Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:34:37 PM
செவ்வாய் | 30 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1734, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:27மறைவு11:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13038
#KOTW13038
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 17, 2014
இன்று (பிப். 17) ரயில்வே துறையைக் கண்டிக்கும் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்! சர்வகட்சிக் கூட்டத்தில் முடிவு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2295 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றாமலிருக்கும் தென்னக ரயில்வேயைக் கண்டித்து நடத்தப்படவுள்ள போராட்டம் குறித்து, இன்று (பிப்ரவரி 17ஆம் நாள்) திங்கட்கிழமை இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த - நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக்கமிட்டிகள் சார்பில் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, போராட்டத்தை ஒருங்கிணைக்கும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

ரயில் மறியல் போராட்டம்:

காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நடைமேடையை விரிவாக்கவும், உயர்த்தவும், மேற்கூரையமைக்கவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு, பணிகளும் துவக்கப்பட்ட நிலையில் அரைகுறையாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனைக் கண்டித்து, இம்மாதம் (பிப்ரவரி) 18ஆம் தேதியன்று காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில், ரயில் மறியல் போராட்டம் நடத்த, ஜனவரி 07ஆம் தேதி நடைபெற்ற நகரின் சர்வகட்சியினர் – பொதுநல அமைப்பினர் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

விளக்கப் பொதுக்கூட்டம்:

அதன் தொடர்ச்சியாக, ‘ரயில் மறியல் போராட்டம் ஏன், எதற்கு?’ எனும் தலைப்பில், விளக்கப் பொதுக்கூட்டத்தை, வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்திடுவதென, கடந்த ஜனவரி மாதம் 26ஆம் நாளன்று - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகத்தில் மீண்டும் நடைபெற்ற சர்வ கட்சியினர் பொதுநல அமைப்பினர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.





வட்டாட்சியருடன் பேச்சுவார்த்தை:

இந்நிலையில், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, திருச்செந்தூர் வட்டாட்சியர் அழைப்பு விடுத்ததன் அடிப்படையில், இன்று மதியம் 03.00 மணியளவில், வட்டாட்சியர் நல்லசிவன் தலைமையில், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

காயல்பட்டினம் நகரின் அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் பங்கேற்ற இக்கூட்டத்தில், இம்மாதம் 11ஆம் தேதி இதே அலுவலகத்தில் மறு கூட்டம் நடத்தப்படும் என்றும், அக்கூட்டத்தில் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறும், அனைவரும் கோரியது போல உறுதியான அறிவிப்பை தொடர்வண்டித் துறை அதிகாரிகள் அக்கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கிட ஆவன செய்வதாகவும் வட்டாட்சியர் தெரிவித்தார்.

மீண்டும் கலந்தாலோசனை:

எனினும், வட்டாட்சியரால் தெரிவிக்கப்பட்ட படி மறுகூட்டம் நடத்தப்படாததால், இம்மாதம் 13ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 05.00 மணியளவில், அடுத்தகட்ட நடவடிக்கை முடிவெடுப்பதற்காக கலந்தாலோசனைக் கூட்டம், முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில், கட்சியின் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.

ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். முஸ்லிம் லீக் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மதிமுக தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பன்னீர் செல்வம், நகர்மன்ற உறுப்பினர் இ.எம்.சாமி, முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.



பின்னர், கூட்டத்தில் பங்கேற்றோரிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு, நிறைவில் பின்வருமாறு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:-

தீர்மானம்:

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதைக் கண்டித்தும், நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும் 18.02.2014 செவ்வாய்க்கிழமையன்று காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற - நகரின் அனைத்து அரசியல் கட்சியினர், அனைத்து ஜமாஅத்தினர், பொதுநல அமைப்பினர், புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, போராட்டக் குழுவினரை 05.02.2014 அன்று அழைத்துப் பேசிய திருச்செந்தூர் வட்டாட்சியர் அவர்கள், 11.02.2014 அன்று மறுகூட்டம் நடத்தி, அதில் - மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றிட ரயில்வே துறையிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றுத் தருவதாக வாக்களித்திருந்தார்.

வட்டாட்சியர் உறுதியளித்த படி மறுகூட்டம் நடத்தப்படாததால், ரயில்வே நிர்வாகத்தைக் கண்டிக்கும் போராட்ட விளக்க பொதுக்கூட்டத்தை 17.02.2014 திங்கட்கிழமையன்று (இன்று) இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தவும், இப்பொதுக்கூட்டத்தின்போது போராட்ட தேதியை அறிவிக்கவும் இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.


இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நன்றியுரை, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

பிரசுரம்:

அதன் தொடர்ச்சியாக, பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து பின்வருமாறு பொதுப்பிரசுரம் நகரெங்கும் வினியோகிக்கப்பட்டுள்ளது:-




இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [17 February 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33198

அஸ்ஸலாமு அழைக்கும். இப் பொது கூட்டம் LIVE செய்ய படுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...நல்ல முயற்சி...
posted by mackie noohuthambi (chennai) [17 February 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 33199

உங்கள் முயற்சியும் போராட்டமும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

முஸ்லிம் லீக் போர்க்குணம் இல்லாத கட்சி என்ற ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால் போர்க்குணம் என்பதும், "உரசினால் பற்றிக் கொள்ளும் தீக் குச்சியைபோல் இருக்க வேண்டுமே தவிர அது எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் தீப் பந்தம்போல் இருக்கக் கூடாது" என்பதை உணர்த்தும் நல்லதொரு இயக்கம் முஸ்லிம் லீக் என்பதையும் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இன்று இரவு நடக்கும் பொதுக் கூட்டத்தில், நமதூர் வழியாக் செல்லும் எல்லா பேருந்துகளும் நமதூர் ரயில் நிலைய ஸ்டாப்பில் நிறுத்தி செல்ல வேண்டும் (போகும்போதும் வரும்போதும்) என்ற தீர்மானத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சென்னையில் வாழும் நமதூர் மக்களின் சார்பாக வேண்டிக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [17 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33205

அஸ்ஸலாமு அழைக்கும் ,

நம்முடைய முஸ்லிம்லீக் பல சமையம் மக்களிடம் இணைந்து செயல்படுவது இல்லை .

சில வருடமாக அதன் செயல்பாடுகள் மக்கள் புறம் திரும்பி யுள்ளது ஜனாப் அபூபக்கர் போன்ற தலைவர்கள் இன்னும் பல இளம் தலைமுறைக்கு அதிக பொறுப்புகளை கொடுத்து நல்ல முறையாக வழிநடத்த வேண்டும் நம் சமுதாயமும் அதற்கான ஆர்வத்தை காட்ட வேண்டும் இன்னும் நம் முஸ்லிம்லீக் கூடங்களில் சராசரியாக 60 வயதுக்கு அதிகம் உள்ள முதியவர்கள் தான் இருகிறார்கள் இந்த நிலை மாற வேண்டும் என்று கூட சொல்லவில்லை ஆனால் சிறுவயது டைய மக்களும் வரவண்டும் அதற்கான வழிவகைகளை முஸ்லிம் லீக் எடுக்கணும் .

இது போன்ற போராட்டங்கள்தான் முஸ்லிம்லீக்கை சமுதாயத்துடன் மற்றும் சமூகத்துடன் இணைக்கும். தீ பந்தமாக தொடர்ந்து எரிய வில்லை என்றாலும் எரிந்து கொண்டுருக்கும் சில தீ பந்தங்களின் கதகதபிலாவது இருந்து கொண்டு தன் தீ குட்சியை பற்றுவதற்கு தயார்படுத்தி வைக்க வேண்டும் .

யார் குத்தியாவது நெல் அரிசியானால் சரிதான் அனைவரும் ஒற்றுமையாக இருந்து உரளையும் , உலகையையும் உடைக்காமல் இருந்தால் சரிதான் மற்றும் பெருமைக்கு மாவிடித்து பிள்ளை வாய்ல மண்ணை போடாமல் இருப்பது கொண்டால் அதுவும் நல்லதுதான் .

இந்த ஒருங்கிணைத்த போராட்டமும் பொது கூடமும் நல்ல முறையாக நடந்து நல்ல சிறப்பான நிலைக்கு வித்திடடும் எல்லாம் வல்ல நாயன் நமக்கு இந்த பயணத்தை வெற்றி பயணமாக அமைய நம் மக்களும் இணைந்து பயணம் புரிய வேண்டும் இன்ஷா அல்லாஹ் இது வெற்றி பயணம்தான் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved