Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:26:38 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11231
#KOTW11231
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 10, 2013
பொன்னன்குறிச்சி குடிநீர் திட்டப்பணிகளை - மாவட்ட ஆட்சியர், நகர்மன்றத் தலைவர் பார்வையிட்டனர்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3960 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான - பொன்னன்குறிச்சி குடிநீர் திட்டப்பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படவுள்ள இந்த திட்டத்திற்கான - நிதி உதவியை மத்திய அரசும் (80%), மாநில அரசும் (10%) வழங்குகின்றன. எஞ்சிய 10 சதவீத தொகையை (சுமார் 3 கோடி ரூபாய்) காயல்பட்டினம் நகராட்சி வழங்குகிறது.



காயல்பட்டினம் நகராட்சியின் பங்கான சுமார் 3 கோடி ரூபாயில் 1.5 கோடி ரூபாய் நகராட்சியின் பொது நிதியில் இருந்தும், 1 கோடி ரூபாய் இணைப்புகளுக்கான முன் தொகையாக (ADVANCE DEPOSITS) மக்களிடம் இருந்து பெற்றும், 50 லட்ச ரூபாயினை முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மான் சொந்த நிதி மூலம் பெறவும் திட்டம் ஒன்று 2010 இல் வகுக்கப்பட்டது. இருப்பினும் - தமிழக அரசு, காயல்பட்டினம் நகராட்சியின் பங்கான 3 கோடி ரூபாயை, காயல்பட்டினம் நகராட்சிக்கு IUDM திட்டம் மூலம் வழங்கும் நிதியில் இருந்து செலுத்தி விட்டதாக தெரிகிறது.





இத்திட்டத்திற்கு பொன்னன்குறிச்சி பகுதியில் தேவையான நிலத்தை - தான் தர முன் வந்திருந்த 50 லட்ச ரூபாய் நன்கொடையில், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மான் வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. முன்னாள் தலைவர் மூலம் நிலம் கிடைக்காத காரணத்தால் - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், மாவட்ட ஆட்சியரிடம் பொன்னன்குறிச்சியில் அரசு நிலம் பெற்றுத்தர கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் சுமார் 50 செண்ட் அரசு நிலம் பொன்னன்குறிச்சி பகுதியில் - மாவட்ட ஆட்சியரால் ஒதுக்கப்பட்டு, அங்கு பணிகள் நடைபெற்றுவருகின்றன.





இந்த திட்டத்திற்கான அடிக்கல் நட்டும் விழா காயல்பட்டினத்தில் மார்ச் 10 அன்று நடைபெற்றது. இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா - மே 9 அன்று துவக்கியும் வைத்தார்.





இதற்கிடையில் இத்திட்டத்திற்கு பொன்னன்குறிச்சியில் அரசு வழங்கிய நிலத்தில் - பெண் ஒருவர் உரிமைக்கோரி பிரச்சனை செய்து வந்தார். இதனால் வேலைகள் பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமாரிடமும், சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதனிடமும் மனு வழங்கியிருந்தார். கடந்த வாரம் - காவல்துறையினர், பிரச்சனை செய்வோரை வேலை நடக்கும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். அங்கு வேலைகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன.



பொன்னன்குறிச்சி பகுதியில் பணிகள் சிறிது காலம் தடையானது குறித்து கடந்த ஜூன் மாத நகர்மன்ற கூட்டத்தில் 12வது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வி எழுப்பினார். அப்போது பதில் கூறிய நகர்மன்றத் தலைவர் - பிரச்சனை செய்யும் பெண் - 4 லட்சம் ரூபாய் கேட்பதாகவும், மேலும் நகராட்சியில் பணி கேட்பதாகவும், திட்டம் நடைபெறவுள்ள 30 கிலோமீட்டர் நீளப்பகுதியில் இவ்வாறு ஒவ்வொருவரும் பிரச்சனைகளை கிளப்ப ஆரம்பம் செய்தால், ஒவ்வொருவருக்கும் பணம் கொடுக்க இயலாது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் - இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தான் தகவல் கூறியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ள நிலையில் - மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார் IAS - பொன்னன்குறிச்சியில் நடக்கும் வேலை இடத்திற்கு - திங்களன்று (ஜூலை 8) - திடீர் விஜயம் செய்தார். அங்கு தற்போது நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு சென்றார்.

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் - அன்று மதியம் பணிகள் நடக்கும் இடத்தை பார்வையிட்டு, பணி நிலவரங்களை அறிந்துக்கொண்டார். அப்போது - நகராட்சி ஆணையர் ஜி.அசோக் குமார், நகராட்சி பொறியாளர் சிவகுமார், ஓவர்சியர் செல்வமணி ஆகியோர் உடனிருந்தனர்.





பொன்னன்குறிச்சியில் உள்ள இடத்தில தற்போது - 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பாதாள நீர் தேக்கம் அமைக்கும் பணி (UNDERGROUND SUMP) [மதிப்பீடு: 65 லட்ச ரூபாய்], ஆற்று படுகையில் 6 ஆழ் கிணறுகள் (INFILTRATION WELLS) அமைக்கும் பணி (ஒவ்வொன்றும் 4.5 மீட்டர் விட்டம், 9 மீட்டர் ஆழம்) [மதிப்பீடு: 185 லட்ச ரூபாய்] ஆகியவை தற்போது துவக்கப்பட்டுள்ளன.

மேலும் குடிநீர் திட்டத்திற்கான மின் ஊழியர்கள் தங்குவதற்கான அறைகள் கட்டும் பணி [மதிப்பீடு: 8 லட்ச ரூபாய்], பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி [மதிப்பீடு: 7 லட்ச ரூபாய்], பம்ப் இல்லம் அமைக்கும் பணி [மதிப்பீடு: 13 லட்ச ரூபாய்] ஆகியவையும் இங்கு விரைவில் தொடரும். இப்பணிகள் அனைத்தும் சுமார் 4 - 6 மாத காலத்தில் நிறைவுபெறும் என ஒப்பந்தாரார் ஸ்ரீராம் இ.பி.சி. நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





பொன்னன்குறிச்சியில் இருந்து காயல்பட்டினம் வரை - சாலை ஓரமாக - குழாய்கள் தற்போது இறக்கப்பட்டு வருகிறது. 27 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த தூரத்தில் தற்போது சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் இறக்கப்பட்டுள்ளன. 1 கிலோமீட்டருக்கு 4 லாரி லோடு என்ற அளவில், சுமார் 45 தினங்களில் அனைத்து குழாய்களும் இறக்கப்ப்பட்டுவிடும் என ஒப்பந்தாரார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.







இந்த குழாய்கள் மேற்கு வங்காளத்தில் உள்ள ராஷ்மி மெடாலிங்க்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. K9 Class- Ductile Iron ரக குழாய்களான இவை - 27 கிலோமீட்டர் தூரத்திற்கு 350 மி.மி. விட்டம் (diameter) அளவிலும், 0.88 கிலோமீட்டர் தூரத்திற்கு 300 மி.மி. விட்டம் (diameter) அளவிலும், 1.75 கிலோமீட்டர் தூரத்திற்கு 200 மி.மி. விட்டம் (diameter) அளவிலும், 1.33 கிலோமீட்டர் தூரத்திற்கு 150 மி.மி. விட்டம் (diameter) அளவிலும், 4.50 கிலோமீட்டர் தூரத்திற்கு 100 மி.மி. விட்டம் (diameter) அளவிலும் இருக்கும்.



இந்த குழாய்கள் - பொன்னன்குறிச்சியில் இருந்து காயல்பட்டினத்திற்கு தண்ணீர் கொண்டு வரவும், காயல்பட்டினத்தில் ஒவ்வொரு நீர் தொட்டிக்கும் (OVER HEAD TANKS) தண்ணீர் கொண்டுசெல்லவும் (PUMPING MAIN) பயன்படுத்தப்படும். இப்பணிகளுக்கான குழாய்கள் மட்டும் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பிலானவை.



இவைகளை தவிர நகரில் சுமார் 51 கிலோமீட்டர் தூரத்திற்கு (LOCAL DISTRIBUTION - DISTRIBUTION MAIN) [நீர் தொட்டிகளில் இருந்து இல்லங்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல] - சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான - 100 மி.மி. விட்டம் (diameter), 150 மி.மி. விட்டம் (diameter), 200 மி.மி. விட்டம் (diameter), 250 மி.மி. விட்டம் (diameter) அளவு - K7 Class- Ductile Iron ரக குழாய்கள் - நிறுவப்படவுள்ளன.



தலைக்கு 135 லிட்டர் தண்ணீர் (LPCD) என்ற அளவில் - காயல்பட்டினத்தின் 2040-ம் ஆண்டு மக்கள் தொகையை (சுமார் 57,000) அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2040-ம் ஆண்டு தேவையான் தினசரி 77 லட்ச லிட்டர் அளவிலான தண்ணீர் - இத்திட்டம் மூலம் வழங்கமுடியும்.

புகைப்படங்கள் உதவி:
எம்.எம். முஜாஹித் அலி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S ABDUL KADER (kayal patnam) [10 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28527

படத்தில் மாவட்ட ஆட்சியரை காணோமே? நகரமன்ற பொறுப்பாளர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [10 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28529

அருமையான புள்ளி விவரங்கள்.

சப்தம் இல்லாமல் இவ்வளவு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்திற்கு உறுதுணை புரிந்து, உபத்திரம் இல்லாமல் உதவிகள் புரிந்து வரும் அனைவர்களுக்கும் நன்றிகள் பல.

நம் நகராட்சியில் அனைத்து மக்கள் பணிகளும் சிறப்பாக நடைபெற்று, சிறந்த நகராட்சி என்ற விருதை பெறனும் என்ற ஆவல் அனைவர்களுக்கும் உள்ளது.

ஆனால், அதற்க்கான வழிகள் தான் இன்னும் பிறக்கவில்லை. ஈகோ என்ற சனியன் தான் இதற்க்கு எல்லாம் தடைக்கல்லாக உள்ளது.

நகராட்சியில் கூட்டங்களும் ஒழுங்காக நடைபெற மாட்டேன் என்று வீம்பு பிடித்து, அவன் முறைக்கின்றான், இவன் சிரிக்கின்றான், வாடி போடி, வவுந்து விடுவேன் போன்ற கலை சொற்களுடன், படிக்கவர் வாங்கி விட்டு படி தாண்டி சென்று விடுகின்றது.. இந்த ஈகோ.

என்று தான் நம் நகராட்சிக்கு நல்ல விடிவுகாலம் வருமோ..!! நம் சகோதரர்களுக்குள் ஈகோ இல்லாத ஒத்துழைப்பு என்று வருமோ..!! அந்த நாளுக்காக இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Hameed Rifai (Yanbu) [10 July 2013]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 28534

இரண்டாவது பைப்லைன் திட்டப் பணிகளைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி. நீண்ட நாள் கனவு நிறைவேறும் அடையாளங்களைக் கண்களால் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இதில், எனக்குப் பிடிபடாத விஷயங்கள் இரண்டு:-

(1) யாரோ ஒரு அடையாளம் தெரியாத பெண் குறுக்கே நிற்கிறார் என்பதை பிரச்சினையாக முன்வைத்து நகர்மன்றக் கூட்டத்தில் ஓங்கி முழங்கி, ஊர் நலனுக்கு “உறுதுணை” புரிவதாகக் கருதிக்கொள்ளும் உறுப்பினர் சுகு அவர்களே!

நகர்மன்றக் கூட்டத்தில் நீங்கள் தலைவியிடம் குரல் உயர்த்திக் கேட்டது அனைத்தையும் வீடியோவில் பார்க்கத்தான் செய்தோம். யாருக்கும் இல்லாத அக்கறையுடன் இந்தப் பிரச்சினையை முன்வைக்கிறீர்களே, காரணம் என்ன?

உண்மையில் ஊருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டவராக நீர் இருந்திருந்தால், 4 லட்சம் ரூபாய் பணமும், ஒருவருக்கு நகராட்சியில் பணியும் கேட்ட பெண்ணை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கல்லவா குரலை ஓங்கியெழுப்பி இருக்க வேண்டும்?

(2) இந்த இரண்டாவது பைப்லைன் திட்டத்திற்காக பழைய சேர்மன் செய்யது அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்கள் பெருந்தொகை பணமும், நிலமும் கொடுத்துவிட்டார் என்றல்லவா இவ்வளவு நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன்?

கடந்த நகராட்சித் தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் நடத்திய MEGA கூட்டத்தில் கூட, இதற்காக வாக்குறுதி அளித்ததற்காக அவரைப் பாராட்டி நானே பேசினேனே...? நான் சார்ந்த மன்றம் கூட இதற்காகத்தானே அவர்களுக்கு விருது வழங்குவதாகக் கூறினார்கள்?

இப்போ தலை சுற்றுகிறதே......?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [10 July 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 28542

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல அருமையான பொது மக்களுக்கு போய் சேர கூடிய திட்டங்களின் இதுவும் ஓன்று ...எந்த ஒரு தடையும் இல்லாமல் நம் ஊர் மக்களுக்கு நல்ல குடி நீர் போய் சேர வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்...........

நம் நகர் மன்ற தலைவி அவர்களும் இந்த நல்ல விசயத்தில் முழு கவனம் செலுத்தி வருவதும் ...ரொம்பவும் பாரட்டுக்குரிய செயல் தான் .நம் ஊர் அனைத்து பொது மக்களின் நலனுக்காக ...இப்படி ஒடியாடி வேலை செய்ய கூடிய ஒரு சிறப்பான தலைவியை நம் நகர் மன்றமும் சரி ...நம் ஊர் பொது மக்களும் சரி பயன் படுத்தாத வருத்த பட கூடிய விஷயம் ........

நாம் எல்லா தரப்பிலிருந்தும் ஒற்றுமையை எதிர் நோக்கி இருந்தும் ...இன்று நாள் வரையில் ஒன்றுமே நடக்காதது ...நம் ஊருக்கும் / நம் மக்களுக்கும் மன வேதனை தான் ......

நாம் பொருத்து .....பொருத்து ...நம் ஊரின் நலன் பாதிக்க படுவதை நாம் என்னவென்று சொல்லுவது .. நல்லதோர் நிர்வாக திறமை உள்ள ஒரு நகர் மன்ற தலைவி அவர்களை இழந்தது தான் மிச்சம் ......... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:.மக்களுக்கு புரியும்....
posted by Mohammed Nooh KA (sarafiyyah, jeddah) [11 July 2013]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28549

இரண்டாவது பைப் லைன் திட்டம் எந்த அளவில் நடந்து வருகிறது, அது விஷயமாக நம் நகர் மன்ற தலைவி எவ்வளு முனைப்புடன் செயல்படுகிறார்கள் என்று அவரை அறிந்த மக்களுக்கு மிக நன்றாக புரியும்.

பதவி ஏற்ற நாளிலிருந்து மன்ற உறுப்பினர்கள் தலைவிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் இதுவரையில் நமதூரில் பல நலதிட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்து அதன் பலனை தற்போது அனுபவித்துக் கொண்டிருப்போம்.

ஆனால் எதையோ எதிர்பர்த்து பதவிக்கு வந்தவர்களால் அதை அடைய முடயாத ( சட்டியில் இருந்தும் அகப்பையில் எடுக்க இயல வில்லை ) காரணத்தால் நமதூரும், நாமும் பல இழப்புகளை சந்தித்துள்ளோம் என்றால் அது மிகையாகாது.

இனியாவது இந்த உறுப்பினர்கள் வறட்டு கவுரவத்தினால் வெற்று கூச்சல் போடாமல் நகர தலைவிக்கு முழு மையான, உண்மையான ஒத்துழைப்பு கொடுத்து பதவியில் அமர்த்திய மக்களுக்கு நம்பகமானவர்களாக இருப்பார்களாக. இறைவனிடமும் இதையே பிரார்த்திப்போமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved