Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:38:34 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16533
#KOTW16533
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 9, 2015
சர்வே எண் 278 வழக்கு: வாதங்கள் நிறைவுற்றது! தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2319 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில் பயோ காஸ் திட்டப்பணிகள் - சுற்றுச்சூழல் துறைகளின் முறையான அனுமதி பெறாமல் துவங்கப்பட்டதை எதிர்த்து, கொம்புத்துறை ஊர் நல குழு மற்றும் கொம்புத்துறை சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மே மாதம் வழக்கு தொடர்ந்தனர்.

மே 20 அன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை (Appeal No.100/2015 [SZ]) விசாரித்த நீதிபதி பி.ஜோதிமணி மற்றும் நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் - அடுத்த ஆணை பிறப்பிக்கும் வரை பணிகளை நிறுத்திட (STATUS QUO AS ON DATE) - உத்தரவிட்டனர். மேலும் - ஜூலை 9 தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.

ஜூலை 9 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நடந்த வாதங்களின் போது - நகராட்சி சார்பாக, இடைப்பட்ட காலத்தில் - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிகள் (CONSENT TO ESTABLISH [CTE]; AUTHORISATION UNDER MSW RULES 2000) பெறப்பட்டுள்ளதாகவும், எனவே - இடைக்கால தடை நீக்கப்படவேண்டும் என்றும் கோரப்பட்டது.

இதற்கு - மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நீண்ட விவாதத்தை தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கூடுதல் விளக்கம் பெற, இவ்வழக்கினை - தீர்ப்பாயம், ஜூலை 20 தேதிக்கு ஒத்திவைத்தது.

வழக்கு மீண்டும் ஜூலை 20 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் சார்பாக பதிலும், ஆவணங்களும், மாசு காட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பதிலும், மனுதாரர்கள் சார்பாக நகராட்சியின் மனுவிற்கான பதிலும் (REJOINDER) சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய மனுதாரருக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.மோகன், வழக்கு தொடர்ந்த பிறகே - மாசு கட்டுப்பாட்டு வாரியம், தனது ஒப்புதல்களை வழங்கி உள்ளது என்றும், அவை அவசர கோலத்தில் தவறான தகவல்களை கொண்டு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் - இது போன்ற திட்டங்களுக்கு, அரசு விதிமுறைகள்படி - சுற்றுச்சூழல் ஒப்புதல் (ENVIRONMENTAL CLEARANCE) பெறப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவையில்லை என வாதிட்ட அரசு மற்றும் நகராட்சி தரப்பு வழக்கறிஞர் அப்துல் சலீம் - அதற்கான விளக்கத்தினை வழங்க தனக்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கூற - மூன்று மணி நேரம் நீடித்த வாதங்கள் நிறைவுற்று, வழக்கு மீண்டும் ஜூலை 30 அன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு மீண்டும் ஜூலை 30 அன்று - ஆறாவது பொருளாக - விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் மற்றும் நகர்மன்றத் தலைவர் சார்பாக சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவை என்ற நிலைக்கு ஆதரவான சில தீர்ப்பாய முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் மனுதாரர் சார்பாக - எழுத்துப்பூர்வமான கூடுதல் மனுவும் சமர்ப்பிக்கப்பட்டது.

மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.மோகன், கடந்த அமர்வின் போது - அரசு மற்றும் நகராட்சி தரப்பில் எழுப்பப்பட்ட சில சந்தேகங்களுக்கான விளக்க ஆதாரங்களை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அரசு மற்றும் நகராட்சி வழக்கறிஞர் அப்துல் சலீம் - சுற்றுச்சூழல் அனுமதி தேவை இல்லை என்ற தங்கள் நிலைக்கு ஆதரவான சில முடிவுகளை தாங்கள் ஆய்வு செய்து வருவதாகவும், அவற்றை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கூற, வழக்கு ஆகஸ்ட் 14 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 14 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது - மனுதாரர் சார்பாக வாதாடும் மூத்த வழக்கறிஞர் டி.மோகன் - தீர்ப்பாயத்திற்கு இன்று வர முடியாத காரணத்தால், வழக்கு ஆகஸ்ட் 18 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் வழக்கு ஆகஸ்ட் 18 அன்று விசாரணைக்கு வந்ததது. அப்போது - அரசு மற்றும் நகராட்சி தரப்பு வழக்கறிஞர் அப்துல் சலீம், சுற்றுச்சூழல் ஒப்புதல் (ENVIRONMENTAL CLEARANCE) தேவை என்ற பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வின் தீர்ப்பு ஒன்றிற்கு உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளதை மேற்கோள்காட்டினார்.

அந்த தீர்ப்பு - தற்போதைய வழக்குக்கு பொருந்தாது என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன் வாதாடினார்.

வாதங்கள் அடுத்த தினமும் தொடரும் என வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மறு தினம் (ஆகஸ்ட் 19) வழக்கு விசாரணைக்கு வந்தப்போது - தீர்ப்பாயத்தின் முன்பு விசாரணையில் இருந்த பிற வழக்குகளின் வாதங்கள் முடிய அதிக நேரமானதால், எந்த வாதங்களும் நடைபெறாமல், இவ்வழக்கினை ஆகஸ்ட் 28 தேதிக்கு நீதிபதி ஜோதிமணி ஒத்திவைத்தார்.

ஆகஸ்ட் 28 மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்குகள் விபரப் பட்டியலில் (CAUSE LIST) 5வது வழக்காக இவ்வழக்கு இடம்பெற்றிருந்தது.

முதல் 4 வழக்குகளில் வாதங்கள் முடிய மதியம் 12 மணியானதாலும், இன்று மதியம் 1 மணி வரை தான் நீதிபதிகள் அமர்வு இருக்கும் என்பதாலும், 5வது வழக்குக்கு பிறகு இன்னும் 15 வழக்குகளை விசாரிக்க வேண்டியிருப்பதாலும், காயல்பட்டினம் வழக்கு விசாரணைக்கு கூடுதல் நேரம் தேவை இருக்கும் என்பதாலும், இவ்வழக்கினை - நீதிபதி - செப்டம்பர் 8 தேதிக்கு ஒத்திவைத்தார்.

செப்டம்பர் 8 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கு, மனுதாரர் மற்றும் அரசு / நகராட்சி தரப்பு வழக்கறிஞர்கள் தீர்ப்பாயத்திற்கு வரமுடியாத காரணத்தால், மறு தினத்திற்கு (செப்டம்பர் 9) ஒத்திவைக்கப்பட்டது.

செப்டம்பர் 9 அன்று இவ்வழக்கு - முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.



அப்போது மனுதாரர் சார்பாக பேசிய மூத்த வழக்கறிஞர் டி மோகன், ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளாட்சி மன்றங்கள் சேர்ந்து குப்பைக்கொட்ட இடம் தேர்வு செய்தால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி (ENVIRONMENTAL CLEARANCE) தேவை என்ற அரசு / நகராட்சி தரப்பு வாதம், அபாயகரமானது என்றும், இதனை ஏற்றுக்கொண்டால் - நாடு முழுவதும், தனிப்பட்ட ஒவ்வொரு உள்ளாட்சி மன்றமும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலேயே தாங்கள் விரும்பும் இடங்களில் குப்பைகளை கொட்ட துவங்கிவிடும் என்றும் தெரிவித்தார்.

அரசு / நகராட்சி தரப்பு வழக்கறிஞர் அப்துல் சலீம் தனது இறுதி வாதத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வு (PRINCIPAL BENCH), ஒரு வழக்கில், சுற்றுச்சூழல் அனுமதி (ENVIRONMENTAL CLEARANCE) பெறப்பாடாத நிலையிலேயே - குப்பைகளை கொட்ட அனுமதி வழங்கியிருப்பதாகவும் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.ஜோதிமணி மற்றும் நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் தேதி குறிப்பிடாமல், வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்தனர்.

மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் டி.மோகன், வழக்கறிஞர் ஏ.யோகேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் நேஹா ஆகியோர் ஆஜராகின்றனர்.

அரசு சுற்றுச்சூழல் துறை செயலர், நகராட்சி ஆணையர் ஆகியோர் சார்பாக வழக்கறிஞர் அப்துல் சலீம் மற்றும் வழக்கறிஞர் விக்னேஸ்வரி விபின் ஆஜராகின்றனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் யாஸ்மீன் அலி ஆஜரானார்.

நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் சார்பாக வழக்கறிஞர் விஷ்ணு ஆஜரானார்.

ஒப்பந்ததாரர் எஸ்.கே. அண்ட் கோ நிறுவனம் சார்பாக வழக்கறிஞர் நவீன் ஆஜரானார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved