Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:56:28 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12518
#KOTW12518
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 8, 2013
ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2553 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

ஏற்காடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 21-வது சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் சரோஜா 142,771 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மாறன் 64,655 பெற்றார்.

யாருக்கும் வாக்கு இல்லை என்பதைப் பதிவு செய்யும் நோட்டா வசதியில் 4,431 வாக்காளர்கள் பதிவு செய்திருந்தனர்.

ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. பெருமாள் கடந்த ஜூலை மாதம் இறந்ததையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 4-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. அ.தி.மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ., பெருமாளின் மனைவி சரோஜாவும், தி.மு.க. சார்பில் மாறன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஏற்காடு தொகுதியில் மொத்தம் 2,40,290 வாக்குகள். இந்த தேர்தலில் ஆண்கள் 1,05,620 பேரும், பெண்கள் 1,08,820 பேரும், திருநங்கை நான்கு பேர் என மொத்தம் 2,14,444 பேர் வாக்களித்தனர். 89.24 சதவீத வாக்குகள் பதிவாகின.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by syedahmed (GZ, China) [08 December 2013]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 31875

V - ever stands eternal victory. It is the excellent and expected one.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி
posted by mackie noohuthambi (kayalpatnam) [08 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31877

ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது.பூவா தலையா போட்டால் தெரியும் நீயா நானா பார்த்து விடு, பூ விழுந்தால் நீ நெனைச்சபடி, தலை விழுந்தால் நான் ஜெயிச்சபடி...என்று வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்பவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்.

தோல்வியை கண்டு துவண்டு விடுவதும் வெற்றியை கண்டு வெறி கொள்வதும் வாடிக்கை ஆகிவிட்டது. அந்த வகையில் காங்கிரஸ் தோல்வியை பற்றி சோனியா காந்தி, ஞானதேசிகன் ஆகியோர் கொடுத்துள்ள பேட்டி ஒரு சிறந்த ஜனநாயகவாதி பேசும் பேச்சு, தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்ந்து அதை சரி செய்வோம் என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனால் ஏற்காடு தொகுதியில் முதல்வர் பெற்றுள்ள இமாலய வெற்றியை, ஒரு தொண்ணூறு வயது நிரம்பிய முது பெரும் தலைவர் - வெற்றியின் உச்சிக்கு சென்றவர் - தோல்வியின் அதல பாதாளத்தில் வீழ்ந்தவர் - மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் உயிர்தெழுந்து இமயத்தை அடைந்தவர் -இப்படி மாறி வெற்றி தோல்விகளை பந்தாடியவர் -ஏற்க மறுக்கிறார்.

பணம் கொடுத்து வாங்கிய வெற்றி என்கிறார்.வாதத்துக்காக அதை ஏற்றுக் கொண்டாலும், அந்த சூட்சுமத்தை கற்றுக் கொடுத்த குருநாதர் - திருமங்கல திருமந்திரத்தை ஜபிக்க கற்றுக் கொடுத்த பிதாமகன் நீங்கள்தானே, கலைஞரே, தமிழின தலைவரே என்று மக்கள் உங்களை திருப்பி கேட்கிறார்களே, நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள்.

உங்களுக்கும் காலம் வரும்...

இந்த நிலையும் மாறும்.......பொறுத்திருங்கள். உங்கள் ஓட்டு வங்கி நோட்டு வங்கியாக மாறினால் பரவா இல்லை, நோட்டா வங்கியாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

"நீங்கள் கூடா நட்பு கேடாய் முடிந்தது" என்று சொன்னீர்களே, காங்கிரசயா,பாரதிய ஜனதாவையா அல்லது இதர உதிரி கட்சிகளையா? அப்படி சொல்லிவிட்டு அவர்கள் எல்லோரிடமும் கேவலம் இந்த இடை தேர்தலில் எனக்கு ஆதரவு தாருங்கள் என்று மடி பிச்சை கேட்டீர்களே, கடமை கண்ணியம் கட்டுப்பாடு காற்றில் பறந்ததா இல்லை மறப்போம் மன்னிப்போம் என்ற எண்ணம் விசுவரூபம் எடுத்ததா...ஒரு ஜனநாயகவாதியாக உங்களைப் பார்க்கும் எங்கள் சிந்தனைகளை சிதறடித்து விடாதீர்கள். மீண்டும் நீங்கள் சிறகடித்து பறக்கும் காலத்தை பார்க்க விரும்புகிறோம்.

உங்கள் உயிரினும் இனிய மேலான உடன்பிறப்பின் அன்பான வேண்டுகோளும் அபிலாஷையும். அண்ணா நாமம் வாழ்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Rilwan (TX) [08 December 2013]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 31878

இந்த பெண்மணியின் பேட்டியை பார்க்கமுடிந்தது ... பக்கத்திலிருக்கும் கட்சிக்காரர் "மக்கள் .." என்று எடுத்துக்கொடுக்க "வோட்டு போட்ட மக்களுக்கு .." என்று கிளிப்பிள்ளை மாதிரி பேசுகிறார் ..

மக்களின் தலை எழுத்து .. சுயமாக சிந்திக்கத்தேரியாதவர்களுக்கும் வோட்டு போடும் அளவு தான் சுய சிந்தனை இருக்கிறது ...

இதில் தி மு க .. ஆ தி மு க என்ற வித்தியாசம் இல்லை ... இவர்கள் பொது நல வேடம் போட்ட சுயநலவாதிகள் .

வோட்டு போடுவது என்பது நல்லது செய்வார் நேர்மையாக இருப்பார் என்று மானசீகமாக நம்பி செய்யும் விஷயம் .. ஒட்டு ஒன்று தான் சிரியா மாதிரியான நிலைமை இந்தியாவில் வராமல் பாதுகாக்கிறது ... ஆனால் , வோட்டின் பெறுமதி தெரியாமல் ஜாதி மத பயத்திற்கும் , வேட்டி சட்டைக்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விலை பேசும் நிலை...

கோயில் கட்டுவதோ மசூதி கட்டுவதோ மதம் நடத்துவதோ அரசுகளின் வேலை அல்ல ... அரசின் அடிப்படை கடமை சரியான ஆட்சி கொடுப்பதே ..இதை சரியாக புரிந்து கொண்ட கட்சி ஆம் ஆத்மி மட்டுமே ... இந்த தேர்தலில் இவர்களின் வெற்றி மற்றுமே மகிழ்ச்சி அளிக்கக்கூடியது .. தமிழகத்திலும் ஆம் ஆத்மி மாதிரியான மாற்றமே தேவை .

சுயமாக சிந்திப்பவர்களுக்கு ஒட்டு போடும் காலம் வேண்டும் .. கட்சிக்கும் கட்சி தலைமைக்கும் அடிமைகளாய் இருக்கும் காலம் மாற வேண்டும் . நடக்குமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...ஜனநாயகம் வாழ்க ....
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [08 December 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31879

வெற்றி & தோல்வி வீரனுக்கு அழகு ...

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. எர்கட்டுக்கு வந்த சோதனை ...
posted by Rilwan (TX) [08 December 2013]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 31881

என்னுடைய முந்தய குறிப்பில் திருத்தம் ..

இந்த பெண்மணி திரு திரு என விழிக்க .. பக்கத்தில் இருக்கும் கட்சிக்காரர் , 'வாக்காளர் ..' என சொல்கிறார் .. இதை தொடர்ந்து இவர் 'வாக்காளர் பெருமக்களுக்கும் நன்றி .. அதை தொடர்ந்து ஜெயாவுக்கு நன்றி சொல்ல வாய் குளறி ஏதேதோ உளறுகிறார் .

இவர்தான் அடுத்த தேர்தல் வரை தங்கள் பிரச்சினைகளை சென்னையில் எடுத்து வைக்க போகிறார் என நினைத்தால் .. ஏற்காட்டின் சாதாரண குடி மக்களுக்கு நிச்சயமாக குலை நடுங்கி இருக்கும் . மக்களின் பிரச்சினைகள் சுகீகரிக்கக்கொடிய திறனும் அதை articulate பண்ணும் திறனும் இருக்கின்றதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி .

அரசியலை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது தானே வேண்டும்?

இங்கு ஆதிமுக வென்றதா திமுக வென்றதா என்பதை தானே பேசுகிறோம்? என்ன தகுதி உள்ளவர் வென்றார் .. அல்லது வென்றவருக்கு என்ன தகுதி உள்ளது என்பதை ஏன் பேச மறுக்கிறோம்?

இறந்த எ எல் ஏவின் மனைவி என்பது எம் எல் எ ஆக ஒரு தகுதியா? மக்கள் என்ன கேலிப்பொருளா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [08 December 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31882

அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோர்களும் எதிர்பார்த்த ஒற்றுதானே .....இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது ....

ஆளும் கட்சி வெற்றி பெறுவது ஒன்றும் தமிழ் நாட்டில் பெரிய விசயமே இல்லையப்பா ........சகஜம்பா ........

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Cnash (Makkah ) [09 December 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 31893

இந்த நாட்டில் யாருக்கு தகுதி அடிப்படையில் பதவி வருகிறது என்று சொல்லுங்கள் ... நேரு தொட்டு ராகுல் வரை .. கலைஞர் முதல் அழகிரி மகன் வரை - லல்லுவுக்கு மாற்று அவர் மனைவி ராப்ரி தேவி - முலாயம் சிங் க்கு பின் அவர் மகன் அகிலேஷ் - பாரூக் அப்துல்லாவிற்கு பின் அவர் மகன் உமர் அப்துல்லாஹ்.. விசயமாத சிந்தியாவின் மகள் வசுந்தராஜ சிந்தியா ராஜஸ்தானை ஆளுகிறார்.. இன்னும் பல.

இதில் எங்கே இருந்து வந்தது திறமையும் தகுதியும் இப்படி தானே தொன்றுதொட்டு நடந்து வருகிறது ... முடிசூடும் மன்னராட்சி கேட்டால் அது ஜனநாயகம்... நல்ல வேலை பெரியாருக்கும், அண்ணாவிற்கும், எம்ஜியாருக்கும், ஜெயாவிற்கும் வாரிசு இல்லை... ஆனாலும் மொத்த வாரிசு அரசியலையும் இங்கே ஒரே தலைவர் குத்தகைக்கு எடுத்து விட்டார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. எது கூடா நடப்பு?
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [09 December 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31902

அன்புள்ள நூஹுதம்பி காக்கா அவர்களே, நீங்கள் பல கருத்து சோலையில் புகுந்து பலதரப்பட்ட கருத்துக்கனிகளை பருக தந்திருக்கிறீர்கள். அதில் பரவசம் அடைந்தவனில் நானும் ஒருவன். சில சமயங்களில் அது புளிக்குமா, இனிக்குமா என்று கூட சற்று சோதிக்காமல். புளிக்கும் பழத்தையே தந்து விடுகிறீர்கள்! மேலே கண்ட உங்கள் கருத்துகூட கனியாமல் காயாக கசந்து காணப்பட்டது!

உங்கள் கூற்றுப்படி.....
பணம் கொடுத்து வாங்கிய வெற்றி என்கிறார். வாதத்துக்காக அதை ஏற்றுக் கொண்டாலும், அந்த சூட்சுமத்தை கற்றுக் கொடுத்த குருநாதர் - திருமங்கல திருமந்திரத்தை ஜபிக்க கற்றுக் கொடுத்த பிதாமகன் நீங்கள்தானே, கலைஞரே, தமிழின தலைவரே என்று மக்கள் உங்களை திருப்பி கேட்கிறார்களே, நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள்.(C &P )

முதன் முதலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கிய பிதாமகள் யாரென்றால் சாட்த் ,சாத் உங்கள் புரட்சித்தலைவி ,செல்வி, அம்மா ஜெயலலிதா அவர்கள் தான்! அந்த கலாச்சரத்திற்கு கால்கோல் நாட்டியது சாத்தான்குள இடைத்தேர்தலில்தான் என்பதை அதிகார பூர்வமாக நிரூபிக்க பல சம்பவங்கள் சான்றாக உள்ளது. சற்று கவனத்துடன் வார்த்தையை கையாளுங்கள் அன்பு சகோதரரே!

தி.மு.க பெற்ற வெற்றி பணமே கொடுக்காமல் பெற்ற வெற்றிகள் என்று நான் வாதாட வரவில்லை. ஜெயலலிதா போன்றோருக்கு அவர் நிலைக்கேற்ப கலைஞர் பதில் சொல்லி இருக்கிறார் அவ்வளவுதான்!

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தவுடன் வேக, வேகமாக முதலில் எங்கு விரைந்து ஓடோடி வருகிறார், தன்னுடைய கட்சி பலமாகவும், பிரகாசமாக்கவுமுள்ள மாநிலத்திற்கா வருகிறார் இல்லை, இல்லை, நேராக தமிழகதிற்கு வருகிறார். அதுவும் ஒரு தடவைக்கு இரு தடவை. அவர் வரும் நாளில் அருகிலுள்ள அனைத்து கல்லூரிகளும், பள்ளிகளும் மூடப்படவேண்டும் என்ற மறைமுக அரசு ஆணை!

தனக்கு பிடித்த முதல்வர், சுமார் 50 வகையான ருசியில் மிஞ்சிய உயர்தர உணவு வகைகளை உள்ளமகிழ்வுடன் விருந்து படைத்த தமிழக முதல்வரின் ஊருக்கல்லவா உவகையுடன் வருகிறார் மோடி.

நரேந்திர மோடி முதல்வராக வெற்றிப்பெற்ற்வுடன், அனைத்து முதல்வர்களையும் முந்திக்கொண்டு, தமிழகத்திலிருந்து முதன்முதலாக சென்று மேடையில் மலர் சிரிப்புடன் வாழ்த்து தெரிவித்தவர் புரட்சிதலைவி ஜெயலலிதா அவர்கள்தான்!

சென்ற 2004-லில் தி.மு.க.ஆட்சியைபிடித்து வெற்றியைப் பெற்ற அன்று, இன்றைய முதல்வர், அவர் வீட்டு மாடியில் இருந்து தன் தொண்டர்களுக்கு என்ன அறைகூவல் இட்டார் தெரியுமா? தமிழகத்தில் தீய சக்தி ஆட்சிக்கு வந்து விட்டது அதுவும் மைனார்டி அரசாகத்தான் அமையப்போகிறது, அதுவும் எத்தனை நாளுக்குத்தான் ஓடப்போகிறது என்று தெரியாது.அதனை ஆணி வேருடன் தூக்கியெறிய இன்றுமுதல் சூளுரையுங்கள் என்று வெறி வசனம் பேசியவர்தான் இன்றைய முதல்வர்!

ஒரு மத வாத சக்தியிடம் மறைமுகமாக ஆதரவு அளித்துவரும் ஒரு முதல்வரை எதிர்க்கவும், தற்போதைய ஆட்சின் அவலத்தால் அவதியுறும் மக்களை மீட்கவும், ஒட்டு மொத்தமாக எல்லோரும் எங்கள் கட்சிக்கு ஆதரவு தாருங்கள் இதில் எங்கள் கொள்கையில் உடன்பாடில்லா எதிர் கருத்துடையவர்களும், ஒரு பொது எதிரியை வீழ்த்த எங்களக்கு உதவுங்கள் என்ற கருத்தில் அழைக்கும் ஒரு தலைவர், தனக்கு ஒத்துழையுங்கள் என்று அழைப்புவிடும் அத்தனை கட்சிகளுடன் கொஞ்சி குலாவி கூடும் நட்புடன் நெஞ்சனையோடு இணைத்துவிட்டார் என்று முடிவெடுக்கும் உங்களைப் போன்றோர்களின் சித்தாந்தம் எந்த சிந்தனையின் திசையில் செல்கிறது என்பதை எண்ணி உண்மையில் வேதனை அடைகிறேன்!

அல்லாஹ அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Cnash (Makkah ) [10 December 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 31909

எப்படி தான் மெய் மறந்து இப்படி கலைஞர் புராணம் பாடுகிறார்களோ தெரிய வில்லை .. 1998 பின் அவர் சுயரூபத்தை பிஜேபி சேர்ந்து கூட்டு வைத்து கட்டிய பிறகுமா இன்னும் நம்புகிறார்கள் .. மோடி ஜெயலலிதாவிற்கு 50 வகை உணவு வைத்தாராம்... ஏன் மானமிகு கலைஞர் குஜராத் கலவரம் நடந்த போது கூட்டு வைத்து கொண்டு அது அந்த மாநில பிரச்னை என்று திருவாய் மலர்ந்தது முதல் இன்றைக்கு பிஜேபி கூட்டணி பற்றி சங்கேத மொழி பேசி இருப்பது வரை எதுவுமே இவர்களுக்கு தெரிய போவதில்ல.. ஜெயலலிதாவிர்க்கா இத்தனை ஆண்டு காலம் கோடி பிடித்து ஒட்டு போட்டீர்கள் .. காலம் முழுவதும் கலைஞர் கலைஞர் என்று கத்தி கடைசியல் துரோகம் செய்தாரே .. அவரையா இன்னும் நம்புகிறீர்கள் .. போங்க .. நீங்களும் உங்க அரசியலும்.. ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved