Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:08:48 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14490
#KOTW14490
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 12, 2014
1வது வார்டு தேர்தல் குறித்து கோமான் ஜமாஅத் தலைவர் பெயரில் வெளியான அறிக்கைக்கு, நகர்மன்றத் தலைவர் பதில்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5292 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 11)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற வெற்றிடங்களுக்கும் தேர்தல் செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ளது.

இது குறித்து, கோமான் ஜமாஅத் தலைவர் பெயரில் அறிக்கை ஒன்று வெளிவந்திருந்தது. அதற்கு விளக்கம் கூறி, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:

மரியாதைக்குரிய கோமான் ஜமாஅத் தலைவர் அவர்களுக்கு,

இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!

அக்டோபர் 2011இல் நடந்த தேர்தலைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சியின் தலைவராக தேர்வாகிய நாள் முதல் இன்று வரை, நான் மக்களுக்கு கொடுத்த வாக்குப்படி, முழு அர்ப்பணிப்போடும், ஊழல் - லஞ்சத்திற்கு ஒருபோதும் தலை அசைக்காதவளுமாக செயல்புரிந்து வருகிறேன். இதற்கு இறைவனே சாட்சி!

ஆனால் - நான் பதவியேற்ற நாள் முதல், தேர்தலில் தோல்வியுற்ற காழ்ப்புணர்ச்சியில், நகராட்சியினை முடக்கும் விதமாக ஒரு சில தீய சக்திகள் செயல்புரிந்து வந்ததை தாங்கள் அறிவீர்கள். அதற்குத் துணை புரிந்தோரில் - மதிப்பிற்குரிய முன்னாள் வார்டு 1 உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் அவர்களும் ஒருவர் என்பது வருந்தத்தக்க உண்மை. அவ்வாறு அவர் செயல்புரிந்தபோதும், பொய்யான 11 குற்றச்சாட்டுகள் அடிப்படையிலான நம்பிக்கை இல்லா தீர்மானம் மனுவில் அவர் கையெழுத்திட்ட போதும், உண்மை நடப்பு என்ன என்று என்னிடம் வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ தாங்கள் ஒரு முறை கூட கேட்கவில்லை.

ஆனால் - இன்று, ஐந்தாண்டுகள் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் 2 ஆண்டுகள் பூர்த்தியாகும் முன்னரே பதவி விலகி சென்று, ஓராண்டு காலமாக - 1ஆவது வார்டு எந்த பிரதிநிதித்துவமும் இல்லாமல் இருந்து, மறுபடியும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ள சூழலில் - எந்த தீய சக்திகள் கடந்த மூன்றாண்டுகளாக நகராட்சியின் நடவடிக்கைகளை சீர்குலைக்க செயல்புரிந்து வருகிறதோ, அவர்களின் வாயிலாக பரப்பப்படும் அதே செய்திகள் அடிப்படையில் - என்னை விமர்சித்து அறிக்கை தங்கள் பெயரில் வெளிவந்துள்ளது.

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு என்று துவங்கும் அந்த அறிக்கையை - என்னிடம் கூட வழங்காமல் ஊடகங்களுக்கு, செய்தியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் கடிதத்தை எனக்கு வழங்கினால் மட்டும் பதில் கூறலாம் என்று நான் காத்திருக்கலாம் என்றாலும், தங்களுக்கும், இதுபோன்று தவறாகப் புரிந்து கொண்டிருப்போருக்கும் உண்மையை விளக்க இது ஒரு வாய்ப்பு என்பதால் மட்டுமே, எனது இந்த பதிலை வழங்குகிறேன்.

1ஆவது வார்டின் முன்னாள் உறுப்பினர் பதவி விலகி ஏறத்தாழ 15 மாதங்கள் ஆகிறது. உறுப்பினர் இல்லாத இந்தக் காலக்கட்டத்தில் 1ஆவது வார்டு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் குறித்து - கோமான் ஜமாஅத் உட்பட அந்த வார்டின் அனைத்து மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்கும் வாய்ப்பும், அவற்றுக்குத் தீர்வுகள் வழங்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வேளைகளில், மதிப்பிற்குரிய கோமான் ஜமாஅத்தை சார்ந்த பல பெரியவர்களையும், சமூக ஆர்வலர்களையும் சந்திக்கவும், அவர்களிடம் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தருணங்களில் எல்லாம் - மறு தேர்தல் குறித்த பேச்சு வரும்போது, “ஜமாஅத்தில் இருந்து மீண்டும் ஒருவரை நிறுத்தும் எண்ணத்தில் நாங்கள் இல்லை, ஒரு முறை பட்டதே போதும், யார் யார் போட்டியிட விரும்புகிறார்களோ அவர்கள் போட்டியிடட்டும் என்ற முடிவில் நாங்கள் இருக்கிறோம்” என்றே தேர்தல் நாள் நெருங்கும் வரை தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில தினங்களுக்கு முன்னர், தற்போது கோமான் ஜமாஅத் சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மதிப்பிற்குரிய எஸ்.ஐ.அசரபு அவர்கள், அ.தி.மு.க. உறுப்பினர் என்ற அடிப்படையில், கட்சி சார்பாக 1ஆவது வார்டில் போட்டியிட, கட்சியின் நகர நிர்வாகிகளிடம் விருப்பம் தெரிவித்தார். அதன் அடிப்படையில், அவரின் பெயரும் கட்சியின் மேலிடத்திற்கு பரிந்துரையும் செய்யப்பட்டது. ஆனால் - திடீரென அவர் போட்டியிட மறுத்துவிட்டார். இதனைத் தாங்களும் அறிவீர்கள்.

இந்த நடப்புக்குப் பின்னர்தான், கட்சியின் தலைமை, கட்சி வேட்பாளரை அறிவித்தது என்பதனை தங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். உண்மை இவ்வாறிருக்க, 1ஆவது வார்டு தேர்தலை, அரசியல் தேர்தல் களமாக, நான் ஆக்கியதாக தாங்கள் கூறுவது எந்த வகையில் நியாயம்?

தங்கள் அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக செயல்புரிந்து வரும் தீய சக்தியின் பின்னணி கொண்ட ஊடகம் ஒன்று உள்நோக்கத்துடன் வெளியிட்ட செய்திகள் அடிப்படையில் சில விஷயங்களை கூறியுள்ளீர்கள். இதுபோன்ற கீழ்த்தரமான செய்திகளுக்கு மதிப்பளித்து, அதனை தங்கள் அறிக்கையில் மீண்டும் வெளியிட்டிருப்பது மன வேதனையைத் தருகிறது.

கோமான் ஜமாஅத் மக்களை - அன்றும், இன்றும், என்றென்றும் மதித்தவள்/மதிப்பவள் நான். இம்மக்களுடனான தொடர்பு - நான் நகர்மன்றத் தலைவியாவதற்கு முன்பே உருவானது என்பதனை நான் இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

புரளிகளுக்கும், அவதூறுகளுக்கும் பதில்கள் கூறவேண்டியதில்லை. நான் சார்ந்துள்ள அ.தி.மு.கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு, ஜனநாயக முறைப்படி மட்டுமே நான் வாக்குகள் கோரி வருகிறேன் என்பதனை நான் தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தாங்கள் குறை காண்பது எனக்கு வியப்பாக உள்ளது.

இறுதியாக ஒரு கோரிக்கையை வைத்து கடிதத்தை நிறைவு செய்கிறேன். செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ள 1ஆவது வார்டுக்கான இடைத் தேர்தலில், அ.தி.மு.க. சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, வெற்றிபெறச் செய்யுமாறு, தங்களையும் கோமான் ஜமாஅத்தின் அனைத்து வாக்காளர் பெருமக்களையும் கேட்டுக் கொள்கிறேன். அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றி மூலம் - 1ஆவது வார்டு பகுதிக்கு, அதன் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, அனைத்து வசதிகளும் இறைவன் நாட்டத்துடன் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஐ.ஆபிதா ஷேக்,
தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நீண்ட விளக்கத்தில், குற்றச்சாட்டுக்கான நேரடி பதில் இல்லை.
posted by saalai Abdul Razzaq Lukman (Chennai) [12 September 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 37186

நீண்ட நெடிய பதிலில் நேரடி குற்றச்சாட்டுக்கான பதில் இல்லை.

1) அஷ்ரப் அவர்களின் வேட்புமனுவை நிராகரிக்க நீங்கள் முயற்சி செய்தீர்களா? இல்லையா?

2) அவரின் வேட்புமனு ஏற்கப்பட்ட பின்னர், வட்டாட்சியரிடம் நீங்களும் உங்கள் கட்சியினரும், "எப்படி திருத்தங்கல் செய்ய அனுமதிக்கலாம்?" என்று வாதாடிநீர்களா? இல்லையா?

3) அதிமுக அல்லாத கட்சிக்காரர்களிடம் வாக்கு கேட்கும் போது, கட்சியை மறந்து இருவரில் நல்லவரான, அ தி மு க வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டீர்களா? இல்லையா?

அவர்களின் ஆதங்கம், நீங்கள் அதிமுக உறுப்பினர் என்ற முறையில் எதிர்ப்பதை காட்டிலும், தனி அக்கறை கொண்டு எதிப்பது தான்.

உங்களின் அறிக்கையில் குறிப்பிட்டது போல், முதலில் அந்த ஜமாஅத் சார்பில் வேட்பாளர் நிறுத்த முடிவு இல்லாமல் இருந்திருக்கலாம். அதே போல், அதிமுக உறுப்பினர் என்ற முறையில், சகோதரர் அஷ்ரப் அவர்களும் கட்சியில் சீட் கேட்டு இருக்கலாம்.

ஆனால், தங்கள் பகுதியை சார்ந்த அஷ்ரப் அவர்களுக்கு சீட் கொடுக்காமல் கட்சி சார்பாக, கடையக்குடியை சேர்ந்த ஒருவருக்கு சீட் கொடுத்ததனால், அந்த ஜமாஅத்தினர், தங்களது ஜமாஅத் சார்பாக ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள். இதில் எந்த முரண்பாடும் இல்லை.

"அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றி மூலம் - 1ஆவது வார்டு பகுதிக்கு, அதன் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, அனைத்து வசதிகளும் இறைவன் நாட்டத்துடன் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்" (C&P).

உங்களின் இந்த வாசகம் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? அதிமுக வேட்பாளர் வென்றால் தான், அந்த பகுதியின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அதிமுக வேட்பாளர் தோற்றால், அந்த பகுதிக்கு தேவைகள் பூர்த்தி செய்யப்படாது என்று மிரட்டுகிறீர்களா?

நீங்கள் இன்று தான் அதிமுக உறுப்பினர். அதற்கு முன்பு அனைவருக்குமான நகர்மன்ற தலைவி. அந்த பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுங்கள்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by shaik sinan (china) [12 September 2014]
IP: 222.*.*.* China | Comment Reference Number: 37188

Ok ok koman jamathai neengel mathekeraver thaan ok. Avergel matha kutra chatkaluku bathil enna?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by A.Lukman (kayalpatnam) [12 September 2014]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 37190

அஸ்ஸலாமு அழைக்கும்

இவர் செய்யும் தவறான செயல்களுக்கு ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருந்தால் இவரிடம் நல்லவன் என்று பெயர் கிடைக்கும் ன் இவரின் தறுகளை தட்டிகேட்டால் தீய சக்திகளிடம் சேர்ந்துவிட்டோம் என்று பட்டம் தருவார்.

யார் தீய சக்தி என்பதை ஆரம்பத்தில் இவரை ஆதரித்த பலர் இப்போது புரிந்து கொண்டனர் .

ஜமாஅத் வேட்பாளரை நிறுத்தாது என்று யார் இவரிடம் சொன்னது. நல்ல கற்பனையை புனைந்து விடுகிறார்.

சரி இப்போது ஜமாஅத் வேட்பாளரை நிர்திஎருண்டும் 'ஜமாஅத் தலைவரிடமும் மக்களிடமும் ஜமாத்திற்கு கட்டுப்படாதீர்கள் ,அமலக்கனிக்கு வாக்களியுங்கள் என்று கேட்பது இவரது அஹம்பாவத்தை தான் காட்டுகிறது :-)

லுக்மான்
கோமான் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Hameed Rifai (Jeddah (ksa)) [12 September 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37191

தெளிவான பதில்.

/%

1) அஷ்ரப் அவர்களின் வேட்பு மனுவை நிராகரிக்க நீங்கள் முயற்சி செய்தீர்களா? இல்லையா?

2) அவரின் வேட்புமனு ஏற்கப்பட்ட பின்னர், வட்டாட்சியரிடம் நீங்களும் உங்கள் கட்சியினரும், "எப்படி திருத்தங்கல் செய்ய அனுமதிக்கலாம்?" என்று வாதாடிநீர்களா? இல்லையா?

3) அதிமுக அல்லாத கட்சிக்காரர்களிடம் வாக்கு கேட்கும் போது, கட்சியை மறந்து இருவரில் நல்லவரான, அ தி மு க வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டீர்களா? இல்லையா?

அவர்களின் ஆதங்கம், நீங்கள் அதிமுக உறுப்பினர் என்ற முறையில் எதிர்ப்பதை காட்டிலும், தனி அக்கறை கொண்டு எதிப்பது தான்.

%/

Copy & Paste

கேள்விகளே வேடிக்கையாக உள்ளன. போட்டி என்று வந்த பிறகு, “நீ ஏன் இப்படி வெற்றி பெற முயற்சி செய்றே”ன்னு கேட்கிறது வேடிக்கையா இல்லையா? “நீ ஃபெயில் ஆக வேண்டியதுதானே, ஏன் பாஸ் ஆக முயற்சி செய்கிறாய்?” என்ற கேள்விகள் அபத்தம். அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் வேட்பு மனுவை நிராகரிக்க வைத்தாரா? அப்புறம் என்ன? சட்டப் புத்தகத்தைக் கொடுப்பதும், தாசில்தாரிடம் விளக்கம் கேட்பதும் குற்றம்னா - என்னன்னு சொல்ல உங்கள் எதிர்ப்பார்ப்பை?

/% ஆனால், தங்கள் பகுதியை சார்ந்த அஷ்ரப் அவர்களுக்கு சீட் கொடுக்காமல் கட்சி சார்பாக, கடையக்குடியை சேர்ந்த ஒருவருக்கு சீட் கொடுத்ததனால், அந்த ஜமாஅத்தினர், தங்களது ஜமாஅத் சார்பாக ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள். இதில் எந்த முரண்பாடும் இல்லை. %/ Copy & Paste

அறிக்கையை தெளிவா மீண்டும் படியுங்க. அஸ்ரப் கட்சியில நிக்க சம்மதித்து வாபஸ் வாங்கின பிறகுதான், அமலக்கனி நிறுத்தப்படுகிறார்.

/% நீண்ட நெடிய பதிலில் நேரடி குற்றச்சாட்டுக்கான பதில் இல்லை. %/ Copy & Paste

/% Avergel matha kutra chatkaluku bathil enna? %/ Copy & Paste

/% புரளிகளுக்கும், அவதூறுகளுக்கும் பதில்கள் கூறவேண்டியதில்லை. %/ Copy & Paste

இதை விட தெளிவான் பதில் எப்படி வேண்டும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by kudack buhari (kuala lumpur) [12 September 2014]
IP: 110.*.*.* Malaysia | Comment Reference Number: 37200

கோமான் ஜமாதார்கள் கேட்ட கேள்விகளுக்கு தலைவி பதில் சொல்லியிருப்பார்கள் என்று பார்தால் எந்த ஒரு பதிலும் தரவில்லை .ஜமாத் வேட்பாளரை தேர்தலில் நிற்கவிடாமல் இருக்க தலைவி சூழ்ச்சி செய்தது உண்மை என்று தெளிவாகி விட்டது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. உங்கள் மனசாட்சியைத் திறந்து வெளிப்படை உள்ளதோடு வாக்கு சேகரியுங்கள்
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [12 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37201

கோமான் ஜமாத்தார்கள் குற்றசாட்டு அறிக்கைக்குள் நான் செல்ல விரம்பவில்லை.அது சரியா?தவறா?என்று ஆராய்வதை விட அந்த குற்றசாட்டுக்கு தலைவி அவர்களின் பதில் தான் திருப்திகரமாக இல்லை.அவர்கள் பதிலிலிருந்தே அவர்மீதுள்ள குற்றச்சாட்டுக்கு சில முகாந்திரம் உள்ளதோ என்ற ஐயப்பாடும் எழுகிறது.அவர் பதிலின் ஒரு பகுதி,அஷ்ரப் அவர்கள் ADMK சார்பாக போட்டியட விரும்பி பின்னர் அவர் வாபஸ் வாங்கியதால் அமலக்கணியை நிறுத்தி வெற்றிக்காக உழைக்கிறோம் என்பது..

அந்த ஜமாத்திலிருந்து எனக்கு கிடைத்த தகவல், அஷ்ரப் அவர்கள் ஒரு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அந்த ஜமாத் விரும்பவில்லை ஏனனில் ஜமாத்தில் பல கட்சிக்காரர்களும் கலந்து இருக்கிறார்கள் ஆகவே அவர்களின் ஒட்டு மொத்த ஆதரவுடனும்,ஜமாத்தின் எல்லோர்களின் ஒருங்கிணைந்த ஒப்புதலுடனும் பொது வேட்ப்பாளராக நின்றால் உங்களை இந்த ஜமாத் தேர்தெடுக்கும் என்ற முடிவுக்கு வர,,அஷ்ரப் அவர்களும் அரசியல் கட்சியைவிட ஒருங்கிணைந்த ஒற்றுமை ஜமாத்தின் வேண்டுகோளே முக்கியம் என்ற முடிவுடன் பொது வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார்.

அவர் வேட்பாளராக தேர்வானவுடன் ஒட்டுமொத்த ஜாமத்தின் ஒற்றுமை வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது, ஊர் ஒற்றுமையை காக்கவேண்டிய ஒரு தலைவியின் பொறுப்பல்லவா?ஆனால் தாங்கள் அரசியல் கட்சிதான் முக்கியம் என்று அமலக்கணியை ஆதரித்து விட்டீர்களே?

சரி,அஷ்ரப் அவர்கள் எந்த கட்சியையும் சாராத ஒருவர் என்று வைத்துக்கொள்வோம் அவரை அந்த ஜமாஅத் ஒட்டுமொத்த ஒப்புதலுடன் நிறுத்துகிறது,அப்பொழுது ஊர்த் தலைவியான உங்களின் நிலைப்பாடு என்ன?அ தி மு க அமலக்கணி அவர்களை ஆதரிப்பதுதான் உங்கள் கொள்கையா?இக்கேள்விக்கு இல்லை என்பதுதான் உங்கள் பதிலாக இருந்தால்,அஷ்ரப் அவர்களும் தற்போது எந்த கட்சியிலும் சாராத பொது வேட்பாளர்தான்,ஏனெனில், அஷ்ரப் அ தி மு க வில் இருந்தாலும்,அக்கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து களம் காணும் பொழுது அந்த நிமிடத்திலிருந்தே அவர் அ தி மு க விலிருந்து வெளியேற்றப்படுவார்.என்பது அ தி மு க வின் வெள்ளிடைமலை விதிமுறையல்லவா?

அடுத்து அந்த ஜமாத்தின் முந்திய வேட்பாளர் தங்களுக்கு எதிராக நடந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை அந்த ஜமாத்திடம் முறைப்படி தெரிவித்து நியாயம் கேட்டிருக்கிறீர்களா? அதற்கு அவர்களின் பதில் என்ன?லுக்மான் அவர்களுக்கு சாதமாக ஒட்டுமொத்த ஜமாத் செயல்பட்ட எந்த நிகழ்வையாவது தாங்கள் சான்றாக சமர்ப்பித்து இருக்கிறீர்களா? மாறாக கோமான் ஜமாத்தை என்றும் மதிக்கிறேன் என்ற நற்சான்றிதழையல்லவா தந்திருக்கிறீர்கள். ஆகவே அந்த ஜாமத்தின் அடுத்த வேட்பாளரும் தங்களுக்கு விரோதமாக செயல்படுவார் என்ற எண்ணம் இங்கு எழ வாய்ப்பில்லை.

இறுதியாக சொல்கிறேன் எந்த சூழ்நிலையிலும் இந்த ஊர்மக்கள் நலனுக்கோ ஒற்றுமைக்கோ,கண்ணியதிற்கோ ,கலாசாரத்திற்கோ எதிராக நான் செயல்பட மாட்டேன் என்ற வாக்குறுதியைத்தந்துதான் உங்கள் தலைமைப்பதவிக்கு வாக்கு சேகரித்தீர்கள். அல்லாஹ்விற்கு அஞ்சியவராக நீங்கள் இருப்பீர்களேயானால் இந்த அசிங்கமான அரசியலைவிட,அன்பு காயல் ஊரான ஒட்டுமொத்த ஜமாத்தின் உணர்வுக்கு மதிப்பளித்து அஷ்ரப் அவர்களின் வெற்றிக்காக உங்கள் மனசாட்சியைத் திறந்து வெளிப்படை உள்ளதோடு வாக்கு சேகரியுங்கள்.அலலாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,

முஹம்மது ஆதம் சுல்தான்!

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by abdul hadhi (jeddah ksa) [12 September 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37202

நகர்மன்றத் தலைவர் பதவிக்கு யர்ர் எடுத்தது ஊர் மக்கள். ஜமாதுகள். தலைவர் பதவிக்கு வரூம் முன்னடி அல்லோசனை பண்ண வேண்டும் .ஊரு மக்களோடு ஒத்து போவர்கள.அப்படி பட்ட தலையை தான் slect பண்ண வேண்டும்.

அப்துல் ஹாதி ஜெட்டாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. கேள்வி பிறந்தது அன்று! நல்ல பதில் கிடைத்தது இன்று...!
posted by M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) [13 September 2014]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 37205

என்று கேட்டீர்களா? இல்லையா?
செய்தீர்களா? இல்லையா?
வாதாடிநீர்களா? இல்லையா?
மிரட்டுகிறீர்களா?
பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுங்கள்(c&p)

ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டுமெனில் அவங்க கட்சிக்கு அவங்க ஆதரவு கேட்குறது என்னய்யா தப்பு?

1வது வார்டை என்ன பட்டாவா போட்டு கொடுத்திருக்காங்க? அமலக்கனி நின்னா என்ன? அப்துல்காதர் நின்னா என்ன? அந்த வார்டு மக்கள் பார்த்துக்குவாங்க. என்னமோ சர்வதேச குற்றவாளியைக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கிற மாதிரி இருக்கு உங்க கேள்வி! யார் தங்கள் பிரதி நிதி என்று 1வது வார்டு மக்கள் தீர்மானிப்பார்கள்.

[Administator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [13 September 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37211

தலைவின் பதில் திருப்தி இல்லை.

ஊர் நலனில் எந்த கொம்பன் கேடு நினைத்தாலும் அது அம்மாவோ ,ஐயவோ, அண்ணனோ யாராக இருந்தாலும் அந்த கட்சிகள் அத்தனையும் எங்கள் கால் தூசிக்கு சமம் .ஊர் நலன் ஒன்று தான் முக்கியம் ஊர் ஐக்கியம் ஒன்று தான் முக்கியம்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. அஷ்ரப் அவர்களை தோற்கடிக்க, தலைவி முயற்சி பண்ணத்தான் செய்வார் என்று ஒப்புக்கொண்ட தலைவியின் ஆதரவாளர்களுக்கு நன்றி!
posted by saalai Abdul Razzaq Lukman (Chennai) [13 September 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 37214

"கேள்விகளே வேடிக்கையாக உள்ளன. போட்டி என்று வந்த பிறகு, “நீ ஏன் இப்படி வெற்றி பெற முயற்சி செய்றே”ன்னு கேட்கிறது வேடிக்கையா இல்லையா? “நீ ஃபெயில் ஆக வேண்டியதுதானே, ஏன் பாஸ் ஆக முயற்சி செய்கிறாய்?” என்ற கேள்விகள் அபத்தம். அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் வேட்பு மனுவை நிராகரிக்க வைத்தாரா? அப்புறம் என்ன? சட்டப் புத்தகத்தைக் கொடுப்பதும், தாசில்தாரிடம் விளக்கம் கேட்பதும் குற்றம்னா - என்னன்னு சொல்ல உங்கள் எதிர்ப்பார்ப்பை?" (C&P)

தம்பி ஹாமீத் ரிபாயி அவர்களின் இந்த பதிலை தலைவி அவர்கள் சொல்லி இருந்தால் பிரச்சனையே இல்லையே. தான் அப்படி ஜமாஅத் வேட்பாளருக்கு எதிராக நடக்கவே இல்லை என்பது போல் அல்லவா அவரின் பதில் இருக்கிறது.

தான் சார்ந்திருக்கும் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அவருக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால், அந்த ஜமாஅத் வேட்பாளரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்வதிலும், அவரை தோற்கடிப்பதிலும், அதிமுகவின் மற்ற உறுப்பினர்களை விட இவர் அதிகம் அக்கறை செலுத்துவதை தான் அந்த ஜமாஅத்தினரால் போருக்க முடியவில்லை. அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலும் இல்லை.

"1வது வார்டை என்ன பட்டாவா போட்டு கொடுத்திருக்காங்க? அமலக்கனி நின்னா என்ன? அப்துல்காதர் நின்னா என்ன? அந்த வார்டு மக்கள் பார்த்துக்குவாங்க" (C&P)

எந்த ஒரு பதவியும் யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கப்பட வில்லை. தலைவி பதவி உட்பட. 2006 தேர்தலில் இந்த வார்டில், அருனாசலபுரத்தை சார்ந்த, பொதுவுடைமை கட்சியின் திரு.திருத்துவராஜ் அவர்கள் தான் வெற்றி பெற்றார். ஒரு விஷயம் பொது தளத்தில் விவாதத்துக்கு வந்தால், அந்த விஷயத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து பதியத்தான் செய்வார்கள். வெற்றியை அந்த வார்டு மக்கள் தீர்மானிக்கட்டும்.

அஷ்ரப் அவர்களின் வெற்றி / தோல்வி விஷயத்தில், தலைவிக்காக வக்காலத்து வாங்கும் சகோதரர்களின் நிலைப்பாடு தெரிந்தால் நன்றாக இருக்கும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. தேவையற்ற தேர்தல்
posted by ahamed mustafa (Dubai) [13 September 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37216

யார் வெற்றி பெற்றாலும் சரி. தயவு செய்து அவைகள் தங்கள் பதவி காலம் முடியும் வரை ராஜினாமா செய்யாமல் பார்த்து கொள்ளவும்.

காயல்பட்டினம் தான் இந்திய. அஷ்ரபோ அல்லது அமலக்கநியோ தான் அதன் பிரதமர் போல் ஒன்றுக்கும் பயன் படாத இந்த தேர்தலை பற்றி நாம் ஏன் அடித்து கொள்ள வேண்டும்.

பொறுப்பற்ற ஒருவரின் ரஜினமவல் மக்களின் வரிப்பணமும் தேவையற்ற வீண் வாதங்களும் நாம் பார்க்க நேரிடுகிறது.

இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் நமது பிரச்சினைகளுக்கு ஒரு இம்மியளவு கூட மாற்றம் ஏற்படபோவதில்ல.

Just take this lightly & allow it to go as just another day.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [13 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37224

அன்பு சகோதரர் லுக்மான் அவர்கள் என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்களோ அன்றே கோமான் ஜமாஅத் மக்களின் நம்பிக்கை இழந்துவிட்டார்.

ஜமாத்தார் ஆதரவுடன் தேர்வு பெட்ட உறுப்பினர், பதவியை ஜமாஅத்தர்க்கு அறிவிப்பின்றி ராஜனாமா செய்துவந்தது, கோமான் ஜமாஅத் மக்களுக்கு செய்த 2 வது துரோகம்.

எதற்காக இந்த இடைதேர்தல்? ஜமாஅத் வேட்பாளருடன் வீதி,வீதியா உடன் சென்று ஏன் வாக்கு கேட்கணும்? தான் ஆதரிக்கும் வேட்பாளரை பலிக்கடாவாக ஆக்காவ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Muthu Magdoom VSH (Jeddah) [14 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37242

போட்டி என்று வந்த பிறகு, “நீ ஏன் இப்படி வெற்றி பெற முயற்சி செய்றே”ன்னு கேட்கிறது வேடிக்கையா இல்லையா? “நீ ஃபெயில் ஆக வேண்டியதுதானே, ஏன் பாஸ் ஆக முயற்சி செய்கிறாய்?” என்ற கேள்விகள் அபத்தம். அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் வேட்பு மனுவை நிராகரிக்க வைத்தாரா? அப்புறம் என்ன? சட்டப் புத்தகத்தைக் கொடுப்பதும், தாசில்தாரிடம் விளக்கம் கேட்பதும் குற்றம்னா - என்னன்னு சொல்ல உங்கள் எதிர்ப்பார்ப்பை? (C&P)

நீ ஏன் இப்படி வெற்றி பெற முயற்சி செய்றே”ன்னு கேட்கிறது தப்பு இல்ல அண்ணா. நீ ஏன் பரிட்சை எழுத வர்ற. உனக்கு எப்படி ஹால் டிக்கெட் கிடைக்குதுன்னு பாக்குறேன் ன்னு தடுக்குறது தப்பு இல்லையா? ஆமா இந்த கேள்வி எல்லாம் உங்களுக்கு இல்லையே? நீங்கள் சம்மன் இல்லாமல் ஆஜராவது எதுக்கு?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved