Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:17:26 AM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17704
#KOTW17704
Increase Font Size Decrease Font Size
சனி, மே 7, 2016
ஊழல் மின்சாரம்: மின் விநியோகத்தில் பல ஆண்டுகளாக நடந்து வரும் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைக்கேடு குறித்த ஆவணப்படம் நகரில் திரையிடப்பட்டது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2680 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் காயல்பட்டினத்தில் தொடர்ந்து பல்வேறு தலைப்பிலான ஆவணப்பட திரையிடல்களும், அதனை தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

கடந்த மே 1, ஞாயிறன்று மாலை 5 மணிக்கு காயல்பட்டினம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஹனியா சிற்றரங்கில் எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் எட்டாவது ஆவணப்பட திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.



அதில் - தமிழ் நாடு மின்சார பொறியாளர்கள் அமைப்பினால் தயாரிக்கப்பட்டு, சா.காந்தி மற்றும் ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோரின் இயக்கத்தில் வெளி வந்துள்ள “ஊழல் மின்சாரம்” ஆவணப்படம் திரையிடப்பட்டது.









சுமார் 45 நிமிடம் நீளம் கொண்ட இந்த ஆவணப்படத்தின் திரையிடலில் - நகரின் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துக்கொண்டனர். திரையிடலின் நிறைவில் கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.



சென்னையில் இந்த படத்தை வெளியிட்டு திரையிட இயலாதவாறு முதலில் தேர்தல் ஆணையமும், பின்னர் சென்னை மாநகர காவல்துறையும் பல முறை தடை செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆவணப்படம் YOU TUBE இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான சுருக்க முகவரி: https://goo.gl/y6gGbE

ஆவணப்படம் தெரிவிக்கும் தகவல்களின் சாராம்சம்

*** “ஊழல் மின்சாரம்” ஆவணப்படமானது அன்றாட நிகழ்வாகி விட்ட மின் வெட்டிற்குப் பின்னால் உள்ள கொள்ளை அரசியலைப் பேசுகின்றது

*** நாட்டின் அனைத்துப் பொதுத்துறை விநியோக நிறுவனங்களையும் மீளாக் கடனில் மூழ்கடித்துள்ளனர் மின் உற்பத்தியில் நுழைந்த தனியார் துறையினர்

*** தமிழகத்தில் மட்டும் இந்தக்கடன் 96 ஆயிரம் கோடி ரூபாய்

*** கொள்ளை ஆதாய தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாரும், நிர்வாகிகளும் நடத்திய மின்சார ஊழல் எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கின்றது

*** அனைத்து பெருங்கட்சிகளுக்கும் இதில் பங்காளிகளே. இதில் முதல் பங்காளி காங்கிரஸ், அடுத்து பா.ஜ.க, அடுத்து தி.மு.க இப்பொழுது அ.தி.மு.க. என குற்றவாளிகளை நாம் வரிசைப்படுத்த முடியும்

*** மிகச்சாதாரணமாகவும், இயல்பாகவும் சித்தரிக்கப்படும் மின்வெட்டை பொதுமக்களாகிய நாமும் அப்படியே ஏற்றுக்கொண்டு மின்சாரப் பற்றாக்குறையினால் மட்டும்தான் மின் வெட்டு ஏற்படுகின்றது என நம்பி விடுகின்றோம்.

இந்த ஆவணப்படத்தை காண கீழே உள்ள படத்தினை சொடுக்கவும்:


புகைப்படங்களில் உதவி:
'தமிழன்' முத்து இஸ்மாயில்
ஷமீமுல் இஸ்லாம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இந்த ஆவண படத்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே
posted by mackie noohuthambi (kayalpatnam ) [07 May 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43691

மக்கள் விழிப்புணர்வு பெற இப்படியான முயற்சிகள் மேற்கொண்டுள்ள நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களை உற்சாகப் படுத்த பணம் காசு தர வேண்டியதில்லை உங்கள் உணர்வுகளை மதித்து இந்த ஆவண படம் திரையிடும்போது நமதூர் மக்கள் திரளாக வந்திருந்து உங்களுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டாலே உங்களுக்கு இதுபோன்ற இன்னும் பல ஊழல்களை மக்கள் முன் எடுத்து வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எழுச்சியை ஏற்படுத்தும்.

ஒரு திருமண வீடு அங்கே வெகு விமரிசையாக நிலவொளி போல் மின்விளக்குகள் போடப்பட்டு ஒளி வெள்ளத்தில் அந்த இடமே மிதந்து நிற்கிறது. ஒலி ஒளி அமைப்பாளர்கள் இதற்காக அந்த திருமண வீட்டார்களிடம் வசூலிக்கும் பணம் மிக குறைவு. திருமணநாளுக்கு முன்னதாகவே இவர்கள் பேரம் பேசுகிறார்கள். 12 மணிநேரம் அல்லது 24 மணி நேரம் லைட்டுகள் எரிய தனியாக மோட்டார் ஜெனெரெடர் போடவேண்டுமானால் அதற்கு இவ்வளவு ரூபாய் தரவேண்டும். தெருவில் அரசு அமைத்துள்ள மின் கம்பியில் இருந்து லைன் இழுத்தால் அதற்கு ஆபீசில் உள்ளவர்களை கவனித்தால் போதும். உங்களுக்கு செலவு குறைய வரும். இப்படி பேரம் பேசுபவர்கள் யாரோ வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழை பாளைகள் அல்ல .வசதி படைத்தவர்கள். சட்டி சட்டியாக விருந்து அளிப்பவர்கள் வீடு நிறைய மின் அலங்காரங்கள், வீட்டு வெளியே சீரியல் லைட் போட்டு இரவை பகலாக ஆக்கி தங்கள் மேலாதிக்கத்தை ஊர் முழுக்க வெளிச்சம் போட்டு காட்டும் பணக்காரர்கள். அரசியல் தலைவர்கள் கூட்டங்கள் மேடைகள் எல்லாமே இந்த ஒளி வெள்ளத்தில் மிதப்பது இப்படித்தான். பின் ஏன் நஷ்டம் வராது.

IF YOU CANNOT SOLVE A PROBLEM THEN YOU ARE PART OF THAT PROBLEM

உங்களால் ஒரு பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், நீங்கள் அந்த பிரச்சினை தீராமல் இருப்பதற்கு ஓர் காரணம் என்று சொல்வார்கள். உண்மையில் நாம் பொதுமக்களும் இதற்கு ஒரு காரணம். ஏற்கெனெவே எல்லா ஆட்சிகளுமே ஊழல் மயம் என்பதற்கு சகாயம் அறிக்கையே போதும்.இந்த ஆவண படத்தை திரையிட எப்படி அரசு காவல்துறை அனுமதித்தது என்பது ஆச்சரியமாக உள்ளது. ''மூடு, டாஸ்மாக்கை மூடு'' என்று பாட்டுப் பாடினாலே அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யும் ஒரு அவலநிலை இந்த தமிழகத்தில் இருக்கும்போது இப்படி ஒரு துணிச்சலான செயலை செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதை பாராட்டவே வேண்டும். இளைஞர்கள் நினைத்தால் எல்லா ஊழல்களையும் வெளிக் கொண்டு வர முடியும். அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அதற்கான அங்கீகாரம் தான்.

கால்பந்தாட்டத்தில் 11 வீரார்கள் விளையாடும்போது 11000 பேர் கைதட்டி கரகோஷம் எழுப்பி அவர்களை உற்சாகப் படுத்துகிறோம்.அவர்கள் வெற்றி வாகை சூடவேண்டும் என்ற வேட்கையை வெறியை அந்த கரகோஷம் உண்டாக்குகிறது.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் கொண்டு ஈமான் கொண்டுள்ள நாம் இந்த ஹராமான விஷயத்தை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும். அரசுதான் நம்மிடம் எக்க சக்கமாக வரி வசூலிக்கிறதே, நமது பணம்தானே கொள்ளை போகிறது, அப்படி இருக்கும்போது இதை செய்வதால் என்ன வந்து விடப் போகிறது என்று நினைப்பது தவறு.

DO NEGATIVES DO NOT MAKE ONE POSITIVE இரண்டு தவறுகள் சேர்ந்தால் ஒரு சரியாகாது.

விழிப்புணர்வு பயணம் தொடரட்டும். மக்கள் விழித்து எழும் நாள் வெகு தூரத்தில் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அறிவும்,மானமும், மரியாதையும் கேளிக்கூத்தாக்கப்படுகிறது ...
posted by N.S.E.மஹ்மூது (காயல்பட்டணம்) [09 May 2016]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 43695

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இந்த நிகழ்ச்சிக்கு செல்ல எனக்கு வாய்ப்பில்லாமல் போனது வருத்தமே! இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வாய்ப்பேற்பட்டிருந்தால் நிறைய கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டிருக்கும்.

----------------------------------

இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிய வந்ததது / தெரிய வந்ததது எல்லாம் தமிழ்நாடு முழுவதற்குமான மின் விநியோகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைக்கேடு மற்றும் மின் தட்டுப்பாடு பற்றியதே!

இந்த முறைக்கேட்டினால் மக்களுக்கு மிகுந்த சிரமம் மற்றும் மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது உண்மைதான் – அதே நேரத்தில் மக்கள் சம்பாதித்த (வரி கட்டியது போக உள்ள) சொந்த பணம் கொள்ளையடிக்கப் படவில்லை – மக்கள் அரசுக்கு செலுத்திய வரிப்பணம்தான் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

---------------------------------

ஆனால் காயல்பட்டணத்திலோ! மக்களுடைய சொந்த பணம், இதே மின் வாரியத்தால் கொள்ளையடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?

இந்த கொள்ளையில் நமது பணம் மட்டும் கொள்ளையடிக்கப்படவில்லை - நமது அறிவும், மானமும், மரியாதையும் கேளிக்கூத்தாக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடனே! இங்கே தெரியப்படுத்துகிறேன்.

இதற்கு மேல் அதிகம் எழுத விரும்பவில்லை – அதே நேரத்தில் இன்ஷா அல்லாஹ்! விரைவில் இதற்கான முற்றுப்புள்ளி வைக்கப்படும் - அதன் பின் விசயங்கள் அத்தனையும் வெட்ட வெளிச்சமாகும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved