Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:01:18 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17959
#KOTW17959
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 20, 2016
காயல்பட்டினத்தை - அரசு பேருந்துகள் தவிர்ப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2643 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது மிகப்பெரிய ஊர் - காயல்பட்டினம். இங்கு 45,000 மக்கள் வாழ்கின்றனர். தொழில், கல்வி, மருத்துவம் உட்பட பல்வேறு தேவைகளுக்காக - இவர்கள், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உட்பட பல்வேறு நகரங்களுக்குச் செல்ல அரசுப் பேருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.

காயல்பட்டினம் வழியாக இயக்கப்படவேண்டிய பேருந்துகள் பல - கடந்த பல ஆண்டுகளாக காயல்பட்டினத்தைத் திட்டமிட்டே தவிர்த்து – ஆறுமுகநேரி/அடைக்கலபுரம் சாலை வழியாகச் செல்கின்றன. பல நேரங்களில், பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோருடன் பயணிக்கும் மக்கள், நடுஇரவில் - ஆறுமுகநேரியில் இறக்கி விடப்பட்ட நிகழ்வுகள் பல உள்ளன.

இதுகுறித்து - பல ஆண்டுகளாக, பல்வேறு சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் புகார்கள் கொடுத்தும், இந்த அவல நிலை தொடர்கிறது.

இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணக்கோரி, நான்கு அம்சக் கோரிக்கை - இணையம் மற்றும் உள்ளூரில் பெறப்பட்ட 1000க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களுடன் - இன்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது. நகரில் செயல்புரியும் “நடப்பது என்ன?” என்ற WHATSAPP குழுமம் இதை ஒருங்கிணைத்துள்ளது.



அந்த நான்கு அம்ச கோரிக்கை வருமாறு:

(1) தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து மண்டலங்களுக்கும், இப்பிரச்சனை குறித்து உடனடியாக விளக்கி, காயல்பட்டினம் வழியாகச் செல்ல வேண்டிய பேருந்துகள் - அவ்வழியாகவே செல்ல உறுதி செய்யவும்.

(2) அரசு போக்குவரத்துத் துறை மூலம் - காயல்பட்டினம் வழியாகச் செல்லவேண்டிய பேருந்துகள் விபரம் அடங்கிய - புதுப்பிக்கப்பட்ட கால அட்டவணைப் பலகையை - காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் உடனடியாக நிறுவ உத்தரவிடவும்.

(3) மேற்குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணைப் பலகையை, ஆறுமுகநேரி - அடைக்கலரம் சந்திப்பு பேருந்து நிறுத்தத்திலும் நிறுவ உத்தரவிடவும்.

(4) காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் ஒரு TIME KEEPER நியமிக்க ஏற்பாடு செய்யவும்.

இந்த கோரிக்கைகளின் நகல், போக்குவரத்துறை அரசு முதன்மை செயலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் அனைத்து நிர்வாக இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.



எமது கோரிக்கை துரிதமாக பரிசீலிக்கப்படாத பட்சத்தில், பொது நல வழக்கு வாயிலாக - நீதிமன்றத்தை நாடவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

மேலும் - இவ்வாறு காயல்பட்டினம் தவிர்க்கப்படுவதால், பெருத்த மன உளைச்சலுக்கும், பொருட் சேதத்திற்கும் உட்படும் பொதுமக்கள், அதற்குக் காரணமான போக்குவரத்து துறை ஓட்டுநர், நடத்துநர், அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க - அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு தரவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனி வருங்காலங்களிலும் இக்குறை தொடருமானால், பொதுமக்களைத் திரட்டி அறவழியில் போராடவும், நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த 256 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட - “நடப்பது என்ன?” வாட்ஸ் அப் குழுமம் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ் தலைமையில், அதன் அங்கத்தினரான பா.மு.ஜலாலீ, ஏ.எஸ்.புகாரீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், கோனா அஜ்வாத், எம்.எல்.ஹாரூன் ரஷீத், எம்.எம்.முஜாஹித் அலீ, ஹபீப் முஹம்மத் ரியாஸ், காழி அலாவுத்தீன், எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்தனர்.

நடப்பது என்ன வாட்ஸப் குழுமம் சார்பாக,
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [20 June 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44091

நகர நலனில் அக்கறை கொண்டு ஆர்வத்துடன் நேம்பு நூற்றும் காலையிலே ஆட்சியரிடம் கோரிக்கையிட்டதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். தங்களின் கோரிக்கை வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack sma (jeddah) [21 June 2016]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44093

காயல்பட்டினம் வழியாக பெர்மிட் போடப்பட்டுள்ள அனைத்து பேரூந்துகளிலும் "காயல்பட்டினம் வழி" என்ற பெயர் பலகை கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் . உங்களுடைய கோரிக்கைகளில் இதுதான் முதன்மையானதாக இருந்திருக்க வேண்டும் .

இரண்டாவது , மூன்றாவது கோரிக்கையான கால அட்டவணை பலகை நமதூரிலும் , ஆறுமுகநேரியிலும் வைப்பதால் இங்கு உள்ளவர்களுக்கு மட்டும்தானே பயன் . திருசெந்தூரில் இருந்தும் தூத்துக்குடியில் இருந்தும் புறப்படும் பேரூந்து , இது காயல்பட்டினம் வழியாக செல்லும் பேரூந்தா என்பதை எப்படி அறிய முடியும் ? . " காயல்பட்டினம் வழி " என்ற பெயர் பலகை வைத்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் . இல்லையேல் ஒவ்வொரு முறையும் நடத்துனர் , ஓட்டுனரிடம் வாக்குவாதம் , விதண்டாவாதம்தான் பண்ணிகொண்டிருக்க வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [21 June 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44095

புனித ரமலானில் நோன்பு நோற்றுக் கொண்டு வெயிலையும் பொருட்படுத்தாமல் ஊர் நலனில் அக்கறை கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

இப்படிப்பட்டவர்கள் எதிர்காலத்தில் நமது நகர்மன்ற உறுப்பினர்களாக வரவேண்டும். இளைஞர்களை நம்பித்தான் ஒரு சமுதாயம் இருக்கிறது. முதியவர்கள் புதியவர்களுக்கு வழி விட வேண்டும்.புதியவர்கள் முதியவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். வேகமும் விவேகமும் ஒன்றிணைந்தால் நமது ஊருக்கு எவ்வளவோ நன்மைகள் செய்ய முடியும்.

இந்த பேருந்து பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இப்போது ஒரு நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்ப்போம். நமது நியாயமான கோரிக்கைகளை ஆட்சியர் அவசியம் கவனிப்பார் என்று நம்புவோம். அது நடக்காத பட்சத்தில் நீதி மன்றங்களை அணுகினால் அது கிடப்பில் போடப் பட்டு விடும். மற்ற ஊர்களை போல் சாலை மறியல் போன்ற போராட்டங்களை அரசு விதிகளுக்கு உட்பட்டு நாம் முன்னெடுத்து சென்றால்தான் பயன் கிடைக்கும்.

நீரோட்டம் இல்லாமல் நிலம் விளைவதில்லை
போராட்டம் இல்லாமல் நலம் விளைவதில்லை.

சர்வ கட்சிகளும் இந்த போராட்டத்தில் இணைந்தால் வெற்றி நிச்சயம். முதியவர்களின் ஆலோசனைகள் அங்கீகாரங்கள் பாராட்டுக்கள் இளைஞர்களுக்கு போதும் அவர்கள் சாதித்துக் காட்டுவார்கள். 100 இளைஞர்களை தாருங்கள் அவர்களை இந்த நாட்டின் சிற்பிகளாக்கி காட்டுகிறேன் என்று விவேகானந்தர் சொல்கிறார். உண்மையும் அதுதான்.

நமது கோரிக்கைகளை வென்றெடுக்க இளைஞர்களை ஊக்குவிப்போம். அவர்களுக்கு நகர்மன்றத்தில் பதவிகளை கொடுத்து உட்கார வைத்து நாம் வேலை வாங்குவோம்.

வருகின்ற ஊராட்சி மன்றம் இளைஞர்கள் மன்றமாக பரிணாம வளர்ச்சி பெற்று ஊர் எல்லா வகையிலும் முன்னேற்றம் காண இனி ஒரு விதி செய்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by முத்துவாப்பா (அல் கோபர்) [21 June 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44096

அருமையான முயற்சி .....இறைவன் நாடினால் வெற்றி நிச்சயம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [21 June 2016]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44098

அஸ்ஸலாமு அழைக்கும்

அருமையான ஒரு மீண்டும் நல்லதோர் முயற்சசி .... இந்த முயற்சசி நமக்கு சாதகமாகவே அமைய வல்ல இறைவன் அருள்புரிவானாகவும் ஆமீன்....

நோன்பு வைத்து கொண்டு கடுமையான வெயிலிலும் ,,தங்களின் சொந்த வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு .. ஊர் மக்களுக்காக பொது நல சேவைகளில் ஈடு பட்டு உள்ள ... அனைத்து நம் சகோதரர்களையும் மனதார பாராட்டுகிறோம் ....

நம் தமிழக அரசு அதிகாரிகள் நமது ஊரை புறக்கணிக்க பார்த்தால் ...நாம் ஜனநாயக முறைப்படி '' கோர்டடை நடுவதில் தப்பே இல்லை ....

இது விஷயமாக பல தடவைகள் நம் மாவட்ட அதிகாரி அவர்களிடம் .. பல அமைப்புக்கள் '' மனு கொடுத்தும் ...இவை தொடர்வது தான் ...நமக்கு மன வேதனையாக இருக்கிறது ....இப்போதாவது நம் மாவட்ட அதிகாரி அவர்கள் இப்பிரசணையில் முழு கவனம் செலுத்துவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது ....

பஸ் டிரைவர்கள் நமது ஊருக்கு வர மருத்துக்கான காரணம் ....நம் ஊர் மக்களும் மெயின் ரோட்டில் இரு & நால் சக்கர வாகன ஓட்டிகள் தருமராகவே தான் பார்க்க பண்ணுகிறார்கள் ...ரூட் பஸ் டிரைவர்கள் ஏதாவது சொன்னால் ...நம் ஊர் இரு & நான்கு சக்கர ஓட்டிகள் ...பஸ் டிரைவரிடம் '' தாறுமாறாக '' பேசுவதையும் நான் கண்ணால் பார்த்தது உண்டு ....தயவு செய்து நம் மக்களும் கொஞ்சம் தங்கள் வாகனங்களை மெயின் ரோட்டில் பார்க்கிங்க் செய்வதை முறைப்படிக்கு செய்தால் நல்லது ......

நமது ஊர் '' பேருந்து நிலையத்தில் அவசியம் ''ஒரு TIME KEEPER நியமிக்க வேண்டும்....அப்போது தான் தவறு நடக்க வாய்ப்பு இருக்காது .....

இன்ஷா அல்லாஹ் இந்த நம் முயற்சசி வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை உண்டு .....பார்ப்போம் .........

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by HASAN (QATAR) [24 June 2016]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 44111

நல்லதொரு மற்றும் அவசியமான முயற்சி....

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நன்மையாகி வைப்பானாக....

பாராட்டுக்கள் இந்த முயற்சி எடுத்தவர்களுக்கு.............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved