Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:31:45 AM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10274
#KOTW10274
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 24, 2013
40,000-க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்களில் இன்று (பிப்ரவரி 24) இரண்டாம் சுற்று பல்ஸ் போலியோ முகாம்: அரசு தகவல்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2210 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இரண்டாம் சுற்று பல்ஸ் போலியோ முகாம் இன்று நடைபெறுகிறது. முதல் முகாம் கடந்த மாதம் 20 ம் தேதி அன்று நடைபெற்றது. இன்று நடைபெறும் முகாம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பு வருமாறு:

கடந்த ஜனவரி மாதம் 20-1-2013 அன்று, முதல் சுற்று பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதில் 70.3 இலட்சம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயனடைந்தனர். வருகின்ற 24-2-2013 அன்று, இரண்டாம் சுற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கு பொது சுகாதாரத்துறை அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளது. முதல் சுற்று முகாமில், போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் கடந்த ஒரு மாதத்தில் பிறந்துள்ள குழந்தைகளுக்கும் 24-2-2013 ஞாயிறு அன்று சொட்டு மருந்து கொடுக்கப்படும்.

சிறப்பு சொட்டு மருந்து மையங்கள்

முதல் சுற்றின் போது, 40,000-க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாம் சுற்றிலும், அதே மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள்:

பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக கூடுதலாக 1013 சிறப்பு மையங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இரவு, பகலாக மூன்று நாட்களுக்கு இம்மையங்கள் செயல்படும்.

தொலை தூர பகுதி வாழ் குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள்:

தொலை தூரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு 771-க்கும் மேற்பட்ட நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொது மக்களுக்கான முக்கிய செய்தி:

1) 24-2-2013 அன்று 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

2) தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

3) சொட்டு மருந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு குழந்தைகளின் விரலில் மை வைக்கப்படுகிறது.

4) சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

பிற துறைகளின் பங்கீடு:

இந்த முகாமில் சமூக நலத்துறை, ICDS, கல்வித்துறை, வருவாய் துறை , ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாக துறை ஆகிய அரசு துறைகள் மற்றும் அரசு சாராத்துறைகளான ரோட்டரி, இந்திய மருத்துவ கழகம் (IMA), இந்திய குழந்தைகள் கழகம் (IAP), லைன்ஸ் கிளப் ஆகியவைகளும் ஈடுபடுகின்றன. மேலும் 2 இலட்சம் பணியாளர்கள் இம் முகாமில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலியோ இல்லாத தமிழகம்:

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலியோ நோய் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கடந்த 9 ஆண்டுகளாக போலியோவினால் எந்தக் குழந்தையும் பாதிக்கப்படவில்லை. ஆனாலும் நாட்டின் வேறு பகுதிகள் மற்றும் வேற்று நாடுகளிலிருந்து போலியோ வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பிருப்பதால், இங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ முகாம் நாளன்று சொட்டு மருந்து கொடுப்பது மிகவும் அவசியம். அனைத்து பெற்றோர்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஊனமற்ற சமுதாயத்தை உருவாக்க உறுதி எடுப்போம்

(ஜெ. ராதாகிருஷ்ணன்)
அரசு செயலாளர்.


இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved