Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:56:03 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11629
#KOTW11629
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 17, 2013
காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5735 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் இம்மாதம் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 03.00 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் துவங்கியது. நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் முன்னிலை வகித்தார்.





இக்கூட்டத்தில் பின்வரும் கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாய் இருந்தது:-























வருகை தந்த உறுப்பினர்கள்:

மதியம் 03.30 மணியளவில்,
03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன்,

13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கியஷீலா,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன்,
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகிய உறுப்பினர்கள் கூட்டரங்கிற்கு வருகை தந்தனர்.





வெளிநடப்பு:

கூட்டப் பொருட்களை, நகராட்சி அலுவலர் செந்தில் குமார் வாசிக்கத் துவங்கினார். உடனடியாக எழுந்து பேசிய நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், நகர்மன்றத் தலைவர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால், அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு (ஆர்.டி.எம்.ஏ.) தாங்கள் கடிதம் அளித்துள்ளதாகவும், அதற்கான கூட்டத்தை அவர் கூட்டுவார் என எதிர்பார்ப்பதாகவும், இக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகவும் கூற, அதனையடுத்து, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர அனைத்துறுப்பினர்களும், கூட்டரங்கிலிருந்து வெளியேறினர்.

இதுகுறித்த அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!

பார்வையாளர்கள்:

இக்கூட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து விடுமுறையில் ஊர் வந்துள்ள பொதுமக்கள் பலர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.









அவர்கள், நகர்மன்றத் தலைவரிடம் கேள்வி கேட்க அனுமதி கோரினர். தலைவர் அதற்கு அனுமதியளிக்கவே, அவர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். அதற்கு நகர்மன்றத் தலைவர் விளக்கமளித்தார்.



நகர்மன்றத்தின் நடப்பு நிலை குறித்து நகர்மன்றத் தலைவர் விளக்கம்:

பின்னர், நகர்மன்றத்தின் நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு அவர் விளக்கமளித்தார். அதன் சுருக்கம் வருமாறு:-

முக்கிய கூட்டப் பொருட்கள்...

நடப்பு கூட்டத்தில், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில் புதிய சாலை போடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளித்தல், குடிநீர் வால்வு தொட்டிகளுக்கு உதிரி பாகங்கள் கொள்முதல் செய்தல், தெரு விளக்கு பராமரிப்பு, நகராட்சி பேருந்து நிலைய கழிப்பறை ஏலம், புறநகர் மக்களின் பல்லாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றுமுகமாக புதிய சாலைகள் அமைத்தல், நகரின் பல பகுதிகளில் சேதமுற்ற நிலையிலுள்ள சாலைகளை செப்பணிடல், மகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் - கட்டப்பட்ட நாள் முதல் செயல்படாமலேயே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை செயல்படச் செய்தல் உள்ளிட்ட - நகரில் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய முக்கிய செயல்திட்டங்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாய் இருந்தது.

வார்டு உறுப்பிர்களின் கோரிக்கைகள்...

நடப்பு கூட்டப் பொருட்களில் பல, அவரவர் வார்டு மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு உறுப்பினர்களாலேயே முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், பல உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. வந்தவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

பெரிய நெசவுத் தெரு சாலை...

பெரிய நெசவுத் தெருவில் புதிய சாலை அமைக்கப்படாததால், பல பேருந்துகள் வேறு வழித்தடத்தில் இயக்கப்படும் நிலையுள்ளது. இதனால், அப்பேருந்துகளில் பயணம் செய்யும் நகர பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர்.

பெரிய நெசவுத் தெரு புதிய சாலையின்றி குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் படும் அவதிகளை, அவ்வழியே செல்லும் பேருந்துகளில் பயணித்தோர் நன்கறிவர்.

கூட்டத்தைப் புறக்கணிக்கலாமா...?

நகர்மன்றத் தலைவராக என் மீது உறுப்பினர்களுக்கு குறைகள் இருக்கலாம்... அதற்காக என்னைப் பதவி நீக்கம் செய்ய அவர்கள் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் மனு அளித்துள்ளனர். அம்மனு பரிசீலிக்கப்பட்டு, அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டால் - அப்போது என்னிடம் விளக்கம் கேட்கப்படும்... நான் அதற்கு விளக்கமளிப்பேன்... அது தனி நடைமுறை. அதற்காக, மக்கள் நலத்திட்டங்களை முடக்க வேண்டியதன் அவசியமென்ன?

சட்டம் என்ன சொல்கிறது...?

பெரும்பான்மை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒப்புதலளிக்காமல் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற இயலாது என்பதே சட்டம். சில அவசர காரியங்களுக்கு, நகர்மன்றத் தலைவராக என்னிடம் முன் அனுமதி பெறப்படும். அவ்வாறு முன்னனுமதிக்கு நான் கையெழுத்திட்ட அம்சங்கள் குறித்து அடுத்து வரும் கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் கருத்திற்கொள்ளாமல், பெரும்பான்மை உறுப்பினர்கள் தொடர்ந்து வெளிநடப்பு செய்வதால், நகராட்சி பொறியாளர்கள் எந்தவொரு செயல்திட்டத்திலும் இறங்கத் தயக்கம் காண்பிக்கின்றனர்.

நகராட்சி அலுவலர்கள் மீது முறைகேடு புகார்...

நம் நகராட்சியின் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய கூட்டப் பொருள் உள்ளது.

ஒரு நிர்வாகத்தின் சீரான செயல்பாட்டிற்கு மிக முக்கியமான தேவை, அந்நிர்வாகத்தில் பணிபுரிவோர் முறைகேடுகளின்றி செயல்படுவதாகும். ஆனால், நம் நகராட்சியில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் நசீர் கான், முஹம்மத் அலீ ஆகியோர் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டியிருப்பதால், அவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய ஒப்புதல் வழங்கலாம் என நகர்மன்றத் தலைவர் குறிப்பில் நான் தெரிவித்துள்ளேன். உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதால், மிக முக்கியமான இந்த கூட்டப் பொருள் குறித்தும் விவாதிக்கப்படாது.

உறுப்பினர்கள் வெளிநடப்பால் மக்களுக்கே பாதிப்பு...

ஒன்றை மட்டும் நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்... நகர்மன்றக் கூட்டங்களிலிருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதால், நகர்மன்றத் தலைவராக எனக்கு எந்த நஷ்டமும் இல்லை... அதே நேரத்தில், நகராட்சி நிர்வாக செயல்பாடுகள் முடக்கப்படுவதால் பொதுமக்கள் படும் அவதிகளை, மனசாட்சியுள்ள யாரும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அந்த வகையில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன்...

விளக்கம் கேளுங்கள்!

ஒரு நகர்மன்றத் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்துள்ளது போல, பொதுமக்களாகிய நீங்கள் 18 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளீர்கள்... உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே அவர்களை நீங்கள் அனுப்பியுள்ளீர்கள்.

என் மீது குறையிருப்பின் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் விளக்கம் கேட்கலாம். அதுபோல, உங்கள் உறுப்பினர்கள் மீதுள்ள குறைகள் குறித்து நீங்கள்தான் அவர்களிடம் கேட்க வேண்டும்... அதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.

இறைவன் தந்த அமானிதம்!

இந்தப் பதவிகள் எல்லாம் இறைவன் எங்களுக்கு அளித்துள்ள அமானிதம். இதுகுறித்து, மறுமையில் நாங்கள் விசாரிக்கப்படுவோம் என்ற அச்சம் எங்கள் யாவருக்கும் இருக்க வேண்டும்...


இவ்வாறாக, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பொதுமக்களுக்கு விளக்கமளித்தார். அவரது விளக்கத்தை அசைபடப் பதிவில் முழுமையாகக் காண இங்கே சொடுக்குக!

கூட்டத்தில் விரும்பத்தகாத எதுவும் நடைபெறாதிருக்க காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.



படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by A.S.L.சதக்கத்துல்லா (35'கதிட்ரல் சாலை_சென்னை86) [17 August 2013]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 29533

காயலபட்டினம் நகராட்சி உறுப்பினர்கள் பலமுறை வெளிநடப்பு செய்வதும் நலதிட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு எட்டாத தூரம் சென்று கொண்டு இருப்பதை காயல்நகரமக்கள் நன்குஅறிவார்கள் ஆதலால் இதர்க்கு தார்மீக பொறுப்பேற்று தலைவி/உறுப்பினர்கள் நகர்மன்றத்தை களைக்க ராஜினாமா கடிதம் கொடுத்தால் நன்றாக இருக்கும்புதிய நகர்மன்றத்தை மக்கள் தேர்ந்து எடுப்பார்கள் அல்லது இஓவை கொன்டு இயங்கும் என்பதில்எந்த சந்தேகம் இல்லை தய உ செய்து முன்வாருங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கம்ப்யூட்டர் டேபிளை அசைதால்தான் படம் அசையுது
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [17 August 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 29534

அசைபட காட்சிகளுடன் என்று சொல்லி என்ன லிங்க் கொடுத்திருக்கிறீர்கள் ? youtube லிங்க் எல்லாம் இங்கே எடுபடாது. நாங்க கம்ப்யூட்டர் டேபிளை அசைதால்தான் படம் அசையுது. வேறு ஏதாவது லிங்க் கொடுக்க கூடாதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. உருப்பினர்களுக்கு
posted by Ahamed Fareed (Chennai 86) [17 August 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 29535

மக்களுக்கு நன்மை தரும் இதுபோன்ற பல திட்டங்களை நிறைவேற்ற உதவுங்கள். அல்லது ஒட்டுமொத்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு மறுபடியும் தேர்தலில் நின்று உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பதில் சொல்லுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...மதுரையில் அடிபட்டவன் மானாமதுரையில் போய் மீசையை முறுக்கினானாம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [17 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29536

நகராட்சியில் நடந்த நாடகம் பற்றிய செய்திகள் இந்த இணைய தளத்தில் இன்றுதான் வெளி வந்துள்ளது. ஆனால் வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் ஊர் வந்த சிலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுட சுட மற்றவர்களிடம் சொல்லிவிட்டார்கள்.

தலைவர் மீது நம்பிக்கை இல்லை என்ற புகார் யாரிடம் கொடுக்கப்பட்டதோ அவர் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது. அதற்காக நகரமன்ற கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று உறுப்பினர்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

சம்பதப்பட்டவரின் அலுவலகத்தில் அல்லது அவரது வீட்டில் சென்று அங்கே உண்ணா விரதம், ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவைகளை மேற்கொண்டு அவரின் கவனத்தை ஈர்த்து இருக்க வேண்டும்.

அல்லது அவரைப்பற்றி மேல்முறையீடு செய்ய வேறு வழியை பார்த்திருக்க வேண்டும்.

அல்லது தலைவி மீது வழக்கு தொடர்ந்து ஒரு நல்ல திறமையான வழக்கறிஞர், சாந்தி பூஷன் போன்றவர்களை தேர்ந்தெடுத்து வழக்காட முயர்ச்சி செய்திருக்க வேண்டும்.

அல்லது உறுப்பினர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இருக்கவேண்டும்.

அல்லது தலைவியை தேர்ந்தெடுத்த மக்கள் எல்லோரிடமும்சென்று தலைவிமீது நம்பிக்கை இல்லை என்று எழுதி கை எழுத்து வேட்டைக்கு ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.

அல்லது ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து தலைவி மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மக்கள் முன் எடுத்து வைத்து இருக்க வேண்டும்.

இவ்வளவு வழிகள் உறுப்பினர்களுக்கு இருக்கும்போது நகரமன்ற கூட்டத்தில் கொண்டுவர இருந்த முக்கியமான ஊர் நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை குறைந்த பட்சம் விவாதிக்கவாவது செய்திருக்க வேண்டும்.

ஒரு பெண்தான் இந்த ஊரின் நகரமன்ற தலைவராக வரவேண்டும் என்ற அரசு ஆணையை கொண்டு வந்ததே புரட்சி தலைவியின் அரசுதான். அந்த அரசிற்கு ஆதரவாக எல்லா உறுப்பினர்களும் ஒரே நாளில் கட்சி மாறியது உறுப்பினர்களின் நாணயத்தை சந்தேகிக்க வைத்த முதல் காரியம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அவர் தவறு செய்தால் அவர்களை மக்கள் முன் நிறுத்தி தண்டிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

இத்தனையும் விட்டு விட்டு கொல்லைப்புறம் வழியாக, குறுக்கு வழியில் ஒரு நகரமன்ற தலைவரை வெளியேற்ற முடியுமா.

மதுரையிலே அடிபட்டவன் மானாமதுரையில் போய் யாரடா என்னை அடித்தது என்று மீசையை முறுக்கினானாம் என்ற பழமொழி கேள்விப் பட்டிருக்கிறோம். கொக்கு மீனை தின்னுமா இல்லை மீனு கொக்கை முழுங்குமா என்ற பாடல் கேட்டிருக்கிறோம்.எய்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பிரயோஜனம் என்ற முது மொழி கேள்விப்பட்டிருக்கிறோம். இத்தனையும் உண்மைதானோ என்று எண்ணுவதற்கு நமது மதிப்புக்குரிய உறுப்பினர்கள், அந்தந்த வார்டு உறுப்பினர்கள் வழி வகுத்து விட்டார்களே, வேதனையாக இருக்கிறது.

என்ன தவறுகள் செய்தாலும் நமது தமிழ்நாடு அரசாகட்டும் மத்திய அரசு ஆகட்டும் 5 ஆண்டுகள் முடியும் வரை அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நமது அரசியல் சட்டம் நம்மை தடுக்கிறது, நமது கைகளை கட்டிப் போடுகிறது.

முறையான அணுகுமுறை அடுத்த தேர்தல்தான். அதற்கு ஏற்பாடு செய்ய ஏதாவது வழி இருக்கிறதா என்று பாருங்கள். தலைவியை ஆட்சியை விட்டு அகற்ற இதுதான் ஒரே வழி.

சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்பவர்கள் எல்லாம் முதல் அமைச்சர்கள் ஆக முடியாது. அது MGR ,.கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களுக்கு விதி விலக்கு. விதி விலக்குகள் வழிகாட்டிகளாக ஆக முடியாது.

முறையாக சிந்தித்து ஆக வேண்டியதை கவனியுங்கள். வேகத்தை விட விவேகமே மேல்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by nizam (india) [17 August 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 29537

இதை ஒரு நகராட்சியின் செயல்பாடு என்பதை விட காயல்பட்டணம் எங்கே போய் கொண்டு இருக்கிறது என்பதகத்தன் கொள்ளவேண்டி இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு நகராட்சி உறுப்பினரும் நகராட்சி தலைவரும் நம்மில் இருந்து நம்மால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள்தானே.

தனது சொத்து உழைப்பு எல்லாம் அர்பணித்த நமது மூதாதையர்கள் போஸ்ட் ஆபிஸ் இச்டேசன் பள்ளி முத்து சாவடி உண்டாக்கினார்கள். இப்போது என்னவென்றால் அரசாங்க வரிபணத்தை ஊர் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த கூட மனம் இல்லை. நான் திரும்பவும் கடந்த கமெண்டில் குறிப்பிட்டதுபோல மீண்டும் சொல்கிறேன். இவை அனைத்துக்கு காரணம் இந்த கேடுகெட்ட ஈகோ. இதன் விளைவை நன்கு அறிந்த அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள் பெருமை கொண்டவன் போகுமிடம் நரகம்தான் என்று. இந்த ஈகோ இல்லாததால் நம்மை சுற்றி உள்ள ஊர் பஞ்சயாத்துகள் எவ்வளவு ஒற்றுமையோடு செயல்பட்டு வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுகிறார்கள்

மற்றொரு காரணம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான அதிகார வரம்புகளை பற்றி சரியான புரிதல் இல்லாதது. லஞ்சத்துக்காத்தன் இந்த விளையாட்டெல்லாம் நடக்கிறது என்பது ஏற்புடையது அல்ல. ஏனெறால் கணிசமான உறுப்பினர்கள் செல்வத்தில் தன்னிறைவு பெற்றவர்கள். பாரம்பரிய குடுமபத்தை சார்ந்தவர்கள். அவர்களுக்கு லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை

நம்மை நம் ஊரை பற்றி இழிவாக பேசுமுன் இந்த ஊரின் பிரபலமான சமுகவியலார்களும் சட்ட நிபுணர்கள் மார்க்க அறிஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண்பது அவசியம் தவறினால் நாளை இறைவனின் மக்சரிலே குற்றவாளியாக நிற்பது நிச்சயம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மக்கள் வரிப்பணம் அரசுக்கே போய் சேர வேண்டும்...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [17 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29538

சபாஷ்.. அப்படி போடு....! வரும் ஆனா வராது....! ஆக மொத்தத்தில் (என் வரி பணம்) அதாவது நமது வரி பணம் இக்கூட்டத்தில் வீண் விரையம் செய்யப்பட்டுள்ளது..!வெளிநடப்பு செய்யும் இந்த உறுப்பினர்கள் மூலம் ஒன்றல்ல... இரண்டல்ல... பல வெளிநடப்பு சம்பவத்தால் நகரின் பல நண்மையான அடிப்படை தேவைகள் தீர்மானம் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது...! (குறிப்பாக - குண்டும் குழியமாக உள்ள நெசவு தெரு சாலை போடமுடியாமல் இருப்பது) தலைவிக்கும் உறுப்பினர்களுக்கும் உள்ள தனிப்பட்ட கோர்ட் நடவடிக்கைளை - தனிநபர் பிரச்சனைகளை நகர்மன்றத்தின் வெளியில் வைத்துக்கொள்ளுங்கள்...? இதனால் தலைவிக்கு என்ன நஷ்டம்...? என்பதே எனது கருத்து மற்றும் நகரின் பெரும்பாலான மக்களின் மனநிலையும் இப்படி தான் வெளிபடுகின்றது..

சரி... சரி.. முக்கியமா நகராட்சியில் வரவு - செலவு கணக்கு தணிக்கையில் பல லட்சங்கள் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஒரு சில நகர் நல விரும்பிகள் தமிழக முதல்வரின் தனி அறைக்கு (CM செல்லுக்கு) தகவல் அனுப்பியதாகவும் அதற்க்கான பலன் வரும் ஓரிரு நாட்களில் சென்னையில் இருந்து சிறப்பு தணிக்கை செய்ய மாகாணத்தின் முக்கிய பிரதிநிதிகள் மேல் அதிகாரிகள் வருவதாக நகரில் செவி வழி செய்திகள் அறிந்தேன்...இந்த வாரத்தில் இது விசியமான உண்மை நடப்புகள் வெளி வந்தே ஆகலாம்...! மக்கள் வரிப்பணம் அரசுக்கே போய் சேர வேண்டும்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மிக வேதனையில் இறைவனிடம் கையேந்தி பிராத்திக்கின்றேன்..
posted by syed ahamed (KAYALPATNAM ) [17 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29539

நகர்மன்றத் தலைவர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால், அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு தாங்கள் கடிதம் அளித்துள்ளதாகவும், அதற்கான கூட்டத்தை மண்டல இயக்குநர் கூட்டுவார் என எதிர்பார்த்து, இக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளீர்களே..! நீங்கள் செய்த இந்த வெளிநடப்பு உங்களை தேர்ந்தெடுத்து நகராட்சிக்கு அனுப்பிய என் போன்ற பல வார்டு மக்களை தீயிட்டு கொளுத்தி உள்ளீர்கள் மேலும் என் போன்ற நகர பல வார்டு மக்களின் முகத்தில் காரி உமிழ்து எச்சியை துப்பி உள்ளீர்கள் என்பதனை மிக வேதனையாக இக்கருத்தை பதிகிறேன்.

இறைவா இந்த அநியாயக்காரர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட அவரவர் வார்டு மக்களை காப்பாற்றுவாயாக. இறைவா இந்த மனசாட்சி இல்லாத அக்கிரம கூட்டதினர்களை இறைவா உனது பார்வையில் திசையில் இருந்து இதற்குரிய கூலியை விரைவில் கொடுப்பாயாக.... மிக வேதனையில் இறைவனிடம் கையேந்தி பிராத்திக்கின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by shaik abbas faisalD (kayalpatnam) [17 August 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 29540

உறுப்பினர்களின் வெளிநடப்பால் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றமுடியாமல் பொய் விடுகிறது என்று கூறும் தலைவி அவர்களே இதற்கு முன்னர் சுமார் 400 கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்று செயல் வடிவம் பெறாமல் இருப்பதற்கு காரணம் நீங்களா இல்லை உறுப்பினர்களா?அந்த தீர்மானங்கள் பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாமலா நிறைவேற்றப்பட்டன?எப்போதுமே அடுத்தவர் மேல் பலி போடும் வழக்கம் கொண்ட தலைவி இம்முறையும் அதே யுக்தியை கையாண்டுள்ளார்.

ஒரு உறுப்பினர் தலைவிக்கு எதிராக இருந்தால் அது அந்த உறுப்பினர் செய்யும் தவறு எனலாம்,ஒட்டு மொத்தமாக 18 இல் 17 உறுப்பினர்கள் தலைவிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றால் தவறு தலைவியுடம் உள்ளதா அல்லது உறுப்பினர்களிடமா?

ஊரை இரண்டாக்கி உவகை அடைந்த தலைவி இப்போது ஒற்றுமையாக இருக்கும் ஜமாஅத் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.நம்பிக்கை இல்லாத தலைவியின் கீழ் எப்படி உறுப்பினர்கள் ஓன்று கூடுவார்கள்?

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. The ball is in people's court
posted by Abdul Wahid S. (kayalpattinam) [17 August 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 29543

இதுவரை 21 மாதக் கூட்டங்களில் 7 கூட்டத்தில் வெளிநடப்பு. 1 கூட்டத்திற்கான அழைப்பை சென்னை செல்வதாக் கூறி வாங்க மறுத்தது. 7 வெளிநடப்புகளில் 3 வெளிநடப்புகள் மீடியா உள்ளே வரக்கூடதென்பது. ஒரு வெளிநடப்பு தலைவி தீர்மானங்களை திருத்தி எழுதுகிறார் என்பது. இதற்கு முந்திய வெளிநடப்பில் இவர்கள் கூறிய காரணம், "தலைவி எங்கள் மீது வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து / கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்" என்பதே. இப்போது இவர்கள் கூறும் காரணம், "நாங்கள் தலைவியை நீக்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறோம்" என்பது.

கூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை குறையும்போது, மீடியாவை கூட்ட அரங்க்கைவிட்டும் வெளியேற்றத் துடிப்பதும் அல்லது வந்தவர் மீது பொய் வழக்குப்போட்டு மீண்டும் கூட்டத்திற்கு வரவிடாமல் பண்ணுவதும் , பொதுமக்கள் அதிகம் வரும்போது இவர்களுடைய நடவடிக்கைகள் வெளியே தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக பொட்டை காரணத்தை கூறி இவர்கள் வெளியேறுவதும் வழக்கமாகிவிட்டது.

ஒருவேளை அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் என்ன செய்யப் போகிறார்களாம் ? அரசு எங்க கோரிக்கையை ஏற்கவில்லை என்பதை எதிர்த்து வெளிநடப்பு என்று இப்போவே ரூம் போட்டு யோசுச்சி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை !

மொத்தத்தில் இவர்கள் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்திவிட்டார்கள். இனி மக்கள் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை இவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

The ball is in people's court.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [17 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29544

நகரமன்றத்தில் என்ன நடaக்கிறது எனபது, ஓட்டு போடாத 55% வெளிநாட்டு மக்களுக்குதான் வலைதளத்தின் மூலம் தெரியுதே தவிர, வார்டு உறுபினர்களை தேர்வு செய்ய வாக்களித்த உள்ளூர் மக்களுக்கும், அந்தந்த பகுதி ஜமாத் மக்களுக்கு ஒன்றும் தெரிவது இல்லை.

மக்கள்மன்றதில் உண்மை நகரமன்ற நிலைதெரியும் வரை, உறுப்பினர்கள் தனது சுய லாபத்திற்காக வெளிநடப்பு செய்து கொண்டு இருப்பார்கள்.

நகரமன்ற தலைவிக்கு அன்பான வேண்டுகோள், நகரமன்றத்தின் உண்மை நிலையை ஒவ்வெரு ஜமாத்தார் முனிநிலை வைத்து வாக்களித்த மக்களுக்கு வெளிபடுத்த முன்வரவும். இல்லையனில் நீங்களும் உறுபினர்களின் வெளிநடப்புக்கு துணை நிற்கிண்டீர்கள் என்றுதான் அர்த்தம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Continuation
posted by Abdul Wahid S. (kayalpattinam) [17 August 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 29545

தாயும் பள்ளி ஜமாத்தினர் தங்கள் பங்கை செய்துவிட்டனர். தலைவியை தங்கள் பள்ளிவாசலுக்கு அழைத்து அவரிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. இது நிச்சயமாக ஒரு நல்ல முன்னுதாரணம். ஊர் நலத்தில் அக்கறையுள்ள ஜமாத்தினர்களும் இந்த முனுதாரனத்தை கடைபிடிப்பார்கள் என்று நம்புவோமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. உறுப்பினர் பெருமக்களே...! அடுத்த கூட்டத்தில் என் கருத்தை யோசனைக்கு எடுங்கள்...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [18 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29548

சகோதரர் அப்துல் வாஹிது அவர்களே... நகரமன்றத்தின் உறுப்பினர்கள் பெருமக்களே...! குறிப்பாக நகர பெருமக்களே..!

தலைவியை தங்கள் பள்ளிவாசலுக்கு அழைத்து அவரிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. இது நிச்சயமாக ஒரு நல்ல முன்னுதாரணம். ஊர் நலத்தில் அக்கறையுள்ள ஜமாத்தினர்களும் இந்த முன்னுதாரனத்தை கடைபிடிப்பார்கள் என்று நம்புவோமாக... தாயும் பள்ளி ஜமாத்தினர் தங்கள் பங்கை செய்துவிட்டனர்.. (C - P)

நகர் நலனுக்கு எதிராக (உதாரனத்திற்க்கு பெரிய நெசவுத் தெரு புதிய சாலையின்றி குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் படும் அவதிகள்) தொடர்ந்து நடந்து வரும் இந்த வெளிநடப்பு விபரங்களை மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி ஜமாஅதினர்களும் அதன் கிளை ரெட் ஸ்டார் சங்கத்திரனர்களும் மற்றும் புதுப்பள்ளி அதன் கிளை ரிஜிவான் சங்கத்திரனர்களும் தாயும் பள்ளி ஜமாத்தினர் தலைவியை அழைத்து விளக்கம் பெற்றது போல் மேலே குறிப்பிட்ட ஜமாத்தினர்கள் விரைவில் நகர்மன்ற தலைவியை அழைத்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது....! இன்ஷா அல்லாஹ் விரைவில் அதன் செய்திகளை விரைவில் எதிர்ப்பர்போம்... இறைவன் நாடினால்...

தலைவியை பதவி நீக்கம் செய்யக் கோரி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு தாங்கள் (உறுப்பினர்கள்) கடிதம் அளித்துள்ளதாக கூறும் உறுப்பினர் பெருமக்களே...! நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தனது தனிபட்ட முறையில் இந்த தலைவியை பதவி நீக்கம் செய்ய முடியாது தமிழக முதல்வரின் உத்தரவு வேண்டும்... அந்த உத்தரவை இப்போதைக்கு தாங்கள் எதிர்பார்ப்பது உங்களின் அறியாமையே உணர முடிகின்றது...! அடுத்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் MP தேர்தலை திருச்செந்தூர் தொகுதியில் என்ன செய்தால் என்ன நடக்கும்...? என்ற நிலவரங்களை உளவு பிரிவு மிக தெளிவாக காயல்பட்டினத்தின் நாடித்துடிப்பை (நகர்மன்ற தலைவியின் வெற்றி வாக்குகள் எத்தனை.. அவர்களுக்கான மக்கள் ஆதரவு என்ன) அனைத்தையும் தமிழக முதல்வருக்கு உளவு பிரிவு மிக தெளிவாக தெரியபடுத்திய வண்ணம் உள்ளன...! ஆகையால் உறுப்பினர் பெருமக்களே...! இந்த தலைவியின் பதவி நீக்கம் சம்பந்தமான புகார் எல்லாம் நடக்கவிருக்கும் MP தேர்தல் முடிந்த பின்பு நீங்கள் வைத்து கொள்ளலாமே...?

இப்போதைக்கு நகரின் நன்மைக்கு காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில் புதிய சாலை போடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளித்தல், குடிநீர் வால்வு தொட்டிகளுக்கு உதிரி பாகங்கள் கொள்முதல் செய்தல், தெரு விளக்கு பராமரிப்பு, நகராட்சி பேருந்து நிலைய கழிப்பறை ஏலம், புறநகர் மக்களின் பல்லாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றுமுகமாக புதிய சாலைகள் அமைத்தல், நகரின் பல பகுதிகளில் சேதமுற்ற நிலையிலுள்ள சாலைகளை செப்பணிடல், மகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் - கட்டப்பட்ட நாள் முதல் செயல்படாமலேயே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை செயல்படச் செய்தல் உள்ளிட்ட - நகரில் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய முக்கிய செயல்திட்டங்கள் குறித்து நகர்மன்றத்தில் தலைவியுடன் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள்...!

உறுப்பினர் பெருமக்களே...! அடுத்த கூட்டத்தில் என் கருத்தை யோசனைக்கு எடுங்கள்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. அடுத்த வெளிநடப்பு கூட்டம் எப்போது ? ???
posted by M.S.Kaja Mahlari (Singapore) [18 August 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29549

மாசா அல்லாஹ் ! நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட பார்வையாளர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது !

சரி ! இப்படி அடிக்கடி வெளிநடப்பு செய்வதே இவர்களின் வேலையென்றால் "இனி நடக்கும் கூட்டத்திற்கு " நகர்மன்ற (செப்டம்பர் மாத உறுப்பினர் வெளிநடப்பு கூட்டம் " என தலைப்பிடலாம் !!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. அட்மின் அவர்களே........ சபாஷ்!!!.
posted by s.s.md meerasahib (TVM) [18 August 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 29550

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் நல்லுள்ளம்களே...... பெரும்பான்மை கமாண்டுகளை பார்த்து இருப்பீர்கள். தலைவியை கேள்வி கேட்டும், ஜமாத்தை நாடியும்,தாயும் பள்ளி ஜமாஅத் நகர்மன்ற தலைவியை கூப்பிட்டு விசாரித்தது போல மற்ற எல்லா ஜாமாத்துகளும் விசாரிக்கணும் என்றும்,(ஊர் ஜமாத்துக்கு கட்டு பட்ட தலைவியை தானே.... விசாரிக்க முடியும்?) ஊர் நலனை நாடியும், ஜனநாயகத்தை (பெரும்பான்மையை) ஆதரித்தும் கமாண்டுகள் வெளியிட்டதை....... "முதலில் நான் நமது அட்மின் அவர்களுக்கு சபாஷுடன் கூடிய சலூட்டும் அடிக்கிறேன்".

இந்த வேலையை தான் நாங்கள் பல மாதம்களாக சுட்டிக்காட்டும் போதெல்லாம்....... எங்களின் கமாண்டுகள் வெளிச்சம் காணவில்லை. (வெளியிடவில்லை) வெளியிட்டவைகளில் பலதும் கத்திரிபோட்டு உண்மையின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டவை.

ஆனால் இன்றோ....... ஊருக்கு கிடைக்க வேண்டிய, நடக்க வேண்டிய பல நல்ல காரியம்கள் நம் நகரமன்ற தலைவியின் ஈகோவால் மிஸ்ஸாவதால் தலைவி மீது அதிருப்தி எழுந்துள்ளது. பாவம் நம் மக்கள் இப்பொழுதுதான் உணர்ந்துள்ளனர். இவைகளை முன்கூட்டியே....... புரிந்து கொள்ள வேண்டிதான் நகராச்சி தேர்தல் முதல்லே....... பல தலைப்புகளில்.........................

"* உப்பு திண்டால்....... தண்ணி குடிச்சிதானே.... ஆகணும்....??? பழமொழிடோய்.

* காயல் பதியில் களம் அமைக்கும் உங்கள் கனவுகள் பலிக்காது.

* குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால்....... போச்சு.

* அறிவுக்கொலுந்துகள் + புத்தி ஜீவிகள் = சுத்திர ஜீவிகள்.(துன்புறுத்தும் உயிரினம்)

* காகித பூக்கள்...........

* இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே.....

* கேள்க்கிறவன் கேணயனா இருந்தால்...... கேள்விரகிலும் நெய்வடியுமாம்..!!!

* காயல் நகர்மன்றம் பஞ்சாயத்தாய் மாறியது.!!!

* பூவா..... தலையா....... விளையாடி பார்க்கும் நகரமன்ற தலைவர்.

* இங்கே என்னப்பா ஒப்பாரியும், ஒத்து ஊதலும்........!?

* வெளஞ்சி பழுத்ததுக்கும்.... வெம்பி பழுத்ததுக்கும் வித்தியாசம் இருக்குங்கோ.....

* இருக்கிறவன் ஒழுங்கா இருந்தால்தான்....... சிரைக்கிறவன் ஒழுங்கா சிரைப்பான்.

* இரட்டை மாட்டு வண்டியில் பொட்டமாடும்... கொட்டமாடும்.

* விமர்சனம் என்ற பெயரில் விசமித்தனம்.....!

* பாவத்திற்கு ஒரு நிமிடம்..... அதன் பரிகாரத்திற்கு ஒரு ஜென்மம்.

* காயலுக்கு வெக்கக்கேடு......!"

நகராச்சியையும்,நகராச்சி தலைவியையும் ஒரே வரியில் புரிந்து கொள்ள எழுதிய கமாண்டுகள். இப்படி எழுதியதில் உள் மனதில் வருத்தம் இருந்தாலும் இவைகள் இன்று மக்கள் மன்றத்தில் உண்மையே...... என்பதை அறிந்து சந்தோசிக்கிறேன்.

"*முழுக்க நின்றப்பின் முக்காடு எதற்கு...........? அட்மின் அவர்களே......!!!"

இந்த முக்காடும் தாங்களின் நகராச்சி செய்திகளின் கொஞ்சம், கொஞ்சமாக நீங்குவதை மக்களாகிய நாங்கள் கண்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

"காயல்பட்டணத்தின் ஒற்றுமையை பலப்படுத்த, நம் ஊரில்...... நம்முடைய உரிமையை நிலைநாட்ட....... நம் மானம்களை நாம் காப்பாற்றிக்கொள்ள காயல்பட்டினம் ஐக்கியபேரவையோடு ஒத்துழையுங்கள்". வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. போர்க்கால அடிப்படை
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [18 August 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 29551

"""""""""""முக்கிய கூட்டப் பொருட்கள்...

மகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் - கட்டப்பட்ட நாள் முதல் செயல்படாமலேயே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை செயல்படச் செய்தல் உள்ளிட்ட - நகரில் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாய் இருந்தது. ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எத்துனை வருடம் செயல்பாடாது இருந்திருக்கிறது? இதுவரை எத்துனை நகராட்சி கூட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன தெரியமா ? எவ்வளவு தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள் ? இவ்வளவு நாட்களும் தலைவி என்ன செய்து கொண்டு இருந்தார் ? இப்போதுதான் இந்த பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டும் என்று தலைவிக்கு தோன்றியதா? இந்த வேகத்தைத்தான் போர்க்கால அடிப்படை என்று சொல்வார்களா ? போதும் போதும் உங்களின் வேகம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...Appa pally & Marikar Pally
posted by Ahamed Mustafa (Dubai) [18 August 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29552

If some one is listening again from the two combined jamaaths, why don't we adopt a resolution & bring down the Councillor who is of no use to the ward's welfare.

Except in joining processions to lead the way out I don't think she has done anything of notice to this area. Hope some one listens or to the likes of Bro. AWS to take this up in the right way. This is my concern. Hope all agrees. Thanks in advance, jazaak Allah !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Cnash (Makkah) [18 August 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 29553

இந்த கூட்டத்தில் வைக்கப்பட்ட அஜெண்டாவில் முக்கிய பொருள், நமதூர் ஒரு வழி பாதை விவகாரம், தாயிம்பள்ளியில் இருந்து நெசவு தெரு வரை செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளது எனவும், இதனால் பல பேருந்துக்களை வழிமாற்றி செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், இந்நிலை நீடித்தால் ஒரு வழிபாதை என்ற திட்டம் கூட கைவிட்டு போகலாம் என்றும், நமது நகராட்சி இதற்கு எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் பரவலாக சாட்டப்பட்டது...

அன்றைய எங்கள் தாயிம்பள்ளி ஜமாத் கூட்டத்திலே தலைவிதான் காரணம் என்பது போல சந்தேக குரல்கள் எழுப்பபட்டது. இதை வலுபடுத்தும் விதமாக ஜமாத் மூலம் தலைவிக்கு கொடுக்கப்பட்ட 2 கடிதங்களுக்கு பதில் இல்லை என்றும் சொல்லப்பட்டது. இந்த சந்தேகங்களை போக்கும் விதமாக ஜமாஅத் சார்பில் தலைவியை சந்திப்பது என்று முடிவு செய்து தலைவியை தொடர்புகொண்ட போது, அவர் நீங்கள் வர வேண்டாம் , நான் உங்கள் பள்ளிக்கு வருகிறேன் என்று சொல்லி அதன் படி சென்ற வாரம் இதே நாள் இதே நேரம் வருகை தந்து அதற்க்கு உரிய விளக்கமும் தந்தார்கள்.

இந்த சாலை பணிக்காக 3 முறை டெண்டர் விடப்பட்ட ஆவணங்களையும், எந்த காரணங்களுக்காக நடைமுறைபடுத்த முடியவில்லை என்பதையும் விளக்கமாக எடுத்து சொன்னார், வரும் கூட்டத்தொடரில் கூட்ட பொருளாக இந்த பிரச்னை வைக்கப்படும் என்றும் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறும் என்று நாங்களும் நம்பி இருந்தோம், அந்த கூட்டத்திற்கு யாரை நாங்கள் உறுப்பினராக தேர்ந்து எடுத்தோமோ அவர் வரவே இல்லை, ஆனால் அவர்தான் இன்று வெளிநடப்புக்கு தலைமை ஏற்று நடத்தி இருக்கிறார் அது போல இன்னொரு உறுப்பினர் அன்றைய ஜமாஅத் கூட்டத்தில் இதற்காக ஒத்துழைப்பதை போல பேசினார். ஆனால் கூட்டத்தில் ஒருவராக அவரும் வெளிநடப்பு செய்து ஓட்டுபோட்ட மக்களை மறந்து யாருக்கோ விசுவாசம் காட்ட வெளி நடப்பில் ஐக்கியமாகி இருக்கிறார். எப்படியோ இவர்களின் உண்மையான முகம் இவர்களை நம்பிய சில மக்களுக்கும் திரிந்து இருக்கும்.

இதை போலவே உங்கள் தெருவிற்கான திட்டம் என்ன யாரால் ஏன் கிடப்பில் கிடக்கிறது என்பதை தலைவியையும் உங்கள் உறுப்பினரையும் ஒரு சேர வைத்து உங்கள் ஜமாஅத் மூலம் கேள்வி கேளுங்கள்.. பல உண்மை மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரிய வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by தேக் (kayalpattinam) [18 August 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29555

தேவை இல்லாதது : இக்கூட்டத்தில் இடம்பெற்ற பொருட்களில், மிக முக்கியமானவை ஒருவழிப்பாதை அமைந்துள்ள நெசவுதெரு சாலையை சீர்செய்வதும் அடங்கும் என்றும், தலைவர் குறிப்பிட்டார்.

தேவையானது : இத்தனை காலங்களும் இந்த பஸ்சுகள் எல்லாம் எப்படி போனது தேவையில்லாமல் ஒழுங்காக இருந்த ஊரில் ஒண்ணுத்துக்கும் உருப்படி இல்லாத ஒருவழிப்பாதை கொண்டுவந்து, அழகாக இருந்த ரோட்டை நாசப்படுத்தி, தேவை இல்லாமல் இரண்டு ஜமாஅத்திற்கு மத்தியில் மனவெறுப்பை தவிர, என்ன நன்மையை அடைந்து விட்டது இந்த ஒரு வழிப்பாதை

ரோடு வேன்றும் என்று யார் கேட்டார்கள் : உங்களுக்கு நாங்கள் போட்ட ஓட்டை மறுமையில், தலைவியாக வந்துள்ள நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக மேடையில் குரானை கையில் எடுத்து பேசுவது உண்மை என்றால், நெசவு தெரு ஜமாஅத் மக்கள் மட்டும் கஸ்ட்டப் படுவதை நீங்கள் கண்கூடாக பார்த்து வருகின்றீர்கள்.

ஏற்கனவே போன பாதயில் பஸ்ஸை ஓடவிட்டு தேவையில்லாமல் சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனங்களை பார்கிங் பன்னவிடாமல் காவல்துறை கண்காநித்தாலே போதும் தலைவி என்றால் அனைவருக்கும் பொதுவானவர்கலாக இருக்க வேண்டும் ஆனால் இந்த தலைவி என்னவோ நெசவு தெரு மக்களுக்கு கஷ்ட்டத்தை கொடுப்பதே தனது தலையாய கடமையாக எடுக்கின்றார் போலும்

முன்னாள் ஆட்சியாளர், கண்டிப்பாக இந்த ஒருவழி பதை உங்களுக்கு கஷ்ட்டம் என்று தெரியும். கண்டிப்பாக உங்களுக்கு மாற்று பாதை ஏற்படுத்துகின்றேன் என்று சொன்னார். அதைதான் நெசவு தெரு ஜமாஅத் பொதுமக்களின் கோரிக்கை.

தங்கள் முன்னாள் மாவட்ட ஆட்சியாளர் சொன்னதை கருத்தில் கொண்டு தங்களுக்கு ஓட்டுபோட்ட இந்தமக்களை மனதில் கொண்டு உடனடியாக ஒருவழிப்பாதை நிறுத்தி விட்டு ஓட்டுபோட்ட இந்தமக்களுக்கும் கொஞ்சம் நன்றியுடன் நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்

தேக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இந்த இலவு காத்த கிளிகள்.
posted by Abdul Wahid S. (Kayalpattinam) [19 August 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 29556

ஐக்கிய பேரவையால் கை காட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சேர்மனுக்கு அப்போதிருந்த உறுப்பினர்கள் (இப்போதுள்ள இரு உறுப்பினர்கள் உட்பட) கொடுத்த அழுத்தம் என்வென்றும் அதன் விளைவு என்னவென்றும் (ராஜினாமா கடிதம் கொடுத்தது) மக்கள் நன்கறிவார்கள். இன்னும் மக்கள் மனதிலிருந்து அந்த காட்சிகள் விலகவில்லை. அப்போதைய உறுப்பினர்களின் செயல்கள் இவர்களுக்கு புளித்தது. அதே செயல்களை செய்ய முயற்சிக்கும் இந்நாள் உறுப்பினர்களின் செயல்கள் இவர்களுக்கும் இவர்களின் அனுதாபிகள் என்ற போர்வையிலிருக்கும் ஜால்ராக்களுக்கும் இனிக்கிறதோ?

எது ஊர் ஜமாஅத்? பெரும்பாலான ஊர்மக்களால் சுயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவிக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்கத் தெரியாத ஒரு கும்பல் எப்படி ஊர் ஜமாஅத் ஆகும்? கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்காமல் yethu இவர்களைத் தடுத்ததோ அதுதான் "Ego". இவர்களின் ஜால்ராக்களை ஊருக்கு நன்மை செய்யத் துடிக்கும் ஒரு தலைவிக்கு எதிராக பேச / எழுத வைப்பதுதான் Ego.

ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவிக்கு அளிக்கும் மரியாதை ஊருக்கு அளிக்கும் மரியாதை என்ற சராசரி ஞானம் கூட இல்லாதவர்கள் எப்படி ஊரை வழிநடத்த முடியும்? எது ஊர் ஜமாஅத் என்பதை ஊர் மக்கள்தான் முடிவுபண்ண வேண்டும். ஊரிலுள்ள பணக்கார்கள் சேர்ந்த ஒரு கூட்டமோ அல்லது அவர்களை ஆதரிப்பவர்களோ அல்ல.

முன்னாள் பேரூராட்சி தலைவருக்கும் இந்நாள் நகராட்சி தலைவிக்கும் உள்ள ஒரு நிதர்சனமான வேற்றுமை என்னவென்றல், முன்னாள் தலைவர் லஞ்சத்திற்கு எதிராக நின்று தோற்றுப்போனார். "உங்களை திருத்த முடியாது எப்படியும் தொலைந்து போங்கடா" என்று கூறி ஒதுங்கிவிட்டார். இன்னாள் தலைவி சற்று மாறுபட்டவர். இன்ஷா-அல்லா ஓயமாட்டார், ஒதுங்கமாட்டார். மேலும் நகராட்சியை Remote Control மூலம் தனி நபர் இயக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.

இதை புரிந்துகொள்ள முடியாத(வர்கள்) இவரின் செயலை "Ego" என்றழைகிறார்கள்.

ராஜினாமா செய்துவிடுவார் என்று நினைத்து தலைவிக்கு பிரச்சனை கொடுத்துப் பார்த்தார்கள். முடியவில்லை. மீடியா நகாட்சிகுள் வரவிடாமல் தடுக்க முயன்றார்கள். வந்தவரின் மீது பொய் வழக்கு தொடர்ந்தார்கள். அதன் மூலம் தலைவியை தனியாக நினைத்தார்கள். அதற்க்கு நீதிமன்றமே டபுள் ஆப்பு வைத்துவிட்டது. மக்களும் அதிய எண்ணிக்கையில் வர ஆரம்பித்துள்ளார்கள். நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டுவர முயன்றார்கள் முடியவில்லை. முதல் கட்டத்திலேயே தலையில் இடி விழுந்தது. இப்போது பதவி நீக்கம் செய்ய முயன்றுள்ளார்கள். "இலவு காத்த கிளைகள்" என்ற சொற்றொடர் இவர்களைவிட யாருக்குப் பொருத்தம் / பொருந்தும்?

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [19 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29557

ஊர் நலனில் அக்கறையும் அனைத்து ஜமாத்தார்கள் ஆற்றும் நல்லெண்ண பணிகளில் முதன்மையாகவும், முற்றிலும் மாற்றமான சிந்தனையுடனும் செயல்படும் என்தாய் பள்ளியாம் "தாயும் பள்ளி" ஜமாஅத்தார்கள் நம் நகராட்சி தலைவியை அழைத்து விளக்கம்கேட்டு ,மற்றைய ஜமாத்தார்களுக்கு முன்மாதிரியாக விளங்கியதை எண்ணி உள்ளமகிழ்கிறேன்!

அந்த கூட்டத்தில் அந்த ஜமாத்தைச்சார்ந்த இருவார்டு (10 வது, 11 வது) உறுபினர்கள் கலந்துகொண்டார்களா, என்பது தெரியவில்லை. அவர்கள் கலந்திருந்தால் நல்லதொரு விளக்கம் பெற்றிப்பார்கள்!.

அந்த ஜமாஅத் சகோதரர் ஒருவர் தன் கருத்தை பதியும் பொழுது, தலைவி அவர்கள் உறுப்பினர்களைத்தான் குற்றம் சுமத்தினார்கள், மேலும் ஜமாதர்களிடையே பிரிவை ஏற்படுத்தும் குறையையும் சொன்னார்கள், என்ற அந்த சகோதரரின் வாசகத்திலிருந்து, அக்கூட்டத்தில் அந்த ஜமாஅத் வார்டு உறுபினர்கள் இருவர் கலந்து கொள்ளவில்லை என்றுதான் விளங்க உள்ளது!

மற்றைய அனைத்து ஜமாதார்களே!

தாயும் பள்ளி ஜமாஅத், தலைவியை அழைத்து விளக்கம் கேட்டதுபோல், தாங்களும் தங்கள் ஜமாத்தின் மூலம் தலைவியையும், உங்கள் ஜமாஅத் வார்டு உறுப்பினரையும் சேர்த்து அழைத்து விளக்கம் கேட்பதோடு ,யார் மீது தவறு இருந்தாலும் காய்தல் உவத்தல் இன்றி அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக நல்லதொரு முடிவு எடுப்பதோடு,உங்கள் பகுதியில் தேங்கி நிற்கின்ற மக்கள் நலப்பணிகள் தொடர்ந்து நடைபெற முயற்சி எடுத்து நல்ல தொரு முடிவுக்கு வாருங்கள்.இது தான் தற்போதுள்ள சூழ்நிலையில் சாத்தியமாகும் நல்லதொரு வழிமுறையாகும்!

உறுப்பினர் வந்தால் நான் வரமாட்டேன் என்று தலைவியோ ,தலைவியை அழைக்கும் கூட்டத்திற்கு நான் வரமாட்டேன் என்று உறுப்பினரோ சொல்வார்களேயானால், மறுப்பவர் எவரோ அவரின் முகத்திரையை இந்த ஊருக்கு முன்னால் கிழித்தெறிந்து உண்மை நிலையை நிலைநாட்ட வேண்டியது அந்தந்த ஜமாத்தார்களின் கடமையாகும்!

அன்பு சகோதரி தலைவி அவர்களே, அருமை சகோதர சகோதரிகளாகிய உறுப்பினர் பெருந்தகைகளே! உங்களுக்குள்ள கொள்கை வேற்றுமையானது உங்கள் உரிமை. ஒருவர் மற்றொருவர் மீது பரஸ்பரம் குற்றம் சாட்டி பதவி விலக விண்ணப்பிதிருக்கிறீர்கள். உங்களின் புகார் மனுவை நீதி மன்றம் முதல் முக்கிய பொறுப்பதிகாரிகள் வரைக்கும் சேர்ப்பிதுள்ளீர்கள். அது அதன் வேலையை ஒரு பாதையில் செய்து கொண்டிருக்கிறது!

அதே நேரம், மற்றுமொரு பாதையில் ஊர் நலனில் அக்கறை வையுங்கள். எவ்வளவோ மக்கள் நலப் பணிகள் தேங்கி நிற்கிறது. அதனால் மக்களாகிய நாங்கள் தவங்கி நிற்கிறோம். தயவு செய்து அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக, ஊருக்காக உங்கள் உடன்பிறவா சகோதர குடும்பங்களின் நலனுக்காக மக்கள்நலப்பணி நடைபெற ஒத்துழையுங்கள். அல்லாஹ் அதற்க்குண்டான கூலியை உங்களுக்கு வழங்குவான்!

மாறாக ,வரட்டு பிடிவாதமே தொடர்கதையானால், ஊரார்களின் பதுவாவிற்க்கு ஆளாக நேரிடும் என்பதை மிகவும் மனவேதனையுடன் இங்கு விதைக்கிறேன்!

எந்த ஒரு பெண் குலத்தையோ, அல்லது அப்பாவி ஆண்மகனின் மீதோ அவதூறு சுமத்தும் எந்த ஒரு கொடியவரும், இந்த உலக சக்தியின் மூலமாக வேண்டுமானால் மீளலாம், ஆனால் அனைத்தையும் அறிந்த அல்லாஹ் தன் கோபப்பார்வையை கடுகளவு பாய்ச்சினால் போதும், அவர் மட்டுமல்ல அவரின் குடும்பமே நிற்கதியாகிவிடும்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. குரோதமும்,காழ்ப்புணர்ச்சியும்...
posted by kavimagan.m.s.abdulkader (doha-qatar) [19 August 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 29558

சில மெத்தப் படித்த மேதாவிகளுக்கு,எவ்விதக் காரணமும் இன்றி வெளிநடப்பு செய்தவர்களைக் கண்டிக்க மனசாட்சியோ, திராணியோ இல்லை எனினும், உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவான இந்தப் பிரச்சனையில் கூட, எதையாவது சொல்லி தலைவி அவர்களைத் தூற்ற வேண்டும் என்ற வகையில் கருத்தை விதைக்கின்றார்கள்..

இவர்களது எழுத்து இவர்களின் எண்ணத்தின் தரத்தையும், நெஞ்சத்தின் காழ்ப்புணர்ச்சியையும் இவர்களை அறியாமலேயே படம் பிடித்துக் காட்டுகிறது....

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுக்கப் பட்டு விட்டது. அது வரும்போது அதனைத் தலைவி அவர்கள் உரிய விதத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறார்.. அது வேறு விஷயம்....

நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் எதுவாகவும் இருக்கட்டும்... இவர்களது சொந்தப் பிரச்சனைகளுக்காக சாவி கொடுத்த பொம்மைகள் போல இவர்கள் வெளியேறியது சரியா?

நடுநிலையாளர்கள் என்றால் முதலில் அதனைப் பதிவு செய்து விட்டு மற்ற விஷயங்களைப் பேச வேண்டும்..

அர்த்தமற்ற விவாதங்களில் அலுப்புத் தட்டி விட்டதால், இதுபோன்ற விஷயங்களில் கருத்தை விதைக்காமல் ஒதுங்கி இருந்தாலும், ஒரு நீண்ட விவாத களம் வா வா என அழைக்கும் போது என் செய்வது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. சும்மா இந்த வீர சவடால் எல்லாம் கோர்ட்டில் செல்லாது.
posted by syed ahamed (KAYALPATNAM ) [19 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29584

சும்மா தலைவி சரியில்லை தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம், தலைவியை பதவியை விட்டு விலக்க வேண்டும் மேலும் அது இதுன்னு சவடால் எல்லாம் வேண்டாம்.. எது நடக்குமோ அதை செய்யுங்கள்..?

தமிழகத்தில் பல நகராட்சியில் ஊராட்சியில் பேரூராட்சியில் உங்களை போன்ற உறுப்பினர்களின் புகார்கள் எல்லாம் நகராட்சி மண்டல இயக்குனரிடமும் சரி வேறு துறை இயக்குனரிடமும் மூலமும் சரி அவை அனைத்தும் எடுபடாமல் நீதி மன்றம் மூலம் முறியடிக்கப்பட்டு அதன் செய்திகளை நாளிதழ்களில் தொலைகாட்சிகளில் செய்திகள் நான் படித்து இருக்கிறேன்.. சும்மா இந்த வீர சவடால் எல்லாம் கோர்ட்டில் செல்லாது.

குறிப்பு:- தனது ராஜனாமா மூலம் தன் மீது மக்களின் மரியாதையை 1வது வார்டு சகோதரர் ஜனாப் லுக்குமான் அவர்கள் பெற்று விட்டார்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by s.s.md meerasahib (TVM) [20 August 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 29589

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறைவன் கொடுக்க நினைத்ததை எவனாலும் தடுக்க முடியாது.......
இறைவன் தடுத்து நிறுத்தியதை எவனாலும் கொடுக்க முடியாது.......

தலைவியை தலையில் தூக்கி ஆடியும்....... உறுப்பினர்கள் அனைவரையும் கேவலப்படுத்தி ஆட்டியும் பார்த்தீர்களே....... என்ன ஆச்சி... உங்களின் சூழ்ச்சி....?

கையில் அதிகாரம் கிடைத்தும் உருட்ட தான் முடிந்ததே...... தவிர உங்களின் திட்டம்கள் பழிக்கவில்லை. ஊருக்கு நல்ல திட்டம்களை பாலிக்க முடியவில்லை. தலைவியை என்னமோ எங்களுக்கு விரோதி மாதிரியும், இவர்கள்தான் அன்னோனியம் மாதிரியுன் பிதட்டிக்கொள்வோரே... உங்களுக்கு கொடுக்க வேண்டியதை தான் அல்லாஹ் இந்த காயல்பட்டன நகரச்சியில் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறான். ஊருக்கு நல்லது நடக்க மாட்டிக்கிறது.... நல்லது நடக்க மாட்டிக்கிறது என்ற புலம்பல் மட்டும் எல்லோருடைய வாயிலும் இருக்கு. காயல் மக்கள் அனுப்பின தலைவியை ஏர்ப்பார்கலாம். ஆனால் அதே..... காயல் மக்கள் கண்ணியமா அனுப்புன உறுப்பினர்கள் அனைவரையும் கருவருப்பார்கலாம். என்ன நியாயம்பா,என்ன ஜனநாயகம்பா........? இது. நீ நினைப்பது நடக்கணும் என்னா........?

என்றால்.... நீங்கள் சொல்லுற தனி நபர் ஆதிக்கத்துக்கும்....... உங்களின் கூட்டு சதி ஆதிக்கத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஜனநாயகத்தை வாழ விடுங்க. பெரும்பான்மையை ஏத்துகுற மன பாங்கு வேணும். ஒற்றுமையா உறுபினர்களுடன் இசைந்து தலைவி நல்ல பல திட்டைத்தை செயல் படுத்தனும். தலைவி கௌருவம் பார்க்காது உறுப்பினர்களை சகோதர தன்மையும், அவர்கள் சொல்கிற நல்ல வழியையும் பின்பற்ற வேண்டும் இல்லையேல்...... தாங்கள் வழிவிடுவதே............ நன்று.

கவியும், கட்டுரையும் காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது. ஜனநாயகம் பேசணும். சிறுபான்மை மக்கள் எதிர்பாராத பி.ஜே.பி அரசு அமைந்தப்போல் ஜனநாயகத்தை ஏற்க்கவில்லையா? நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று.... "நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை". மேலும் ஒரு நண்பர்... "தனது ராஜனாமா மூலம் தன் மீது மக்களின் மரியாதையை 1வது வார்டு சகோதரர் ஜனாப் லுக்குமான் அவர்கள் பெற்று விட்டார்".என்று.

இதே....... லுக்குமான் காக்காவை இவர்கள் எப்படியெல்லாம் தூற்றினார்கள். தலைவியின் உண்மை நிலையை மக்களுக்கு சொன்ன ஒரே.... காரணத்துக்காக வேண்டி. பாவம் இல்லையா? வஸ்ஸலாம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. இது நல்லா இருக்கே!
posted by kavimagan m.s.abdul kader (doha..qatar.) [21 August 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 29618

கவியும், கட்டுரையும் காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது. ஜனநாயகம் பேசணும். சிறுபான்மை மக்கள் எதிர்பாராத பி.ஜே.பி அரசு அமைந்தப்போல் ஜனநாயகத்தை ஏற்க்கவில்லையா? நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று.... "நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை".

இது நல்லா இருக்கே! இதைத்தானே எதிர்பார்க்கிறோம்..... இதே கருத்தைத்தானே மாய்ந்து மாய்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

எவ்வளவுதான் மனமுரண்டாக இருந்தாலும், அதையும் தாண்டி எழுதுகோல் உண்மையைக் கக்கி விடுகிறது......

சிந்தனை ஒத்துப் போய்விட்டால் விவாதத்திற்கு வேலை இல்லை...

பிடிவாதமாகத் தொடர நினைத்தால் அது பிற்போக்கு வாதம் ஆகிவிடும்......

இறைவனுக்கு நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. சிந்தனை ஒத்துப் போய்விட்டால் நகர்மன்றத்தில் வெளிநடப்புகள் இல்லாமல் போய்விடும்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [21 August 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29621

சிறுபான்மை மக்கள் எதிர்பாராத பி.ஜே.பி அரசு அமைந்தப்போல் ஜனநாயகத்தை ஏற்க்கவில்லையா? நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று.... "நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை". C P) இதை தானே நகர்மன்ற தலைவி பதவி ஏற்ற நாட்களிலிருந்து சொல்லி வருகிறேன்..! பெரும்பான்மையான பிறரும் மாய்ந்து மாய்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்...!

1) நீங்கள் குறிப்பிடும் சிறுபான்மை (ஐக்கிய பேரவை)

2) எதிர்பாராத அரசு பி.ஜே.பி (நீங்கள் நினைப்பது திருமதி ஆபிதா சேக் அவர்களின் பதவியை)

3) பி.ஜே.பி அரசு அமைந்தபோது ஜனநாயகத்தை ஏற்கவில்லையா? (அனைவர்களும் ஏற்க்கவேண்டியதுதானே...!)

4) நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று (இந்த தலைவியையும் ஏற்க்கவேண்டியதுதானே...!)

5) "நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை". (அந்த சைத்தானின் கொள்கையை விட்டு (சிறுபான்மை ஐக்கிய பேரவை) மாறி வர வேண்டும்... எழுத்தும் கருத்தும் இணையதளத்தில் மட்டும் இருந்தால் போதாது. ஜனநாயகம் பேசணும்.

சிந்தனை ஒத்துப் போய்விட்டால் நகர்மன்றத்தில் வெளிநடப்புகள் இல்லாமல் போய்விடும்...

பிடிவாதமாகத் தொடர நினைத்தால் அது "நாம் நினைப்பது நடக்கணும் என்ற அந்த சைத்தானின் கொள்கை". என்பதே என் கருத்து...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved