Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:02:45 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10772
#KOTW10772
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 10, 2013
அல்அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனக் கல்வியக பட்டமளிப்பு நிகழ்ச்சி! 3 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2939 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் “மத்ரஸத்துல் அஸ்ஹர் லி தஹ்ஃபீழில் குர்ஆனில் கரீம்” - அல்அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனக் கல்வியகம், மூன்றாண்டு கல்வித் திட்டத்தின் அடிப்படையில், 2001ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த திருக்குர்ஆன் மனனக் கல்வியகத்தில், மாணவர்கள் - 3 ஆண்டுகளுக்குள் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்யவும், பள்ளிக் கல்வியில் 8ஆம் வகுப்பு அரசுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, 9ஆம் வகுப்பில் இணைந்து பயிலவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

துவங்கி 12 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து, 13ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டும், திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள மாணவர்களுக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டச் சான்றிதழ் வழங்குவதற்காகவும், வருடாந்திர நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு நிகழ்ச்சி இம்மாதம் 01ஆம் தேதியன்று, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் உட்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.



அன்று காலை முதல் மாலை வரை, மாணவர்கள் பங்கேற்பில் - கிராஅத் போட்டி, துஆக்கள் மனனப் போட்டி, திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு) போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றன.

மஃரிப் தொழுகைக்குப் பின், இரவு 07.00 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெறும் மாணவர் ஹாஃபிழ் டி.எஸ்.முஹம்மத் ஜியாத் கிராஅத் ஓத, பட்டம் பெறும் மற்றொரு மாணவர் ஹாஃபிழ் ஆர்.யாஸர் அரஃபாத் அதன் தமிழாக்கத்தை வாசித்து, நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தனர். பின்னர், பட்டம் பெறும் மற்றொரு மாணவர் பி.எம்.செய்யித் இஸ்ஹாக் சிற்றுரையாற்றினார்.

காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ உரையாற்றினார்.



பின்னர், அல்அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனக் கல்வியகத்தில் பயின்று, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள,

(1) ஹாஃபிழ் பி.எம்.செய்யித் இஸ்ஹாக்
(த.பெ. எஸ்.ஐ.பரக்கத் முஹம்மத்
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம்)

(2) ஹாஃபிழ் டி.எஸ்.முஹம்மத் ஜியாத்
(த.பெ. தைக்கா ஸாஹிப்
புதுக்கடைத் தெரு, காயல்பட்டினம்)

(3) ஹாஃபிழ் ஆர்.யாஸர் அரஃபாத்
(த.பெ. ரஃபீக் முஹம்மத்
ஆறாம்பள்ளித் தெரு, காயல்பட்டினம்)

ஆகிய மாணவர்களுக்கு, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது (பட்டச் சான்றிதழ்) வழங்கப்பட்டது. பட்டச் சான்றிதழ்களை, மத்ரஸா ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் இம்ரான் உமரீ, ஹாஃபிழ் எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத், நிகழ்ச்சித் தலைவர், சிறப்பு விருந்தினர் மற்றும் கத்தீப் ஆகியோரிணைந்து மாணவர்களுக்கு வழங்கினர்.









பின்னர், பட்டம் பெற்ற மாணவர்கள் சார்பில், ஹாஃபிழ் டி.எஸ்.முஹம்மத் ஜியாத் ஏற்புரை நிகழ்த்தினார்.



பின்னர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - சென்னையில் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்து வரும் மவ்லவீ முஜீபுர்ரஹ்மான் உமரீ பட்டமளிப்புப் பேருரையாற்றினார்.



அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ‘ஹாஃபிழ்கள் ஊக்கத் தொகை வழங்கும் திட்ட’த்தின் கீழ், அம்மன்றத்தின் சார்பில் அதன் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், பட்டம் பெற்ற ஹாஃபிழ் மாணவர்களுக்கு தலா ரூபாய் 2 ஆயிரத்து ஐநூறு தொகையை வழங்கினார்.



பின்னர், காலை முதல் மாலை வரை நடைபெற்ற பல்சுவைப் போட்டிகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.









ஆண்டிறுதித் தேர்வில் சிறப்பிடம் பெற்றமைக்காக,

ஹாஃபிழ் மாணவர் பிரிவில், பி.எம்.செய்யித் இஸ்ஹாக்,

இளநிலை மாணவர் பிரிவில், எஸ்.ஏ.என்.அஹ்மத் அம்மார், எஸ்.ஏ.என்.முஹம்மத் அலீ,

நடுநிலை மாணவர் பிரிவில், எஸ்.நூஹ் நுஃபைஸ், பி.முஹம்மத் ஹாரிஸ்,

உயர்நிலை மாணவர் பிரிவில், ஏ.எஸ்.சுவைலிம் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஐ.ஐ.எம். தீனிய்யாத் பிரிவில் சிறப்பிடங்களைப் பெற்றமைக்காக, முதல் பிரிவைச் சேர்ந்த
எஸ்.ஏ.என்.முஹம்மத் அலீ, எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா,

இரண்டாவது பிரிவில், எம்.என்.அஸ்லாம், எஸ்.முஹம்மத் உஸாமா,

மூன்றாம் பிரிவில், ஆர்.யாஸர் அரஃபாத், கே.எம்.ஃபாரூக் அப்துல்லாஹ் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஹிஃப்ழு பிரிவில், இவ்வாண்டின் சிறந்த மாணவருக்கான பரிசு எஸ்.எச்.ழியாவுத்தீன் அமீன் என்ற மாணவருக்கு வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, ஹிஃப்ழுப் போட்டி 8 ஜுஸ்வு பிரிவில் சிறப்பிடங்களைப் பெற்றமைக்காக, எஸ்.ஏ.என்.முஹம்மத் அலீ, எஸ்.ஏ.என்.அஹ்மத் அம்மார் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர், பேச்சுப் போட்டி முதல் பிரிவில் வெற்றி பெற்ற எம்.யாஸிர், எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகிய மாணவர்களுக்கும், இரண்டாவது பிரிவில் வெற்றி பெற்ற கே.எம்.ஃபாரூக் அப்துல்லாஹ், எம்.எஃப்.இப்றாஹீம் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

அடுத்து, துஆ மனனப் போட்டியில் வென்றமைக்காக, டி.எஸ்.முஹம்மத் ஜியாத், ஏ.எஸ்.சுவைலிம், ஆர்.யாஸர் அரஃபாத் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர், வினாடி-வினா போட்டியில் முதலிடம் பெற்றமைக்காக, பி.எம்.இஸ்ஹாக், எம்.ஏ.முஹம்மத் நூஹ், எஸ்.ஏ.என்.அஹ்மத் அம்மார், எஸ்.எச்.ரோஷன் ஆகியோருக்கும்,

இரண்டாமிடம் பெற்றமைக்காக, ஃபாஸில், எஸ்.கிழுறு மஃபாஸ், யாஸர் அரஃபாத் ஆகிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர், இந்நிகழ்ச்சியில் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



பின்னர், திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவு ஆசிரியர்களுக்கு, நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.



நிறைவாக, ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் நன்றி கூற, துஆ கஃப்பாராவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.



இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.





நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத், பிலால் ஏ.எச்.லுக்மான், ஒளிப்பதிவாளர் எம்.ஏ.அப்துல் ஜப்பார், ஐ.ஐ.எம். டிவி இயக்குநர் எஸ்.அப்துல் வாஹித் மற்றும் பலர் செய்திருந்தனர்.

படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mohamed Ibrahim S.A (Jeddah) [10 May 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 27359

Masha allah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Ahamed Mohideen 48 (Chennai) [10 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27363

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..

மாஷா அல்லாஹ்..வாழ்த்துக்கள்..பட்டம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து உதவிய சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...மாஷா அல்லா..
posted by Mohammed Nooh KA (Jeddah. Sharafiyyah.) [11 May 2013]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27372

வான்மறையாம் திருமறையை வாகாய் மனதினில் பதித்து இறைவனின் உகப்புக்குரிய ஹாபிழீன்களே நீங்கள் எல்லா வளமும் பெற்றுசிறந்தோங்க வல்லோனிடம் இறைஞ்சுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. உள்ளார்ந்த வாழ்த்துக்களுடன் இதமான துஆக்கள்!
posted by Khatheeb Muhammad Muhyiddeen (Doha - Qatar) [12 May 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 27387

இளவல்கள் செய்யிது முஹம்மது ஜியாது, செய்யிது இஸ்ஹாக், யாஸிர் அரஃபாத் ஆகியோர் ஹாஃபிழ் ஸனது பெற்ற செய்தி அறிந்து மகிழ்ந்தேன்.

அறிஞர் அஹ்மத் தீதாத் கருத்துப்படி, உலகின் அத்துணை அச்சு ஊடகங்களும் ஓட்டு மொத்தமாக அழிக்கப்பட்டாலும், நடமாடும் ஊடகமாக - தரமுடன் மனனமிட்டு தன் இதயமதில் இறைமறையை இதமாய் ஏந்தி இருக்கும் கோடானுகோடி ஹாஃபிழ்கள் மூலம் அருள்மறை குர்ஆன் மட்டும் மிக எளிதாக மறுபதிப்புச் செய்யப்பட இயலும். அல்ஹம்து லில்லாஹ்!

ஈன்ற பொழுதினிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்

தந்தை மகற்காட்டும் கடமை தன் மகனை
அவையத்துள் முந்திஇருப்ப செயல்

எனப் பெருமிதப் படும் வகையில் என் அன்பு மருமகன் செய்யிது முஹம்மது ஜியாது உட்பட அனைத்து இளவல்களும் தம் பெற்றோரின் கண் குளிர்ச்சியோடு, இறைமறையின் இனிய ஒளியில், நபிகளாரின் அழகிய வழிகாட்டுதலுடன், சிறப்புடன் நன்னெறி வாழ்ந்திட மனதார வாழ்த்துகிறேன்.

அல்லாஹ் இவர்களின் மனனத்தை நீடூழி காலம் நிலைத்திருக்கச் செய்வானாக! இறைமறையை வாழ்வின் ஒளிவிளக்காய் ஏற்று நடை போடும் முன்மாதிரி மிக்க வாழ்வியலாளர்களாய் ஆக்கித் தருவானாக! ஆமீன்!

++ கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் ++


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved