Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:24:40 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17712
#KOTW17712
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 9, 2016
சமய நல்லிணக்கம், உலக அமைதி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை! பெருந்திரளானோர் பங்கேற்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5345 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 89ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.04.2016. அன்று துவங்கி, 08.05.2016. அன்று நிறைவடைந்தது.

ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவதும், நிறைவு நாளன்று அபூர்வ துஆ பிரார்த்தனை செய்யப்படுவதும் வழமை. அந்த அடிப்படையில் மே 08 அன்று (நேற்று) அபூர்வ துஆ நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதிகாலை நிகழ்ச்சிகள்:

அன்று அதிகாலை 05.15 மணிக்கு, ஹாஃபிழ் என்.ஏ.ஸாலிஹ் நுஸ்கீ கிராஅத் ஓத, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப், குருவித்துறைப்பள்ளி ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ நிறைவுநாள் பாடத்தை ஓதி துவக்கி வைத்தார்.

காலை நிகழ்ச்சிகள்:

அன்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ வழங்கினார்.

தொடர்ந்து, கூட்டு துஆவின் மகிமைகள் எனும் தலைப்பில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ உரையாற்றினர்.

அபூர்வ துஆ பிரார்த்தனை:

என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்ற, ஐக்கிய சமாதானப் பேரவையின் நிறுவனர் தலைவரும் - தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் செயற்குழு உறுப்பினருமான மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ அபூர்வ துஆ பிரார்த்தனை இறைஞ்சி, இவ்வாண்டின் நிகழ்ச்சிகளை நிறைவுபடுத்தினார்.

சமூக ஒற்றுமை, உலக அமைதி, மத நல்லிணக்கம், மனிதநேயம், சகோதரத்துவம், நாட்டு நலன், இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு, நோய் நிவாரணத்திற்காக சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது.

இப்பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக, உள்ளூரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில் வந்து கலந்துகொண்டனர்.

பிரார்த்தனையில் பங்கேற்ற முக்கியமானோர்:

காயல்பட்டினம் பள்ளிவாசல் ஜமாஅத்துகளின் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், அதன் இணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன், பெண்கள் பகுதியில் அவரது மனைவி டாக்டர் கமலி ஜெயசீலன், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட - நகர பொதுமக்களும், வெளியூர்களைச் சேர்ந்த பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

பிரமுகர்கள் பங்கேற்பு:

மே 16 அன்று தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, பரப்புரையில் ஈடுபட்டிருந்த திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அதிமுக கூட்டணியின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் நடிகர் ஆர்.சரத்குமார், மக்கள் நலக் கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் ஆகியோர் பிரார்த்தனையில் பொதுமக்களுடன் பங்கேற்று, துஆ இறைஞ்சிய ஆலிமிடம் வாழ்த்து பெற்றனர்.















இட வசதி:

ஆண்களுக்கு, மஜ்லிஸின் ஆண்கள் பகுதி ஹல்கா, பெரிய முத்துவாப்பா தைக்கா தெரு, குருவித்துறைப்பள்ளியின் உட்பள்ளி, நடுப்பள்ளி, வெளிப்பள்ளி, குருவித்துறைப்பள்ளி மையவாடி மைதானம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பெண்களுக்கு, மஜ்லிஸின் பெண்கள் பகுதி ஹல்கா, கிழக்குப் பகுதி மைதானம், பெரிய முத்துவாப்பா தைக்கா, ஈக்கியப்பா தைக்கா உள்ளிட்ட பகுதிகளில் இட வசதி செய்யப்பட்டிருந்தது. அனைவரும் ஒரே குரலில் ‘ஆமீன்’ என்று கூறி, துஆ - பிரார்த்தனை செய்தனர்.

துஆ இறைஞ்சிய ஆலிமுக்கு வழியனுப்பு:

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற துஆ பிரார்த்தனை நிறைவுற்ற பின்னர், துஆ இறைஞ்சிய ஆலிமை - ஹாமிதிய்யா பைத் பிரிவினர் அரபி பைத் பாடி நகர்வலமாக அவரது இல்லம் வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.









பாதுகாப்பு ஏற்பாடுகள்:

ஆறுமுகநேரி காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மஜ்லிஸ் வைபவக் கமிட்டியின் சார்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - கே.எம்.டீ. மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் முதலுதவி வாகனம் நிகழ்விடத்தில் ஆயத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திருச்செந்தூரிலிருந்து தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, அப்பாபள்ளித் தெருவிலிருந்தே வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - அப்பாபள்ளித் தெரு - தீவுத் தெரு சந்திப்பில் துவங்கி, மஜ்லிஸ் வளாகம் வரை ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

மாலை நிகழ்ச்சிகள்:

இறுதி நாளை முன்னிட்டு, அன்று மாலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர் எம்.எஸ்.முஹம்மத் நூஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, நபிகளார் மீதான மவ்லித் மஜ்லிஸ், கடைப்பள்ளியின் இமாம் எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ தங்கள் தலைமையில் நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ துஆ ஓதி நிறைவு செய்தார்.

17.35 மணிக்கு எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் ஏலம் விடும் நிகழ்ச்சியை நடத்தினர்.

இரவு நிகழ்ச்சிகள்:

19.00 மணிக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் பங்கேற்பில் பல்சுவை இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

20.45 மணிக்கு, மாதிஹுல் கவ்த் மர்ஹூம் அல்லாமா சே.கு.நூகுத்தம்பி ஆலிம் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ், ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா தலைமையில் நடைபெற்றது.

21.45 மணிக்கு, நிறைவு நாள் சிறப்பு நிகழ்ச்சிகளின் கடைசி கட்ட நிகழ்ச்சிகளை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர் ஜெ.எஸ்.அல்தாஃப் கிராஅத் ஓதி துவக்கி வைக்க, மஜ்லிஸ் வளைவுகளில் பதியப்பட்டிருக்கும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, கேரள மாநிலம் கோழிக்கோடு குட்டிகாட்டூர் ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.தாஜுத்தீன் மஸ்லஹீ வழங்கினார்.

கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, காயல்பட்டினம் ஜீலானீ பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.எச்.முஹம்மத் அப்துல் காதிர் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இன்று காலை 06.00 மணி முதல் 08.30 மணி வரை நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.

அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், துணைத்தலைவர் டீ.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாம், மேலாளர் வாவு எஸ்.அப்துல் கஃப்பார், இணைச் செயலாளர்களான எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, துணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஷாஹுல் ஹமீத் ஆகிய நிர்வாகிகளும், வைபவக் கமிட்டி தலைவர்களான கே.எம்.செய்யித் அஹ்மத், மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ, பெத்தப்பா எம்.ஏ.சி.சுல்தான் அப்துல் காதிர் உள்ளிட்ட வைபவக் கமிட்டியினரும் செய்திருந்தனர்.

ஒவ்வொரு நாளும் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகள், நிறைவுநாளன்று நடைபெற்ற அபூர்வ துஆ பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்பட்டது. அதே இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உரிய தலைப்பைத் தேர்ந்தெடுத்து, நடப்பாண்டின் பழைய உரைகள், கடந்தாண்டின் அனைத்து உரைகளையும் கேட்கவும், பதிவிறக்கம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1437ஆம் ஆண்டு (கடந்தாண்டு) நிறைவு நாள் அபூர்வ துஆ நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1437ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 09:05 / 09.05.2016.]

படங்களில் உதவி:
M.M.ஷாஹுல் ஹமீத்
P.S.அப்துல் காதிர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...சரித்திரம் திரும்புகிறது
posted by mackie noohuthambi (kayalpatnam ) [09 May 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43698

திருவிழாவில் காணாமல் போன தங்கள் மகன் மீண்டும் தன் பெற்றோரை வந்தடைந்தபோது அந்த பெற்றோர்கள் அவனை ஈன்ற பொழுதைவிட மிக்க அகமகிழ்ந்து வாரி அணைத்து உச்சி முகர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொள்வது போன்ற ஒரு நிகழ்ச்சி இது.

தந்தை பெரியார் அவர்கள் முத்தமிழ் காவலர் கி ஆ பெ விசுவநாதம் அவர்களை தனது அவையில் முன்னவராக வைத்திருந்த காலம் அது. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு மேடையில் சிலேடையில் செந்தமிழில் பேசினார். ரா.பி.சேதுப் பிள்ளை அவர்களுக்கு ஒரு வாழ்த்து மடல்.ஆங்கிலத்திலே இருந்தது. அதை தன் கையில் வைத்துக் கொண்டு அதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து அவையை அதிர வைத்த அண்ணா அவர்களை பெரியார் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார். விளைவு அண்ணா அவர்கள் பெரியாரின் அவைத் தலைவர் ஆனார். இவ்வளவு நாட்களாக விசுவநாதம் அவர்கள் உங்கள் அவை தலைவராக இருந்தாரே இப்போது அண்ணாவை அந்த இடத்திலே வைத்திருக்கிறீர்களே என்று பெரியாருக்கு நெருக்கமானவர்கள் கேட்டபோது பெரியார் அமைதியாக பதில் சொன்னார், ''ஆயிரம் விசுவநாதம் கிடைப்பார்கள் ஆனால் ஒரு அண்ணா கிடைக்க மாட்டார்'' என்று சொன்னார். இது வெறும் புகழ்ச்சி அல்ல. உண்மை நிலை.இது அண்ணாவின் ஆளுமை.

ஹாமித் பக்ரி ஆலிம் அவர்கள் ஆளுமை பற்றி அவர்களின் முன்னாள் தலைவர் பீ ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் சொல்வார். ''ஹாமித் பக்ரி அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கும் நியுமத் அற்புதமானது. அவர் திருமறை செல்வன். ஓதினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவர் வாயிலிருந்து திருமறை வசனங்களும் திருநபியின் பொன்மொழிகளும் அருவிபோல் கொட்டுகிறது. அவரது ஞாபக சக்தி என்னை அதிர வைக்கிறது. எத்தனை முறை காயல்பட்டினத்துக்கு வந்தாலும் நான் செல்ல வேண்டிய இடம் நான் பழகிய இடம் பலமுறை வந்து சென்ற இடம் மறந்து விடுகிறது. ஆனால் ஹாமித் பக்ரியின் நினைவாற்றல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது'' என்றார்கள்..

அவர் ஆற்றிய பிரார்த்தனை வீண் போகவில்லை, அதன் வீரியம் தாக்கம் இன்று காலை நமதூரில் மழை பொழிந்தது.

அருவிபோல் அவரது அரபு மொழி உச்சரிப்பு தமிழ் உச்சரிப்பு, இறைவசனங்கள் திருநபி மணிமொழிகள் கால தேவைக்கான பிரார்த்தனைகள் தான் சார்ந்துள்ள முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்ல தான் பிறந்த நாடு எல்லையில் நமது நாட்டைக் காக்க அல்லும் பகலும் தூங்காமல் விழித்திருக்கும் ராணுவ வீரார்கள், உழைக்கும் வர்க்கங்கள் கடல் கடந்து வாழும் சொந்தங்கள் உணவு விளைவிக்கும் விவசாயிகள் என்று நாட்டின் பலதரப்பட்ட மக்களுக்காக அவர் ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்து உலக நாயகனாக அவர் நேற்று காட்சி தந்தார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு நமது நாட்டங்களை தேட்டங்களை நிறைவேற்றி தருவானாக, நாட்டில் நால்லாட்சி மலர அது முஸ்லிம்களுக்கு சிறுபான்மையினருக்கு நன்மை பயக்கும் அரசாக அமைய அல்லாஹ் அருள்புரிவானாக.

ஆலிம் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் உடல் நலத்தையும் பொருள் வளத்தையும் கொடுத்தருள வேண்டும் என்று நாமும் அவர்கள் ஹக்கில் பிரார்த்திப்போம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [09 May 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43701

அபூர்வ துஆ பிரார்த்தனைக்கு அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் சரத்குமார் வந்து இருந்தாரே, புகைப்படம் காணோமே?

பாரபட்சம் காட்டுகிறதே?

Moderator: இவ்வாண்டு செய்தியாளர் நேரடியாகப் படங்களைப் பதிவு செய்யவில்லை என்பதால், பிறர் மூலம் கிடைக்கப்பெற்ற படங்களே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது தாங்கள் அனுப்பி வைத்துள்ள படங்களும் இச்செய்தியில் இணைக்கப்பட்டுள்ளன.

பாரபட்சம் காட்ட இணையதளத்திற்கு எந்த அவசியமும் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:..தொப்பி முஸ்லிம்களின் அடையாளம் .
posted by mackie noohuthambi (kayalpatnam ) [09 May 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43702

நம்மை சந்திக்க வரும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்களாக இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு ஒரு தொப்பியை அணிவித்து அவர்கள் அடையாளங்களை மாற்றி நமது அடையாளத்தை கொச்சைப் படுத்தாதீர்கள். நம்மை சிறுமைபடுத்திக் கொள்ளும் செயலாகும் இது.

தயவு செய்து இன்னும் ஒரு வாரம் பொறுத்திருங்கள். இவர்கள் நமது தலையில் ''பெரிய தொப்பியை'' போடாமல் இருந்தால் சரிதான்...

மறைந்த எனது இனிய நண்பர் SK சொல்வார்.

எங்கிருந்தெல்லாமோ யார் பணத்தையோ கொள்ளை அடித்துக் கொண்டு ஊழல் செய்து ஏமாற்றிக் கொண்டு இங்கு வந்து வானளாவிய மாளிகை போன்று வீடுகளை கட்டுகிறார்கள். அந்த வீட்டின் முகப்பின் சலவைக் கல் ஒன்று பதித்திருக்கும். ''ஹாதா மின் பழலி ரப்பீ'''... என்று அதில் எழுதப் பட்டிருக்கும். அது ''ஹாதா மின் பழ லி ரப்பீ அல்ல'' ''ஹாதா மின் பழ லி தொப்பி'' என்று திருத்தி வாசித்துக் கொள்ளுங்கள் என்பார், நகை சுவை தென்றல் SK மச்சான் அவர்கள்.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் SK அல்லாஹ் அவரது மண்ணறையை சொர்க்க பூங்காவாக்குவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [09 May 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43704

அஸ்ஸலாமு அலைக்கும்

பல வருடங்களுக்கு பின் இப்போது தான் ....நல்ல ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு குரலில் >>> மாஷா அல்லாஹ் அற்புதமான '' துவாவை << நம் காதுக்கினிய முறையில் கேட்டு பரவசமானோம் .....

ஜனாப்.மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் T.M.S.ஹாமீது பக்ரீ அவர்களின் பிரார்த்தனையை ஒன்றுக்கு ,, பல தடவைகள் ...எங்களின் வாகனத்தில் பயணம் செல்லும் போதும் கேட்டு வருகிறோம் ....

ஜனாப்.மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் T.M.S.ஹாமீது பக்ரீஅவர்களின் மனம் உகந்த குரலுக்கும் ,, அரபி உச்சரிப்புக்கும் ,,அதன் தமிழ் உச்சரிப்புக்கும் ஈடு இணையே இல்லை .....

மத்திய காயல் பகுதி மக்களின் நெடுநாளைய ஒரு கனவு தான். ஜனாப்.மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் T.M.S.ஹாமீது பக்ரீ அவர்களின்'' துவா'' ....அல்ஹம்துல்லிலாஹ் .....

தற்போதைய இந்த குரலின் தன்மையை உணரும் போது .பழைய நினைவான .ஜனாப் .மர்ஹும் .ஷாவன்னா ஆலிம் அவர்களின் '' கனத்த ,,கண்ணியமான குரலில் '' துவாவை '' கேட்டது போன்று இருந்தது .......

இப்படி ஒரு தன்மை வாய்ந்த ஒரு சிறப்பான ஜனாப்.மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் T.M.S.ஹாமீது பக்ரீ அவர்களை நமது ஊருக்கு தந்த வல்ல இறைவனுக்கே எல்லா புகழும் .....

ஜனாப்.மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் T.M.S.ஹாமீது பக்ரீஅவர்கள் '' துவா '' ஓதுகிறார்கள் என்றதுமே வெளி ஊரில் இருக்கும் .நம் ஊர் மக்களும் சரி ,, வெளி ஊர் மக்களும் ரொம்பவும் ஆர்வத்துடன் ஆபூர்வ '' துவாவில் கலந்து கொள்ள ஊர் வந்தார்கள் என்பது தான் உண்மை... எங்களுக்கு தான் நேரில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது ..அந்த மன வருத்தம் எங்களுக்கு உண்டு .....

ஜனாப்.மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் T.M.S.ஹாமீது பக்ரீஅவர்களின் இந்த ''அபூர்வ துஆ பிரார்த்தனை பற்றி நம் ஊர் & வெளி ஊர் அனைத்து மக்களும் அற்புதமாக பிரார்த்தனை செய்தார்கள் என்று பெருமை பட சொன்னார்கள் .... இந்த வருஷம் மக்களின் கூட்டமும் அதிகம் என்றும் நல்லமுறையில் பாதுகாப்பு கொடுக்க பட்டதாகவும் சொன்னார்கள் ...

நேரலையாக எங்களுக்கு தந்த கண்ணியமிக்க '' மஜ்லிஸீல் புகாரிஷ் ஷரீபு சபையின் உறுப்பினர்களுக்கும் & நம் '' காயல் .காம்....இணைய தளத்துக்கும் மிக்க '' நன்றி ''...பாராட்டுக்கள் ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved