Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:19:56 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12388
#KOTW12388
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 21, 2013
நெல்லை புதிய பேருந்து நிலையமருகில் ரூ.73 லட்சம் செலவில் உருவாகிறது புதிய பள்ளிவாசல்! ஒரு முஸல்லா ரூ.7 ஆயிரம்!! ஒரு சதுர அடி ரூ.1176!!! நன்கொடைகள் வரவேற்பு!!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3894 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நெல்லை மாவட்டம் திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையமருகில் - ரூ.73 லட்சம் செலவு மதிப்பீட்டில் புதிதாக பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது. முஸல்லாவுக்கு ரூபாய் 7 ஆயிரம் என்றும், சதுர அடிக்கு ரூபாய் 1176 என்றும் செலவு மதிப்பீடு பிரிக்கப்பட்டு, நன்கொடைகள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிவாசல் கட்டிடக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-

பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ். இம்மடல் தங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், தூய இஸ்லாமிய சிந்தனைகளுடனும் சந்திக்கட்டுமாக!

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் பள்ளிவாசல் அமைவதன் அவசியம்:

நெல்லை மாவட்டம் திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்தே இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இப்பேருந்து நிலையம் எப்போதும் அதிக மக்கள் திரளுடன் காட்சியளிக்கிறது.

அதுபோல, இப்பேருந்து நிலையம் அருகிலேயே பாஸ்போர்ட் அலுவலகமும் புதிதாக அமைக்கப்பட்டு இயங்கி வருவதால், பேருந்து நிலையப் பகுதி எல்லா நேரங்களிலும் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது.

ஜங்ஷன் பேருந்து நிலையம் மட்டும் இருந்த வரை, அதனைப் பயன்படுத்திய நமது மக்களுக்கு தொழுகை நேரங்களில் - அருகிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று வருவது இலகுவாகவே இருந்தது. ஆனால், புதிய பேருந்து நிலையம் இயங்கத் துவங்கிய நாள் முதல் – அருகிலுள்ள சுற்றுவட்டாரத்தில் பள்ளிவாசல் எதுவுமில்லாததால் குறித்த நேரத்தில் தொழுகைகளை நிறைவேற்ற இயலாமல் நம் சமுதாய மக்கள் அவதியுற்று வருகின்றனர். பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் நம் சமுதாய மக்கள் அதிகளவில் வந்து செல்வதால், அருகில் பள்ளிவாசல் எதுவுமில்லாதிருப்பது பெரும் கைசேதமாகவே இருந்தது.

புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா:

அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளிவாசல் ஒன்று இப்பகுதியில் அமையப்பெற வேண்டும் என்ற கவலை பலருக்கும் எழுந்ததையடுத்து, திருநெல்வேலி - நாகர்கோவில் நெடுஞ்சாலையில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் எதிரிலுள்ள உமா சங்கர் ஹோட்டலுக்குப் பின்புறத்தில் எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் - ரூபாய் 73 லட்சம் செலவு மதிப்பீட்டில் இரண்டு மாடிகளைக் கொண்ட - சுற்றுச்சுவருடன் கூடிய பள்ளிவாசல் கட்டிடத்திற்கு 12.04.2013 அன்று உலமா பெருமக்கள் மற்றும் இறை நல்லடியார்களின் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, நல்லுள்ளங்கொண்டோரின் நன்கொடைகளைக் கொண்டு கட்டப்பட்டு வருகிறது.











செலவு மதிப்பீட்டு விபரம்:

இதற்கான செலவு மதிப்பீடு விபரம் வருமாறு:-





[மேலேயுள்ள படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]

கட்டிட திட்ட வடிவமைப்பு:

புதிதாகக் கட்டப்பட்டு வரும் இப்பள்ளிவாசலின் தரைதளம், முதல் மாடி, இரண்டாம் மாடி ஆகியவற்றின் ப்ளான் - திட்டப்படமும், அக்கட்டிடத்தில் அமைக்கப்படவுள்ள கதவுகள் - சாளரங்களின் மாதிரி வடிவமைப்புப் படங்களும் வருமாறு:-









இந்த மாதிரி வடிவமைப்பின் படி கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.







[மேலேயுள்ள படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]





புதிய பள்ளிவாசலால் விளையப்போகும் பயன்கள்:

இன்ஷாஅல்லாஹ், இப்பகுதியில் இப்பள்ளிவாசல் அமைவதால் விளையப்போகும் பயன்கள்:-

>> புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் முஸ்லிம்கள் குறித்த நேரத்தில் ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றலாம்...

>> பாஸ்போர்ட் அலுவலகம் வந்து செல்வோர் குறித்த நேரத்தில் ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றலாம்...

>> இயற்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்புவோர், சுத்தமாகப் பராமரிக்கப்படும் பள்ளிவாசல் கழிப்பறைகளைப் பயன்படுத்தலாம்...

>> பயணக்களைப்பில் இருப்போர் பள்ளி வளாகத்தில் இறை நினைவுடன் சிறிது நேரம் இளைப்பாறிச் செல்லலாம்...

>> 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள முதலுதவி மையம் மூலம் - தேவைப்படுவோர் மருத்துவ உதவிகளைப் பெறலாம்...

>> தனியாக அமைக்கப்படும் தொழுகை தளத்தில் பெண்களும் தொழுகைகளை நிறைவேற்றலாம்...

>> துவக்கமாக ஐவேளைத் தொழுகை நடத்தப்பட்டு, நாளடைவில் ஜும்ஆ தொழுகைப் பள்ளியாக இயக்கப்படுவதால், வெள்ளிக்கிழமைகளில் - ஆங்காங்கே அலைச்சலின்றி எளிதாக ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றலாம்...

>> புனித ரமழான் மாதங்களில் ஸஹர் - நோன்பு நோற்பு, இஃப்தார் - நோன்பு துறப்பு ஆகியவற்றுக்கு ஹோட்டல் - உணவு விடுதிகளைத் தேடித் திரியாமல், பள்ளிவாசலிலேயே இலகுவாக நிறைவேற்றிக்கொள்ளலாம்...

இன்னும் பல!

இத்தனை தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் அழகிய வடிவமைப்புடன் கட்டப்பட்டு வரும் இப்பள்ளிவாசலுக்கு உங்கள் யாவரின் தாராள நன்கொடைகள் உரிமையுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

நன்கொடை செலுத்த எளிய வழிமுறைகள்:

>> தனவந்தர்கள் பெருமளவில் இதற்காக உதவலாம்.

>> நடுத்தர மக்களும் தங்கள் பங்களிப்பை வழங்கிடுவதற்காக, பள்ளியின் மொத்தச் செலவு மதிப்பீட்டுத் தொகையை வகைப்படுத்தி,
ஒரு நபர் தொழுவதற்கான இடத்திற்கு (முஸல்லா) ரூபாய் 7,000/-
என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

>> ஏழை-எளியோரும் இக்கட்டிடப் பணியில் பங்களிப்பு செய்வதற்காக, மொத்த செலவு மதிப்பீட்டுத் தொகையை வகைப்படுத்தி,
ஒரு சதுர அடிக்கு ரூபாய் 1,176/-
என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உரிமையுடன் வேண்டுகோள்:

அன்பான சகோதர-சகோதரிகளே...!

நம் யாவரின் நீண்ட நாள் ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் - கருணையுள்ள அல்லாஹ்வின் பேரருளால் உருவாக்கப்பட்டு வரும் இப்பள்ளிவாசல் கட்டிடப் பணியில், உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மேற்சொன்ன ஏதேனும் ஓர் அடிப்படையில் இடம்பெற வேண்டும் என நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

இந்த விபரங்களை முழு கவனத்துடன் படிக்கும் உங்கள் யாவருக்கும் வல்ல அல்லாஹ் அதற்கான எண்ணத்தை நிச்சயம் மனதில் போடுவான். அதனடிப்படையில், இதற்காக உங்கள் தாராள பங்களிப்பை வழங்கி,

“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பள்ளியின் கட்டிடப் பணியில் நானும் பங்கேற்றுள்ளேன்” என்ற பெருமிதத்தை இவ்வுலகிலும், “அல்லாஹ்வுக்காக பூமியில் யார் ஒரு வீட்டைக் கட்டுகிறாரோ, அவருக்காக சுவனத்தில் ஒரு மாளிகையை அல்லாஹ் எழுப்புவான்” என்ற கருத்தில் நம் உயிரினும் இனிய உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாக்களித்த படி மகத்தான நற்கூலியை மறுமையிலும் பெற்றிட, இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்கள் யாவரையும் உரிமையுடன் வேண்டுகிறோம்.

தொடர்பு விபரங்கள்:

நன்கொடைகளை அளிக்க விரும்புவோர்,

(1)
ஜனாப் கே.எம்.ஏ.நிஜாம்
(தலைவர்)
[கைபேசி எண்: +91 94420 18099]

(2)
ஹாஜி எம்.அப்துல் கரீம்
(நிர்வாக உறுப்பினர்)
[கைபேசி எண்: +91 94425 25525]

(3)
ஹாஜி சிக்கந்தர் மீரான்
(நிர்வாக உறுப்பினர்)
[கைபேசி எண்: +91 94425 51297]

(4)
ஜனாப் எம்.பி.காதர் அவ்லியா
(நிர்வாக உறுப்பினர்)
[கைபேசி எண்: +91 94879 91786]

ஆகியோருள் ஒருவரை அவர்களது கைபேசி எண்ணிலோ

அல்லது

masjidurrahaman0786@gmail.com
abdulkareemmg@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிகளிலோ தொடர்புகொண்டு, உங்கள் மேலான நன்கொடைகளை உறுதி செய்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


எல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவரின் உளத்தூய்மையான இப்பணியை எளிதாக நிறைவேற்றித் தந்து, அதனை அவனருளால் ஏற்றுக்கொண்டு (கபூல் செய்து), அதற்கான நற்பலன்களை இம்மை - மறுமையில் நம் யாவருக்கும் நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.

குறிப்பு: தேவைப்படும் நன்கொடைகள் முழுமையாகப் பெறப்பட்டுவிட்டால், நன்கொடை பெறுதல் நிறுத்தப்பட்ட செய்தி அனைவருக்கும் முறைப்படி தெரிவிக்கப்படும் என்பதை இதன்மூலம் அறியத் தருகிறோம்.


இவ்வாறு, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பள்ளிவாசல் கட்டிடக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
ஹாஜி T.M.S.சுல்தான்
காயல்பட்டினம்.

தொகுப்புதவி:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ அப்துல் மாலிக்
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நன்கொடை பேங்க் மூலம் அனுப்பும் விவரம் முறை
posted by tms.sultan (chennai) [22 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31626

THE PRESIDENT ,
MASJIDUR RAHMAN ,
N.G .O .COLONY ,
SB . A /C # 31100059256.
STATE BANK OF INDIA ,
PERUMALPURAM BRANCH .
TIRUNELVELI -627007.
IFS # SBIN 0004766. \


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...சிறப்பான இஸ்லாமிய புது வருட செய்தி..ஆனால்
posted by mackie noohuthambi (kayalpatnam) [22 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31633

சிறப்பான செய்தி,

முஸ்லிம்கள் எல்லோரும், அந்த ஜமாஅத் இந்த ஜமாஅத் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் உதவ வேண்டும். எல்லா மனிதரும் தொழ வாருங்கள் என்று அழைக்கும் பள்ளிவாசலாக அது அமைய வேண்டும். கருத்து வேற்பாடுகள், கொள்கை வேறுபாடுகள் என்று பிரிந்து நின்று இங்கு தொழ வருபவர்கள் நிம்மதி இழந்து விடக்கூடாது என்பதில் நிர்வாகம் மிக கவனமாக இருக்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் இந்த சிறியவனின் முசல்லாவும் ஒன்றாக இருக்க து ஆ செய்யுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஒருமைப்பாடும் இறைவழிபாடும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [23 November 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31640

அன்பு சகோதரர் நூகுதம்பி காக்கா அவர்களின் கருத்தோடு நானும் ஒருங்கினைகிறேன்.

புதிதாய் புலருகின்ற படைத்தோனின் இல்லத்திற்கு எல்லோருடைய எல்லா உதவிகளும் வேண்டும் என்று எதிர்பார்க்கும் வேளையில், அல்லாஹ்வின் வீட் டிற்குத்தானே என்று உதவ வருபவர்களின் உள்ளத்தில் எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக வல்லோனை மட்டும் வணங்கும் இடம்தான் என்ற முழு நம்பிக்கை ஏற்படுமா? என்ற கேள்விக்கனையே மனத்தினிலும் கனத்து நிற்கும்!

எந்த நிபந்தனைகளும் இல்லா நிலைதான் இப் பள்ளியை எழுப்புவதற்கும் இருக்கும். ஆகவே, எல்லோருடைய எல்லா ஒத்துழைப்பும் வேண்டும் என்ற "இஹ்லாஷ்" அங்கும், இங்கும், எங்கும் நிறைந்திருந்தால் நாம் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு பரக்கத்துக்கள் கொட்டிக்குமியும் இன்ஷா அல்லாஹ்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [23 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31642

நம்மனைவருக்கும் மிகவும் அவசியமான இடத்தில் அமையும் பள்ளிவாசல் இது. நமது குழந்தை செல்வங்களுக்கும், நமக்கும் மருத்துவம் என நாம் அனைவரும் சென்றுவரும் திருநெல்வேலி பேருந்து நிலையத்தின் அருகில் நாம் அனைவரும் எப்போதே எதிர்பார்த்த ஒன்று.

ஒரு முஸல்லா என நமதூரைச் சார்ந்த 1050 சகோதர்கள் பங்கெடுத்தாலே இந்த பள்ளியின் வேலை பூர்த்தியாகிவிடும்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்த பள்ளிவாசல் கட்டிட வேலைகள் பூரணமாகி பயன்பாட்டிற்கு வர வல்ல நாயன் அருள் புரிவானாக- ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வானத்தில் வண்ண அலை!  (21/11/2013) [Views - 4099; Comments - 11]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved