Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:15:45 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13800
#KOTW13800
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 23, 2014
ஆஸாத் கோப்பை கால்பந்து 2014: பரபரப்பான அரையிறுதிப் போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி! வரலாற்றில் 2ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5147 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் – இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற்று, வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. விரிவான விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது.

இன்றைய போட்டி முதலாவது அரையிறுதிப் போட்டியாகும். 16.40 மணிக்குத் துவங்கிய இப்போட்டியில் - இம்மாதம் 10ஆம் நாளன்று நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற - திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணியும், இம்மாதம் 18ஆம் நாளன்று நடைபெற்ற 3ஆவது காலிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும் மோதின.











இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் அரையிறுதிப் போட்டியில் உள்ளூர் அணி விளையாடியதால், ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆரவாரமும் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு சாதகமாகவே அமைந்திருந்தது.









துவக்கம் முதல் இறுதி வரை ஈரணியினரும் சம பலத்துடன் விளையாடினர் என்ற போதிலும், காயல்பட்டினம் அணி வீரர்கள் தவறுதலாகக் கீழே விழுந்தால் கூட போட்டி நடுவர்களும், எதிரணி வீரர்களும் வாங்கிக் கட்டிக்கொண்டது அவர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியது. உள்ளூரின் இந்த மிக வலிமையான ஒட்டுமொத்த ஆதரவுக்கிடையிலும், திருவனந்தபுரம் அணியின் ஆட்டம் அனைவரின் கண்களுக்கும் விருந்து படைக்கத் தவறவில்லை.









ஆட்டம் துவங்கிய 07ஆவது நிமிடத்தில் - யாரும் எதிர்பாராத வேளையில் காயல்பட்டினம் வீரர் தீன் அற்புதமாக ஒரு கோல் அடித்து தனதணிக்கான கணக்கைத் துவக்கினார். முதல் கோலை உள்ளூர் அணி அடித்ததுமே - ஆட்ட நிறைவு நேரத்தில் வெற்றிக்குத் தேவையான ஒரு கோலை தமதூர் அணி அடித்துவிட்டதைப் போல, ரசிகர்கள் அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 25ஆவது நிமிடத்தில் திருவனந்தபுரம் அணி வீரர் ஷிபு தனதணிக்கு ஒரு கோல் அடிக்கவும் ஆரவாரம் கட்டுக்குள் வந்தது.





இரண்டாவது பாதியில் திருவனந்தபுரம் அணி வீரர் ஜான்சன் 56ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். மூன்றே நிமிடங்கள் சென்ற நிலையில் 59ஆவது நிமிடத்தில் காயல்பட்டினம் வீரர் நதீம் ஒரு கோல் அடித்து கணக்கை சமமாக்கினார்.



ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், ஈரணியினரும் இறுதிப்போட்டிக்குள் நுழையும் நோக்குடன் ஆட்டத்தில் வேகத்தை வெளிப்படுத்தினர். 75ஆவது நிமிடத்தில் காயல்பட்டினம் வீரர் தீன் மீண்டும் ஒரு கோல் அடிக்க, ஆட்ட நிறைவில் 3-2 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.





காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் இதுவரை நடைபெற்றுள்ள அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டிகளில், உள்ளூர் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவது இது இரண்டாவது முறையாகும்.

ஏற்கனவே 1976ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி விளையாடி வெற்றிபெற்று, கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. எனினும் அப்போட்டியில், உள்ளூர் வீரர்கள் குறைவாகவும், வெளியூர் வீரர்கள் அதிகளவிலும் அந்த அணிக்காக விளையாடியதால், “இந்தக் கோப்பை மதுரைக்குச் சொந்தமானது” என ஆர்வலர்கள் கேலியாக தமக்குள் பேசிக்கொள்ளும் நிலை இருந்ததாகவும், தற்போது கோப்பையை முழுமையாக தனதாக்கிக்கொள்ள வாய்ப்புகள் வெளிச்சமாக உள்ளதாகவும் நெடுநாள் கால்பந்து ஆர்வலர்கள் கூறியமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியைக் காண, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர். உள்ளூர் அணி விளையாடிய போட்டியை ரசிப்பதற்காக பாண்டு வாத்திய ஏற்பாடுகளுடன் பார்வையாளர்கள் பெருந்திரளாகக் குழுமியிருந்தனர். விதவிதமான வாத்திய முழக்கங்களுக்கிடையே ஆடிப்பாடி ரசிகர்கள் தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.



அவ்வப்போது நெஞ்சை அதிர வைக்கும் பட்டாசு வெடிச்சத்தமும் கேட்டது. மைதானத்திற்குள் புகைமூட்டமும் காணப்பட்டது. ஆட்ட இடைவேளையின்போது, ஒலிவாங்கியில் பேசிய ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, நடுவர்கள் ஊதும் விசில் போன்ற ஒலியில் யாரும் விசிலடிக்க வேண்டாம் என்றும், வீரர்களின் கவனத்தைச் சிதறச் செய்யும் என்பதால் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ள, ரசிகர்கள் அதற்கு முழுமையாகக் கட்டுப்பட்டனர்.







































இன்றைய அரையிறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்ததன் மூலம் இச்சுற்றுப்போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்றமைக்காக, திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணிக்கு சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் - காயல்பட்டினம் பி.எச்.எம்.ரெஸ்டாரெண்ட் அனுசரணையில் ரூபாய் 10 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது.



ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை பணப்பரிசுக்கான காசோலையை அணியினரிடம் வழங்கினார்.



பி.எச்.எம்.ரெஸ்டாரெண்ட் அதிபர் பிரபு ஹபீப் முஹம்மத், சுற்றுப்போட்டிக் குழு துணைச் செயலாளர் ஏ.எஸ்.புகாரீ, ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகளான டாக்டர் செய்யித் அஹ்மத், எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா உள்ளிட்டோர் இதன்போது உடனிருந்தனர்.

நாளை இச்சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியாகும். இதில், நேற்று (மே 22) நடைபெற்ற நான்காவது காலிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற - திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணியும், இம்மாதம் 14ஆம் நாளன்று நடைபெற்ற 2ஆவது காலிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற கேரளா பொலிஸ் - மலப்புரம் அணியும் மோதுகின்றன.

போட்டி நிரல் வருமாறு:-



மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து முதலாவது அரையிறுதிப் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. செதுக்கப்பட்ட சிற்பிகள் வீண்போனதில்லை..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [24 May 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35079

ஆழ்கடலில் நீந்தும் சுறா மீன்கள் என்பதனை இளம் வீரர்கள் நிரூப்பித்து விட்டார்கள்... வியப்பில் ஆழ்த்தி விட்டார்கள்...மறுபதற்க்கு இல்லை..!

மிக அருமையான ஆட்டம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.. நமது ஊர் கால்பந்து விளையாட்டு வீரர்களின் மனதில் ஒளிந்து கிடக்கும் திறமைகளை நேற்று வெளிபடுத்திய விதம் பார்வையாளர் பலரின் மூக்கின் விரல் வைக்க வைத்தது மாஷா அல்லாஹ்.. என் அருமை தம்பிமார்கள் மிக அருமையாக செதுக்கப்பட்டு இருக்கிறார்கள் - வீரர்களை நல்ல தரத்துடன் செதுக்கிய சிற்பியே உங்களையும் இத்தருணத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன்..!

பார்வையாளர்கள் அனைவர்களையும் தனது வீர சாகச விளையாட்டினால் இருக்கையில் அமர்ந்து இருந்தோரை (நான் உட்பட) எழுந்து நிற்க வைத்து கைதட்டவும் கையை தூக்கி மகிழ்ச்சியான ஆரவாரம் செய்ய தூண்டிய சுறா மீன்களுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்..

சிற்பியே..! உங்களை செதுக்கியது யார்..? அவர்களையும் பாராட்டி மகிழ்கிறேன்...!

நமதூரின் தேசிய கால்பந்து வீரர் தம்பி காழி அலாவுதீனை ஒருநிமிடம் நினைத்து பார்க்கிறேன் - மேலும் மேலும் சாதனைகளை பெற துவா செய்து வாழ்த்துகிறேன்... ஆமின்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Shaik Dawood (sharjah) [24 May 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35080

நமதூர் அரை இறுதி போட்டியில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விற்றது என்ற செய்தியை கேட்ட உடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இறுதி போட்டியிலும் வென்று ஆசாத் கோப்பையை தட்டி செல்ல மனதார வாழ்த்துகிறோம். இந்த கண் கொல்லா காட்சியை காண கொடுத்து வைக்க வில்லையே !!!!!!!

வெற்றி நிச்சயம்... நமக்கு வெற்றி நிச்சயம் ...

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...மாஷா அல்லாஹ்
posted by Muzammil (Dubai) [24 May 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35083

அஸ்ஸலாமு அலைக்கும். மாஷா அல்லாஹ் நமதூர் அரை இறுதி போட்டியில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விற்றது என்ற செய்தியை கேட்ட உடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது . மனதார வாழ்த்துகிறோம்.

இன்ஷா அல்லாஹ் இறுதி போட்டியிலும் வென்று ஆசாத் கோப்பையை தட்டி செல்ல வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சரித்திரம் படைக்க வாழ்த்துகிறேன்.....Re:...
posted by Abdulkader ThaikaSahib MSS (Riyadh (KSA)) [24 May 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35089

இறுதி போட்டியிலும் எமது ஐக்கிய விளையாட்டு சங்க வீரர்கள் வெற்றி பெற்று சரித்திரம் படைக்க வாழ்த்துகிறேன்.....

நான்கு தேசிய வீரர்கள் இடம்பெற்ற எதிரணியை நமது இளம் வீரர்கள் எதிர்கொண்ட விதம் மிகவும் அருமை.....

போட்டிகளை நேரலையில் தந்துகொண்டிருக்கும் எமது kayalpatnam.com-இணையதளத்திற்கு நன்றி.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [24 May 2014]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 35091

Kazhi Alaudeen in Saudia for his Umrah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved