Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:09:34 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12642
#KOTW12642
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 26, 2013
காயல்பட்டினத்தில் மேலும் 5 குவிவிழிக் கண்ணாடி அமைக்கப்படும்! தக்வா பொதுக்குழுவில் அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2974 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் மேலும் 5 சாலை முனைகளில் புதிதாக குவிவிழிக் கண்ணாடி அமைக்கப்படும் என தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-

பொதுக்குழுக் கூட்டம்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்:

அல்லாஹ்வின் கிருபையால் தாய்லாந்து காயல் நல மன்ற(தக்வா) இவ்வாண்டின் கடைசிப் பொதுக் கூட்டம் 11-12-13 புதன்கிழமை இரவு 8 மணிக்கு பேங்காக் ஜெம் ஹவுஸ் இல்லத்தில் நடைபெற்றது. தக்வாவின் தலைவர் வாவு ஷம்சுத்தீன் ஹாஜி தலைமை தாங்கினார். காவாலங்கா செயற்குழு உறுப்பினர் தங்கள் ஏ.சி.முஹம்மது நூஹு ஹாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஹாஜி எல்.எஸ்.அப்துல் காதர் முன்னிலை வகித்தார்.



நிகழ்முறை:

துவக்கமாக ஜக்வாவின் பொதுக் குழு உறுப்பினர் ஜெய்பூர் கரூர் ட்ரேடர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் அல்ஹாபிழ் எம்.எஸ்.முஹம்மது சாலிஹ் இறைமறையின் 'உதவி' அத்தியாய வசனங்களை உருக்கமாக ஓதினார்.

தாய்லாந்தில் இருந்தாலும் தாய்நாட்டின் பற்றால் தன் நிறுவனத்திற்கு 'தாய்நாடு டிராவல்ஸ்' என பெயர் சூட்டி மற்ற காயலர்களிடமிருந்து தனித்து விளங்கும் பயண ஏற்பாட்டு நிறுவனத்தை தன்னகத்தே கொண்டுள்ள அதன் உரிமையாளர் எம்.ஏ.முஹம்மது சயீத் வந்தோரை உளமார வரவேற்று பேசினார்.

தலைமையுரை:



அடுத்து பேசிய தக்வா தலைவர், “அல்லாஹ்வின் கிருபையால் நம் மன்றம் பல நலப் பணிகளைச் செய்து வருகின்றது.

குவிவிழிக் கண்ணாடி:

அண்மையில் நமதூரில் ஒரு சாலை முனையில் குவிவிழிக் கண்ணாடி அமைத்துக் கொடுத்தோம். இதற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல நாளேடுகள் இதைச் செய்தியாக வெளியிட்டிருந்தன. இதற்காக உழைத்த தம்பி அபுல்மாலி மற்றும் அவருக்கு ஒத்தாசையாக இருந்த தங்கள் இப்ராஹீம் வாவு உவைஸ் ஹாஜி, ஹாபிழ் மிஸ்கீன் சாஹிப் ஆகியோருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் 5 குவிவிழிக் கண்ணாடிகள்:

மேலும் 5 குவிவிழிக் கண்ணாடிகளையும் வாங்கியுள்ளோம், இம்மாத இறுதிக்குள் அவையனைத்தையும் அமைத்திட உள்ளோம். சாலை விபத்தினைத் தவிர்க்க ஒரு பாதுகாப்பான ஏற்பாட்டை ஏற்படுத்தியுள்ளோம். நிச்சயம் நம் மக்கள் இதனால் சாலைகளில் பயனடைவர் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.

கண்காணிப்புக் கருவி:

அத்துடன் பொது பாதுகாப்பு நடவடிக்கையாக ஊர் நுழைவு எல்லைகள், ஊரின் முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு புகைப்படக் கருவி நிறுவலாம் என நம் திட்டத்தில் உள்ளது. இதனை நம் மன்றம் தனித்தே செய்ய இயலாது. உலக காயல் நல மன்றங்களின் ஒத்தாசையும், ஆலோசனைகளும் தேவை.

எனவே உலக காயல் நல மன்றங்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்கி இம்மாத இறுதியில் உலக காயல் நல மன்றங்களின் முக்கிய பிரதிநிதிகளின் ஒரு ஒன்றுகூடலை ஊரில் கூட்டி, இது பற்றியும், இமாம் - பிலால் நிதி சேர்த்தல் தொடர்பாகவும் ஆலோசனை செய்யலாம் என்று நினைக்கிறேன்.

உள்ளூரில் ஓர் ஒன்றுகூடல்:

மேலும், இம்மாத இறுதியில் நம் மன்ற உறுப்பினர்கள் அநேகரின் நெருங்கிய உறவுகளில் திருமணம் இருப்பதால் அதிகமானவர்கள் ஊரில் சங்கமிப்பதால், நம் தக்வாவின் ஒரு ஒன்றுகூடலை ஊருக்கு அருகிலுள்ள தோப்பில் வைக்க உத்தேசித்துள்ளோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமண வாழ்த்து:

நம் மன்றத்தின் உறுப்பினர் யு.மொஹுதூம் முஹம்மது மற்றும் நம் மன்ற உறுப்பினர்களின் உறவுகளில் நடைபெறும் திருமணத் தம்பதியர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து நிறைவு செய்கிறேன்”
என்று பேசினார்.

செயலர் அறிக்கை:

அடுத்துப் பேசிய செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத், சென்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் என்னென்ன செயல்கள் நடைபெற்றுள்ளன; எவை மீதமுள்ளன என்பதனை விளக்கிப் பேசினார்.



கே.எம்.டி. மருத்துவமனைக்கு உபகரணங்கள்:

புதிதாக கே.எம்.டி. மருத்துவமனைக்கு BP பார்க்கும் Digital மற்றும் Analogue கருவிகள் தக்வா சார்பாக வழங்கவிருப்பதையும், மன்ற உறுப்பினர் மணமகன் யு.மொஹுதூம் முஹம்மது தன் சார்பாக ஒரு டிஜிட்டல் கருவி அன்பளிப்பு செய்யவிருப்பதையும் அறிவித்தார்.

பசுமை குறித்த விழிப்புணர்வு செயல்திட்டம்:

காயல் நகரை தூய்மையாக வைத்திருக்கவும், பசுமையான சூழலை உருவாக்க மக்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊரில் பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்கவும் செயலாளர் முன்மொழிய அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

அழகிய கடனுதவி:

பின்னர் காயல் நல மன்றம் காயல் நகரத்திற்கு மட்டுமல்ல, அந்நிய ஊரில் வாழும் காயலருக்கும் உதவவே அமைக்கப்பட்டுள்ளது. எனவே நம்மிடம் இருக்கும் நிதியிலிருந்து ஒரு தொகையை நம் மன்ற உறுப்பினர்களுக்கு தேவையான நேரங்களில் அழகிய கடனாக உதவ வேண்டும் என்ற பிரேரணையைக் கொண்டு வர அதை அனைவரும் வரவேற்றதுடன், அதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை அடுத்த கூட்டத்தில் முடிவு செய்வதனவும் முடிவு செய்யப்பட்டது.

பிப்ரவரியில் வருடாந்திர பொதுக்குழு:

மேலும் வருடாந்திர பொதுக் குழுக் கூட்டத்தை பிப்ரவரி 2ஆவது வாரம் நடத்துவதெனவும், புதிதாக மலர்ந்துள்ள மலேஷிய காயல் நல மன்றத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு விருந்தினர் உரை:

அடுத்து சிறப்பு விருந்தினர் தங்கள் நூஹு பேசினார்.



விடை தந்த விவாதங்கள்:

"இம்மன்றத்தில் நிறைய பேர் இளைஞர்களாக இருக்கிறீர்கள். சில நேரங்களில் மிகவும் காரசாரமாக விவாதித்தீர்கள். இவ்வளவு வேகமாக பேசுகிறீர்களே...? விவாதித்துக் கொண்டேதான் இருப்பீர்களோ... என வியந்துக் கொண்டிருந்தேன். ஆனால் என்ன ஆச்சர்யம்! அழகான பல முடிவுகளை கடுமையான விவாதத்தற்குப் பின் செயல்படுத்த தீர்மானித்துள்ளீர்கள். உங்கள் வியாபாரத்தைப் போன்றே நீங்களும் மாணிக்கமாகத் திகழ்கிறீர்கள் என்பதனை உங்கள் செயல்பாட்டிலிருந்தும், உங்களின் புதிய தீர்மானங்களிலிருந்தும் விளங்கிக் கொண்டேன்.

இலங்கை முன்னோரின் சேவை:

இலங்கையில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த மாதிரி காரசாரமாகப் பேசித்தான் நம் ஊருக்கு நல்ல பல திட்டங்களை தீட்டினார்கள் என்பதனைக் கேள்விப்பட்டுள்ளேன். இன்று அதை நிதர்சனமாக உங்கள் மன்றத்தில் கண்டேன். மாஷாஅல்லாஹ் உண்மையிலேயே பூரித்துப் போனேன்.

1954ஆம் ஆண்டு அ.க.அப்பா, அன்றைய இலங்கை காயல் நல மன்றம் மூலம் நம்மூருக்கு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற அடித்தளமிட்டு, செயல்படுத்தியும் காட்டினார்கள்.

அயல் நாட்டில் வாழும் நாம் நம் நலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், நமக்கு வாழ்வாதாரம் அளிக்கும் அந்தந்த பகுதி மக்களுக்காகவும் ஏதாவது நலப் பணிகள் - திட்டங்களில் பங்கேற்க வேண்டும்.

காவாலங்காவின் சேவை:

அதன் அடிப்படையில் காவாலங்கா உள்ளூர் மக்களின் நலத்திலும் சிரத்தை எடுத்து வருகிறது. அண்மையில் நன்றாகப் படிக்கக் கூடிய ஒரு பெண் MBBS படிப்பிற்கு இடம் கிடைத்தும் வசதி குறைவினால் சிரமப்படுவதை அறிந்த காவாலங்கா, அப்பெண்ணின் ஒரு வருட படிப்பிற்கு பொறுப்பேற்றுள்ளது.

மேலும் சிற்றூரில் வாழும் ஏழை மாணவர்கள் 40 பேருக்கு IRON BOX இலவசமாக வழங்கினோம். இப்படி நம்மூர் நல மன்றங்கள் நல்ல பல பணிகளைச் செய்து வருகின்றன, மேலும் நீங்கள் நன்றாக செய்ய வேண்டும். இதைப் போன்றே ஒற்றுமையாக வாழவேண்டும் என்று துஆ செய்கிறேன்”
என்று பேசினார்.

கூட்ட நிறைவு:

அடுத்து ஹோலி ட்ரடெர்ஸ் கே.ஏ.ஜெ.மொஹுதூம் முஹம்மது வாழ்த்துரை வழங்கினார். கே.எஸ்.எம்.பி.சூபி ஹுசைன் நன்றி கூற ஷாதுலி ஆலிமின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.



வந்திருந்த அனைவருக்கும் காயல் மஞ்ச வாடா மற்றும் கறிகஞ்சி பரிமாறப்பட்டது.








இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி ஆக்கம்:
M.H. ஸாலிஹ்
S.M. மிஸ்கீன் சாஹிப்


படங்கள் & தகவல்:
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பராமறிப்பும் தேவை!
posted by ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டினம்.) [26 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32181

தக்வா மன்றத்தினரால் ICICI சந்திப்பில் நிறுவப்பட்ட போக்குவரத்து குழியாடி வாகனம் ஓட்டுவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகின்றது. வளைவில் நம் எதிரே வரும் வாகனத்தைக் காணமுடியாமல் சிரமமும் ஆபத்தும் இருந்து வந்தது. இக்கண்ணாடியை நட்டு வைத்த பின்பு அதில் எதிர்புறக்காட்சியை தெளிவாகக் காண முடிகின்றது. தற்போது மழை நீர் மற்றும் தூசுகள் படிந்து மங்கிய நிலையில் காணப்படுகின்றது.

வாரம் ஒரு முறை அதை சுத்தம் செய்ய சொற்பமான கூலிக்கு ஒரு ஆளை வைத்தால் ”தக்வா” நலமன்றத்தைப் போல அது எப்போதும் பளீச்சென்று இருக்கும். இன்னும் சில வளைவுகளில் இது போன்ற கண்ணாடிகள் நிறுவ மன்றம் முடிவு செய்ததை பாராட்டாமல் இருக்க முடியாது. வாழ்த்துக்கள்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சிலவற்றை நமது வரிப்பணம் மூலமே அடைய முயற்சி செய்வோமாக...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [26 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32182

நகரின் நகர்மன்றம் மூலம் செய்ய வேண்டிய சில நல்ல காரியங்களை இந்த தக்வா அமைப்பு செய்வதை ஒரு புறம் பாராட்டினாலும் மறுபுறம் இது விசியத்தில் நகர்மன்றத்தின் பொறுப்பின்மையை உணர முடிகின்றது..

மக்களின் வரி பணத்தில் நகர்மன்றம் செய்ய வேண்டிய சில வேலைகளை உலகில் பல நாடுகளில் செயல் படும் காயல் நல மன்றங்களே இவைகளை செய்து கொள்வார்கள் என்ற தவறான நினைப்பை இந்த நகர்மன்ற தலைவியும் - உறுப்பினர்களும் - அதிகாரிகளும் - ஊழியர்களும் நினைத்து கொண்டு இருக்கிறார்களோ..! என சந்தேகிக்க தோன்றுகிறது..

நம் நகரில் சாலை விபத்தினைத் தவிர்க்க ஒரு பாதுகாப்பான ஏற்பாட்டை இம்மன்றம் (தக்வா) செய்கிறது அதை ஏற்றுகொள்கிறேன் - அந்த நல்ல செய்யலை பாராட்டுகிறேன்.. ஆனால் மக்கள் வரி பணத்தில் செய்ய வேண்டியவைகளை நீங்கள் செய்கிறீர்களே என எனக்கு ஒரு வருத்தம் தான் வேறு ஒன்றுமில்லை. இதை வேறு செலவுக்கு நீங்கள் பயன் படுத்தலாம் அல்லவா...! அங்கு இருந்து கொண்டு இங்குள்ள பல பொது அமைப்புக்களின் தொடர்புடன் நகராட்சிக்கு அழுத்தம் கொடுக்கலாமே..! (இது எனது தனிப்பட்ட கருத்து)

எது எது நமது முக்கிய பாதுகாப்புக்கு அவசியமோ அதை இன்றைய கால பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு சிலவற்றை நமது வரிப்பணம் மூலமே அடைய முயற்சி செய்வோமாக... ஆமின்..

இதை படிக்கும் சிலருக்கு மாற்று கருத்து இருக்கலாம் அது தவறில்லை... அது அவர் சூழலின் கருத்து...

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [26 December 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32183

அஸ்ஸலாமு அழைக்கும்...........

நம் மக்கள் எங்கு இருந்தாலும் ஊருடைய நன்மைக்காக உழைகீன்றார்கள் உலகம் எல்லாம் நம்முடைய மக்கள் ஒரு அமைப்பாக செயல்பட்டு நல்ல பல பணிகளை செய்வது மழ்சீயான வீசயம் . ஆனால் எப்படி எல்லாரும் ஒன்றாக ஊரில் இஸ்லாமீய நீதி நிறுவனம் சட்டபடி மக்களுக்கு வட்டி இல்லா கடன் கொடுக்க அனைவரும் ஒரு கூட்டு முயட்சீகளை எடுக்க முன்வரவேண்டும் .

தாய்லாந்து காயளர்கள் இந்த விசயத்தில் கவனம் காட்டனும். ஊரில் ஒரு குழந்தை பெறந்தால் அந்த குழந்தைக்கு இந்த இஸ்லாமிய நீதி நிறுவனத்தில் account பதிந்து கொள்ளவேண்டும் . ஊரில் ஒருவர் கூட விடுபடாமல் உறுபீனறாகுமாரு பார்துகொள்ளநும் நம்மை போன்ற ஊரில் இந்த காரீயத்தை நல்ல முறைபடி முயட்சியோடு செய்து நல்ல பயன் அடையலாம்.

இதில் ஆர்வமும் இந்த நடைமுறைகளை நன்கு உணர்தவர்கள் தங்களுடைய பயனுள்ள கருதுகளை பதியுங்கள் நன்மைகளை பெறுகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Seyed Mohamed (Bangkok) [26 December 2013]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 32186

அஸ்ஸலாமு அழைக்கும்

ரொம்ப நல்ல விஷயம், ஒரு சின்ன வேண்டுகோள் கண்ணாடியை வாரம் ஒருமுறை யாரையாவது வைத்து தூசியை துடைக்க சொல்லுங்கள் இல்லை என்றால் கண்ணாடி வைத்து பயன் இருக்காது இது போன்று இன்னும் பல செய்ய வாழ்த்துக்கள்

இப்படிக்கு
Seyed Mohamed (Sayna)
Kayal Ikiya Mandram (KIM)
Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஆர்வ மிகுதியால் காய்ந்த துணி கொண்டு துடைத்தார்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [26 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32187

தக்வா மன்றத்தினரால் ICICI சந்திப்பில் நிறுவப்பட்ட குவிவிழிக் கண்ணாடி போக்குவரத்தின் போது பல பேருக்கு மிக உதவியாக உள்ளது என்பதை மறுபதற்க்கில்லை.. போக்குவரத்து துறையோ - ஹைவேய் துறையோ செய்யவேண்டிய அந்த பணியை இந்த தக்வா மன்றம் செய்திருப்பது பாராட்டுக்குரியது..

சமீபத்தில் குவிவிழிக் கண்ணாடியில் தூசுகள் படிந்து மங்கிய நிலையில் இருந்த இக்கண்ணாடியின் நிலையை கண்ட ஒருவர் அதை சுத்தம் செய்வோமே என்று ஆர்வ மிகுதியால் காய்ந்த துணி கொண்டு துடைத்தார்.. அது பிறகு சிறு கோடுகள் விழுந்த வண்ணம் கீறல் போல சேதமடைந்துள்ளது. கண்ணாடி மீது நீரை ஊற்றி பின் பேப்பர் கொண்டு துடைத்து இருக்கலாம்..!

இனி பொருத்தும் இது போன்ற இக்கண்ணாடியை மிக கவனமாக பாதுக்காக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..

தம்பி அபு மாலி ஊரில் இருந்த சமயம் தினமும் இதன் மேல் (கண்ணாடி மீது) பொறுப்புடன் கவனித்து வந்தார்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by mohmed younus (kayalpatnam) [27 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32198

மிக அருமையான சேவை. அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved