதிக்க இயலாது. ஒரு சிலர் விலை போகலாம், மக்கள் அனைவரையும் விலைக்கு வாங்க இயலாது. இது செல்வந்தர்களுக்கு மக்களால் வழங்கப்பட்ட பாடம்.

இது புதிய காயல். இதில் மூன்றாம் தர அரசியலுக்கு இடம் கிடையாது. இது முழு நேர அரசியல்வாதிகளுக்கு மக்கள் வழங்கிய பாடம்.

சொல்லப்படும் அனைத்தையும் - கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு - ஏற்றுக்கொள்ள மக்கள் ஆயத்தமாக இல்லை. தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணம், செய்ய வேண்டிய பணிகள், செய்யக்கூடாத பணிகள் - என அனைத்தையும் - மக்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் கணக்கிலெடுக்காது பயணம் மேற்கொண்டிருக்கும் - ஐக்கியப் பேரவை நினைவு படுத்திக் கொள்ளவில்லை எனில், மக்கள் அவர்களை மறக்க வேண்டிய சூழல் ஏற்படும்.இது காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு மக்கள் வழங்கிய பாடம்.

கடந்த இரண்டு மாதங்களாக நாம் கண்டவை, கடுமையான போராட்டத்திற்கு இடையில் ஆபிதா பெற்றுள்ள வெற்றி - ஆகியவற்றை நாம் காணும்போது நிகழ்வுகளை ஒரு மக்கள் புரட்சி என்றே நம்மை வர்ணிக்க தூண்டுகிறது.

புரட்சிகள் தரும் பாடங்களை நகர்மன்றத் தலைவி ஆபிதாவும் உணர்ந்து செயல்படவேண்டும். ஒரு புரட்சிக்கு பிறகு நமக்கு கிடைக்கும் சமுதாயம் எழுதப்படாத புத்தகம் போன்றது. அது ஆபிதா என்ற ஒருவரின் புத்தகம் மட்டும் அல்ல! காயல்பட்டினத்தின் எதிர்காலமும் எழுதப்படவேண்டிய புத்தகம். அவசியமான திட்டங்கள், திடமான செயல்பாடுகள், பிரயோசனமான பயன்கள் கொண்டே அதன் பக்கங்கள் நிரப்பப்பட வேண்டும்.

தனது தேர்தல் நேர வாக்குறுதிகளை மறவாமல், அடுத்த ஐந்து ஆண்டுகள் நகர்மன்ற தலைவியாக ஆபிதா செயல்படும் பட்சத்தில், காயல்பட்டினம் நகர வரலாற்றில் அவருக்கு என தனி பக்கம் உண்டு. அவ்வாறு செயல்படவில்லை எனில், இன்றைய புரட்சி, காயல் வரலாற்றில் ஒரு மாதம் நீடித்த ஓர் அர்த்தமற்ற திருவிழா என்றே எழுதப்படும்.

Previous EditorialNext Editorial
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

அருமையான & அவசியமன கட்டுரை. எல்லோரும் படித்து நல்லபடி follow பண்ணவும்


posted by: SUAIDIYA BUHARI (chennai) on 25 October 2011
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20380

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

" தனது தேர்தல் நேர வாக்குறுதிகளை மறவாமல், அடுத்த ஐந்து ஆண்டுகள் நகர்மன்ற தலைவியாக ஆபிதா செயல்படும் பட்சத்தில், காயல்பட்டினம் நகர வரலாற்றில் அவருக்கு என தனி பக்கம் உண்டு. அவ்வாறு செயல்படவில்லை எனில், இன்றைய புரட்சி, காயல் வரலாற்றில் ஒரு மாதம் நீடித்த ஓர் அர்த்தமற்ற திருவிழா என்றே எழுதப்படும். "

உங்கள் தலையங்கத்தில் அதிகம் பிடித்த வரிகள் இவைகள் . நடுநிலையான வார்த்தை . பொறுத்திருந்து பார்ப்போம் .
Vilack SMA


posted by: Vilack SMA (Siacun) on 25 October 2011
IP: 121.*.*.* China | Comment Reference Number: 20381

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

அஸ்ஸலாமு அலைக்கும்

காலத்திற்கேற்ப சிந்திக்கவேண்டிய சிறந்த தலையங்கம்

அனைத்து தரப்பு மக்களும் பங்குகொள்ளும் வலுவான, உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்தும் பேரவை மிக அவசியம். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இன்ஷா அல்லாஹ் நம் பெரியவர்கள் இளவல்களையும் அரவணைத்து நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினால் மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் உரியவர்கள். அவ்வாறு செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வுலகில் பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்ட செல்வந்தர்கள் சற்று சிந்தித்து தங்களுடைய செல்வதை நல்ல வழிகளில் செலவு செய்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

இதை செய்யத்தவறினால்

அல்லாஹ்வை மறந்து மக்கள் கருத்தை நசுக்கி அட்டூழியம் புரிந்த பெரும் ஆட்சியாளர்கள் - துனிசியாவின் பின் அலி, எகிப்தின் முபாரக் போன்றோர் மண்ணை கவ்வியதையும், நாற்பது வருட காலம் சர்வாதிகார ஆட்சி புரிந்த GADDAFI உடைய இறுதி முடிவு எப்படி இருக்கிறது என்பதையும் நாம் LIVE ஆக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுவெல்லாம் வெறும் பொழுதுபோக்கு காட்சிகளல்ல, படிப்பினை பெறவேண்டிய உண்மைகள்.

நம்பிக்கை கொண்டோரே .... படிப்பினை பெறுங்கள் .....

இன்ஷா அல்லா நல்ல மாற்றத்தை நாடி ......


posted by: D.SEYED ISMAIL (HONGKONG) on 25 October 2011
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 20382

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பல தடைகளை தகர்த்து தன்மானத்தோடு ஏழை எளிய மக்களின் நல் ஆதரவோடு வெற்றி...

பல தடைகளை தகர்த்து தன்மானத்தோடு ஏழை எளிய மக்களின் நல் ஆதரவோடு வெற்றி பெற்று இன்று காலை 10 மணிக்கு காயல்பட்டிணம் நகராட்சி மன்றத்தில் தலைவராக பதவி ஏற்கும் பொது நல சேவகி திருமதி ஆபிதா அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்...

என்றும் நீங்கள் ஆற்றும் மக்கள் பணியில் உங்களுக்கு நாங்கள் துணை நிற்போம்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். மற்றும் காயல்பட்டிணம் புறநகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள்.


posted by: நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (?????????????) on 25 October 2011
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20383

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தவறான வழிநடத்தல்..

இந்த தலையங்கத்தையும் சாடல் என்றும் ஒருதலை பட்சம் என்றும் கருத்துக்கள் வந்தால் ஆச்சர்யம் இல்லை.

இயக்க வெறி, கண்மூடித்தனமான பக்தி, பெரியவர்கள் மீது உள்ள அபரிதமான மறியாதை என பல வகையான ஆதரவாளார்களால் பேரவையின் நிலைபாடுகள் நிதர்சனத்தைவிட்டும் வெகு தூரத்தில் நிறுத்திவிட்டது.

பெரியவர்களுக்கு இருக்கும் கண்ணியத்தை பகடைகாய்களாக பயன்படுத்தி, ஊர் ஒற்றுமை, ஓட்டு பிரிந்துவிடும் போன்ற வெறும் காரணங்களால் மக்களை 'ஹைஜாக்' செய்ய பின்னால் இருந்து ஆட்டிவைத்தவர்கள் - ஏற்படுத்திய சூழல் இன்று அவர்களின் கவுரவத்திலும், அவர்களின் காத்த கன்னியதிலும் விளையாடிவிட்டது.

இன்று பேரவையின் பெரியவர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்புவதில் கூட அவர்களின் பெருந்தன்மையை கட்டிவைத்திருப்பதும் இதே சூழல்தான்.

கன்னியம் என்பது இறைவன் தருவது, கடந்த கால நற்செயல்கள் இவர்களுக்கு வழங்கியது அது இனிமேலும் தொடரும், தொடரவேண்டும் - இதை ஓர் அற்ப அரசியலுக்காக விலையாக கொடுக்க அனுமதித்ததுதான் துரதிஷ்டம்.

பெரியவர்களை மதிக்கிறோம் என்று வாய்கிழிய பேசும் நல்லவர்களுக்கு இந்த அரசியல் தெரியாமல் இருக்கிறார்களா அல்லது அவர்களும் இந்த விளையாட்டில் ஒரு பகுதிதானா என்பது அவரவருக்கும் படைத்தவனுக்கும் தான் தெரியும்.

இதற்கு முன்னரும், செய்திகளை சொன்னதுக்காக வழக்கு தொடர்வோம் என ஊடகங்களை மிரட்டியவர்கள், இப்பொது தளங்களில் மக்கள் கருத்தை முடக்க மிரட்டுவது இந்த சந்தேகத்தை இன்னும் உறுதி செய்கிறது.

ஊர்வாயை மூடுவதை விட்டு தவறை சரிசெய்ய சொல்வது நன்மையை தரும் என்ற அடிப்படை தெரியவில்லையா அல்லது தொடர்ந்து பெரியவர்கள் பெயரில் காலம் தள்ள துடிக்கும் சுயநல நாடகமா என்பதை சராசரி அறிவுள்ள யவரும் அறிந்து கொள்வர்.


posted by: M Sajith (DUBAI) on 25 October 2011
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20384

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

நல்ல தலையங்கம் :

---------------------------1

-- தனது தேர்தல் நேர வாக்குறுதிகளை மறவாமல், அடுத்த ஐந்து ஆண்டுகள் நகர்மன்ற தலைவியாக ஆபிதா செயல்படும் பட்சத்தில், காயல்பட்டினம் நகர வரலாற்றில் அவருக்கு என தனி பக்கம் உண்டு. அவ்வாறு செயல்படவில்லை எனில், இன்றைய புரட்சி, காயல் வரலாற்றில் ஒரு மாதம் நீடித்த ஓர் அர்த்தமற்ற திருவிழா என்றே எழுதப்படும்.

இது தான் உண்மை

SHUAIBU PIRABU
HONGKONG


posted by: Pirabu Shuaibu (Hong Kong) on 25 October 2011
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 20385

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் தலையங்கம் மிகவும் கவனத்துடனும், அக்கரையுடனும் வரைய பெற்ற ஓர் காவியம். மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட ஆட்சியோ அல்லது தனிப்பட்ட நிர்வாகமோ எப்போதெல்லாம் தவரிழைகின்றதோ, அப்போதெல்லாம் அதனை மக்கள் மிக கடுமையான முறையில் தண்டிக்க தவறுவதில்லை. அதன் எதிரொலிதான் தற்போது நிகழ்ந்த சம்பவம். நமது அரசியல் அரங்கில் பல முறை நாம் கண்ட நிகழ்வுகள் நம்மை சிந்திக்க தூண்டி செம்மை படுத்திட வேண்டும்.

எமர்ஜன்சி காலத்து இந்திரா முதல் நேற்றைய கடாபி வரை பற்பல அரசியல் அரங்கேற்றத்தை நாம் நிறையவே கண்டு கொண்டிருக்கிறோம். எனவே எப்போதெல்லாம் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அல்லது நிர்வாகத்தின் மீது வெறுப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மக்கள் கொதித்தெழுந்து அந்த ஆட்சியாளர்களுக்கு / நிர்வாகத்திற்கு முடிவு கட்டுவது ஓர் இன்றியமையாத நிகழ்வாகும். எனவே இந்த வரலாற்று பதிவை மனதில் நிறுத்தி இந்த புதிய ஆட்சியாளர்களும் சஹோதரி ஆபிதாவின் தலைமையில் இறைவனுக்கு பயந்து ஓர் அற்புதமான ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். அதற்க்கு நாம் அனைவரும் ஒற்றுமையுணர்வுடன் ஒன்று சேர்ந்து அவர்களக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமையாகும்.


posted by: I.M.Abdur Rahim (MADURAI) on 25 October 2011
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20386

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

வார்தய்க்கு வார்த்தை சத்யம். தலையங்கம் அருமை. காயலர்களின் மன பிரதிபலிப்பு இந்த தலையங்கம். All the best to our Chairperson and members.


posted by: Samu.A.B (Dubai) on 25 October 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20387

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

வார்டு உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும். எனவே இவர்களும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடவேண்டும். ஊர் நலத்திட்டங்களில் நகர்மன்ற தலைவியுடன் சேர்ந்து உழைத்திடவேண்டும். இன்று பதவி ஏற்கும் நகரமன்ற தலைவி சகோதரி ஆபிதா அவர்களுக்கும் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


posted by: MOHAMED ISMAIL (Chennai) on 25 October 2011
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20389

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. பாதிக்கப்பட்டவர்களே பயங்கரவாதிகளாக..

நல்லதொரு தலையங்கம் .

நடந்து முடிந்த தேர்தலில் சகோதரி ஆபிதா அவர்கள் மீது மட்டும் அவதூறும், விமர்சனங்களும் பரப்ப படவில்லை மாறாக நமதூர் மீடியாக்கள் மீதும் , என்னை போன்ற நடுநிலை வாதிகள் மீதும் பல விமர்சனங்கள் பரவியது. நாங்கள் ஒரு தலை பட்சமாக செயல்படுகின்றோம் , குழப்பவாதிகள் , இவங்க நாழு பேரு எழுதுற கருத்துனால ஒன்னும் ஆவ போறதில்லை என்ற பல விமர்சனங்களும் எழுந்தது . ஆனால் பாதிக்கப்பட்டவர்களே பயங்கரவாதிகளாக ,குழப்பவாதிகளாக சித்தரிக்க பட்டார்கள் என்பதே இன்று ஊர் அறிந்த உண்மை .

எங்களுக்கு மட்டும் ஊர் ஒற்றுமையில் ஆசை இல்லையா என்ன ...?? ஆனால் அது போலி ஒற்றுமையாக இருக்க கூடாது என்பது தான் என்னை போன்றோரின் விருப்பம் . அன்று என்னிடம் ஒருவர் உங்கள் வேட்பாளர் 4000௦௦௦ ஓட்டு கூட வாங்க மாட்டார்கள் என்று கூறியவர்கூட மாஷா அல்லாஹ் இன்று அவர்கள் 4300 அதிகம் பெற்று வெற்றி பெற்றதை பார்த்ததும் உண்மைக்கு கிடைத்த வெற்றி ,நீதிக்கு கிடைத்த வெற்றி என்று கருத்து எழுதுகிறார் அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வெற்றிக்காக உழைத்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் , தன்னமிக்கை சகோதரி ஆபிதா அவர்களுக்கும் வாழ்த்துகளையும் ,நன்றியினையும் தெரிவித்து கொள்கிறேன்


posted by: முத்துவாப்பா... (???-?????) on 25 October 2011
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20391

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. நேர்மை மிக்க துணிவு

சபாஷ் காயல்பட்னம்.காம் .............

துணிவான நேர்மையான தலையங்கம். பல பெரிய வளர்ந்த ஊடகங்களே வியாபார யுக்தி வேண்டி வெளிப்படையான நேரிடையான கருத்துக்களை பதிவு செய்ய தயங்கும் இந்த காலத்தில் தவறான போக்கு என்று கருதுவதை தெளிவாக காரண காரியங்களுடன் விளக்கியுள்ளது நேர்மை தந்த தைரியம்.

சமுதாய முன்னேற்றத்திற்க்காக வேண்டி தொடங்கப்பட்ட எந்த ஒரு அமைப்பும் அதன் வளர்ச்சி பரிணாமத்தில் தனது சொந்த முகத்தை இழந்து விடுவது இயற்கையே ......அந்த தருணத்தில் அந்த நல்ல நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட அந்த அமைப்பை காப்பாற்றுவதற்காக அல்லாஹ்வே ஏற்படுத்தும் மாற்றங்கள் தான் இவை என்று தோன்றுகிறது.

மக்கள் மனதை புரிந்து கொள்ளாத எந்த அமைப்பும் எந்த தலைவனும் சிதைந்து போன நிலையிலேயே சீரழிவை கண்டுள்ளார்கள் . இது பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை உலகம் உணர்ந்த உண்மை. நாம் உணர தவறினால் காலம் மிக மோசமாக நமக்கு கற்றுத்தரும். அப்போது யாருக்கும் பலனில்லாமல் போய்விடும்.

பெரியவர்களே. தனவந்தர்களே, மாறுங்கள், மாற்றம் சந்திக்க உங்களை தயார் படுத்துங்கள். இது காலத்தின் கட்டளை. நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ இது நிகழ்ந்தே தீரும். இதை சந்திக்க உங்களை தயார் படுத்தினால் நீங்களே பெரியவர்கள்.உங்கள் பின்னால் எப்போதும் வெற்றி பெற்ற சமுதாயம் இருக்கும்.

இல்லையெனில் கைசேத பட்ட நிலையிலேயே காலம் முடிந்து விடும்.

இனி வரும் காலங்களில் பணம், ஒன்றுக்கும் உதவாத வாக்கு சாதுர்யங்கள், பெருமைக்காக எங்கிருந்தோ துதி பாடிகள் மூலம் நகர்த்தும் நகர்வுகள், பேரால் பெரியத்துவம் கொண்டு மட்டும் எதையும் சாதித்து விட முடியாது என்று தான் தோன்றுகிறது.

புரிந்து கொண்டால் புண்ணியம்...........

மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். தைரியமான தலையங்க பதிவிற்கு......

முஸ்தாக் அஹ்மத்.


posted by: musthak ahamed (mumbai) on 25 October 2011
IP: 49.*.*.* India | Comment Reference Number: 20392

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

அஸ்ஸலாமு அழைக்கும்

உங்கள் தலையங்கம் அருமை,நமது ஊர் தலைவர்கள்,செல்வந்தர்கள் ஊர் தலைவிக்கு எந்த விதத்திலும் எடயுறு செய்யாமல் தங்களுடைய நல்ல முன்னேற்றமான பயனுள்ள அறிவுரைகளை வழங்கி ஊர் வளர்சிக்கு அவர்களுடைய பங்களிப்பை வழங்கிட எல்லாம் வல்ல அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.


posted by: M.N.ABDUL CADER (chennai) on 25 October 2011
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20393

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. காயல்பட்டின தளத்தின் ஓர் அக்...

காயல்பட்டின தளத்தின் ஓர் அக்டோபர் புரட்சி

இது ஒரு தேவை இல்லாத கட்டுரை ....., ஒரு மாதத்துக்கு முன் இருந்த உங்கள் நடுநிலை எங்கே போச்சு??????? , பிற மக்கள் எள்ளி நகையாடும் அளவுக்கு ஊரின் பிரச்சனையை கொண்டு சென்றதர்கு ...!! (இது ஒரு புரட்சி தான்) . .

தயவு செய்து நடு நிலையை கடைப்பிடிப்பீர் !!!!!!


posted by: Abdur Rahman (New Delhi) on 25 October 2011
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20395

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

வார்டு உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும். எனவே இவர்களும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடவேண்டும். ஊர் நலத்திட்டங்களில் நகர்மன்ற தலைவியுடன் சேர்ந்து உழைத்திடவேண்டும். இன்று பதவி ஏற்கும் நகரமன்ற தலைவி சகோதரி ஆபிதா அவர்களுக்கும் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


posted by: N.ABDUL KADER (COLOMBO) on 25 October 2011
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20396

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. தாழ்மையான வேண்டுகோள்

அஸ்ஸலாமு அலைக்கும்..

அன்புடன் காயலர்களே மற்றும் வெப்சைட் admin .. மீண்டும் மீண்டும் நான் சொல்ல வருவது..நடந்ததை ஒரு கேட்ட கனவாக மறந்து விடுவோம்..தவறு எங்கோ நடந்து.. பிரிவுகள் ஏற்பட்டு ..ஒரு வகையாக எதிர்பார்த்த முடிவு தேர்தலில் கிடைத்து, ஒரு தலைமையும் நாம் பெற்று விட்டோம்..

இனி நடந்தவைகளை postmortem பண்ணி கிளறிகொண்டு இருந்தால், நமக்குள் பிரிவினை பெரிதாகும்..இன்று நகரமன்ற பதவி ஏற்றதோடு, பதவி ஏற்புக்கு வாய்ப்பு ஏற்படுத்திய தேர்தல் பற்றிய செய்திகள், கருத்துகள்,விவாதங்கள், போன்ற வெற்றிக்கு முதற்று புள்ளி வைத்து விட்டு..இனி நகர் மன்ற செயல் பாடு நல்ல வழில்யில் நடை பெறுகிறத என்று உற்று நோக்குவோம்..

பழைய MKT அண்ட் LK மோதலை நாம் மறக்க கூடாது (நான் குறிப்பிடுவது அந்த மரியாதைக்குரிய அந்த பெரியவர்களை அல்ல ..அவர்கள் பெயரில் மோதிய நம் முன்னோர்களை )..அதற்க்கு பின் நம் மார்க்க கொள்கை சம்பந்தமாக எழுந்த மோதல் களையும் நாம் மறக்ககூடாது..அந்த காலத்தில் இது போல் ஊடகங்கள் இல்லாததால், அந்த சண்டை ஒரு முடிவுக்கு வந்தது.. இது இன்டர்நெட் உகம்.. ஆதலால், ஒரு சிறு கருது வேறுபாடு பெரிதாக மாற வாய்ப்பு உள்ளது..

அன்புடன் admin ...இனி நாம் முன்னோக்கி பார்த்து , செல்ல வழி வகுப்போம்..ஐக்கிய பேரவையும் அரவணைத்து செல்வோம்..சுத்திகரிக்கப்பட்ட ஐக்கிய பேரவை ஏற்படத்த பட்டு, நல்ல காயலை உருவாக்க பாடுபடவும்...


posted by: DR D MOHAMED KIZHAR (chennai) on 25 October 2011
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20397

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

மனம் தளர்ராமல் உண்மைய கூறிய காயல்.காமுக்கு சபாஷ் இது போல் உண்மை சொல்ல அணைத்து மிடியாகளும் முன்வரவேண்டும். எல்லா எதிர்ப்பையும் துச்சமா நினைத்து பெண்புலி தலைவி ஆபிதா எந்த சலசலப்க்கும் அஞ்சாது உன் பனி சிறக்க அல்லாஹ் கிருபை புரிவான் ஆமீன்.ஊர் மக்களும் உனக்கு உதவிட காத்து இருக்கிறோம்.பணபலத்தை மீறி பனி செய்.

ஐக்கியம இருப்போம் ஜாமைபோம்.

பீனா அப்துல் ரஷீத்
பதாஹ் ரியாத்.


posted by: peena abdul rasheed (Riyadh) on 25 October 2011
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20399

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. காயல்பட்டினத்தில் ஓர் அக்டோபர் புரட்சி

நல்லதொரு கட்டுரை,

ஆனால் நடந்து முடிந்தது எல்லா ஊரிலும் நடந்த சதாரன தேர்தல் தான், தேர்தல் என்றாலே சிலர் வெற்றி பெறுவார்கள் சிலர் வெற்றி வாய்ப்பை இழப்பார்கள். அதனால் அவர்களின் கண்ணியமும், சேவை மனப்பான்மையும் தோற்றுவிட்டது என்று நினைபதுதான் முட்டாள்தனம். .

இந்த தலையங்கத்தின் தலைப்பு "காயல்பட்டினத்தில் ஓர் அக்டோபர் புரட்சி" october புரட்சி, september கிளர்ச்சி என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு ஒன்னும் பெரியதாக நடந்து முடியவில்லை.

கொஞ்சம் மிகை படுத்தியே எழுதி உள்ளீர்கள். அது சரி இது மீடியாவுக்கே உண்டான மொழியாக இருக்கலாம். வேண்டும் என்றால் காயல் வரலறுலேயே கண்டீரத ஒரு வினோதமான தேர்தல் களம் என்று சொல்லலாம்.

இந்த தேர்தலை முன் வைத்து சிலர் சுய விளம்பரம் செய்து ஆதாயமும் பெற்றுள்ளார்கள் என்றால் அது மிகை யாகாது. இந்த தேர்தல் கொஞ்சம் நம்ம ஊரில் நடந்த தேர்தலை விட சற்று மாறுதல் உடையது தான் . ஆம்! பெண்களே கூட்டம் கூட்டமாக தெருக்களில் சென்று இன்னும் சொல்ல போனால் மற்ற சமுதயாதினர்கள் இருக்கும் பகுதிக்கும் சென்று துணிச்சலாக தங்களுடைய கோரிக்கைகளை முன்னிறுத்தி வாக்குகளை சேகரித்த விதம் காயல் கண்டீரத ஒரு வியப்பான செயல் தான்.

புரட்சி புரட்சி என்று சொல்லும் அளவுக்கு எந்த ஒரு புரட்சியும் நடக்க வில்லை , புரட்சியாளர்களை அடக்குமுறை கொண்டு ஒடுக்கிய சர்வாதிகாரிகளும் நம்ம ஊரில் இல்லை.

எனினும் தலையங்கம் நல்ல பயனுள்ளதாக இருக்கும் இந்த தருணத்தில் ஐக்கிய பேரவையை சாடி இருக்க வேண்டியதில்லையே!!!!


posted by: Zainul Abdeen (Dubai) on 25 October 2011
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20400

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. தேர்தல் தான் முடிந்து விட்டதே ! ஏன் இப்படி பிரச்சனையை மூட்டிக்கொண்டே போக வேண்டும்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எனது அன்பான காயல்பட்டணம்.காம் நிர்வாகிகளே! 2 மாதங்களுக்கு முன்பு வரை இந்த இணையத்தளத்தை ஒன்றுக்கு பலத்தடவை பார்பதுண்டு ஆனால்......... எப்பொழுது இந்த தேர்தல் வந்ததோ அன்று முதல் இன்று வரை இந்த இணையத்தளத்தை பார்க்கும் ஆசை சென்று விட்டது......

தேர்தல் தான் முடிந்து விட்டதே ! ஏன் இப்படி பிரச்சனையை மூட்டிக்கொண்டே போக வேண்டும்

இதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை


posted by: A.W.Abdul Cader Aalim bukhari (Mumbai) on 25 October 2011
IP: 114.*.*.* India | Comment Reference Number: 20401

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. நடுநிலையான தலையங்கம்

எனதன்பின் காயல்பட்டணம். காம் அட்மின் அவர்களே. மிகவும் அழகாக, பொறுமையுடன் யோசித்து வார்த்தைகளை மிகவும் எழிலாக கையாண்டு நடுநிலையோடு பத்திரிகை தர்மத்தை மீறாமல் எழுதப்பட்ட எல்லோருக்கும் பொதுவான இந்த நேரத்திற்கு உகந்த ஒரு தலையங்கம்.

பேரவை செய்த தவறுகளை மிகவும் நாசூக்காக ஆனாலும் பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டி, அதனால் ஏற்ப்பட்ட நஷ்டங்களையும் சுட்டிக்காட்டி, ஒரு பெண்ணாய் இருந்தும் எதிரிகளின் வசை சொற்க்களிர்க்கும், மிரட்டுதல், மற்றும் மக்கள் மன பலத்தை நம்பாமல், பண பலத்தை நம்பி நட்டாற்றில் நிண்டவர்களின் நிலையை பூதக்கண்ணாடி போட்டு காட்டியது, நமது நகராட்சி தலைவிக்கு நல்ல பல அறிவுரைகளையும் வழங்கி, மக்களுக்கு நிஜத்தின் வெளிப்பாடுகளை யதார்த்தமாக சொல்லி, அதேநேரம் தலைவி அவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளையும் அவருக்கு புரியும்படி சொல்லிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது.

வாழ்க பத்திரிகை சுதந்திரம்


posted by: சாளை ஷேக் ஸலீம் (Dubai) on 25 October 2011
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20402

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

அஸ்ஸலாமு அழைக்கும்

காயல்பட்டினத்தில் ஓர் அக்டோபர் புரட்சி என்பதை வரலற்றாக மாற்ற வந்த ஜனாப.ஆபிதா ஷேக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

"உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வாழ்த்தும் " என்ற அடிகளை நினைவில் வைத்து செயல்படுங்கள்.

உங்கள் நல்லாட்சி மலர வாழ்த்துக்கள்
SALAI.S.L.Khaja Muhyideen


posted by: Salai.S.L.Khaja Muhyideen (Dubai) on 25 October 2011
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20403

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

VERY GOOD EDITORIAL,MADE TO THINK,GOOD ADVICE TO PRESIDENT.AND ALSO NICE CANNING TO PERSON WHO PLAY WITH MONEY N MUSCLE POWER DURING ALL LOCAL BODY ELECTION.BUT THIS TIME NOTHING WORKED.

மக்கள் புரட்சி வென்றது . .


posted by: SYED OMER KALAMI (colombo) on 25 October 2011
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20404

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

இது ஒரு தேவையில்லாத statement

பிரச்சனைகளை வளர்த்து கொண்டே போகிறீர்கள். ஹஜ்ஜு காலத்தில் சாத்தானை கல்லால் அடிப்பார்கள் நீங்கள் ஐக்கிய பேரவையை சொல்லால் அடிக்கிறீர்கள்

ஐக்கிய பேரவையை சொல்லால் அடிப்பது காயல். காம் கு என்ன இலாபம் என்று தெரியவில்லை புரியவில்லை

kmt ponselvi விசயத்தில் உருவானது ஐக்கிய பேரவை

இன்று அதேபோல் ஒரு விஷயம் நடந்தால் எந்த இயக்கம் responsibility எடுக்கும் தயவு செய்து கேட்டு சொல்லுங்கள்

ஐக்கிய பேரவையை சொல்லால் அடித்து கலைத்த மீடியாவுக்கு நன்றி


posted by: M.S.K. SULTHAN (DEIRA DUBAI) on 25 October 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20405

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

அஸ்ஸலாமு அல்லைக்கும்

காயல்பட்டின மக்களின் குரலாக செயல்படுகின்றது என்று நினைத்த காயல்.காம்.ஒரு சாராரின் குரலாகவே ஒலித்தது என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

பொது சேவையில் இருப்பவர்கள் அதிலும் மக்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் அல்லாஹ்விற்கு பயந்து நடுநிலையுடன் பாரபட்சமின்றி செய்திகளை வெளியிடுவதே நம் ஊரிற்கும் சமுதாயத்துக்கும் நல்லது.அல்லாஹ் நமக்குள் ஒற்றுமையையும் சேவை மனபான்மையையும் தந்தருள்வானாக ஆமீன்.


posted by: pirabu.n.s.sulthan (dubai) on 25 October 2011
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20406

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பின் சகோதரரே!

மழைக்காலத்தில் உப்பு விற்க செல்வது எதனால்???

பெரியவர்கள் வெற்றி பெற்ற தலைவியை வாழ்த்தவில்லை. பிளவு பட்டு இருக்கும் நம் மக்கள் கைகோர்த்து வாழவேண்டும்.

எந்த நேரத்தில் என்ன செய்தியை வெளிஇடவேண்டும். இந்த செய்தியை வெளியிட்டதால் நம் ஊர் இப்பொழுது அடையும் நன்மை என்ன ???

பத்திரிகை விற்பனைக்காக பரபரப்பு ஏற்படுத்துவது போல் உள்ளது

மொத்தத்தில் இந்த அக்டோபர் புரட்சி செய்தி ஊரில் """ எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவது போல் உள்ளது """

இந்த நேரத்தில் உங்களிடம் இருந்து நான் எதிர் பாராத தலைப்பு ,

SORRY


posted by: SHOLUKKU.AJ (kayalpatnam) on 25 October 2011
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20407

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

தலையங்கம் மகிழும்படி இல்லை, காயல்.காம் தற்போது வேறு திசையில் செல்கிறது. உண்மையில் நகரின் முன்னேற்றத்தில் அக்கறை இருந்தால் இத்துடன் பகைமூட்டும் தேர்தல் செய்திகளை நிறுத்தி கொள்ளலாம்.

நம் மக்கள் மறந்தாலும் உங்கள் செய்திகள் மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக உள்ளது. உண்மையில் அரசியல்வாதி போல் ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் மாதிரி எழுதுகிறீர்கள். எனவே தயவுசெய்து இனிமேல் நகர் நல செய்திகளை/குறைகளை எழுதுங்கள். நம் தலைவி சகோ. ஆபிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். ஊர் நலமும் வளமும் பெற்று சிறக்க பாடுபடுவோம்


posted by: S S Abdullah (Dubai) on 25 October 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20408

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:காயல் தினத்தந்தி..

அஸ்ஸலாமு அழைக்கும்...

காயல் பட்டினத்தாரே, தினத்தந்தி பத்திரிகை படிப்பதற்கு மிக எளிய நடையுடன் பாமர மக்களும் புரிந்து படிக்கும் படி வழமை பேச்சு போலவே இருக்கும். அதே நேரம், தேர்தலில் பலத்தையும்,பலதையும் சொல்லிவிட்டு வெற்றி பெற்றோருக்கு சாதகமாக பதிலும் ஒருமித்த ஆதரவும் தரும்!!! இங்கேயும் காயல் காமின் கருத்து நடு நிலை என்றாலும், வெற்றிக்கு பின், காயல், தினத்தந்தி போல் ஆகி விட்டது!!! உங்களின் கட்டுரை அருமை!!! அதில் கடைசியாக சொன்னது மிகவும் பாராட்டப் பட வேண்டியதுதான்!!! ஆனாலும், நடுவில், அந்தர் பல்டி ஏன்? இது என்ன நடுநிலை?


posted by: OMER ANAS (DOHA QATAR.) on 26 October 2011
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20409

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பிற்குரிய காயல்.காம்

Election முடிந்தது அனைவரும் ஒன்றாக செயல்படும் தறுணத்தில இப்படி பட்ட தலையங்கம் தேவையில்லையே

ஊரை பற்றி தினமலர் பத்திரிகை எழுதியதை விட தாங்கள் அதிகம் எழுதி சேவை செய்து முடித்து விட்டீர்கள்

இப்படியே சென்றால் இந்த வலை தளத்திற்கு மக்கள் அதரவு குறைந்துவிடும்

அஹ்மத் முஹைதீன்
தேரா துபாய்


posted by: AHMED MOHIDEEN (dubai) on 26 October 2011
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20411

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. உணர்வு

இக்கட்டுரை மட்டுமல்ல பல சமயங்களில் kayalpatnam .com-ல் செய்திகளை நான் படிக்கும்போது தமிழக மக்களில் பண்பட்டவர்கள் பலரும் பெருதும் மதிக்கும் "தினமலர்"??? நாளிதழை படிக்கும் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. விவாதங்களை ஒரு முடிவிற்கு கொண்டு வர முயற்சிப்பீர்கள் என்று நினைத்தால் "எரிகிற நெருப்பில் எண்ணெயை" அல்லவா ஊற்றுகிரீர்கள்!!!


posted by: Mauroof (Dubai) on 26 October 2011
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20412

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

1917 ஆம் வருடம் அக்டோபர் மாதம் சோவியத் ரஷ்யாவில் நடந்தது ஒரு யுகப்புரட்சி. கொடுங்கோலன் ஜார் மன்னன் தூக்கி எறியப்பட்டு பொது உடைமையின் புது யுகத்தினர் பதவிக்கு வந்தனர். லெனின் தலைமையில் தொழிலார்களின் (போல்ஷ்விக் )அணி ஆளும் அரசை தலைமை தாங்கி வழி நடத்தினர்.

ஏறத்தாழ அதே அக்டோபர் மாதம் இந்த புரட்சியும் நடந்தேறியதால் இதையும் ஒரு "அக்டோபர் புரட்சி"என ஆசிரியர் குழு வர்ணித்திருப்பதில் தவறு ஏதும் இல்லை. உளுத்துப்போன எந்த அரசும் இங்கு பதவி இழக்கவில்லை. ஆனால் உளுத்துப்போன எண்ணங்களும் சிந்தனைகளும் வேரற்றமரம் போல அடி சாய்ந்திருக்கின்றன. உள்ளபடியே ஒரு மக்கள்புரட்சி மவுனப்புராட்சியாக சலனமின்றி இங்கு நடந்தேறி இருக்கிறது.

இதை நாம் ஏதோ வெறி பிடித்த மனநிலையில் சொல்லவில்லை. ஆனால் உண்மையில் நடந்தது அதுதான். ஆபிதா முயன்றார். வெற்றி பெற்றார். அது வேறு விஷயம். ஆனால் மக்கள் அதற்க்கு முன்பே அந்த முடிவுக்கு வந்துவிட்டனர். அவர்களை அந்த முடிவு நோக்கி உந்தி தள்ளியது பேரவையின் கைங்கரியம். ஒரு சம்பவம் நடந்தேறிய பிறகு அது குறித்து "ஏன் நடந்தது? எப்படி நடந்தது?"என்று யோசிப்பவனே புத்திசாலி. இதுகுறித்து சிந்திக்க தூண்டுவது நடந்தைவைகளை கிளறுவதல்ல. ஒரு இணைய இதழின் கடைமையை "காயபட்டினம். காம்"செவ்வனே நிறைவேற்றி இருக்கிறது .பாராட்டுக்கள்...!


posted by: K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) on 26 October 2011
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20413

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

சென்ற பதிவில் ஒன்றை மறந்துவிட்டேன். ரஷ்யாவில் அக்டோபர் மாதம் நடந்தபுரட்சி வரலாற்றில் "அக்டோபர் புரட்சி"என்றே அழைக்கப்படும். பழைய ரஷ்யாவில் அக்டோபர்மாதம் மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் பெரியவிழா அமர்களப்படும். சோவியத் உடைந்தபிறகு அதெல்லாம் முடிந்துபோனது. என்றாலும் அக்டோபர் புரட்சி எனில் இன்றைக்கும் கம்யூனிஸ்ட்கள் சிலிர்த்து எழுவார்கள். அதன் மகத்துவம் அப்படி.


posted by: K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) on 26 October 2011
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20414

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

Abitha Latha - குட்


posted by: A.S.Sulthan Arif (Abu Dhabi) on 26 October 2011
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20415

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

அன்பின் ஆசிரிய பெருமகனாரே!

இங்கு நாங்கள் காலையில் அலுவலகத்திற்கு வந்ததுமே முதலில் kayalpatnam.com ஐ படித்தபின் தான் மற்ற வேலைகளை துவங்குவது. இது நான் மட்டும் செய்யும் வேலையில்லை, மாறாக நமதூரை சார்ந்த எல்லோருமே அப்படித்தான். மற்ற மூன்று வலைதளமும் ஏதோ குறிப்பிட்ட ஒரு முத்திரை பதிக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வு.இதனால் நேரம் கிடைக்கும் போதே படிப்போம்.

தற்போது இது போன்ற தலையங்கம் மூலம் kayalpatnam.com மும் அந்த தனித்துவத்தை இழந்து விடுமோ என அஞ்சுகிறேன்.

புயலடித்து ஒய்ந்த பின் இப்படியொரு தலையங்கம் தேவையற்றது


posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) on 26 October 2011
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20416

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:உண்மை கசக்கும்தானே

உண்மையை உணர்த்துவதும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், யாராயினும் தவறுகளை சுட்டிக்காட்டுவதும்தானே ஊடகங்களின் பனி.மக்களை வழி நடத்துபவர்கள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாததால் அதன் பனியை ஊடகங்கள் சிறப்பாக செய்தன,மக்கள் வெற்றியும் பெற்றனர்.ஆனால் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரியாமல் இருக்கின்றார்களா? அல்லது இறைவனை மறந்தவர்களாக இருக்கின்றார்களா!?

தவறை தட்டிக்கேட்க்காமல், தட்டிக்கேட்டால் தவறு என்பதும்,உண்மையை உணராதவர்களும், நிதர்சனத்தை ஏற்க்க மறுப்பவர்களும் ஏமாளிகளே....


posted by: shahul hameed sak (malaysia) on 26 October 2011
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 20417

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

Assalamu Alaikkum wrwb!

Even though, this is a good article, It made bad impression on kayalpatnam.com to few.

Any how the article shows the truth nothing but else. One must self realize the mistake what he/she had done for do not repeat the same mistake again and again.

Learn to do bad to do good!

Learned. It is time to realize what mistake we did. Don't we?

http://roomkellys.wordpress.com/2011/05/25/collateral-murder/

The above is my blog, Collateral Murder on two Reuters Journalists.

Journalism is not an easy career, No warranty and No guarantee for lives for the one who chose their career as journalist.

Please stop abuse kayalpatnam.com

If we do not have this, you can't get news update time to time from our home town.


posted by: Ibrahim Ibn Nowshad (Chennai) on 27 October 2011
IP: 119.*.*.* India | Comment Reference Number: 20418

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. . அர்த்தமுள்ள தலையங்கம்!!! ..

காயல்.காம் யார்க்கும் தலைவணங்காத நடுநிலையான இணையதளம் என்பதை நிரூபித்து உள்ளது.

ஊரில் என்னன்னா நடந்தது , அதுமாதிரி நடந்ததற்குண்டான பிரதிபலன் யன்ன என்பதை தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது. இதில் இதில் யாருக்கும் சார்ந்து எழுதவில்லை. இனி நம் நகர்மன்றதால் நடக்கும்,நல்லதுக்கும் முதலில்குரல் கொடுக்கபோவது இந்த இணையதளம்தான் கெட்டதுக்கும்(இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக நடக்காது )

முதலில் குரல்கொடுக்கும். அதையும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளார்கள் .அதனால் சகோதரர்களே தேவை இல்லாமல் இணைய தளத்தை குறைகூறி வீண்விவாதமாக ஆக்கிவிடாதிர்கள்.நடப்பவை நம் ஊருக்கு நல்லவையாகவும் ,நன்மையாகவும் ,இருக்க இறைவனிடம் " துஆ " கேளுங்கள் .பயனடைய்யப்போவது நம்காயல் நாம்தான்.


posted by: Nilofar (kayal) on 27 October 2011
IP: 123.*.*.* India | Comment Reference Number: 20419

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. காயல்பட்டினத்தில் ஓர் ஆபிதா புரட்சி...!!!!

காயல்பட்டினத்தில் ஓர் ஆபிதா புரட்சி...!!!! இதுதான் இத் தலையங்கத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கும்!!! புறநகர் வென்ற புரட்சித்(அம்மா இல்லை) தலைவியல்லாவா? அவள்!!! தின மலர்.தினத்தந்தி.குமுதம்,குங்குமம்ன்னு வர்ணிக்கிறவங்க வர்ணிச்சிட்டு போட்டும்,நீங்க உங்க சேவயைத் தொடர்ந்து செஞ்சிடே வாங்க! மீடியாக்குன்னு ஓர் தர்மம் இருக்கில்லே! அதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க அது போதும்!!! -ஹிஜாஸ் மைந்தன்


posted by: M.N.L.முஹம்மது ரஃபீக். (????? ?????.) on 27 October 2011
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20420

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

எனதன்பின் காயல்பட்டணம். காம் அட்மின் அவர்களே. மிகவும் அழகாக, பொறுமையுடன் யோசித்து வார்த்தைகளை மிகவும் எழிலாக கையாண்டு நடுநிலையோடு பத்திரிகை தர்மத்தை மீறாமல் எழுதப்பட்ட எல்லோருக்கும் பொதுவான இந்த நேரத்திற்கு உகந்த ஒரு தலையங்கம்.

பேரவை செய்த தவறுகளை மிகவும் நாசூக்காக ஆனாலும் பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டி, அதனால் ஏற்ப்பட்ட நஷ்டங்களையும் சுட்டிக்காட்டி, ஒரு பெண்ணாய் இருந்தும் எதிரிகளின் வசை சொற்க்களிர்க்கும், மிரட்டுதல், மற்றும் மக்கள் மன பலத்தை நம்பாமல், பண பலத்தை நம்பி நட்டாற்றில் நிண்டவர்களின் நிலையை பூதக்கண்ணாடி போட்டு காட்டியது, நமது நகராட்சி தலைவிக்கு நல்ல பல அறிவுரைகளையும் வழங்கி, மக்களுக்கு நிஜத்தின் வெளிப்பாடுகளை யதார்த்தமாக சொல்லி, அதேநேரம் தலைவி அவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளையும் அவருக்கு புரியும்படி சொல்லிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது.

வாழ்க பத்திரிகை சுதந்திரம்


posted by: k.seyed ismail presidential flight abu dhabi (abu dhabi) on 27 October 2011
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20421

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. assa

அஸ்ஸலாமுஅலைக்கும்

நடந்தது புரட்சி அல்ல, அல்லாஹ் நாடியது நடந்தது ஜெய்தவர்களுக்கு கொம்பு முளைக்ககூடாது ? தோற்றவர்கள் வம்புக்கு போககூடாது . குறைகள் இரண்டு பக்கமும் இருக்கும் நல்ல குறைகளை ஆராய்ந்து ஊரின் வளர்ச்சிக்கு போட்டிபோடவேண்டும் .

இதுவரை நமதூரில் நடந்த நிகழ்வுகள், எல்லாம் எதைபற்றி ?

தனி மனித விமர்சனம் , அரசியல்,ஊழல் ,மற்றும் பல...... என்றாவது கல்வி,தொழில் ,மருத்துவம் மற்றும் ஊர்வளர்ச்சி பற்றி பெரிய அளவில் ஊர் ஒன்று கூடி நல்ல விவாதம் நடந்ததுண்டா?

சிந்திப்போம் ,போட்டிபோடுவோம் இன்ஷாஅல்லாஹ் முழுமை அடைந்த மனிதன் உண்டா ?

தேடுவோம் புதைந்து கிடக்கும் நல்ல விசயங்களை


posted by: bilal m shaduly (chennai) on 06 November 2011
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20422

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மதூலஹ்

உங்கள் தலையங்கத்தை பார்த்து மிஹஊம் பரவசம் அடைந்தோம். மிக்க நன்றி.

தாங்கள் நம் ஊருக்கு செய்துவரும் பல நன்மைகளை நினைத்து மட்டட்ற்ற மகிழ்ச்சி. தாங்கள் தங்களின் இணைய தளத்தில் நம் ஊர் கவுன்சிலர்களுக்கு யன்று தனியாக ஒரு இடம் ஒதுக்கினால், நம் ஊர் மக்கள் இணைய தளத்தின் வாயிலாக தங்களின் கோரிக்கைகளை அவர்களிடம் நேரடியாக தெரிவிக்கலாமே.

வஸ்ஸலாம்


posted by: Hameed Sultan (Tarapur near Mumbai) on 06 November 2011
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20423

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

பெண்களை தலைவியாக்கும் சமுதாயம் உருப்பெறாது என்ற நாயக வாக்கியம் ஒன்று உண்டு என கேள்விபட்டு த்தான் இருக்கிறோம். அதன் உண்மை நிதர்சனமாக உள்ளது. ஏனெனில் இன்று ஒவ்வொரு வீடும் பெண்களின் ஆட்ச்சிக்கு உட்பட்டுத்தானே நடக்கிரது. முந்திய மக்களின் ஈமான் நிலை எப்படி இருக்கிறது ? மனப்பக்குவம் எப்படி இருக்கிறது?

50 -60 வருடங்களுக்குமுன் வழ்ந்து அனுபவித்த சந்தோஷம் இப்ப இருக்கிறதா? பெண்களை தலைவியாக்கிய ,இலங்கை, இஸ்ரேல்,இந்தியா,இங்க்லாந்து, பாகிஸ்தான்,பெங்கால்,,இவைகளை ஒப்பிட்டு பாருங்கள். ஜப்பாண்,,சுவிஸ், ஜெர்மன் ,அமேரிக்கா.போன்ற நாடுகளில், ஒரு பெண்ணும் தலைவியாக , இதுவரை வரையில்லை.


posted by: T.M.RAHMATHULLAH (72) (KAYALPATNAM 04639 280852) on 15 November 2011
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20424

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...

இப்படி ஒரு ஜால்ரா கூட்டம் எல்லா ஊரிலும் உண்டு. நமது ஊரில் அது அதிகமாக உள்ளது. வல்ல நாயன் நமது ஊரை இந்த கூட்டத்திலிருந்து காபாற்றுவானஹா. ஆமின்.


posted by: mariyam thahira (chennai) on 26 November 2011
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20426

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved