Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:56:20 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17930
#KOTW17930
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 14, 2016
அரசு பேருந்துகள், காயல்பட்டினத்தை தவிர்ப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் ஜூன் 20 அன்று மனு வழங்க திட்டம்! நடப்பது என்ன? WHATSAPP குழுமம் ஒருங்கிணைப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3059 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பல அரசு பேருந்துகள், காயல்பட்டினத்தை தவிர்த்து - ஆறுமுகநேரி/அடைக்கலபுரம் வழியாக - பல ஆண்டுகளாக செல்கின்றன. இது குறித்து, காயல்பட்டினம் சார்ந்த பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு மனுக்களை, பல தருணங்களில் - போக்குவரத்துத் துறையை சார்ந்த அதிகாரிகளிடம் - பல ஆண்டுகளாக - வழங்கி உள்ளனர்.

இப்புகார்களுக்கு பதில் அளிக்கும் போக்குவரத்து அதிகாரிகள், காயல்பட்டினம் செல்லாமல் செல்ல வேண்டாம் என ஓட்டுனர்களும், நடத்துனர்களும் - சுற்றறிக்கை வாயிலாக - அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பார்கள். அதைத் தொடர்ந்து, ஒரு சில நாட்களுக்கு பேருந்துகள் - காயல்பட்டினம் வழியாகச் செல்வதும், அதற்கு பிறகு மீண்டும் - ஆறுமுகநேரி / அடைக்கலபுரம் சாலை வழியாக அப்பேருந்துகள் இயக்கபடுவதும் வாடிக்கை.

இவ்வாறு - காயல்பட்டினம் வழியில் இயக்கப்படவேண்டிய பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்களுக்கு - பெரும் மன உளைச்சலும், பொருட்சேதமும் ஏற்படுகிறது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த - முதியோர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் ஆறுமுகநேரியில் நள்ளிரவில் இறக்கிவிடப்படுவதால், ஆபத்தான சூழலையும் அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

இப்பிரச்சனையை நிரந்தர முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், தற்போது சில முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜூன் 20 திங்களன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மனுவில் - பொது மக்கள் கையெழுத்து வாங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

https://goo.gl/hPw9OR


தற்போதைய முயற்சியை - நடப்பது என்ன? என்ற WHATSAPP குழுமம் ஒருங்கிணைக்கிறது. இந்த குழுமம் சார்பாக - ஜூன் 20 அன்று நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க - ICICI வங்கி சந்திப்பில் இருந்து பொது மக்களை அழைத்து செல்ல வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, இந்த குழுமத்தின் நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.ஏ.நூஹு தெரிவித்துள்ளார்.

change.org என்ற உலகளவில் பிரபலான இணையதளத்தின் உதவிக்கொண்டு, இணையத்தில் ஆதரவு கையெழுத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. மனு திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில், இணையம் வழியாக 400 கையெழுத்துகளுக்கும் மேல் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இணையம் வழியாக மனுவில் கையெழுத்திட விரும்புவோர் கீழ்க்காணும் முகவரியை பயன்படுத்தலாம்:

https://goo.gl/hPw9OR


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் எத்தர்கள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [14 June 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 44037

ஒரு கூடுதல் செய்தி: இது நிறையபேருக்கு தெரியாத ஒரு சில பேர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை செய்தி.

அதாவது ஆரம்ப ஊரான புறப்படும் இடத்திலேயே ஓட்டுனரும், நடத்துனரும் கூறும் வார்த்தையானது.இது காயல்பட்டணம் வழியாக போகாது என்றே சொல்லி விடுவார்கள்!

ஒருதடவை என் நண்பர் ஏன் என்று கேட்டதற்கு, இன்று மெயின் ஆபீஸ் ஆர்டர் என்று கூறி விடுகிறார்களாம்! இரவு நேரத்தில் எந்த ஆபீசரை அணுக முடியும்!

இரண்டு மூன்று பேருக்கு மேல் காயல் வாசிகள் இருந்தாலோ அல்லது சற்று எகிறும் இளம் காளைகள்(என்னைப்போல் இளிச்சவாயன்களாக இல்லாமல்) கரடு முரடாக விவாதம் பண்ணினாலோ பயந்து பயணசீட்டை காயலூருக்கு கொடுக்கிறார்கள்!

எப்படியெல்லாம் தம்மால் இயன்றவரை மக்களை ஏமாற்றுகிறார்கள் எத்தர்கள்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack sma (jeddah) [14 June 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44038

நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதுதான் உண்மை .

திருசெந்தூரில் இருந்து புறப்படும் தொலைதூர பேரூந்துகள் , மற்றும் அங்கிருந்து திரும்பி வரும் பேரூந்துகள் கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேலாக நமதூர் வழியாக வழித்தடம் அமைக்கப்பட்ட பேரூந்துகள் என்பதை ஒருமுறை ஆபிதா மேடத்திடம் கேட்டு தெரிந்துகொண்டேன் .

நமதூரை பொறுத்தவரை பேரூந்துகளுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் ஊராகும் . வீரபாண்டியன் பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரி வரை பேரூந்திற்கு எந்த வருவாயும் கிடையாது.

தொலைதூரத்தில் இருந்து வேக வேகமாக தூத்துக்குடியிலோ , திருச்செந்தூரிலோ வந்து இறங்கி விடுவோம் . இங்கிருந்து ஊர் வருவதற்கு பல மணி நேரம் காத்துகிடக்கும் சூழ்நிலை. காயல்பட்டினம் போகாது என்பார்.

Trip Sheet , மற்றும் route Paper ஐ காட்டுங்கள் என்று அவரிடம் கேட்க முடியுமா ? இரவு நேரத்தில் இதுபோன்ற இடங்களில் மாட்டிகொண்டால் சமூக விரோதிகளால் தொந்தரவுகள் , இயற்கை உபாதைகளுக்கு பாதுகாப்பாக செல்ல முடியாத சூழ்நிலை . அவசரத்திற்கு Tea coffee என்று எதுவும் சாப்பிட முடியாது .

" நடப்பது என்ன " whatsapp குழுமத்திற்கு வேண்டுகோள் , நீங்கள் கலெக்டரிடம் கொடுக்கும் மனுவில் , காயல்பட்டினம் வழியாக permit போடப்பட்ட அனைத்து பேரூந்துகளிலும் கண்டிப்பாக காயல்பட்டினம் வழி என்ற பெயர்பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட சொல்ல வேண்டும் .

இது ஒருபுறம் இருக்க , பேரூந்துகள் மாற்றுபாதையில் செல்ல நாமும் ஒரு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும் .

மெயின் ரோடு மற்றும் நெசவு தெரு ஒருவழி பாதைக்கு தாராளமானது . பேரூந்துகள் எவ்வித சிரமமும் இன்றி செல்லலாம். ஆனால் நாமோ ரோட்டின் இருபுறத்திலும் இருசக்கர வாகனங்களை முறையற்ற விதத்தில் நிறுத்துகிறோம் . ரோட்டில் நடந்து செல்ல கூட சிரமமாக உள்ளது . இதையும் கவனத்தில் எடுத்துகொண்டால் நல்லது .

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல்துறையை அணுகலாம் . மேலும் பழுதான சாலைகள் . இதுபோன்ற இடையூறுகளால் பேரூந்துகள் மாற்றுபாதையில் செல்ல காரணமாகிறது .

ஆக " நடப்பது என்ன " whatsapp குழுமம் கலெக்டரை பார்பதுடன் , காவல் துறையையும் பாருங்கள் . பழுதான தெருக்களை சீர் செய்ய பாருங்கள். எல்லா பேரூந்துகளும் நமதூர் வழியாகவே செல்லும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...சாது மிரண்டால் காடு கொள்ளாது
posted by mackie noohuthambi (kayalpatnam ) [14 June 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44039

காயல்பட்டினம் மக்கள் மிக சாதுவானவர்கள் அவர்களுக்குள் அடித்துக் கொள்வார்கள் பொது விஷயங்கள் என்று வரும்போது ஒதுங்கி கொள்வார்கள் என்பதை இவர்கள் நன்கு நமது நாடி பிடித்து தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

உண்மை அதுவல்ல என்பதை இந்த நாட்டுக்கு உணர்த்தியவர்களும் இதே காயல்பட்டினத்து மக்கள்தான். 1992இல் மீன்கடை போராட்டம் என்று ஒரு குண்டு வெடித்தது இன்னும் இவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.அப்போது எல்லோரது வாயிலிருந்தும் வந்த வார்த்தைகள் என்ன தெரியுமா.... காயல்பட்டினதுக் காரர்களா,, எப்படி இப்படி துணிந்து களம் இறங்கினார்கள் சிறைகள் நிறைந்து விட்டதே. எங்கு பார்த்தாலும் மயான அமைதி பயம் இந்த ஊரில் நிலைகொண்டிருந்தது.

பாளையம்கோட்டை சிறையில் நாங்கள் 103 பேர் இருந்தோம். எல்லோரும் வன்முறையை கையில் எடுத்தவர்கள் இல்லை ஆனால் அப்பாவிகள் என்று பார்வைக்கு தெரிந்தாலும் அவர்களுக்கு எங்கிருந்தோ ஒரு துணிவு வந்தது. இளைஞர்கள்தான் அதிகம். அப்போது இங்கே எழுதப்பட்ட செய்திதான்....

''சாது மிரண்டால் காடு கொள்ளாது'' என்ற வைர வரிகள்.

இன்று கலைஞர் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள். 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டம் போல் சம்ஸ்கிருத எதிர்ப்பு போராட்டம் வரும் அதற்கு வழி ஏற்படுத்தாதீர்கள்.

உண்மைதான் வன்முறைக்கு வித்திடுபவர்கள் ஆட்சியாளர்கள்தான். அவர்கள் விதி மீறல்களை கண்டும் காணாமல் இருக்கும்போது நீதி மன்றங்கள் அநியாயங்களை தட்டி கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டிருக்கும்போது இந்த மாதிரி புரட்சிகள் வெடிக்கும். கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்யாதீர்கள். நியாயமான வழியில் பயணியுங்கள்.

பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் மனிதர்கள்தான் அவர்களுக்கும் அம்மா அப்பா சகோதர சகோதரிகள் மனைவி மக்கள் என்று இருக்கிறார்கள். உங்களிடம் கையில் எல்லாம் இருப்பதாக நினைக்காதீர்கள். நாளை வெறும் கையுடன் வீட்டுக்கு போக வேண்டி வரும் நீங்கள் செய்த அநியாயங்களை அன்று நினைத்துப் பார்ப்பீர்கள் அதற்கிடையில் காலம் கடந்திருக்கும். அப்போதும்கூட இந்த காயல்பட்டினம் மக்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள். அவர்களது சொந்த வாகனங்களில் உங்களை மருத்துவமனையில் சேர்த்து சொந்த பணத்தில் சிக்கிச்சை செய்து உங்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்.

எனவே இந்த நாளை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ளுங்கள்...

நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [15 June 2016]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44040

அஸ்ஸலாமு அலைக்கும்.

நம் மரியாதைக்குரிய .மாவட்ட அதிகாரி அவர்கள்... கடும் சிரமத்துக்கு உள்ளான ..காயல் பட்டன .. மக்களின் இந்த வெகு நாளைய குறையை ..மிக கவனமுடன் கவனித்து நிறைவேற்றி தருவார்கள் என்கிற முழுமையான ஒரு நம்பிக்கை ஊர் மக்கள் அனைவர்களுக்கும் உண்டு .......

நம் ஊரில் இருந்து காலை நேரத்தில் மதுரை செல்ல ஒரு சில நேரத்தில் ஆறுமுகநேரி மூலமாக தான் சென்று வந்தேன் ... நான் பல தடவைகள் மதுரை ,, திருச்சியால் இரவு நேரத்தில் ஊர் வரும்போதும் கூட ஆறுமுகநேரியில் ( இரவு நேரத்தில் ) கடுமையான இன்னல்களுக்கு ஆளானேன் .....ஒரு சில சமையத்தில் நம் ஊர் பெண்மக்கள் அப்போது படும் அவச்தையைகளை பார்த்து துடித்தும் போனேம் .....

நம் ஊர் மக்கள் படும் சிரமத்தை .நம் நண்பர் பாலப்பா. ஜலாலி அவர்கள் பல தடவைகள் ,,பல விதத்திலும் ,, பல முறைகள் ...முறையாகவே முறையிட்டும் எந்த ஒரு பயனும் இல்லாமலே தற்போது வரைக்கும் .... இருந்து வருகிறது ......என்பது குறிப்பிடத்தக்கது ....

நாம் பல நாட்களாகவே பொருத்து விட்டோம் ...நல்ல நினைப்புடன் ..இந்த முயற்ச்சியையும் பார்ப்போமே .....

வஸ்ஸலாம் .
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved