Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:46:01 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16568
#KOTW16568
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 15, 2015
பல ஆண்டுகளுக்கு பிறகு நகரில் பெருவாரியானவர்களுக்கு ஒரே தினத்தில் ஹஜ் பெருநாள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4499 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சந்திரன் அடிப்படையிலான இஸ்லாமிய நாள்காட்டி கொண்ட சர்ச்சை உலகின் பல பகுதிகளில் நிலவுவது போல் காயல்பட்டினத்தில் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனால் - ஒரே ஆண்டில், நகரில் பல்வேறு தினங்களில், நோன்பு பெருநாளும், ஹஜ் பெருநாளும் சில காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகள் கழித்து, இவ்வாண்டு நகரின் பெருவாரியானோர் ஒரே தினத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாட உள்ளனர்.

இவ்வாண்டு செப்டம்பர் 23 அரஃபா தினம் என்றும், செப்டம்பர் 24 ஹஜ் பெருநாள் என்றும் சவுதி அரேபியா அரசாங்கம், தமிழ்நாடு மாநில காஜி மற்றும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் செப்டம்பர் 24 அரஃபா தினம் என்றும், செப்டம்பர் 25 ஹஜ் பெருநாள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணக்கு அடிப்படையில் செயல்புரியும் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினருக்கு, செப்டம்பர் 22 அரஃபா தினம், செப்டம்பர் 23 ஹஜ் பெருநாள் ஆகும்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக காயல்பட்டினத்தில் ஹஜ் பெருநாள் தினங்கள்

2006/2007 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 30/12/2006
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 1/1/2007

2007 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 19/12/2007
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 21/12/2007

2008 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 8/12/2008
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 10/12/2008

2009 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 27/11/2009
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 28/11/2009

2010 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 16/11/2010
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 17/11/2010

2011 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 06/11/2011
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 07/11/2011

2012 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 26/10/2012
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 27/10/2012

2013 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 15/10/2013
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 16/10/2013

2014 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 04/10/2014
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 06/10/2014


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [15 September 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41856

இந்த ஆண்டு நகரில் பெரும்பான்மை மக்கள் ஒரே தினத்தில் பெருநாள் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது,இருந்தாலும் ஒரு பிரிவான ஹிஜ்ரா கமிட்டியை சார்ந்தவர்கள் மட்டும் ஒரு நாள் முன்னதாக கொண்டாடுகிறார்கள்,இன்சா அல்லாஹ் வரும் காலங்களில் அவர்களும் ஒன்றாகி விடுவார்கள் என்று நம்புகிறேன்.

தாய்லாந்த் நாட்டில் ஹஜ்ஜ் பெருநாள் 23 ம் தேதி என்றும் அங்கு நம் நாட்டில் அறிவிக்கப்பட்ட துல்-ஹஜ் முதல் பிறைக்கு முந்திய நாள் முதல் பிறையாக அறிவிக்கப்பட்டதாக எங்கோ பார்த்த ஞாபகம்,என் ஞாபகம் சரியாக இருக்குமானால் சர்வதேச பிறை அடிப்படையில் பெருநாள் கொண்டாடுபவர்களின் நிலை என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மகிழ்ச்சியும் ஒற்றுமையும் என்றென்றும் தொடரட்டும்
posted by Mauroof (Dubai) [15 September 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41857

மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்ற செய்தி.

எல்லோருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

கூடுதல் குறிப்போடு இச்செய்தியை வெளியிட்டுள்ள இத்தளத்தின் நெறியாளருக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Once in a Blue Moon
posted by Javed Nazeem (Chennai) [16 September 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41860

இறைவனுடைய நாட்டத்தில், முழுமையான மனமாற்றம் வரும் வரை இது போன்ற தற்காலிக நிகழ்வுகளில் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்.

இன்றைக்கு காயலில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் அதான் ஒலிக்கிறது. ஆனால் ஒரு கால கட்டத்தில் அப்படி இல்லை - ஒவ்வொரு பள்ளிக்கும் வித்தியாசமான நேரம் இருந்தது. மார்க்க மேதைகள் இறை அச்சத்துடன் கூடி ஒரு முடிவு எடுத்தார்கள் - அது இன்று வரை தொடர்கிறது. ஆனால் இன்று ஒவ்வொருவரும் எனக்கு தான் மார்க்கம் அதிகம் தெரியும் என்று காட்டிக் கொள்ளவே முற்படுகிறோம். இறைவன் காக்க வேண்டும்.

மேலே படிக்க: https://goo.gl/y1XIVC


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [16 September 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41862

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் .....இந்த செய்தி ரொம்பவும் மகிழ்ச்சியை தருகிறது ......நமது ஊரில் ஒரே குடும்பத்தில் ,,பல பேர்கள் ..பல நாளிலும் பெருநாள் கொண்டாடுவார்கள் ....அந்த காலத்தில் ஒரே நாளில் சிறப்பாக ,,மிக கூகுளமாக கொண்டாடும் பெருநாள் போல இருக்காது ....மனம் வேதனையை தான் யாவர்களுக்கும் தரும் .....

இந்த ஹஜ்ஜு பெருநாள் ...நம் குடும்பத்தார்கள் யாவர்களும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவதை நினைத்து பெருமையாகவே உள்ளது ......

அல்லாஹ் நம் மக்கள் அனைவர்களையும் ஒற்றுமையுடன் சிறப்பாக்கி அருள்வானாகவும் ஆமீன்

நம் மக்கள் அனைவர்களுக்கும் எங்களின் >>>> ஹஜ்ஜு பெரு நாள் நல் வாழ்த்துக்கள் <<< வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [16 September 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 41864

அல்ஹம்திலில்லாஹ்! பெருநாள் மகிழ்வு மனதில் இக்கணத் திலிருந்தே குடியேற ஆரம்பித்து விட்டது.கண்ணியமிகு காயல் மக்கள் அனைவர்களும் அளவற்ற மகிழ்வுடன் அலைமோத போகிறார்கள் அன்றைய பெருநாள் இரவன்று பஜாரில்!

அக் கண் கொள்ளாக்காட்சியையும்,அந்த ஒருங்கிணைப்பான ஒற்றுமையின் ஒய்யார ஒன்று கூடலையும் காண ,கலந்து கொள்ள இருக்கும் அனைவர்களும் பாக்கியம் பெற்றவர்களே. இன்ஷா அல்லாஹ்!

கடந்த 2010 ம் வருடம் என்று நினைக்கிறேன் ஒரு நோன்பு பெருநாளைக்கூட இதுபோல் அனைவர்களும் கொண்டாடினோம் அந்த இரவை சந்தித்த உலகின் அத்தனை நாடுகளிலும் நோன்புபெருநாள் பிறை தென்பட்டது!

சிலமாதங்களுக்கு முன் ஒரு இஸ்லாமிய இயக்கத்தலைவர் பூமி உருண்டையை உதாரணம் காட்டி (விஞ்சான அடிப்படையில்), சர்வதேச பிறையை பின்பற்றுபவர்களுக்கு எப்படியும் ஒருநாள் முன்னர் உள்ள நாளையைத்தான் அவர்கள் "அமல்" செய்யக்கூடிய நிலைவரும்,சில காலங்களில் 28 கழித்து பிறை 29-ல் கூட பெருநாள் வரக்கூடிய வாய்ப்பு மிக மிக அதிகம்,எப்படியும் பல தடவையோ அல்லது ஒரு தடவையோ 29 நாளன்று பெருநாளை அடைந்தே தீருவார்கள். ஆகவே, எல்லோரும் ஒரே நாளில் உலகின் பல பகுதிகளிலும்,நம் தமிழ்நாட்டிலும் ஒரே நேரத்தில் பிறை காணவே முடியாது என்று அடித்து சொன்ன அந்த தனி நபரின் கணக்கைகெல்லாம் தவிடு பொடியாக்கி தனியோனாம் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் பெருநாள் பிறையை ஒரே நேரத்தில் காண்பித்து நம்மனைத்து இதயங்களையும் குளிர வைத்து விட்டான்!

வரும் காலங்களிலும் இன்ஷா அல்லாஹ் இதுபோன்ற பெருநாள் இன்பத்தை எல்லோரும் எப்பழுதில்லாமல் பருகி திளைத்து மகிழ்ந்திட மறை தந்த இறையோன் வழி வகுத்தருள் வானாக ஆமீன்! அனைத்து உள்ளங்களுக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

வாழ்த்துக்களுடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by vilack sma (jeddah) [16 September 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 41865

பெரும்பாலானவர்கள் ஒரே தினத்தில் பெருநாள் கொண்டாட இருப்பதில் மகிழ்ச்சி . என்னதான் ஊரில் உள்ளவர்கள் அந்த கமிட்டி , இந்த கமிட்டீன்னு பிரிந்து இருந்தாலும் , ஹஜ் செய்யும்போது ஒன்றாகத்தான் செய்கின்றனர் . அங்கே இவர்களின் பிறை கணக்குகள் எடுபடாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...பழகிப் போய் விட்டது குளிர்விட்டு போய் விட்டது
posted by mackie noohuthambi (colombo) [17 September 2015]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41868

ஒரே நாளில் ஊரெங்கும் பெருநாள் என்ற செய்தி இப்போது புளித்துப் போய் விட்டது. அந்த குதூகலம் மறைந்து பல ஆண்டுகளாகி விட்டன.பல நாட்கள் ஒரே வீட்டில் பெருநாள் என்று நமக்கு பழகி போய்விட்டது. குளிர்விட்டு போய் விட்டது.

மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் நீ சொன்னால் காவியம் என்று சொல்வது போல் பலதரப்பட்ட கருத்துக்களுடன் களமிறங்கிய நமக்கு வழி காட்டும் ஒளி விளக்குகளாக விளங்கிய நமது உலமாக்கள் பார்த்த பார்வை இது. சாதாரண சாமானியனும் குர் ஆன் ஹதீதை தன் கைக்குள் எடுத்துக் கொண்டு பல மாதிரியான விளக்கங்களை சொல்வதால் ஏற்பட்ட சமுதாய பின்னடைவு இது. இந்த சந்தோஷம் நீடிக்க முடியாமல் இன்னொரு கூட்டம் பெருநாளை வேறொரு நாளில் கொண்டாடுகிறார்கள்.

அல்லாஹ் திருமறையில் அழகாக சொல்கிறான் ASAA RABBUKUM ANN YARHAMAKUM VA INN UDHTHUM UDHNAA.....நீங்கள் குழப்பம் செய்வதை விட்டும் விலகிக் கொண்டால் உங்கள் இரட்சகன் உங்கள் மீது கருணை புரிய போதுமானவன் அவ்வாறின்றி உங்கள் குழப்பத்தின்பாலே பின்னும் நீங்கள் திரும்புவீர்களானால் நாமும் தண்டிக்க திரும்புவோம் சூரா பனீ இஸ்ரஈல் 8வது வசனம் இப்படி சொல்கிறது.சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு மிக அருமையான அறிவுரை இது.

ALLAAHU AKBAR KABEERA VAL HAMDHU LILLAAHI KATHEERAA...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved