Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:46:08 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20670
#KOTW20670
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 13, 2018
ஜுன் 18, 19, 20 தேதிகளில் முதலாவது காயல் புத்தகக் கண்காட்சி!!! காயலர்களுக்கு அழைப்பு!!!
செய்திஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம், சஊதி அரபிய்யா)
இந்த பக்கம் 2940 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல் நற்பணி மன்றம் – தம்மாம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் எதிர்வரும் ஜுன் 18, 19, 20 தேதிகளில், முதலாவது காயல் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை கிழே:

காயல் வரலாற்றில் முதலாவது கண்காட்சி

ஊர் & வட்டார மக்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் நல்லெண்ணத்தோடு, காயல் நற்பணி மன்றம் – தம்மாம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்புகள் இணைந்து, நமதூரின் வரலாற்றில் முதன்முறையாக புத்தகக் கண்காட்சி ஒன்றை நடத்த உள்ளோம்.





இன்ஷா அல்லாஹ், வருகின்ற 18, 19, 20 ஜுன் 2018 (திங்கள், செவ்வாய், புதன்) தேதிகளில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில், நடைபெற உள்ள இந்த அரிய நிகழ்வில் பங்கேற்க, காயல்பட்டினம் & சுற்றுவட்டார மக்களுக்கு, பள்ளி மாணவ/மாணவியருக்கு அழைப்புவிடுக்கிறோம்.



15-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள்

சிறப்பான முறையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், 15-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கவுள்ளன.

சாகித்ய அகடெமி, பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இயல்வாகை, புதிய தலைமுறை, பூவுலகின் நண்பர்கள் – தமிழ்நாடு & புதுச்சேரி, புலம் பதிப்பகம், தேசாந்திரி பதிப்பகம், காந்தி இலக்கியச் சங்கம், தன்னறம் நூல்வெளி – தும்பி & வானம் பதிப்பகம் ஆகிய பொதுவான பதிப்பகங்களும்;

குட் வேர்ட்ஸ் & இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஆகிய இஸ்லாமிய பதிப்பகங்களும்;

குட்டி ஆகாயம், பஞ்சு மிட்டாய், கற்றல் இனிது, றெக்கை & சிலேட்டு ஆகிய சிறார் இதழ்களும்;

இயற்கை மருத்துவச் சங்கம் (காந்தி அருங்காட்சியம், மதுரை), நூற்பு & துகழ் துணிப்பையகம், சென்ட்ரல் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியா (CFSI) & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் ஆகிய இதர அமைப்புகளும் / நிறுவனங்களும் அரங்கமைக்க உள்ளன.

நிகழ்ச்சி நிரல்

புத்தக அரங்குகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும். சிறப்பு பட்டிமன்றம், நூல் விவாதம், நூற்கள் அறிமுகம், மாணவர்களின் தப்ஸ் நிகழ்ச்சி, இறைப்புகழ் பாடல்கள், பெரியவர்களுக்கான விழிப்புணர்வு திரையிடல், குழந்தைகளுக்கான சிறப்புத் திரைப்படங்கள் என புத்தகக் கண்காட்சியோடு சேர்ந்து பல்வேறு துணை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



சிறப்பு விருந்தினர்கள்

புத்தகக் கண்காட்சியின் ஒவ்வொரு நாட்களிலும், மாலை 04:30 மணிக்கு சிறப்பு விருந்தினர் நேரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சாகித்ய அகடெமி விருது பெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான், கன்னியாகுமரி மாவட்டத்தின் முன்னணி எழுத்தாளர் மீரான் மைதீன், திருநெல்வேலி அரசு அருங்காட்சியத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் நாறும்பூநாதன் ஆகிய இலக்கிய ஆளுமைகள் நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.

பரிசுக் குலுக்கல்

நிகழ்வு நடைபெறும் மூன்று நாட்களிலும், முதலாவதாக வரும் 100 பார்வையாளர்களில் - குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படுவர்களுக்கு, சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

நிகழ்வின் வெற்றிக் கேடயம்

இந்த எளிய முயற்சியின் வெற்றிக் கேடயம், மிகுதியான மக்கள் இந்த அரிய நிகழ்வில் பங்கேற்பதும் & கூடுதலான நூற்களை கொள்முதல் செய்வதிலுமே ஆகும்.

 கண்காட்சி நாட்களில் ஊரில் இருக்கும் ஒவ்வொருவரும் தத்தம் குழந்தைகளுடன் நிகழ்வில் பங்கேற்க வேண்டுகிறோம்.

 உங்களுக்கும் உங்களது குழந்தைகளுக்கும் நல்ல நல்ல தலைப்புகளில் சிறப்புவாய்ந்த நூற்களையும், கைத்தறி துணி வகைகளையும், குழந்தைகளுக்கான சிறப்பு திரைப்பட வட்டுக்களையும் (DVD), மிகுதியாக வாங்கிட வேண்டுகிறோம்.

 கூடவே, நகரில் இருக்கும் ஏதேனும் ஒரு பள்ளிக்கூடத்திற்கோ / மத்ரஸாவிற்கோ / நூலகத்திற்கோ புத்தகங்களை கொள்முதல் செய்து, அன்பளிப்பாக வழங்கிட ஆவணச் செய்யுங்கள்.


முகநூல் பக்கம்

பதிப்பகங்கள், சிறப்பு விருந்தினர்கள், துணை நிகழ்வுகள் போன்ற நிகழ்ச்சி குறித்த தகவலுக்கு, புத்தகக் கண்காட்சிக்கான முகநூல் பக்கத்தை விரும்பி, பின் தொடருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

https://facebook.com/kayalbookfair2018

கூடுதல் தகவலுக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினரை கீழுள்ள எண்களில் தொடர்புகொள்ளவும்:


99628 41761 / 89037 20734 / 99020 01223

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஒரு நல்ல முயற்சியின் தொடக்கம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [14 June 2018]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 46188

நான் சிறுவனாக இருந்த காலத்தில் சொர்க்கத்தின் நிழல் என்று ஒரு புத்தகம். ஒரு தலையணை போல் இருக்கும் அதை ஆர்வமுடன் படித்தேன் தோப்பில் மீரான் அவர்கள் சாய்வு நாற்காலி என்ற நூலையும் படித்தேன். ஆர் பீம் எம் கனி அவர்கள் புத்தகம் அப்துர் ரஹீம் அவர்களின் புத்தகங்கள் அண்ணா பெரியார் கலைஞர் என்று கணக்கற்ற நூல்களை படித்தேன் இப்பொது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

இளம் வயதில் வாசிப்பை நேசித்தோம் அதனை சுவாசித்தோம் ஆனால் இன்று நமது இளையதலைமுறைகளுக்கு அன்றொஇட் போனில் தலையை குனிந்து கொண்டு எதையோ தடவுவதை பார்க்க முடிகிறது.

நெல்லை புத்தக கண்காட்சிக்கு மகளை பேத்தியை அழைத்து சென்றேன் ஆனாலும் அவர்கள் அவ்வளவு சுவாரஸ்யம் காட்டவில்லை. கால மாற்றத்தின் சுழட்சியில் வாசிப்பு பழக்க காணாமல் போய்விட்டது. ஒரு புதிய முயற்சியாக இதை செய்ய முனைந்திருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தூரம் அதிகமாக இருப்பதால் மக்கள் ஆவலுடன் வருவார்களா என்பது கேள்விக் குறிதான் ஊரின் மையப்பகுதியை தேர்ந்தெடுத்திருக்கலாம், ஆலோசனை இலவசமாக கிடைக்கும் ஆனால் அதை நடைமுறை படுத்துபவர்களுக்குத்தான் அந்த வலி தெரியும் என்ற உண்மையையும் மறுக்க முடியாது.

முயற்சி தன் மெய் வருந்த கூலிதரும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...பீர்க்கம்மா கவர்னர் கம்மா ஆனார்
posted by mackie noohuthambi (kayalpatnam) [20 June 2018]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 46192

தெற்கிலிருந்து ஒரு சூரியன் கலைஞர் பற்றிய நூலை வாங்கவேண்டும் என்ற அவாவுடன் முதல்நாள் மாலை இந்த கண்காட்சிக்கு சென்றேன். போனவுடன் அந்த புத்தகம் கிடைத்து விட்டதில் மிக்க மகிழ்ச்சி. மக்களால் பேத்திகளை அங்கு அழைத்து சென்றேன். அவர்களுக்கு தேவையானதும் அங்கு கிடைத்தது.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்ற வள்ளுவம் நினைவுக்கு வந்தது ஒரு சிறிய இடத்தில் தேவையான சிலவற்றை பெற முடிந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி கீழே இறங்கி வந்த பொது சாலை பஷீர் அவர்கள் கொஞ்சம் நிகழ்ச்சியை பார்த்து விட்டு பொங்கல் என்றார். கூட்டம் சொல்லும் அளவுக்கு இல்லை கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தபோது தான் மீரான் மொஹிடீன் பேச ஆரம்பித்தார்கள். இல்லை கதை சொல்ல ஆரம்பித்தார்கள்.

தக்கலை பீர் முஹம்மது ஒலியுல்லாஹ் அவர்கள் தர்காவுக்கு அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி வருவதாகவும் அவரை சந்தித்து ஸலாம் சொல்ல வேண்டும் என்ற அவா பீர் கம்மாவை அந்த தள்ளாத வயதிலும் அந்த நெருக்கடியான இடத்திலும் கவர்னரை சந்தித்து ஸலாம் சொல்லவேண்டும் என்ற பேரவா அவரை உந்தி தள்ளியது. நினைத்த படியே அவர் அங்கு சென்றார். கவர்னரை கண்டார் அவருக்கு ஸலாம் சொன்னார் பதிலுக்கு கவர்னரும் பீர்க்கம்மாவின் காரணங்களை பற்றி ஸலாம் சொல்லி சுகம் விசாரித்தார். அன்று முதல் பீர்க்கம்மா கவர்னர் கம்மாவாக மாறினார் என்ற கதை சுவாரஸ்யமாக இருந்தது.

இன்னும் கதை கேட்க ஆர்வமாக இருந்தது இப்தார் நேரம் நெருங்கியதால் அங்கிருந்து விடைபெற்று சென்றேன். இப்தார் கடை ஒன்றும் சொன்னார்கள். ஒலி வங்கிக்கு முன்னால் எந்த வார்த்தை பிசகும் இல்லாமல் மீரான் மொஹிதீன் சொன்ன கதைகள் இரண்டு படிப்பினைகளை எனக்கு இந்த வயதில் கிடைத்தது ஒன்று வயது ஒன்றும் தடை இல்லை ஆசை இருந்தால் எதையும் சாதிக்கலாம். இரண்டு சிறுவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு வடிகால் அமைத்துக் கொடுக்கவேண்டும்.

மீரான் மொஹிதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த நிகழ்ச்சியை மிக சிரமங்கள் எடுத்து நமதூரில் புத்தக கண்காட்சியுடன் இணைத்து வழங்கிய எழுத்து மேடை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

சின்ன சின்ன ஆசை
முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவை கையில் பிடித்து விட ஆசை.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved