Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:21:07 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12523
#KOTW12523
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 9, 2013
துளிர் பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு மனித சங்கிலி! பள்ளி-கல்லூரிகளின் மாணவ-மாணவியர் திரளாகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5363 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



டிசம்பர் 09ஆம் தேதி - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு, காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளையால் நடத்தப்படும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நாள் விழிப்புணர்வு மனித சங்கிலி, காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவு அருகில், இன்று மாலை 16.00 மணியளவில் நடைபெற்றது.









துளிர் மறுவாழ்வுத் திட்டப் பணிகள் தலைவர் அ.வஹீதா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். துளிர் பள்ளி திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் வரவேற்றுப் பேசினார். துளிர் அறக்கட்டளை நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.





இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் வர இயலாததன் காரணமாக, அவர் சார்பில், தூத்துக்குடி மாவட்ட துணை கண்காணிப்பாளர் மு.சுந்தரராஜன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.





மாற்றுத்திறனாளர்களை ஒருபோதும் தனியே ஒதுக்கி வைக்கக் கூடாது - அது பாவம் என்றும், நமது அனைத்து செயல்பாடுகளிலும் அவர்களையும் இணைத்து செயல்படுவதால், அவர்களும் நம்மைப் போன்றே உற்சாகத்துடன் செயல்பட்டு, தம்மாலான உழைப்பை ஆர்வத்துடன் செய்ய அது வழிவகுக்கும் என்றும் அவர் பேசினார்.

துளிர் அறக்கட்டளை செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.



இந்த மனித சங்கிலி நிகழ்ச்சியில், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி, திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரி, சிவந்தி கல்வியியல் கல்லூரி, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளி, கமலாவதி மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளி கல்லூரிகளின் மாணவ-மாணவியரும், துளிர் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர், அவர்கள்தம் பெற்றோர் மற்றும் பள்ளியின் அபிமானிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.













காயல்பட்டினம் பேருந்து நிலையத்தின் மேற்குப்பகுதி நுழைவாயிலிலிருந்து, ஐசிஐசிஐ வங்கி வரை மனித சங்கிலி அமைக்கப்பட்டிருந்தது.



நிகழ்ச்சி நிறைவுற்ற பின், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மு.சுந்தரராஜன் துளிர் பள்ளிக்குச் சென்று பார்வையிட்டார். அவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.



தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மாற்றும் திறனாளிகள்..
posted by mackie noohuthambi (kayalpatnam) [09 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31899

மனித சங்கிலி பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் அவர்களை அங்கீகரிக்கும் அல்லது கௌரவிக்கும் பொது மேடையில் ஊர் பெரியவர்கள், சமூக ஆர்வலர்களை அதிகம் காண முடியவில்லையே என்ற ஏக்கம் அடிமனதில் வந்து செல்வதை இங்கு பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.

தூத்துக்குடியில் நடந்த அரசு விழாவும் கூட ஒரு கண்துடைப்பாகவே இருந்தது என்று தி ஹிந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. என்ன செய்ய முடியும், மக்கள் மனதிலே அந்த உணர்வு, இறைவன் நம்மை சகல வசதிகளுடனும் படைதிருக்கிறானே என்று அல்லாஹ்வை புகழ்ந்து இவர்களுக்காக துஆ செய்வதை தவிர வேறு வழி தெரியவில்லை.

இவர்களுக்காக தங்களை மெழுகுவர்த்திகளாக ஆக்கிக்கொண்டு அல்லும் பகலும் பாடுபடுபவர்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

இந்த துளிர்பள்ளி ஓங்கி வளர வேண்டும் என்று வாழ்த்த எனக்கு மனம் வரவில்லை. இப்படி பிள்ளைகள் இனி பிறவாதிருக்க அருள்புரிவாய் என்றுதான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று வள்ளலார் சொல்வதுபோல இந்த பிள்ளைகளை பார்க்கும்போதெல்லாம் அடிவயிற்றில் அமிலம் சுரக்கிறது. கண்கள் பனிக்கின்றன. அல்லாஹ்வின் படைப்பை யார்தான் குறை சொல்ல முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வாசகர்கருத்து.
posted by kamalmusthafa (abhaksa) [09 December 2013]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31903

துளிர்பள்ளி குழந்தைகள் பன்கேட்றமனித சங்களியை பார்த்தாவது. இவர்கள் எல்லோரும் வாழ .வழிகொடுப்போம் என்று மற்றவர்கள்நெஞ்சில்துளிர் விடட்டும் அன்பு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [09 December 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31904

மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு மனித சங்கிலியில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.

துளிர் பள்ளியில் பூத்து இருக்கும் ஒவ்வொரு துளிரையும் காணும்போது, நெஞ்சை துளைக்கும் சோகக்கதைகள் பலவற்றை அறியலாம்.

அவர்களை அரவணைத்து, அனுசரித்து, அனுதினமும் அவர்களுடன் போர்ராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் பெற்றோர்களையும், துளிர் நிர்வாகிகள், ஆசிரியைகள், உறுதுணை புரியும் நல்ல உள்ளங்களையும் நாம் பாராட்டாமல் இருக்க முடிய முடியாது. வல்ல ரஹ்மான் அவர்களுக்கு அருள் செய்யட்டும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [09 December 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31905

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல ஏற்பாடு ....நமது பள்ளி ,, கல்லுரி ,, பொது மக்கள் என்று பலரும் இவ் விழாவில் கலந்து கொண்டது ....பாரட்டுக்குரியது தான் ....

நமது மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கும் இது ஒரு மனதில் புத்துளர்ச்சியை தரக் கூடியது தான்.எல்லாம் வல்ல இறைவன் மாற்றுத்திறனாளியான இக் குழந்தைகளை பாதுகாத்து ....அவர்களை உடல் ஆரோக்கியத்துடன் ..நலமாக்கி அருவானாகவும் ஆமீன்.....

துளிர் பள்ளி நிறுவனர் .ஹாஜி .ஷேக்கனா அவர்களை நாம் ஒவ்வொருவர்களும் மனதார பாராட்டியே ஆகணும் ....மாற்றுத்திறனாளிகளான இக் குழந்தைகளுக்காகவே அவர்கள் மனம் உகந்து உழைப்பதை நாம் என்னவென்று சொல்வது ....நமது ஊரில் உள்ள யாருமே செய்ய துணியாத ஒரு நல்ல காரியத்தை ஹாஜியார் அவர்கள் செய்து வருவதை நினைத்து ஹாஜியார் அவர்கள் ஹக்கில் துவா செய்ய வேணும் .... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [10 December 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 31907

mackie நூஹுதம்பி சொன்னது போல்..

இந்த துளிர்பள்ளி ஓங்கி வளர வேண்டும் என்று வாழ்த்த எனக்கு மனம் வரவில்லை. இப்படி பிள்ளைகள் இனி பிறவாதிருக்க அருள்புரிவாய் என்றுதான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவன் இனி வரும் காலங்களில் பிறக்கும் குழந்தைகளை குறைவில்லா குழந்தைகளை நமக்கும் , எல்லோருக்கும் தருவானாக ஆமீன் ..

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:..“சாம் பியன்ஸ்”(Champions ).
posted by A.R.Refaye (Abudhabi) [10 December 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31908

சன் தொலை காட்சியில் வார வாரம் ஒளி பரப்பாகும் “சாம் பியன்ஸ்”(Champions ) நிகழ்ச்சி. மாற்றுத் திறனாளி களுக்காகவே காட்டப்படும் இந் நிகழ்ச்சியை காணும் போதெல்லாம், என் கன்னத்தில் வழிந்தொடும் கண்ணீர்க்கு கரையில்லை என்று சொன்னால் மிகையில்லை.

மாற்றுத்திறனாளிகள் கண்டிப்பாக “சாம் பியன்ஸ்” பார்க்க வேண்டும் என்பதே என் தாழ்வான கருத்து.

கருணை உள்ள ரஹ்மானே ! குறைவில்லா மக்கள் செல்வங்களை தர நீயே போதுமானவன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH. K.S.A.) [11 December 2013]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31920

"அஸ்ஸலாமு அலைக்கும்."

யா அல்லாஹ், இந்த அணைத்து பிள்ளைஹல்லுக்கும், நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பாயஹா ஆமீன்!

இன்ஷாஅல்லாஹ், இந்த குழந்தை யாவர்ஹளும் பல்வேறு துறைஹளில் சாதிக்க அருள் புரிவாய் ரஹ்மானே!!!! குறிப்ஹா, ஆலிம், ஹாபில், மருத்வர், கலெக்டர், வியாபரிஹல், மேலாளர் எல்லா பதவியும் கொடுத்து அழகு பார் இறைவனே!!!

அவர்களை அரவணைத்து, அனுசரித்து, அனுதினமும் அவர்களுடன் போர்ராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் பெற்றோர்களையும், துளிர் நிர்வாகிகள், ஆசிரியைகள், உறுதுணை புரியும் நல்ல உள்ளங்களையும் நாம் பாராட்டாமல் இருக்க முடிய முடியாது. வல்ல ரஹ்மான் அவர்களுக்கு அருள் செய்யட்டும். ஆமீன்! ஆமீன்! யாராபல் ஆலமீன்!!!! நிறுவனர் வக்கீல் அஹ்மத் காக்க, செயலாளர், ஷேஇக்கான சஹோதரர், அஹியோருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுப்பயஹா யா அல்லாஹ். ஆமீன்!!!

அன்புடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச்.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மனம் மயக்கும் மேடை வேண்டும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [11 December 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31923

மக்கி நூஹுதம்பி காக்கா அவர்களின் உணர்வோடு நானும் ஒன்றர கலக்கிறேன்! அல்லாஹ்வின் உதவியால் இந்த துளிர் பள்ளியில் சேர்ந்த கடைசிப்பிள்ளேயே என்றென்றும் கடைசிப் பிள்ளையாகவே இருக்காட்டும்!

மேடையில் ஊர்முக்கியஸ்த்தவர்கள் முதல் மிகுதியானவவர்களை பார்க்கமுடியவில்லை என்ற ஆதங்கத்தையும் நூஹு தம்பி காக்காவின் உணர்வு வெளிபடுத்தியது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் உணர்வால் உள்ளம் உந்தப்பட்டு ஓடோடி வந்து உங்களுடனேயே நாங்கள் என்றென்றும் இருப்போம் என்பதை அந்த அல்லாஹ்வின் அன்பு செல்வங்கள் அகமகிழ்ச்சியுடன் ஆமோதிப்பதுபோல் அந்த மேடையை அலங்கரிக்க வேண்டும்!

இதுமட்டும் காசுபடைதவர் கல்யாணவீடோ,கச்சேரி கூடமோ , கட்சிதலைவர் மேடையோ ,கிளுகிளுப்பூட்டும் திறப்படத் துறையினர்கள் தொன்றுமிடமாகவோ இருந்திருந்தால்!!!!????......

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
11... 12... 13...  (11/12/2013) [Views - 2610; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved