Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:37:39 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15502
#KOTW15502
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 1, 2015
நகராட்சி புதிய கட்டிட கட்டுமானப் பணிகள் துவக்க விழா! சுற்றுலாத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4244 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சிக்கு ரூபாய் 1 கோடியே 30 லட்சம் செலவு மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் துவக்க விழா 26.02.2015 வியாழக்கிழமையன்று 10.30 மணியளவில், நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன் தலைமை வகித்தார். காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் திட்ட விளக்கவுரையாற்றினார். நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வரவேற்புரையாற்றியதோடு, நகராட்சி அலுவலக புதிய கட்டிட மாதிரி வரைபடத்தைப் பொதுமக்களுக்குக் காண்பித்து அறிமுகப்படுத்தினார்.





தமிழக அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பீ.சண்முகநாதன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய கட்டிடத்திற்கான கட்டிடப் பணிகளைத் துவக்கும் வகையில் முதல் எடுத்துக் கொடுத்தார்.



அவரைத் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகள் அடுத்தடுத்த கற்களை எடுத்துக் கொடுக்க, அவை பூமிக்குள் பதிக்கப்பட்டு, கட்டிடப் பணிகள் முறைப்படி துவக்கப்பட்டது.



பின்னர், சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பீ.சண்முகநாதன் சிறப்புரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-



தமிழக முதல்வராக ஜெயலலிதா 3ஆவது முறையாகப் பொறுப்பேற்ற பின்னர், தனியார் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வந்த அனைத்து அரசு அலுவலகங்களையும் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் இயங்கிட நடவடிக்கை மேற்கொண்டார். அதன் பயனாக, 4 ஆண்டுகளில் புதிதாகப் பல அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதியொதுக்கீடு செய்து, பணிகள் முடிக்கப்பட்டுள்ளதையடுத்து, தனியார் கட்டிடங்களில் இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் அரசு கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப் பெரிய நகரங்களில் 2ஆவது இடத்தை காயல்பட்டினம் வகிக்கிறது. இங்கு சிறுப்பான்மை மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில்தான் காயல்பட்டினத்திற்கு அதிக நன்மைகள் நடந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் முதலாவது பைப் லைன் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது ரூபாய் 30 கோடியில் 2ஆவது பைப் லைன் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. ஸ்ரீவைகுண்டம் ஆற்றலிருந்து குழாய் பதித்து காயல்பட்டினத்திற்கு குடிநீர் கொண்டு வரப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஆங்காங்கே சில பிரச்சனைகள் வந்தபோதிலும், உடனுக்குடன் அவை சுமுகமாகப் பேசி முடிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.

தற்போது 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 25 சதவீத பணிகளும் விரைவில் நிறைவேற்ப்படும். இதன்மூலம் 70 லட்சம் லிட்டர் குடிநீர் காயல்பட்டினத்திற்கு கிடைக்கும். இத்திட்டம் நிறைவேறும்போது, 50 ஆண்டுகளுக்கு காயல்பட்டினத்தில் குடிநீர் பிரச்சனை இருக்காது.

அதே போல் நகராட்சி தலைவரின் கோரிக்கையை ஏற்று 1.50 கோடி ரூபாய் புதிய நகராட்சி அலுவலகம் கட்டுவதற்க அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 7 ஆயிரம் சதுர அடியில் 2 மாடி கட்டிடமாக கட்டப்பட உள்ளது. இதனால் இங்குள்ள கவுன்சிலர்களுக்குத்தான் பெருமை.

மேலும் காயல்பட்டினம் நகராட்சியில் இந்த ஆண்டு சாலை உள்ளிட்ட அடிப்படைப் பணிகளுக்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இங்குள்ள கவுன்சிலர்களும், நகர மக்களும் அதிமுக ஆட்சிக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மணத்தி ரவிக்குமார், திருச்செந்தூர் யூனியன் சேர்மன் ஹேமலதா, திருச்செந்தூர் வட்டாட்சியர் வெங்கடாச்சலம், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் முருகானந்தம், காயல்பட்டினம் நகராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் நன்றி கூறினார்.

காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[சிறு திருத்தம் செய்யப்பட்டு, கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 23:32 / 01.03.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வெள்ளை மாளிகையா அலறி மாளிகையா?
posted by mackie noohuthambi (colombo) [01 March 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39396

பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையா இலங்கையில் உள்ள அலரி மாளிகையா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு கட்டிட பிளான் காட்சி தருகிறது.

ஒரு நண்பனுக்கு திடீரென பணம் வந்தது. கை கால் புரியவில்லை. இப்படி ஒரு பங்களாவை கட்டினான். எல்லா சொகுசு வசதிகளும் அங்கு இருந்தன. தன நண்பர்களை கூப்பிட்டு விருந்தளித்து மகிழ்ந்தான். உணவு உண்டு மகிழ்ந்தவர்கள் அவனை பாராட்டி வீட்டின் அமைப்பையும் பாராட்டினார்கள். வீட்டின் பெயர் தங்க தகட்டில் மின்னியது,"அன்னை இல்லம்".

இவ்வளவு நவீன வசதிகளுடன் வீட்டை கட்டியும் அடக்கத்துடன் தன் அம்மாவை மறக்காமல் அன்னை இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறாயே, உன் அன்னையை கொஞ்சம் பார்த்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டு செல்கிறோம், எங்கே அவர்கள் என்று நண்பர்கள் கேட்க, அம்மா இங்கு இருப்பது அவளுக்கு சிரமமாக இருக்கும் என்று எண்ணி அவளை முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கிறேன். அங்கு அவளை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். என்றான் நண்பன். தூக்கி வாரிப் போட்டது சக நண்பர்களுக்கு.

அழகிய வீட்டின் பெயரோ அன்னை இல்லம் - அந்த அன்னை இருப்பதோ முதியோர் இல்லம் நமது நகராட்சி நிலையும் இதுதான்.

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகென்று பெயரும் வைத்தால், அந்த சாமி சிரிக்கும் இந்த பூமி சிரிக்கும்".

மக்களுக்கு தேவையான அன்றாட வேலைகளை தங்கு தடை இன்றி செய்ய முடியவில்லை. அவர்கள் சுகாதார வசதிகள் வீட்டு வரைபடங்கள் உடனடியாக அங்கீகரிக்கப் படுவதில்லை, தினசரி தண்ணீர் வருவதில்லை இதை எல்லாம் சரி செய்ய முடியவில்லை.

எப்போது கூட்டம் நடந்தாலும் தகராறு, வெளிநடப்பு போராட்டம் உள்ளிருப்பு போராட்டம் இந்த லட்சணத்தில் ஒரு புதிய கட்டிடம் உருவாகிறது. வாழ்த்துக்கள்.அனுபவி ராஜா அனுபவி....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by SHAIK SALAHUDEEN (DUBAI) [02 March 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39403

வாழ்த்துக்கள் . இதற்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி .இந்த புதிய நகராட்சிக்கும் mrs ஆபித ஷைக் அவர்களே மீண்டும் தலைவராக வர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்திக்கிறோம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved