Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:44:17 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10277
#KOTW10277
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 24, 2013
முதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்தநாள் விழா! துணிவுடன் செயல்படும் முதல்வரின் கட்சியில் உறுப்பினராகப் போவதாக நகர்மன்றத் தலைவர் பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4127 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 9)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர அதிமுகவினர் சார்பில் நடத்தப்பட்ட - முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில், நகர்மன்றத் தலைவர் கலந்துகொண்டு மரங்களை நட்டினார். விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் நகர அதிமுகவினர் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்த நாள் விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முனையில் நடைபெற்றது.



நகர அதிமுக நிர்வாகிகளுள் ஒருவரும், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உள்ளிட்ட - கட்சியின் அங்கத்தினர் முன்னிலை வகித்தனர்.

ஹாஜி எஸ்.ஏ.மெய்தீன் விழாவிற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். பாலப்பா முஹம்மத் அப்துல் காதிர், அதிமுகவின் சாதனைகளை விளக்கிப் பேசினார்.





இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலத் திட்டங்களைப் புகழ்ந்து பேசிய அவர், ஒரு பெண்ணாக இருந்துகொண்டு - பல்வேறு இடைஞ்சல்களுக்கிடையிலும், நீதி - நேர்மைக்காக துணிவுடன் செயலாற்றி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் நிர்வகித்து வரும் முதல்வரின் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், மனதளவில் தான் ஏற்கனவே உறுப்பினராகவே உள்ளதாகவும், இறைவன் நாடினால் விரைவில் முறைப்படி உறுப்பினராகப் போவதாகவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.



இறை சக்தி, மக்கள் சக்தி ஆகிய மாபெரும் சக்திகளைத் தாண்டி வேறெந்த சக்தியும் நியாயத்திற்கெதிராக எதையும் சாதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

பின்னர், ஜெயலலிதா பேரவை தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் ஏரல் எஸ்.ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார்.



எஸ்.புரட்சி சங்கர் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. பின்னர், முதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 65 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி துவங்கியது. நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - விழா நிகழ்விடம் அருகில் மரக்கன்று நட்டு திட்டத்தைத் துவக்கி வைத்தார். பின்னர், முன்பதிவு செய்த பொதுமக்களுக்கு 64 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.













அதனைத் தொடர்ந்து, 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏரல் எஸ்.ரமேஷ் வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.



இவ்விழாவில், நகர அதிமுகவினர், மாவட்ட - ஒன்றிய - நகர நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



கள உதவி:
O.A.K.ஷஃபீயுல்லாஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Cnash (Makkah) [24 February 2013]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25704

வரவேற்க்கதக்க முடிவு.. தாமதம் வேண்டாம்.. இன்றைய சூழலில் ஒரு அரசியல் பாதுகாப்பு தேவை.. திமுக என்ற கட்சிக்கு பல சுயேட்சையாக தேர்வு செய்ய பட்ட உறுப்பினர்கள் அனுதாபியாக மாறி மேடைகளின் தோன்றும் போது.. சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி ஆளும் அதிமுக கட்சியில் இணைவதில் தவறில்லை .. ஏதோ நல்லது ஊருக்கு நடந்தால் சரி .. வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எந்த கட்சியும் தேவை இல்லையே !!
posted by முஹம்மது நூஹ் (chennai) [24 February 2013]
IP: 203.*.*.* India | Comment Reference Number: 25705

அன்பு சகோதரி அவர்களே நீங்கள் எந்த கட்சியையும் சாராதவர் என்ற மனநிலையிடுடன் உங்களுக்கு வாக்களித்து உங்களை வெற்றி பெற செய்துள்ளார்கள் அதனை மனதில் வைத்து எந்த முடிவானாலும் எடுங்கள்.நல்லதை செய்வதற்கு எதற்கு நீங்கள் கட்சியை சார்ந்து இருக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by sulaiman (saudi arabia) [24 February 2013]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25709

அதெல்லாம் சரி, banner இல் வாழ்த்த வயதில்லை, வணங்குறோம் நு அடிச்சிருக்கிரார்களே , WAT S DIS? நம்மூர் தொன்டர்களும் வாழ்த்த வயசில்லை ன்னு வணங்க ஆரம்பிசிட்டங்கள?? ASTHAGFIRULLAH.

CAN SOMEBODY EXPLAIN PLS?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mannar Abdur Rahman (bangalore) [24 February 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25712

இதே இதை தான் நாங்கள் எதிர் பார்த்தோம் ! சரியான முடிவு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...காயல் புரட்சி தலைவி
posted by mackie noohuthambi (kayalpatnam) [24 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25713

ஆபிதா அம்மா அவர்களின் அறிவிப்பு தாமதமாக வந்துள்ளது. ஏற்கெனவே நகரின் பட்டி தொட்டிகளில் மூலை முடுக்குகளில் முக்காடிட்டு கசிந்து வந்த செய்திதான். இன்றே அவர்கள் அதிமுக வில் இணைந்திருக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒரு வங்கி திவால் ஆகியபோது உலகநாடுகளுக்கு அது தெரியுமுன்னமே சஹர் நேரத்தில் நமதூரில் செய்தி வெளியாகி ICICI வங்கியில் நமது பெண்கள் ATM மில் பணம் எடுத்து வங்கி நிர்வாகத்தையே அதிர வைத்தார்கள். அப்படி பட்ட ஊரில் ஆபிதா அம்மா அவர்கள் இந்த அறிவிப்பை காலம் தாழ்ந்து அறிவித்திருக்கிறார்கள்.

நீங்கள் எந்த கட்சியில் இருக்கிறீர்கள் எனபது நமது மக்களுக்கு முக்கியமல்ல. நீங்கள் என்ன வாக்குறிதிகளை மக்கள் முன் வைத்து ஆட்சியை கைப்பற்றினீர்கள், இப்போது அந்த இலக்கை நோக்கி நீங்கள் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறீர்கள் என்பதை தான் மக்கள் அவதானித்து கொண்டிருக்கிறார்கள்.

சாதனையாளர்கள் எல்லாம் துணிச்சலாக பேச வேண்டும் என்ற நியதி கிடையாது. துணிச்சலாக பேசுபவர்கள் எல்லாம் சாதனையாளர்களாக ஜெயலலிதாவாக ஆக முடியாது.

பூமியில் நடப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. தெளிவான திட்டம். கடும் முயற்சி, மக்களுக்கு சேவை செய்யும் வைராக்கியம், எடுத்து வைக்கும் வாதங்களில் நேர்மை எல்லோரையும் அணைத்து செல்லும் பொறுமையான நற்குணம் இவைதான் உங்கள் திறமைக்கு துணை நிற்கும். வெறும் பேச்சுக்கள் மட்டுமல்ல.

எனினும் உங்கள் துணிச்சலான முடிவை இன்று அறிவித்ததற்கு வாழ்த்துக்கள். அதிமுக வில் இணைவதால் இந்த ஊருக்கு என்ன நன்மை செய்யமுடியும் என்று யோசித்து உடனடியாக அந்த நல திட்டங்களை பெற்று தாருங்கள்.

TIME AND TIDE WAIT FOR NO MAN..போர்குணம் என்பது தீக்குச்சி போல்...அது உரசும் போது பற்றிக்கொள்ள வேண்டும். அது எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் கொள்ளிக் கட்டைபோல் இருக்கக் கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [24 February 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 25714

நீங்கள் எந்த கட்சியையும் சேராத நடுநிலையானவர் என்று நம்பி தான் உங்களுக்கு வாக்களித்து மக்கள் உங்களுக்கு தலைமை பதவியை அமானிதமாக தந்துள்ளார்கள்,இப்போது நீங்கள் aiadmk இல் இணைவதால் அந்த மக்களின் நம்பிக்கையை வீனடிக்கப்போகிரீர்கள்,

அதோடு மட்டுமல்ல அவ்வாறு நீங்கள் இணைவதால் நீங்கள் தோல்வியின் முதல் படியை அடைந்து விட்டீர்கள் என்றே நடுநிலையாளர்கள் கருதுவார்கள் ,போராடுவது என்ற முடிவோடு தானே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றீர்கள், இப்போது ஏன் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறீர்கள்? உங்களுக்கு தெரியிமா சுவாமி விவேகனந்தரின் போதனை? ARISE,AWAKE TILL YOU REACH YOUR GOAL, எனவே இப்போதாவது சுயமாக சிந்தனை செய்து நல்ல முடிவு எடுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வேங்கையின் கூட்டத்தால் வெருண்ட வெள்ளாடு! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [24 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25715

நகராட்சி தலைவி அவர்கள் எந்த கட்சியில் இணய இருக்கிறார்கள் என்பது அவரின் சொந்த உரிமை அதில் தலையிட சுதந்திர பூமியில் எவருக்கும் உரிமையில்லை!

எக் கட்சியிலும் சேராமல் தனியாக துணிச்சலாக காரியமாற்றுவார் என்நகபகலாகறு எதிர்பார்த்தேன், ஆனால் என்திசை எதிர்ப்புகளும் இரவு, பகலாக மாறி மாறி வந்து தாக்குவதாக கேள்விப்பட்டேன், அத்தாக்குதலில் தத்தளிக்கும் நிலையை நித்தம், நித்தம் பார்த்து ரசிக்கும் பட்டத்து ராஜாக்களின் பேரானந்ததிற்கு அளவே இல்லை என்ற இழிநிலை செய்திகளும் வந்தவண்ணமாகவே இருந்தது!

ஒரு பெண்ணாக இருந்து எத்தனை நாள்தான் தனியாக நின்று போராட முடியும்? தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஆளும் கட்சி அணியில் அங்கம் வகிக்கபோகும் உங்கள் முடிவினால் உங்களுக்க மட்டும் பாதுகாப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல், ஊருக்கும் நல்ல பல நன்மைபெறும் திட்டங்களை பெறுவதற்கும் பாலமாக இருந்தால், உங்கள் முடிவை உளமார ஊர்நன்மை கருதி வரவேற்கும் நடுநிலை நெஞ்சங்ககளில் நானும் ஒருவன்!

அதே நேரத்தில் என்னைப் பொருத்தவரை அதிமுக வானது முஸ்லிம் மத விரோதபோக்கிற்கு வித்தூன்றும் கட்சி என்பது எத்தனையோ சான்றுகள் கடந்த காலத்தின் கல்வெட்டு காட்சிகளாகும்!

அவ்வேதனை காட்சிகளில் எள்ளலவேனும் உருவாக நீங்கள் தலைவி என்ற முறையில் காரணமாக இருப்பீர்களேயானால், உங்களை எதிர்க்கும் படைகளில் நான் தளபதியாக இருக்கவும் தயங்க மாட்டேன்!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by SALMAN FARIS (YANBU ) [25 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25721

சபாஸ் சரியான அடி....

தலைவிக்கு வாழ்த்துக்கள் .....
நம்மது தலைவியின் முடிவு மிக மிக அழகான முடிவு ....

தலைவியின் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [25 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25722

நமது நகரமன்ற தலைவி ஆபிதா அம்மையாரின் அரசியல் கன்னி பேச்சு தயக்கமும், தமாதம்மகவே இருக்கிறது, முழு வீச்சில் உறுதியாகவே இல்லையே?

முதல்வர் ஜெயலிதாவின் 65வது பிறந்த தினத்தை ஒட்டியே புரட்சிதலைவர் MGR துவங்கிய அ.இ,அ தி மு க முழுமனதாக இணைகிறேன் என்று பேசி இருக்கலாம்.

ஆபிதா அம்மையார், நான் சார்ந்து இருக்கும் அ.இ.அ.தி.மு.க இணைய முன்வந்தமைக்கு வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் புரட்சி தலைவரின் இரத்தத்தின் இரத்தமான எனது அன்பு உடன்பிறவா கழக உடன்பிறப்புகளே ஆபிதா அம்மையார்க்கு நல்ஆதரவு கொடுத்து நகரமன்ற பணிகளை நல்லமுறையில் வழி நடத்திட உங்களை அன்புடன் வேண்டுகிறான்.

அண்ணா நாமம் வாழ்க, புரட்சி தலைவர் MGR நாமம் ஓங்குக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. சபாஷ் சரியான போட்டி!
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [25 February 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25726

இந்த மாதிரி ஏதாவது செய்தால் தான் ஒழுங்காக ஆட்சி நடத்த விடுவார்கள். ஊருக்கும் ஏதாவது நல்லது நடக்கும்.

சகோதரர் ஆதம் சுல்தான் அவர்கள்:- ""என்னைப் பொருத்தவரை அதிமுக வானது முஸ்லிம் மத விரோதபோக்கிற்கு வித்தூன்றும் கட்சி என்பது எத்தனையோ சான்றுகள் கடந்த காலத்தின் கல்வெட்டு காட்சிகளாகும்!"" என்ற கருத்தை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் அன்பான ஒரு கேள்வி.

திமு க வில் என்றால் பரவாயில்லையோ? எதிரி எப்போதும் முதுகில் குத்துவான் என்பது தான் நடைமுறை. ஆதலால் நாமும் கவனமாக இருக்கலாம். தி மு க என்ற போலி நண்பன்? பீ ஜே பி யை ஆட்சி கட்டிலில் உட்கார வைத்து அழகு பார்த்தது யார்? பீ ஜே பி வந்துடுவான் என்று பூச்சாண்டி காட்டி காங்கிரசுக்கு ஓட்டு போட சொல்லி இப்ப மட்டும் என்ன வாழுது?

ஆதலால் அந்த காலம் எல்லாம் போய் விட்டது. மக்கள் மிகவும் தெளிவாகவே உள்ளார்கள்.

ஹைதுரூஸ் ஆதில்,கோழிக்கோடு-கேரளா

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Salai S Nawas (singapore) [25 February 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 25727

கத்திரிக்கு பயந்து சுருக்கி எழுதுகிறேன்.

லேட் முயற்சி ஆனா லேட்டஸ்ட் முயற்சி.

வாழ்த்துக்கள் தலைவி.

தலைவி பதவி ஏற்ற நாளில் இருந்தே, அவர்கள் எல்லா நலனில் அக்கறை கொண்டிருந்த தளபதி மீசை மெய்தீன் மாமா என்றும் உங்களுக்கு தந்தை ஸ்தானத்தில் உறுதுணையாக இருப்பார்கள்.

வளமான காயலை உருவாக்குங்கள்.
முன்னேறுங்கள் தலைவி.

- அன்புடன் மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. எதிர் வாதம் அல்ல ..
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [25 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25728

நண்பர் ஹய்துருஷ் அவர்கள் என்பெயரை இழுத்து அன்பான கேள்வி என்று கேட்பதால் பதில் சொல்ல முனைகிறேன் தயவுசெய்து எதிர்வாதம் என்று எடுத்துக்கொள்ளவேண்டாம்!

இதோ உங்கள் அன்பான கேள்விக்கு என்னுடைய சிறு விளக்கம்! திமுக, மதிமுக, கம்னிஸ்ட் போன்ற மற்ற கட்சிகளை விட அதிமுக மோசம் என்றோ அல்லது திமுக தான் நல்ல கட்சி என்றோ நான் ஒப்பிட்டு கூறவில்லை!

முற்கால நடவடிக்கையை வைத்து ஒரு நபரை பற்றி விமர்சிப்பது எதார்த்தம்,அதனால் மற்றவர்களெல்லாம் மதிப்புக்குறிய மாசற்றவர்கள் என்று நற்ச்சான்றிதல் நான் தந்தது போல் உங்கள் கருத்து உள்ளது. உங்கள் நினைப்பின்படி இல்லை என்பதுதான் என் நிலை அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Farook (Saudi Arabia) [25 February 2013]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25729

ஆதம் சுல்தான் காகவின் கருத்தை வரவேற்கிறேன். தீமுகவாகட்டும், ஆதிமுகவாகடும், இரண்டும் நம்மவர்கள் நடத்தும் கட்சி இல்லை. அதிமுக எதிரி, திமுக துரோகி என்று சொல்லியே ஒரு சிலர் ஆதில் அதிமுக விருக்கு வால்புடிக்க நினைக்கிறார். இன்று வரை மோடியோடு தைரியமா தொடர்பு வைத்து கொண்டு இருக்கும் ஒரே அரசில்யல் வாதி ஜெயா தான். இனியும் எதிரி துரோகி என்று பிரிச்சி விளயாடவேணாம். திமுகளே சேருவத்தை ஒன்னும் சுல்தான் காகா நியாயபடுத்து எழுதவில்லையே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Abdul Majeed (Bangalore) [25 February 2013]
IP: 202.*.*.* India | Comment Reference Number: 25730

.... கெட்டால் குட்டி சுவர் என்ற பழமொழி தான் நியபாகதிட்கு வருகிறது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. சரியான நேரத்தில் சரியான முடிவு
posted by Salai Sheikh Saleem (Dubai) [25 February 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25731

சகோதரி ஆபிதா அவர்கள் நகராட்சி தலைவராக வரவேண்டும் என்பதை விட மக்கள் மன்றத்தில் நேர்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர்தான் நகராட்சியின் தலைவராக வர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர்களில் நானும் ஒருவன் எனபது பலருக்கும் தெரிந்ததே.

என்று, இப்போது நடைமுறையில் இருக்கும் நகராட்சி மன்ற குழு தலைவியிடம் நீங்கள் நல்ல திட்டங்கள் ஏதும் செய்வதாய் இருந்தாலும் கூட உங்களை நாங்கள் எதிர்ப்போம் என்ற அளவிற்கு துவேஷம் கொள்ள ஆரம்பித்தார்களோ, அன்றே நான் தலைவியிடம் "இந்த மன்றம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்றால் நீங்கள் முதலில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் நகராட்சி நீங்கள் நினைப்பதை போல் செயல்பட வேண்டுமானால், இவர்களை விட அதிகாரம் கூடிய ஓர் சக்தி உங்களிடம் இருக்க வேண்டும். இதற்க்கெல்லாம் பதில்கள் புரட்சிதலைவி அம்மா அவர்களிடம் தான் இருக்கிறது. தயவு செய்து யோசிக்காது முடிவு எடுங்கள், அம்மாவின் ஆதரவு என்றதுமே அநியாயக்காரர்களின் கொட்டம் அடங்கிவிடும் என்று நாங்கள் கூறிய அறிவுரைகளை லேட்டாக ஆனாலும் லேட்டஸ்ட்டாக நிறைவேற்றி உள்ளீர்கள்" பாராட்டுக்கள்.

தொடரட்டும் உங்களின் நேர்மையான நிர்வாகம் ! செழிக்கட்டும் காயல் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. துணிந்தவர் துவண்டது ஏனோ !!?
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) [25 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25735

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகர்மன்ற தேர்தலில் கட்சி சார்பின்றி நின்று வெற்றி பெற்று மக்களுக்கு நல்ல பல சேவைகளை செய்ய வேண்டும் என்று நாடினார்.

அதன்படி தேர்தலில் நின்று பல போராட்டங்களுக்கு மத்தியில் வெற்றியும் பெற்று, தலைவராகவும் பதவியேற்று இன்றுவரை தலைவராகவே இருந்து வருகிறார்.

-------------------------------------------

தலைவர் என்ற டைட்டில் மட்டும்தான் இருக்கிறதே தவிர தலைவருக்குரிய எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை / எடுக்கப்படவில்லை. நகர்மன்ற அங்கத்தினர்களுடைய முழு ஆதரவும் இல்லை. அரசு சிப்பந்திகளுடைய முழு ஒத்துழைப்பும் இல்லை. பலவிதமான போராட்டங்கள் நகர்மன்றத்தில் ஏற்பட்டாலும் தலைவியும் அசையாமலே இருந்தார்.

மொத்தத்தில் நகர்மன்றத்தில், எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்காக எந்த ஒரு நல்ல திட்டமும் நிறைவேற்றப்பட வில்லை என்றாலும் கூட , பெரிய ஊழல்கள் ஏற்படாவண்ணம் பாதுகாக்கபட்டு வந்தன என்றே சொல்லலாம்.

--------------------------------------

தலைவரை பொறுத்தமட்டில் ஊழல் இல்லை ஊழலுக்கு துணைப்போகவும் மாட்டார் என்பதே! அவருடைய எதிரியும் அறிந்த உண்மை.

இதே நிலை இன்னும் மூன்றரை வருடம் நீடிக்கும் – இதனால் நம்முடைய நகராட்சியின் முன்னேற்றம் தடைபடும் என்றே பலரும் நம்பினார்கள். இருந்தாலும் அடுத்து வரக்கூடிய நகர்மன்றம் கண்டிப்பாக ஊழலற்ற மன்றமாக அமையும் என்பதே எல்லோருடைய எண்ணமாகவும் இருந்தது.

இப்படி போகிறப்போக்கில் போனால்தான் ஊழல் ஒழியும் இதுதான் நல்ல வாய்ப்பு என்றே மக்கள் பலரும் நம்பினர்.

ஆனால் இன்று தலைவர் அவர்கள் அறிவித்திருக்கும் செய்தியில், “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், மனதளவில், தான் ஏற்கனவே உறுப்பினராகவே உள்ளதாகவும், இறைவன் நாடினால் விரைவில் முறைப்படி உறுப்பினராகப் போவதாகவும் “ சொல்லி இருப்பதை பார்க்கும்பொழுது, மக்கள் அனைவர்களுடைய எதிர்பார்ப்புகளும் பூஜ்ஜியமாகும், அதனால் அவர் அரசியலில் சேராமல் இருப்பது நல்லது.

-------------------------

என்னைப்பொறுத்தவரை எனக்கு எந்த அரசியல் கட்சியும் கிடையாது – அரசியலுக்கு அப்பால்பட்டவன்.

அதனால் அவர் ஆளும் கட்சியில் சேர்ந்தாலும் , எதிர்கட்சியில் சேர்ந்தாலும் இல்லை பெயெரே தெரியாத புதிய கட்சியில் சேர்ந்தாலும் அரசியல் ,அரசியல்தான் அதை எவராலும் சரி காண முடியாது. அதன் காரணமாகவே அவர் தலைவராக இருக்கும்பொழுது அரசியலில் சேர்வது நல்லது அல்ல என்று கூறுகிறேன்.

அவர் அரசியலில் சேர்வதற்கு பல காரணங்கள் சொல்லலாம் – அரசியலில் அதுவும் ஆளும் கட்சியில் சேர்ந்தால் நம்ம ஊருக்கு பல வகையிலும் நன்மைகள் வரும் , அந்த திட்டம், இந்த திட்டம் என்று கலர், கலராக கனவு திட்டங்களை சொல்வார்கள் ஆனால் எந்த திட்டமும் வராது. ஏதோ சில, வந்தே ஆகவேண்டிய திட்டங்கள் வரும் அதை இவர்கள் வந்துதான் கொண்டுவந்ததாக ஒவ்வொருவரும் சொல்லிக்கொள்வார்கள்.

முன்பு இருந்தவர்களும் ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த திட்டங்களை ஊருக்கு கொண்டு வந்தார்கள் ?. எனவே அரசியலில் சேர்வது என்பது சரியான தீர்வு ஆகாது.

-----------------------

ஆளும்கட்சி அரசியல் வாதிகள் உங்களிடம் சொல்லலாம் எனக்கு இன்னயின்ன ஆளை தெரியும் , இதை, இதையெல்லாம் நம்ம ஊருக்கு கொண்டுவரலாம் என்று – அதெல்லாம் மம்மாத்து வேலை. நடக்கப்போகிறது ஒன்றுமில்லை.

நீங்கள் அரசியலில் சேர்ந்தால் இப்பொழுது உங்களுக்கு இருக்கிற பெயர் கெட்டுப்போகும் என்பது திண்ணம்.

அரசியலில் இல்லாத வரை நீங்கள் , உங்கள் இஷ்டப்படி எந்த முடிவும் எடுக்கலாம். எப்பொழுது அரசியலில் சேர்ந்து விட்டீர்களோ, உங்களால் சுயமாக எந்த முடிவும் எடுக்க இயலாது – எல்லாம் மேலிடத்து உத்தரவுபடிதான் நடக்கும் (எல்லா கட்சியிலும் இந்த கதிதான்).

கடந்த ஒன்றரை வருடமாக கட்டிக்காத்து வந்த ஊழல் தடுப்பு இனிமேல் தடுப்பின்றி வெளிப்படையாக நடைபெறும். வெளிப்படையாக மட்டுமல்ல நீங்கள் விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும் உங்கள் மூலமாகவே ஊழல் நடைபெறும் – அதை உங்களால் தடுக்க இயலாது.

உங்கள் கை சுத்தமாக இருக்கலாம், ஆனால் எப்போதும் சுத்தமாக இருக்காது அவ்வவ்வப்போது கறை படும்போதெல்லாம் சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

-----------------------

எனவே! நீங்கள் தலைவராக இருந்து கொண்டு அரசியலில் சேர்ந்து கெட்டப் பெயர் வாங்குவதைவிட தலைவர் பதவியை “ இராஜினாமா “ செய்வது மிகவும் நல்லது. அது உங்களுக்கு நல்ல பெயரையே தரும்.

நகர்மன்றத்திலே எந்த ஒத்துழைப்பும் இல்லாததால் இராஜினாமா செய்ததாகவே மக்கள் பேசிக்கொள்வார்கள்.

ஆகவே, முடிவாக என்னுடைய அறிவுரை, நீங்கள் பதவியில் இருந்துக்கொண்டு அரசியலில் சேர்வதை விட தலைவர் பதவியை இராஜினாமா செய்து விட்டு, நீங்கள் விரும்பினால் அரசியலுக்கோ, அல்லது உங்களுடைய பள்ளிக்கூடத்திற்கோ செல்வதுதான் சிறந்தது என்பது. இதை நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால் , பிற்காலத்தில் கைசேதப்படுவீர்கள் என்பதையும் தெளிவுப்படுத்துகிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by mohmedyounus (muscat) [25 February 2013]
IP: 85.*.*.* Oman | Comment Reference Number: 25736

மறைமுக காவி கட்சியான அ.தி.மு.க வில் அடைக்கலம் ஆனபின் உங்களின் தேர்தலுக்கு முன்னான வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விட்டீர்கள். அ .தி.மு க வின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் பல நகராட்சிகளில் கூட இன்னும் எந்த விதமான நலத்திட்டங்களை நிறைவேற்றிவிடாத நிலையில், யாருக்கோ பயந்து இதோ அம்மா கட்சியில் அடைக்கலம் ஆகிவிட்டேன் என்று கூறுவதற்கு பதில் "நலத்திட்டங்களுக்காக" என்று சப்பை கட்டு கட்டவேண்டாம். இதன் மூலம் இனி வரும் நகராட்சி தேர்தல்கள் எல்லாம் 'அரசியல் சார்பு' தான் என்ற குரலுக்கும் வலுசேர்த்து விட்டது மட்டும் அல்லாமல் அப்படி ஒரு நிலை உருவானால் காயல்பட்டணம் நகராட்சி இனிமேல் "தி.மு க வசம்தான் என்பதற்கும் ஆருடம் கூறி விட்டீர்கள்.

வாழ்த்துக்கள்!!.

சகோதரர் ஆதம் சுல்தான் அவர்களே "அம்மா கட்சி ஒரு பாதி காவி கட்சி தான்".அதில் எந்த வித சந்தேகமும் இல்லை.அதே நேரத்தில் கலைஞ்சர் அந்த முழு காவி கட்சிக்கு ஒன்னும் வேண்டாத நபர் அல்ல. "

The self declared saviour of Hindusim-Mrs.Jayalalitha always hobnobbing with sangparivar even though she did not rely on them for her govt survival. So, she advocates pro hinduism by her action. But the self declared saviour of minority Mr.Karunanithi did not withdraw support to the B.J.P govt at the cetre during the Gujarat carnage when Modi was chief minister in Gujarat. So he is pro minority by words only.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...சிந்தித்து பார்த்து........ செய்கையை ..மாற்று......!!!
posted by OMER ANAS (DOHA QATAR.) [25 February 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 25737

அன்புள்ள சகோதரி உங்கள் எதிபார்ப்பை நிறைவேற்ற நீங்கள் எந்த கட்சியிலும் சேரலாம்.தப்பே இல்லை! வாழ்த்துக்கள்! ஆனால் இங்கே உங்கள் சிறப்புரை எங்களை போன்ற நடுத்தரவாதிகளைமீண்டும் சிந்திக்க வைத்துள்ளது. காரணம்,,,,

(இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலத் திட்டங்களைப் புகழ்ந்து பேசிய அவர், ஒரு பெண்ணாக இருந்துகொண்டு - பல்வேறு இடைஞ்சல்களுக்கிடையிலும், நீதி - நேர்மைக்காக துணிவுடன் செயலாற்றி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் நிர்வகித்து வரும் முதல்வரின் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், மனதளவில் தான் ஏற்கனவே உறுப்பினராகவே உள்ளதாகவும், இறைவன் நாடினால் விரைவில் முறைப்படி உறுப்பினராகப் போவதாகவும் அவர் தனதுரையில் தெரிவித்தார். இறை சக்தி, மக்கள் சக்தி ஆகிய மாபெரும் சக்திகளைத் தாண்டி வேறெந்த சக்தியும் நியாயத்திற்கெதிராக எதையும் சாதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.copy &paste)

உண்மையில் இறை சக்தி மீது மட்டும் நம்பிக்கை உங்களுக்கு இருக்குமேயானால்,இடையில் தோன்றி மறையும்இந்த கட்சிசக்தி மீது நம்பிக்கை வைத்ததேன்? இக் கட்சி மட்டும் நியாயத்துக்கு எதிராக என்ன சாதித்து விடும்? நன்கு சிந்தித்து முடிவு எடுக்கவும். நல்ல முடிவாக எடுக்கவும்!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Mohamed Abdul Kader - Khobar (Al Khobar) [25 February 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25738

முஸ்லிமாகிய நாம் முஸ்லிம் லீக் கட்சியில் சேருவதுதான் சால சிறந்தது. முஸ்லிம் பின்னால் தக்பீர் கட்டுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Zainul Abdeen (Dubai) [26 February 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25745

"எல்லா புகழும் இறைவனுக்கே ... வல்லோன் அவனே துணை நமக்கே .."

" நான் காயல் பட்டின நகரமன்றத்தின் தலைவியாக தேர்வு செய்யபட்டால் - இறைவனின் உதவி கொண்டு மாற்றங்களை நமது நகர்மன்றத்திலும் நமதூரிலும் கொண்டுவருவேன். இன்ஷா அல்லாஹ் ")

மேற்கூறப்பட்டவை தலைவி ஆபிதா அவர்களின் தேர்தல் அறிக்கையின் முதல் வசனங்கள். .

இப்போது அவர்களின் நம்பிக்கை எதன் மீது சென்றுள்ளது ???? குப்பரடித்து, கொவ்ந்து அம்மா அவர்களை வணங்கும் / வழிபடும் கூட்டத்தில் ஆகிவிட வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...தலைவரின் துணிச்சலான mudivu
posted by Fuad (Singapore) [26 February 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 25747

அஸ்ஸலாமு அலைக்கும். தமிழக முதல்வரின் கட்சியில் தான் உறுப்பினராகப் போவதாக நகர்மன்றத் தலைவரின் முடிவு துணிச்சலானது, பாராட்டத்தக்கது.

ஆளும் கட்சியில் இணைந்து நமதூருக்கு நல்ல பல திட்டங்களை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை நம்மூர் மக்களுக்கு இருக்கிறது.

வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by syed omer kalami (colombo) [27 February 2013]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 25781

very very late decision .but most welcomed historical decision . See everybody will bet only for running horses . By joining hands do good to ppl n for town .

We want Aabitha thlaivi during her tenure did good to town,that only we need.nothing wrong clubing with the party in power. More over it will help u to do ur job freely .

by syed omer.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved