காயல்பட்டினம் கடற்கரையில், நோன்புப் பெருநாள் தொழுகைக்காக வரும் பொதுமக்களின் வசதிக்காக, சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா – SPDI கட்சியின் சார்பில், அதன் தன்னார்வலர்கள் பராமரிப்புப் பணி மேற்கொண்டனர்.
தொழுகையில் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளத் தோதுவாக, கடற்கரைக்கு வரும் வாகனங்களைச் சரியான இடங்களில் நிறுத்தவும், பொதுமக்கள் அவதியின்றி சாலையில் நடந்து செல்லவும் வழிவகை செய்தனர்.
![](/newsimg/256201757888.jpg)
![](/newsimg/256201757904.jpg)
இதற்காக, கட்சியின் தன்னார்வலர்களை SDPI மாவட்டத் தலைவர் ஷேக் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.
![](/newsimg/256201757914.jpg)
தகவல் & படங்கள்:
கல்வத் அஹ்மத் கபீர்
(செய்தி & ஊடகத் துறை பொறுப்பாளர் – SDPI)
|