Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:20:45 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11758
#KOTW11758
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 7, 2013
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆளுமைத் திறன் மேம்பாடு வழிகாட்டு நிகழ்ச்சி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2625 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில், அப்பள்ளி மாணவர்களுக்கான ஆளுமைத் திறன் மேம்பாடு வழிகாட்டு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவர்களான ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ, யூஸுஃப், யு.முஹம்மத் நூஹ் ஆகியோர் முன்னிலை வகிக்க, சஊதி அரபிய்யா - ரியாத் நகரில் பணிபுரியும் பொறியாளர் எஸ்.எல்.ஸதக்கத்துல்லாஹ், ஹாங்காங் நாட்டில் பணிபுரியும் பொறியாளர் எம்.செய்யித் அஹ்மத் ஆகியோர் வழிகாட்டு விளக்கவுரை வழங்கினர்.



பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் டி.ஸ்டீஃபன், ஆசிரியர் ஏ.எல்.பஷீரூல்லாஹ் ஆகியோர் உடனிருந்தனர்.



தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
துணைச் செயலாளர்
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி
காயல்பட்டினம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [07 September 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30022

அஸ்ஸலாமு அழைக்கும். மிகவும் பயன் உள்ள நிகழ்ச்சி முன்னாள் மாணவர்கள் இந்நாள் மானவர்களுக்கு நடத்தும் இது போன்ற நிகழ்வுகள் என்னாலும் தொடரவேண்டும் இவைகள் படிப்போடு அனுபவத்தையும் கற்று கொடுக்கும் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை தொடரட்டும் வாழ்த்துக்கள். இவைகள் பொது அறிவை வளர்க நல்ல வழிவகுக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [07 September 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30023

வெறும் ஏட்டுப் படிப்புடன் இருந்து விடாமல், மாணவர்களுக்கு இது மாதிரியான ஆளுமை திறனை வளர்க்கும் வழிகாட்டி நிகழ்ச்சிகள், ஆங்கில புலமையை வளர்க்கும் பயிற்ச்சிகளை அதிகம் அதிகம் கொடுங்கள்.

நல்ல படிக்கின்றாங்க, நல்ல மார்க் எடுக்கின்றாங்க, அருமையான அறிவு திறனும் இருக்கின்றது, ஆனால் சரியாக ஆங்கிலம் பேச தெரியவில்லை என்றால் அவர்களை இந்த உலகம், ஒரு முழம் சற்று தள்ளியே வைக்கின்றது.

இந்த நிகழ்ச்சியை நடத்திய சகோதரர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

தாங்கள் பேண்ட் அணிந்து இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும், மரபு உடை வேஷ்டியும் நன்றாக தான் உள்ளது, இருந்தாலும் இது மாதிரியான நிகழ்வுக்கு பேண்ட் அவசியம்.

இது குறை காண்பது அல்ல, ஒரு புரிதல் தான்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Rilwan (Michigan) [07 September 2013]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 30025

ஆங்கிலத்தின் முக்கியத்துவம் சர்வீஸ் பேஸ்ட் எகானமிக்கு அவசியமச்க இருக்கலாம்.. ஆனால் நாலெட்ஜ் பேஸ்ட் - அறிவியல் அடிப்படையில் உள்ள - எகானமிக்கு அவசியமில்லை என்பது என் கருத்து..

வளர்ந்த நாடுகள் அநேகமானவைகள் தாய் மொழி கல்வியை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளன.. ஆங்கிலத்தை தத்து எடுத்த நாடுகள் அநேகமானைவைகள் சர்வீஸ் பேஸ்ட் எகானமியாகவே இருக்கிறது..

ஆங்கிலத்தை தத்து எடுக்காத ஆசிய நாடுகளான தென் கொரியாவும் ஜப்பானும் ஆசியாவில் இந்தியாவை எவ்வளவு வேகமாக முந்தியது என்பது தெரிந்த விஷயம்.. ஜப்பானின் பல முன்னணி நிறுவனங்களின் சி ஈ ஒ களுக்கு ஆங்கிலம் சரியாக பேச தெரியாது.. இருந்தாலும் தங்கள் நிறுவனங்களை உலகத்தரத்திற்கு, ஏன், உலகத்தரத்தை நிர்ணயம் செய்யும் அளவிற்கு நிறுவி இருக்கிறார்கள். இது மெயின் லாண்ட் ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருந்தும்...

மொழியில் செலவிடும் நேரத்தை அறிவியலில் செலவிட்டால் - அந்த கல்வி - தாய் மொழியில் இருந்தால் இந்தியாவிலும் அதிக கண்டுபிடிப்புகள் நிகழும்... மொழி கல்வி அவசியமே.. ஒன்றுக்கு மேற்பட்ட மொழியை சிறு வயதில் கற்கும்போது சிந்தனை திறன் அதிகரிக்கிறது என்ற ஆய்வை பற்றி படித்திருக்கிறேன். ஆனால் ஒரு மொழியே கல்வி ஆகாது....

இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் saarntha உடை மக்களிடையே தரம் பிரிப்பதற்காக பயன்படுத்தப்படுவது ஒரு தவறான விஷயம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by drnoordeen (muscat) [08 September 2013]
IP: 213.*.*.* Oman | Comment Reference Number: 30030

thamby ரிள்வான் அருமையான கருத்தை தந்திருக்கிறார் இதற்கு நானும் உடன்படுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சில குறைகளை நிர்வாகத்திடம் நேரில் தெரிவித்தபோது ...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [08 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30031

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மாணவர்களுக்கான ஆளுமைத் திறன் வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது – மாணவர்களின் ஆர்வத்தை பார்க்கும்போது சந்தோசம் ஏற்படுகிறது.

தான் கற்றக் கல்வியை பிறருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும், இன்றைய மாணவர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தங்களுடைய ஓய்வு நேரத்தில் வந்து, முன்னாள் மாணவர்கள் இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு விளக்கவுரையாற்றி இருப்பது மெத்த மகிழ்ச்சியை தருகிறது.

---------------------------------

எல்லா பள்ளிக்கூடங்களிலும் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் நடைபெற வேண்டும் மாணவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே எமது அவா.

அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளிக்கூட நிர்வாகமும் , முன்னாள் மாணவர்களும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும். அதற்கு இன்றைய மாணவர்களும் ஆர்வம் கொள்ளவேண்டும்.

----------------------------------

இந்த வருடம் வரலாறு படைக்கும்.

முஹிய்யித்தீன் மெட்ரிக் பள்ளிக்கூடம் ஆரம்பித்தபோது இருந்த நிர்வாக திறமை , மாணவர் – பெற்றோர்களின் ஆர்வம் இடையில் தொய்வு விழுந்திருந்தது. ஆனால் இன்று அல்லாஹ் உதவியால் நிர்வாகம் நல்ல திறனுடனும் , மாணவர்கள் - பெற்றோர்களின் ஆர்வம் முன்பு இருந்ததைவிட மிக பலமாக இருப்பதையும் இன்று காணமுடிகிறது.

ஆசிரியர்கள் மத்தியிலே முன்னேற்றமும் , உற்சாகமும் எழுந்திருக்கிறது. நிர்வாகம் முதியவர்களின் முழு வழிகாட்டுதலில், இளைஞர்களின் பங்களிப்புடன் சீராக, செம்மையாக நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது.

இந்த வருடம் வரலாறு படைக்கும் அளவிற்கு மாணவ, மாணவிகள் புதிதாக சேர்ந்துள்ளதையும், புதிய ஆசிரியர்கள் சேர்ந்துள்ளதையும் காணமுடிகிறது.

சில குறைகளை நிர்வாகத்திடம் நேரில் தெரிவித்தபோது உடனே, ஒரே நாளில் அதை நிவர்த்தி செய்தது ஆச்சரியத்தை தந்தது – அது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை தந்ததுடன், பாடமாகவும் அமைந்தது.

இதே நிலையில் நிர்வாகம் நடைபெற்றால் இன்ஷா அல்லாஹ்! நமது மாவட்டத்திலேயே முதல் தரமான பள்ளிக்கூடமாக திகழும் என்பதில் ஐய்யமில்லை.

---------------------------------

பெற்றோர்கள் – பிள்ளைப்பாசம்

ஆகவே மக்களே!

எந்த ஒரு பள்ளிக்கூடத்திலும் குறையை கண்டால் நிர்வாகத்திடம் நேரில் தெரிவிக்க வேண்டும் அல்லது எழுத்துமூலமாக அறிவிக்க வேண்டும் – அதல்லாது குறையை மட்டுமே சொல்லிக்கொண்டு இருப்பதில் பிரயோஜனம் இல்லை.

மேலும் பெற்றோர்கள் கண்டிப்பாக மாதத்திற்கு ஒரு முறை பள்ளிக்கூடம் சென்று தங்கள் பிள்ளையின் படிப்பு, நடத்தை பற்றிய விவரங்களை அறிந்து வரவேண்டும். அப்படி செய்தால்தான் “ பெற்றோர்கள் – பிள்ளைப்பாசம் ” மேலோங்கும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [08 September 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30033

சகோதரர் ரிழ்வானின் கருத்து முற்றிலும் சரியே. இருந்தாலும் இந்த தாய் மொழி கல்வி மட்டுமே போதும். அதில் மட்டுமே கற்றால் போதும் என்ற விவாதம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

தாங்கள் கூறும் ஜப்பான், கொரியா, சீனா போன்ற நாட்டுக்கும் நம் இந்தியாவிற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கின்றன. நம் நாட்டில் எத்தனை மொழிகள் உபயோகிப்படுகின்றது என்று இதுவரை உறுதியாக கூற முடியவில்லை.

நம், தமிழக மாணவர்கள் படிப்பை முடித்ததும், ஆங்கில அறிவோ, பிற மொழி அறிவோ இல்லாமல், திருவனந்தபுரத்தையோ, நெல்லூரையோ தாண்ட முடியவில்லை.

ஹிந்தி கற்க வேண்டாம் என்று கூறி, இரண்டு தலைமுறையை வீணடித்து விட்டார்கள்.

தற்கால சூழ்நிலையில் தாய் மொழியில் போதிய கலைக் சொல் வளர்ச்சியோ, அறிவியல் வளர்ச்சியோ இல்லாமால், வாய் சொல்லில் வீரம் பேச இயலாது.

அப்புறம், கொரியா ஜப்பான் போன்ற நாட்டில் உள்ள கம்பனிகளின் பல CEO க்களுக்கு ஆங்கிலம் பேச தெரியாமல் இருக்கலாம், ஆனால் அந்த கம்பனியின் வேறு,வேறு கிளைகள் பல பல நாடுகளில் உள்ளன. அங்கு அனுப்பப்படும் அதிகாரிகளை ஆங்கிலம் படிப்பித்து, கூடுதல் ட்ரைனிங் கொடுத்து தான் அனுப்புகின்றார்கள்.

ஏன், இங்கு சௌதியில் பல சீனா கம்பெனிகளில், ஒரு நல்ல பதவிக்கு அவர்கள் வரனும் என்றால், குறைந்தது ஆங்கிலத்தில் இஜ்ஜுட்டு வாசிக்க தெரிந்து இருக்கனும்மாம்.

ஆக, முடிவு உங்கள் கையில்.

போட்டி உலகத்தில் போட்டி போடனுமா.! நீங்கள் யார், உங்களின் திறமை என்ன என்று விவரிக்கனுமா..!! கொஞ்சம் சரளமாக ஆங்கிலம் பேச கத்துக்கொள்ளுங்கள்.கூடவே ஹிந்தியும்..!!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஆங்கிலமொழி அறிவு இன்றியமையாத ஒன்று
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [08 September 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 30036

இந்தியாவின் சூழ்நிலை வேறு. இன்றைய கல்விச்சூழலில் ஆங்கிலமொழி அறிவு இன்றியமையாத ஒன்று. இதை யாரும் மறுக்க முடியாது.

நம் தாய் மொழியில் போதிய கலை/அறிவியல் சொற்கள் வளர்ச்சி இல்லை. எனவே பொறியியல் மற்றும் மருத்துவக்கல்வியில் நமக்கு ஆங்கிலமொழி அறிவு அவசியம் தேவை. ஆங்கிலத்தில் நமக்கு போதிய புலமை இல்லையெனில் ,எதிர்கால முன்னேற்றமில்லை. மாநிலத்திற்கு வெளியே வேறு எங்கும் நாம் செல்ல முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved