Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:30:21 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14489
#KOTW14489
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 12, 2014
1வது வார்டு தேர்தல் குறித்து - கோமான் ஜமாஅத் தலைவர் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3629 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற வெற்றிடங்களுக்கும் தேர்தல் செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ளது.

இது குறித்து, கோமான் ஜமாஅத் தலைவர் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கை வருமாறு:

காயல்பட்டினம் நகரமன்றத் தலைவர் சகோதரி I.ஆபிதா சேக் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

18-9-2014 அன்று நடைபெற உள்ள, நகர்மன்ற ஒன்றாவது வார்டுக்கான தேர்தல் களத்தில், தங்களின் தவறான ஈடுபாட்டை அறிந்து எங்கள் கோமான் ஜமாத்தினர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளோம்.

சுயேட்சைகள் மட்டுமே போட்டி இடவேண்டிய இத்தேர்தலை, அரசியல் தேர்தல் களமாக நீங்கள்தான், உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மாற்றி உள்ளீர்கள் என்பதை, நாங்கள் மிக தெளிவாக தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தோம்.

நீங்கள் அருணாச்சலபுரத்தில் வாக்கு கேட்டதை நாங்கள் அறிய வந்தபோது, மேற்கண்ட தகவல் உண்மைதான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டோம்.

எனக்கு ஆதரவாக எந்த பெண்ணும் நகராட்சியில் இல்லை, எனவே இந்த பெண் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் என்றும், அதுவும் எனக்கு வாக்களித்ததை போல் வெற்றி பெற செய்யுங்கள் என்றும் பெண்கள் இடத்தில் வாக்கு சேகரித்துள்ளீகள்.

மேலும், அதிமுக அல்லாத கட்சிக்காரர்களிடம் வாக்கு கேட்கும் போது, கட்சியை மறந்து இருவரில் நல்லவரான, அ தி மு க வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும் கேட்டுள்ளீர்கள்.

அரசியல் கட்சியில் அங்கம்வகிக்கும் முதிர்ச்சி அடைந்தவர்களிடம் கூட இல்லாத சூது, வாது நிறைந்த அணுகுமுறை அல்லவா இது?

ஒரு குறிப்பிட்ட கட்சிக்காரரிடம் நீங்கள் வாக்குக் கேட்கும் போது, உங்களோடு வந்தவர் பல லகரங்கள் வரை நாங்கள் செலவு செய்து வெற்றி பெறுவோம் என, ஆணவத்தோடு சொன்ன போது, நீங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லையாம். அப்படியெனில் என்ன செய்யப் போகிறிர்கள்?

வேட்பு மனு பரிசீலனையின் போது, எங்கள் கோமான் ஜமாத் வேட்பாளருக்கு இரண்டு வாக்குகள் இருப்பதாகவும், எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அ தி மு க வேட்பாளர் வழக்கறிஞரை வைத்து ஆட்சேபனை செய்த போது, அதற்கான வாதம் நடைபெற்றது .

அப்போது ஆணையரால் வழங்கபட்ட அவகாச நேரத்தில், ஆட்டோவில் தாங்கள் வீட்டுக்கு சென்று, விதிமுறைகள் புத்தகத்தை எடுத்து வந்து வக்கீலிடம் கொடுத்தீர்களே! ஏன் இவ்வளவு ஆத்திரம் எங்கள் மீது?

பிறகு வட்டாட்சியரிடம் உரிய சான்றிதழை நாங்கள் பெற்று ஆணையரிடத்தில் வழங்கி, எங்கள் வேட்பாளர் மனுவும் ஏற்கப்பட்ட பிறகு, 3 மணி அளவில் நகராட்சியில் ஐவரின் மனுவும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கை செய்யப்பட்ட பின்பும், நீங்கள் அமைதி அடையவில்லையே!

மாலை 6 மணிக்கு மூவருடன் திருச்செந்தூர் சென்று, வட்டாட்சியர் அலுவலகத்தை வம்புக்கு இழுத்து, எப்படி சான்று வழங்கலாம் என சண்டையிட்டு வந்தீர்களே! இதை மறுக்க முடியுமா. ஏன் இந்த வெறி? எங்கள் ஜமாத் உங்களுக்கு என்ன கேடு செய்தது?

வேட்புமனுவில் அசரபு சொத்து கணக்கை மறைத்தாரா? வங்கி இருப்பை மறைத்தாரா? (அவரிடத்தில் சொத்தும் இல்லை. வங்கி இருப்பும் இல்லை). கிரிமினல் வழக்கு ஏதும் இருந்து அதை அசரபு மறைத்தாரா? இப்படி ஏதும் இல்லையே!

ஒரே முகவரி உள்ள, ஒரே வீட்டில் தவறுதலாக வாக்காளர் பட்டியலில் இருந்த, இரு வாக்குகளில் ஒன்றை அசரபு நீக்கி உள்ளார். நீக்கியதற்கான சான்றையும் வைத்திருந்தார். ஆனால் நீக்கப்பட்டது எந்த வரிசை எண்ணில் உள்ள வாக்கு என்பதில்தான் சர்ச்சை.

எனவே, ஆணையர் சட்டப்படி வழங்கிய அவகாச குறுகிய நேரத்தில், ஜும்மா உடைய நேரமாக இருந்ததால், மிகவும் சிரமப்பட்டு, திருச்செந்தூர் சென்று, வட்டாட்சியரிடத்தில் உரிய சான்று பெற்று வழங்கப்பட்டுவிட்டது. மனுவும் ஏற்கப்பட்டது. இதுதான் நடந்தது.

இருப்பினும், நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத சூழ்நிலையில், கடைசி நேரத்தில் உரிய சான்றிதழை பெற்று வழங்கியதை தங்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் இவ்வாறெல்லாம் செயல்பட்டு உள்ளீர்கள். ஏன்? ஏன்?

உங்களைப் பொருத்த அளவில், தேவைப்படும் போது அடுத்தவர்கள் தயவை பெற்று கொள்வீர்கள். தேவையில்லையெனில், அவர்களையே அலட்சியம் செய்வீர்கள். உங்கள் சுயநலத்திற்காக எதையும் சொல்வீர்கள், எதையும் செய்வீர்கள் என்பதை தெரிந்து கொண்டோம்.

பதவியும், அரசியல் செல்வாக்கும் நிரந்தரமானது அல்ல என்பதை புகழ் போதையில் மிதக்கும் உங்களுக்கு புரிய வைக்க, வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
தலைவர் மற்றும் ஜமாத்தார்கள்,
கோமான் ஜமாத், காயல்பட்டினம்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Back-door Games Started
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [12 September 2014]
IP: 103.*.*.* India | Comment Reference Number: 37184

I thought Koman Jamath was wonderful. But, after reading this news and the response from Chairman Abidha, i think the Jamath President is misinformed, or malafide, or at least hasty.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கோமான் ஜமாஅத் லட்டர் பேடில் நேரில் அளித்து இருக்கலாம்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [12 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37187

கோமான் ஜமாஅத் தலைவர் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கை குறித்த தகவல் அங்குள்ள ஜமாத் உறுப்பினர்களுக்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் தெரிமா..!

முறைப்படி கோமான் ஜமாஅத் தலைவர் முதலில் நகர்மன்ற தலைவியிடம் கோமான் ஜமாஅத் லட்டர் பேடில் நேரில் அளித்து இருக்கலாம்..

இது ஏதோ அன்றைய 2011 தேர்தல் முடிவின் வலியை தாங்க முடியாத ஒரு சிலரின் உள்நோக்கத்துடன் சம்பந்தப்பட்டதாக கருத தோன்றுகிறது..

கோமான் ஜமாத் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக மசூரா செய்து இந்த அறிக்கையை வெளியிட்டதாக உணரமுடியவில்லை.. கோமான் ஜமாத் லட்டர் பேடில் இந்த அறிக்கை வெளியாகி இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்..! என்பது எனது கருத்து..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Hameed Rifai (Jeddah (ksa)) [12 September 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37192

கோமான் ஜமாஅத் தலைவர் அவர்களின் பெயரிலான அறிக்கையைப் பார்க்கும் பல கேள்விகள் எழுவது மட்டுமல்ல; 2011 தேர்தலின்போது வெளிவந்த ஜமாஅத் சார்பான அறிக்கையும் நினைவுக்கு வந்தது.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=7218

அந்த அறிக்கையையும், இந்த அறிக்கையையும் பார்க்கும்போது, வார்த்தைகளிலும் - விளக்கங்களிலும் பல வேறுபாடுகள் தெரிகின்றன.

தன் வேட்பாளரின் பெருமையைக் கூறாமல் - பிற வேட்பாளரின் குறைகளைக் கூட கூறாமல், பிற வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பவர் ஏன் இப்படி உற்சாகமாக வாக்களிக்கிறார் என்று கேட்பது விநோதமாக இருக்கிறது.

2011 அறிக்கையில் கீழ்க்காணும் வாசகம் இருந்தது.

/*
எங்கள் 1 வது வார்டு வேட்பாளர் தேர்வில் நாங்கள் பின்பற்றிய வேட்பாளரின் தகுதிக்கான மதிப்பீட்டு அளவுகோள் விபரம்:

1. இபாதத், ஒழுக்கம்
2. நேர்மை, நாணயம்
3. பொருளாதாரம்
4. நன்னடத்தை, மக்களிடம் பழகும் தன்மை
5. கல்வி
6. அவரின் வாக்குறுதி
*/

இந்த அறிக்கை சகோதரர் லுக்மான் அவர்கள் தேர்வுக்கு பிறகு ஜமாஅத் வெளியிட்ட அறிக்கை.

இப்போது சகோதரர் அஸ்ரப் அவர்கள் தேர்வான பிறகு வெளியாகியுள்ள அறிக்கையை பாருங்கள். எவ்வளவு பெரிய மாற்றம்???

எனது சந்தேகம் - 2011இல் ஜமாஅத் சார்பாக கடைபிடிக்கப்பட்டதாகக் கூறிய அளவுகோள்கள் இவ்வாண்டும் கடைப்பிடிக்கப்பட்டதா?

இதை நான் ஏன் கேட்கிறேன் என்றால், ஜமாஅத் என்பது இறையில்லத்தை சுற்றி இயங்கும் அமானிதமான ஓர் அமைப்பு. அதன் பெயரில் நடக்கும் அனைத்தும், அந்த ஜமாஅத் மக்கள் அனைவரின் பெயரிலும் நடப்பதற்கு சமம். அது மட்டுமல்ல, நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளரின் செயல்பாடுகளின் தாக்கம் உங்கள் வார்டோடு மட்டும் முடிவதில்லை. ஊருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜமாஅத் வேட்பாளராகத் தேர்வான பிறகு லுக்மான் காக்கா, சில வாக்குறுதிகளை கொடுத்தார்.

பார்க்கவும்: http://www.kayalpatnam.com/shownews.asp?id=7208

/*
4) ஊர் விஷயத்தில் பொதுவான காரியங்களில் நம் ஜமாஅத்தின் ஆலோசனைப்படி செயல்படுவேன் */

இந்த வாக்குறுதிகள் தொடர்பாக எனது கேள்விகள்:-

(1) நகராட்சியின் பல கூட்டங்களில் இருந்து லுக்மான் காக்கா வெளிநடப்பு செய்தார்களே? அப்போது - ஜமாஅத்திற்கு தெரிவித்து, அனுமதி பெற்றாரா? அல்லது அந்தளவுக்கு அது பெரிய விஷயம் இல்லையா?

(2) நகர்மன்றத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கையெழுதிட்டாரே? அப்போதாவது ஜமாஅத்திடம் தெரிவித்து, அனுமதி பெற்றாரா?

அல்லது அதுவும் அந்தளவுக்கு பெரிய விஷயம் இல்லையா?

(3) சுயேட்சையாக வெற்றிப்பெற்று அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டாரே? அதையாவது ஜமாஅத்துக்கு தெரிவித்து, அனுமதி பெற்றாரா? அல்லது அதுவும் அந்தளவுக்கு பெரிய விஷயம் இல்லையா?

குறிப்பாக இதில மூன்றாவது விஷயத்தை பாருங்கள்! லுக்மான் காக்கா தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டது. இதில் ஜமாஅத் அனுமதி பெற்றாரா?

ஏன் இது முக்கியம் என்றால், உங்கள் அறிக்கையில - நீங்கள் சொல்லியிருக்கீங்க:-

/* சுயேட்சைகள் மட்டுமே போட்டி இடவேண்டிய இத்தேர்தலை, அரசியல் தேர்தல் களமாக ... */ CP

அப்படியானால் - உங்களைப் பொருத்தமட்டில், ஒருத்தர் சுயேட்சையாக தேர்தலில் நிற்கவேண்டும், அதுக்கப்புறம் கட்சிக்கு தாவுனா தப்பு இல்லை? அப்படிதானே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Fantastic
posted by Shaik Sadakathullah ( Hong Kong) [12 September 2014]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 37194

This was a powerful questions posted by the koman jamath president.

I knew they are never going to give proper answer on this.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. திரைக்கதை வசனம் தயரிப்பு...அசல் அக்மார்க்கா தெரியுதே...?
posted by M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) [13 September 2014]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 37206

அறிக்கையை எழுதிக்கொடுத்தவங்க அழகாத்தான் எழுதிக் கொடுத்திருக்காங்க...! அதன் நடையும், வார்த்தைகளும் எவரால் கையாளப்ப்டும் என்பதை கடந்த இரண்டரை வருடமாகப் பார்த்துப் பழகிப்போச்சுங்கோ...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Katheebseyedahamed (kayalpatnam) [14 September 2014]
IP: 107.*.*.* | Comment Reference Number: 37231

kayalpatnam president should be skeptical inthis local body election evenif she belongs to particular party.koman jamaath,koman street people n like minded rationale people of all community unite together n cast their votes enmassively to candidate represent by koman jamaath n will give thumbing victory inshaAllah.aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved