திருச்செந்தூர் அரசு நூலகத்திற்கு, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஜூன் 18, 19, 20 தேதிகளில் - காயல்பட்டினம் நகரில், எழுத்துமேடை மையம் தமிழ்நாடு மற்றும் தம்மாம் காயல் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் காயல் புத்தகக் கண்காட்சி 2018 நடைபெற்றது.
இந்த புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்ற சிறந்த புத்தகங்களில் 30 புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு, நடப்பது என்ன? குழுமம் சார்பாக - திருச்செந்தூர் அரசு பொது நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
![](/newsimg/226201850030.jpg)
![](/newsimg/226201850040.jpg)
![](/newsimg/226201850049.jpg)
இது சம்பந்தமான எளிய நிகழ்வு, நேற்று திருச்செந்தூர் அரசு பொது நூலக வளாகத்தின் பொறுப்பாளர்கள் திருமதி பரமேஸ்வரி மற்றும் திரு மாதவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூன் 22, 2018; 9:30 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|