Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:45:29 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14790
#KOTW14790
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 26, 2014
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்து அப்துர் ரஹ்மான் திடக்கழிவு திட்டத்திற்கு வழங்கியுள்ள 5.5 ஏக்கர் நிலத்திற்கான பத்திரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4406 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மத்திய அரசு - 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதியன்று Municipal Solid Wastes (Management and Handling) Rules, 2000 என்ற விதிமுறைகளை - அரசு கெசட்டில் வெளியிட்டது. இதன்படி நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் குப்பைகள் கொட்டுவதற்கான பிரத்தியேக இடங்கள் (Compost Yards) - டிசம்பர் 2003 க்கு முன்னர், அடையாளம் காணப்பட்டு, பயனுக்கு வரவேண்டும்.

திருமதி வஹீதா நகர்மன்றத் தலைவராக இருக்கும்போது, செப்டம்பர் 6, 2006 ஆம் ஆண்டு - அரசாணை (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை: GO No.86) ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதில் காயல்பட்டினம் உட்பட 12 நகராட்சிகளுக்கு குப்பைகளை கொட்ட நிலம் வாங்க மானியம் வழங்கி - அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அரசாணை மூலம் நிலம் வாங்கும் வகைக்காக, PART 2 திட்டத்தின்படி 5 லட்சம் ரூபாய் அரசு மானியம் காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது.





2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹாஜி வாவு செய்து அப்துர்ரஹ்மான் நகர்மன்றத் தலைவராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து, அக்டோபர் 28, 2009 அன்று நடந்த காயல்பட்டினம் நகர்மன்ற கூட்டத்தில் - திடக்கழிவு மேலாண்மை பணிக்காக உரக்கிடங்கு (COMPOST YARD) வாங்குவது குறித்து தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.



அத்தீர்மானத்தின்படி அப்போதைய நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மானின் மகளுக்கு சொந்தமான நிலத்தினை (காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278) - சந்தை விலைக்கு குறைவாக நகராட்சிக்கு வாங்கிட முடிவுசெய்யப்பட்டது. அத்தீர்மானத்தில் ஏக்கர் ஒன்றின் அப்போதைய சந்தை விலை 1.5 லட்ச ரூபாய் என்றும், அரசு வழிக்காட்டு விலை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 59,000 என்றும், அரசு வழிக்காட்டு விலைக்கு கூடுதலாக, சந்தை விலைக்கு குறைவாக - ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 1 லட்சம் வீதமாக - 5 ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் கிரையத்தில் நிலத்தினை வாங்கிடவும் முடிவு செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்றிட - இதன் விபரங்களை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிடவும், அக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

முன்னாள் நகர்மன்றத் தலைவர் அக்டோபர் 2009 இல் 5 ஏக்கர் நிலம் தருவதாக கூறி - தீர்மானங்கள் நிறைவேற்றியப்பின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி கிளை (TNPCB), நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) ஆகிய அரசு துறைகளுக்கு காயல்பட்டினம் நகராட்சியினால் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டது.

நகராட்சியின் விண்ணப்பத்திற்கு பதில் கூறிய நகர் ஊரமைப்பு இயக்கக இணை இயக்குனர் - இந்த சர்வே எண் CRZ பகுதிக்குள் வருகிறது என 20.10.2010 அன்று நகராட்சிக்கு கடிதம் அனுப்பினார்.

நகர் ஊரமைப்பு இயக்கக இணை இயக்குனர் 20.10.2010 அன்று நகராட்சிக்கு அனுப்பிய கடிதம்



இதனை - தொடர்ந்து, நகராட்சிக்கும் சில அரசு துறைகளுக்கும் கடித போக்குவரத்து சில காலங்கள் நடந்தது. ஒப்புதல் சம்பிரதாயங்கள் சில மாதங்களுக்குள் முடிவுரவேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் இடத்தை வழங்கியிருந்ததால், குப்பைக்கொட்டுவதற்கான இடத்திற்கு அனுமதி பெறப்படாத சூழலில், இவ்விசயம் முடிவுற்றது.

2011ம் ஆண்டு புதிய நகர்மன்றம் பொறுப்பேற்றது. சில மாதங்களில் தமிழக அரசு - பயோ காஸ் திட்டத்தினை காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கிய பின்னர், அத்திட்டத்திற்கான இடத்தேவை குறித்த கோரிக்கையை வைத்து - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், ஆகஸ்ட் 2012 இல் - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை உட்பட நகரின் அனைத்து அமைப்புகளுக்கும், ஜமாஅத்துகளுக்கும் கோரிக்கை வைத்து கடிதம் எழுதினார்.

இந்நிலையில் - நகர்மன்ற உறுப்பினர்கள் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையை அணுகினர். டிசம்பர் 19, 2012 அன்று நடந்த கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்களை ஐக்கிய பேரவை நிறைவேற்றியது.

நகரில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், மேற்படி நிலத்தை முஸ்லிம் ஐக்கிய பேரவை தெரிவு செய்து தரும்படியாக, நமது நகர்மன்ற துணைத்தலைவர் உள்பட உறுப்பினர்கள் 18 பேர்களும் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை நகர்மன்ற உறுப்பினர்கள் 13 பேர்கள் சென்ற 05-12-2012ம் தேதி பேரவைக்கு நேரில் வந்து அளித்தார்கள். மேற்படி மனுவை இக்கூட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, ஐந்து ஏக்கர் நிலத்தை பேரவையின் மூலம் தெரிவு செய்து கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது.

தேவைப்படுகின்ற நிலத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் ஒரு இலட்சம் மட்டுமே. கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நகராட்சியின் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனத்தலைவருமான, பேரவையின் கெளரவ ஆலோசனை குழு உறுப்பினர் மரியாதைக்குரிய அல்-ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள், நமதூர் கடையக்குடி பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் பேரவையின் வேண்டுகோளை ஏற்று, தேவைப்படுகின்ற ஐந்து ஏக்கர் நிலத்தை, அரசு நிர்ணயித்த விலைக்கே தருவதாக ஒப்புக்கொண்டு அறிவிப்பு செய்ததை இக்கூட்டம் தக்பீர் முழக்கதுடன் வரவேற்று, அவர்களுக்கு ஊர் மக்களின் சார்பாக இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.


2009ஆம் ஆண்டே முன்னாள் நகர்மன்றத் தலைவரால் வழங்க முன்வரப்பட்ட அதே நிலம் தான் இதுவென்றாலும், CRZ விதிமுறைகளை மீறாதப்படி இந்நிலம் பிரிக்கப்பட்டு, CRZ எல்லைகளுக்கு அப்பாற்பட்ட 5.5 ஏக்கர் இடம் தான் தற்போது நகராட்சிக்கு - முன்னாள் நகர்மன்றத் தலைவரால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலத்திற்கான பத்திரப்பதிவு சமீபத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை அன்று அப்பத்திரத்தை மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமாரிடம் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு முஹம்மது இஸ்மாயில் (எ) முத்து ஹாஜி, உறுப்பினர் ஹாஜி ஜரூக், வாவு S.A.R. இப்றாஹீம், நகர்மன்ற உறுப்பினர்கள் அஷ்ரஃப், செய்யது முஹம்மது ஃபாத்திமா, சாரா உம்மாள், ஜஹாங்கிர், முஹம்மது மெய்தீன், பீவி பாத்திமா, பதுருல்ஹக், மும்பை முஹைதீன், ரங்கநாதன் (எ) சுகு, பாக்கிய ஷீலா, ஜமால், சாமு சிகாபுத்தீன், அஜ்வாது மற்றும் சாமி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

தற்போது வழங்கப்பட்டுள்ள நிலத்தினை சுற்றி 500 மீட்டர் அளவில் BUFFER ZONE அமைக்கப்படவேண்டும்; அப்பகுதியில் எந்த கட்டுமானத்திற்கும் அனுமதி வழங்க கூடாது (NO DEVELOPMENT ZONE); Municipal Solid Wastes (Management and Handling) Rules, 2000 விதிகள்படி, இவ்விடத்தில் குப்பைகள் கொட்ட - அரசு அனுமதியும் பெறவேண்டும்; மேலும் இவ்விடத்திற்கான அணுகு சாலை அமைப்பு பணிகள் போன்றவைகளும் நிறைவுற்ற பின்னரே - இந்த இடம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.

இவ்விடத்தில் பயோ காஸ் நிலையம் அமைய சாத்தியக்கூறுகள் குறைவு என சில அதிகாரிகள் வாய்மொழியாக கூறியுள்ள நிலையில் - அத்திட்டத்திற்கான பொருத்தமான இடம் குறித்து தொழில்நுட்ப அறிக்கை கோரப்பட்டுள்ளது. அவ்வறிக்கை பெறப்பட்ட பின்னரே, இவ்விடத்தில் பயோ காஸ் திட்டம் இடம் பெறுமா, அல்லது வேறு இடத்தில் அமைய பெறுமா என முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.

புகைப்படம் மற்றும் தகவலில் உதவி:
எம்.ஜஹாங்கிர்

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 9:15 pm / 26.10.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved