Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:21:35 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11335
#KOTW11335
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 20, 2013
காவாலங்கா நடத்திய சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்! துபை கா.ந.மன்ற தலைவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2969 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இலங்கை தலைநகர் கொழும்புவில் இயங்கி வரும் இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், துபை காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, காவாலங்கா சார்பில் அதன் செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

05/07/2013இல் காவாலங்கா சார்பில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு காவாலங்கா தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் தலைமை தாங்கினார். காரீ ஏ.டி.அப்துல் காதர் ஹாஜி திருமறை குர்ஆன் வசனங்களை கிராஅத்தாக ஓத, கூட்டம் துவங்கியது.



இக்கூட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

துவக்கமாக, காவாலங்கா தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் உரையாற்றினார்.



ஆடிட்டர் புகாரீ தலைமையில் இயங்கும் துபை காயல் நல மன்றத்தின் சேவைகளை வெகுவாகப் பாராட்டிப் பேசியதோடு, சென்ற வருடம் காவாலங்கா செய்த நற்பணிகளையும் அவர் தனதுரையில் எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் ஆடிட்டர் புகாரீ உரையாற்றினார்.



துபை காயல் நல மன்றம் ஆற்றி வரும் நற்பணிகளை தனதுரையில் விளக்கிப் பேசிய அவர், காவாலங்கா இன்னும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். காவாலங்கா உறுப்பினர்களின் கருத்துக்களை அறிய விரும்புவதாக தனதுரையினூடே ஹாஜி புகாரீ கூறியதன் பேரில், மக்கீ நூஹுத்தம்பி ஹாஜி, மா.செ.முஹம்மத் அலீ ஹாஜி, சிறப்பு அழைப்பாளர் ஹாங்காங் முத்துவாப்பா ஹாஜி ஆகியோர் நல்ல பல கருத்துக்களைக் கூறினர்.



அடுத்து, செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் உரையாற்றினார்.



காயலர்களுக்கு மட்டுமின்றி, இலங்கை மக்களுக்கும் காவாலங்கா செய்த பணிகளைக் குறிப்பிட்டார். குறிப்பாக, மல்வானை முபாரக் மகா வித்தியாலயத்தில் Advance Level (+2)இல் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியருக்கு ஊக்கப் பரிசுப் பொருட்கள் மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

பின்னர், காவாலங்கா சார்பாக, சிறப்பு விருந்தினர் ஆடிட்டர் புகாரீ அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. காவாலங்கா தலைவர் அதை சிறப்பு விருந்தினரிடம் வழங்கினார்.



சிறப்பு விருந்தினர் ஆடிட்டர் புகாரீ அளித்த பல ஆலோசனைகள் காவாலங்கா உறுப்பினர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தன.

இறுதியாக காயல் பாரம்பரிய முறைப்படி இடியாப்பம், கறி, சவ்வரிசி என விருந்து நடைபெற்றது. பின்பு ஏ.டி.ஹாஜியாரின் துஆ உடன் காவாலங்காவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இனிதே முடிவுற்றது.


இவ்வாறு, காவாலங்கா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...விருந்தாளியே விருந்தளித்த விந்தை
posted by mackie noohuthambi (kayalpatnam) [20 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28813

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட ஆடிட்டர் புகாரி அவர்களே விருந்தளித்து காயல் மக்களை கண்டு களித்தார் என்றார் என்ற செய்தி விக்கிலீக்ஸ், sorry , மக்கிலீக்ஸ் கசிய செய்வது கண்டு யாரும் ஆச்சரியப்பட வேண்டாம்.

அசைவு படம் வீடியோ வந்திருந்தால், அதை நானே வெளிப்படையாக சொல்வதை காணலாம்.

புன்சிரிப்பும் உபசரிப்பும் இலங்கையர்களின் இரு கண்கள். இது இன்று நேற்றல்ல, இந்த உலகம் தோன்றிய காலம் முதல் அந்த நாட்டு மக்களுக்கு இறைவன் அளித்த அருள் கொடை

உலக மக்களின் தந்தையான நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இந்த உலகுக்கு அனுப்பப்படும்போது, அவர்களை எங்கே இறக்குவது என்று யோசித்து அல்லாஹ் தெரிவு செய்த இடம் இலங்கை திரு நாடு என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த காலத்தில் அது தமிழ்நாட்டுடன் இணைந்து இருந்ததால் அவர்கள் பேசிய மொழி தமிழாகத்தான் இருந்திருக்கும். எனவே இலங்கை நமக்கு "தந்தை நாடு". மேலும் நமது தந்தைமார்கள் நம்மை ஆளாக்குவதற்கு தேர்ந்தெடுத்த நாடும் இலங்கைதான்.

தொப்புள் கொடி உறவு மட்டுமல்ல தாலிக்கொடி உறவும் நமக்கு இலங்கையுடன் உள்ளது. இவ்வளவு நெருக்கமும் பாசமும் மிக்க நமது நட்பு நாட்டுக்கு நாம் உதவி செய்ய கடமைப்பட்டுள்ளோம். அந்த உதவிகளை நமது கவாலங்கா சிறப்பாக செய்துவருகிறது.

மற்ற வளைகுடா நாடுகளிலும் அரபு நாடுகளிலும் சிங்கபூர் மலேஷியா போன்ற நாடுகளிலும் வாழும் காயலர்கள் அந்த நாட்டுக்கு செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. எனவே அவர்கள் உதவிகள் நமதூர் மக்களுக்கு மட்டுமே தேவைப்படுகிறது. காவாலங்கா இரண்டு நாட்டு மக்களுக்கும் உதவி செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. செய்தும் வருகிறார்கள். எனவே அவர்களின் சேவையை நாம் பெரிதும் பாராட்ட கடமை பட்டுள்ளோம்.

சிறப்பு விருந்தினர் ஆடிட்டர் புகாரி அவர்கள் நமது மக்களுக்கு விருந்து அளித்து கௌரவித்தது அவர்கள் பெருந்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இலங்கை மக்களின் உபசரிப்பு என்ற பண்புக்கு நான் சளைத்தவன் அல்ல என்ற உண்மையும் அங்கே வெளிப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத இஸ்லாம் என்று சங்கே முழங்கு, எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள காயலர்கள் ஒன்றாதல் கண்டே,
பொங்கு காயலருக்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு..

எல்லோருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...காவா லங்கா சிறப்புக் கூட்டம்
posted by J.S.A. Bukhari (Dubai) [21 July 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28816

அஸ்ஸலாமு அலைக்கும். நானும் என் குடும்பமும் சமீபத்தில் விடுமுறைக்காக இலங்கை சென்றிருந்தோம். கொழும்புவில் சகோதரர் ரபீக் அவர்களையும், சகோதரர் மக்கீ அவர்களையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நமதூர் காயல் சகோதரர்களை ஒரே இடத்தில் சந்திக்க வசதியாக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யுமாறு அவர்கள் இருவரையும் வேண்டிக்கொண்டேன். அதன் அடிப்படையில் மிகக் குறுகிய அவகாசத்தில் இப்படிப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தையே ஏற்பாடு செய்தது எனக்கு மிக ஆச்சரியமாகவே பட்டது.

அந்தக் கூட்டத்தில் எனக்கு அறிமுகமான பல உறவினர்களையும், நண்பர்களையும் வெகுநாள் கழித்து சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்வைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும். கொழும்புவில் இருந்தும், கண்டி, பெர்விளை போன்ற தூரமான பகுதிகளில் இருந்தும் கூட நமது சகோதரர்கள் அந்த கூட்டத்துக்காக, தங்கள் தொழில் மற்றும் சொந்த காரியங்களைத் தள்ளி வைத்து விட்டு, அதிலும் சிலர் தங்கள் குடும்பத்துடன் மிகச் சிரமம் எடுத்து வந்து கலந்து கொண்டது எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிக்க மகிழ்வைத் தந்தது மட்டுமில்லாமல், நமது ஊர் மீதும், நமதூர் மக்கள் மீதும் அவர்களுக்கு உள்ள பற்றையும், அக்கறையையும் காட்டியது.

அப்படிப்பட்ட ஒரு ஒற்றுமையுடன் நமதூர் மக்கள் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் நமதூர், நமதூர் மக்களின் நன்மைக்காக பாடுபடுவோமாக! அதற்கு அல்லாஹு துணை புரிவனாக! ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [21 July 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28818

நம் சகோதரர்களை ஒற்றுமையுடன் சங்கமிப்பதை பார்ப்பதே ஒரு அழகுதான்.

சகோ. ஆடிட்டர் புஹாரி காக்கா, எந்த நாட்டிற்கு அல்லது எந்த ஊருக்கு சென்றாலும், அங்குள்ள நம் மக்களை பார்க்கனும், பேசனும், ஒன்று கூட வைக்கனும் என்று துடியாய் துடிப்பார்கள். நம் வீட்டிற்கு வந்து நமக்கே விருந்து வைப்பார்கள். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு அதிக அபிவிருத்தியும், மன நிம்மதியையும் அருள்வானாக.

சங்க நாதம் நூஹு தம்பி காக்கா அவர்களே, நீங்கள் கூறிய கூற்று, அதாவது இலங்கைக்கும் நமக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்று பலரும் கூறுவார்கள், உண்மையும் கூட.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. தலைவருக்கு... தலைவர் பரிசு வழங்கல்..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [21 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28829

தலைவருக்கு... தலைவர் பரிசு வழங்கி சிறப்பித்தார் மகிழ்ச்சியான செய்தி - மாஷா அல்லாஹ்... இதுபோல் அணைத்து காயல் நல மன்றங்களின் தலைவர்களுக்கும் தொடரட்டும்... பரிசுகளும் நட்பான பரஸ்பரமும்...

தொலைநோக்கு சிந்தனைவாதி J S A புகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved