|  
 ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
 
 ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
 
 அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
 
 அதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் அப்பா பள்ளி நிர்வாகத்தின் சார்பில், இவ்வாண்டு கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடு பங்கு ஒன்றுக்கு ரூ.2,500 என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
 பங்கு சேர விரும்புவோர்,
 
 உள்ஹிய்யா பொறுப்பாளரான செய்யித் முஹம்மதை (கைபேசி எண்: +91 77083 85735)
 
 தொடர்புகொண்டு, தமது பங்கை உறுதி செய்துகொள்ளுமாறும்,
 
 தமது இல்லங்களில் உள்ஹிய்யா கொடுக்கும் ஜமாஅத்தார், அவற்றின் தோல்களை பள்ளியில் தந்து ஒத்துழைக்குமாறும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
 அப்பா பள்ளியின் கடந்தாண்டு உள்ஹிய்யா அறிவிப்பு செய்தியை காண இங்கு அழுத்தவும்
 |