Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:55:57 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17750
#KOTW17750
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 15, 2016
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 1982 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. 234 தொகுதிகளுக்கு உட்பட்ட 66,007 வாக்குச்சாவடிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்க உள்ளது. இதில் 3,454 ஆண்கள், 320 பெண்கள், மூன்றாம் பாலினத் தவர் 2 பேர் என மொத்தம் 3,776 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கொளுத்தும் வெயிலுக்கு இடை யிலும் தமிழகம் முழுவதும் அனல் பறக்க நடந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்நிலையில், நாளை நடக்க வுள்ள வாக்குப்பதிவுக்கான ஏற்பாடு கள் தீவிரமடைந்துள்ளன. வாக்குச் சாவடி அலுவலர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு இன்று மாலைக்குள் சென்று விடுவார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட வாக்குப்பதிவுக்கு தேவை யான அனைத்து பொருட்களும் இன்று காலைமுதல் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றன.

தீவிர கண்காணிப்பு

மொத்தம் உள்ள 66,007 வாக்குச் சாவடிகளிலும் காவல் துறை, மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் இன்று முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். 300 கம்பெனிகளை சேர்ந்த 30,000 துணை ராணுவப் படை வீரர்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீரர்களின் கொடி அணிவகுப்பு கடந்த 2 நாட் களாக தமிழகம் முழுவதும் நடந்தது. எல்லா தொகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர். வாக்காளர் களுக்கு பணப் பட்டுவாடா செய்வ தைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை யினரும், தேர்தல் பார்வையாளர் களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்பாடுகள் தீவிரம்

வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், நாளை (மே 16) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடக்கும். வாக்குச்சாவடிகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் பொது வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக் களிக்கலாம். வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வரிசையில் காத்திருக் கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அனைவரும் வாக் களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்குப்பதிவு நாளன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட் களை பாதுகாப்புடன் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. பதற்ற மான வாக்குச்சாவடிகளில் கூடுத லாக துணை ராணுவப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

1.12 லட்சம் போலீஸார்

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரிவு டிஜிபி கே.பி.மகேந்திரன் தலைமையில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு மேற்பார்வையில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 958 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர் களுடன் 30,000 துணை ராணுவப் படை வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் போலீ ஸார், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

அவசர சூழ்நிலையை உடனுக் குடன் எதிர்கொள்ள ஏதுவாக மாநிலம் முழுவதும் 1,153 விரைவு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பணியில் 7,094 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. 24 மணிநேரமும் வாகன சோதனை நடக்கிறது. பணம் பறிமுதல் தொடர்பாக இதுவரை 612 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 380 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக 160 வழக்குகள், நடத்தை விதிமீறல் தொடர்பாக 4,042 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக 1,254 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சைலேந்திரபாபு தெரிவித் துள்ளார்.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நேர்மை -அது அவரவர் உள்ளத்திலிருந்து வெளிவரவேண்டும்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [15 May 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43795

தேர்தல் அதிகார் திரு ராஜேஷ் லக்கானி அவர்கள் பேட்டியை பார்த்தவர்களுக்கு ஒரு செய்தி புரியும் .

முன்னெப்போதையும் விட திரு சேஷன் அவர்கள் ஆரம்பித்து வைத்த தேர்தல் கமிஷனுக்குள்ள வானளாவிய அதிகாரம் இப்போது இன்னும் அதிகமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஆனாலும் கையும் களவுமாக பணம் கொடுப்பவர்களை பிடித்தாலும் அவர்களுக்கு உடனடியாக spot fine போடுவதற்கு சட்டத்தில் இடமில்லை. எல்லா புகார்களையும் கேட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப் படி நீதிமன்றம் சென்று வழக்கு விசாரணை முடிய 5 ஆண்டுகள் முடிந்து அடுத்த தேர்தல் வந்து விடுகிறது.

இப்போது கிடைத்த தகவல்படி அவர் சொல்கிறார். எங்காவது பணப்பட்டுவாடா செய்வது அறிந்து எங்களுக்கு sms அனுப்பினாலோ mobile தகவல் தந்தாலோ கூடிய அளவும் 15 நிமிடங்களில் எங்கள் பறக்கும் படை அந்த இடத்துக்கு வந்து விடும். அந்த 15 நிமிடத்துக்கும் முன்னால் மின்வெட்டி மறையும் அவகாசத்தில் அந்த பண பட்டுவாடா நடந்து முடிந்தால் நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கேட்கிறார்.

நான் நேற்று ஒரு நண்பருக்கு போன் செய்தேன். எங்கிருக்கிறீர்கள் என்று கேட்டேன். நான் ஏரலில் இருக்கிறேன் நாளை ஆத்தூருக்கு போகணும் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கிறார்களாம். அதையும் வாங்கிட்டு அடுத்தநாள் ஓட்டும் போட்டு விட்டு வரணும் என்று சர்வ சாதாரணமாக சொல்கிறார். மிக்சி கிரைண்டர் மின்விசிறி இலவசமாக வாங்கும் ஒருவரை கேட்டேன் நீங்கள்தான் வசதியுள்ளவர்களாயிற்றே, இது ஏழைகளுக்கு உள்ளது அல்லவா நீங்கள் வாங்கலாமா என்றேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் என்னை திகைக்க வைத்தது, போ வாப்பா நீ இப்படித்தான் சொல்லுவா, பெரிய ஆலிம்சா மௌலானா தங்கள் வீடே வாங்குறோ, நீ என்ன சொல்றா, நாம கொடுக்குற பணத்தை கொள்ளை அடிச்சிக்கிட்டு இருக்கா, நாம இதை வாங்கினா என்ன அது நம்ம பணம்தானே என்று சொல்கிறார்கள். நீங்கள் அரசாங்கத்துக்கு வருமான வரி, வணிக வரி செலுத்துகிறீர்களா.என்றேன். இல்லை, பஞ்சாயத் போர்டுக்கு வீட்டு வரி தண்ணி வரி மின்வாரியத்துக்கு வரி என்றெல்லாம் கொடுக்கிறோமே என்று அடுத்த பதில் வருகிறது. அது நம்ம ஊர் வளர்ச்சிக்கு, நாம கரண்ட் உபயோகிக்கிறதுக்கு தானே கட்டுகிறீர்கள் என்றேன். ரோடு சரி இல்லை, குடிக்க 5 நாளைக்கு ஒருநாள்தான் தண்ணி வருது, அடிக்கடி கரண்ட் போய்விடுகிறது...இப்படி அடுக்கடுக்காக பதில் சரமாரியாக வருகிறது.அந்த ஆள் என்ன படித்திருக்கிறார்கள் என்று கேட்டால் 8ம் வகுப்பு 10ம் வகுப்பு என்று சொல்கிறார்கள். அப்படியானால் படிக்காத பாமரர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்த தேர்தலில் ஓட்டுப் போடுவதெல்லாம் கொள்கை கோட்பாடு நேர்மை நியாயம் தர்மம் என்றெல்லாம் கிடையாது. இலவசம் இலவசம் இலவசம் பணம் பணம் பணம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம்......ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன ....

எப்போது விழிப்புணர்வு வரும்...அது அவரவர்கள் உள்ளத்தில் இருந்து வரவேண்டும்,,,அல்லாஹ்வுக்கு பயப்படுகிற ஈமான் கொண்ட நமக்கே இப்படி என்றால் மற்றவர்களை கேட்கவா வேண்டும்...

5 வருடத்துக்கு ஒரு முறை வரும் தேர்தல் திருவிழா...ஜாலியா பணம் வாங்கி ஜாலியா ஓட்டு போட்டு போய்க்கிட்டே இருப்போம்,,,,வாழ்க இந்திய ஜனநாயகம்

முடியட்டும் திங்கள் கிழமை
விடியட்டும் வியாழக் கிழமை
மலரட்டும் நல்லாட்சி.
ALLAAHUMMA LAA THUSALLITH ALAINAA MANN LAA YAKHAAFUKA VALAA YARHAMNAA.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved