Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:08:56 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13043
#KOTW13043
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 18, 2014
காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள்: நான்கு ஆண்டு கால முயற்சி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3233 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரளா மாநிலம் பொன்னணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் இ.அஹமத், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ரயில்வே துறை இணை அமைச்சராக - மே 2009 இல் - பொறுப்பேற்றார்.

அவ்வாண்டின் இறுதியில் காயல்பட்டினம் வந்த மத்திய அமைச்சரிடம், காயல்பட்டினம் ரயில்வே நிலையம் குறித்த பல்வேறு கோரிக்கைகள் நகர பிரமுகர்களால் முன்வைக்கப்பட்டது.



அன்றைய தினம், நகரில் நடந்த நிகழ்ச்சியில் - தன்னிடம் வழங்கப்பட்ட கோரிக்கையை தான் ஏற்றுக்கொண்டதாகவும், அப்பணிகளுக்கான உத்தரவினை தான் உடனடியாக வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிவிப்பின் சாராம்சம் ...



காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் கணணி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையம் மற்றும் உடனடி பயணச்சீட்டு மையம் விரைவில் திறக்கப்படும்...

18 தொடர்வண்டி பெட்டிகள் நிறுத்துவதற்கு வசதியாக, இந்நிலையத்திலுள்ள நடைமேடை விரிவுபடுத்தப்படும்...

பயணியர் வசதிக்காக, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் மேற்கூரை உடனடியாக அமைக்கப்படும்...

உயர் கோபுர ஒளிவிளக்குகள் நிறுவப்படும்...


அமைச்சரின் அறிவிப்பினை தொடர்ந்து - தென்னக ரயில்வே சார்பில் ஏப்ரல் 21, 2010 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் (எண்: 4-2010-14) கோரப்பட்டதாக காயல்பட்டணம்.காம் வசம் உள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1 கோடியே, 81 லட்ச ரூபாய் மதிப்பிலான அந்த ஒப்பந்தப்புள்ளி கோரிக்கை - மூன்று இடங்களில் நடைபெறவேண்டிய பணிகளை இணைத்து வெளியிடப்பட்டிருந்தது.

அப்பணிகளின் விபரம் வருமாறு:

(1) திருநெல்வேலி சந்திப்பின் மூன்றாம் நடைமேடையில் கான்க்ரீட் தரை அமைப்பு, புது கட்டிடத்தில் பார்சல் அறை மேம்பாடு (Provision of vacuum dewatered concrete flooring on platform No.3., improvements to concourse area and modification of parcel office at new station building)

(2) காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் தற்போதுள்ள கீழ் அளவிலான நடைமேடையை - 18 பெட்டிகள் தாங்கக்கூடிய அளவுக்கு நீட்டிக்கவும், ரயில் நிலைய கட்டிடத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளவும், ரயில் நிலையத்தினை ஒட்டிய சாலையை மேம்படுத்துதல், மேற்கூரை அமைத்தல், குடிநீர் வசதி வழங்குதல் போன்றவை (Proposed extension of existing BG low level platform to hold 18 bogies capacity and improvements to station building, approach road, platform shelter, watering arrangements etc)

(3) குரும்பூர் ரயில்நிலையத்தில் தற்போதுள்ள நடு அளவிலான நடைமேடையை 18 பெட்டிகள் தாங்கக்கூடிய அளவுக்கு நீட்டிக்க (Proposed extension of existing BG medium level platform to hold 18 bogies capacity)


இந்த ஒப்பந்தப்புள்ளிகள் ஜூன் 4, 2010 அன்று திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டதாக காயல்பட்டணம்.காம் வசம் உள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதற்கு முன்னர், அப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் (ADMINISTRATIVE SANCTION) முதலில் வழங்கப்படும். இதில் நிதி ஒதுக்கீடு ஒரு முக்கிய அம்சம். அதனை தொடர்ந்து - தொழில்நுட்ப ஒப்புதல் (TECHNICAL SANCTION) வழங்கப்படும். அதனை தொடர்ந்தே - ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்.

ஜூலை 28, 2010 அன்று, பணிகளின் நிலை குறித்து அறிந்திட - தென்னக ரயில்வேயின் மூத்த மண்டல அலுவலர்களை - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.



அவ்வேளையில் - கணிணிமயமாக்கப்பட்ட பயணச்சீட்டு முன்பதிவு மையம் துவக்கம், 18 மின் குழல் விளக்குகள் நிறுவப்பட்டமை, கழிப்பறை, பயணியர் இருக்கை, சுற்றுச்சுவர் கட்டுமானம் உள்ளிட்ட - இதுவரை செய்துமுடிக்கப்பட்டுள்ள பணிகளைப் பட்டியலிட்ட அந்த அதிகாரிகள், நடைமேடை விரிவாக்கம், நடைமேடையை ஹைலெவல் ப்ளாட்ஃபார்ம் ஆக உயர்த்தல், நடைமேடை முழுவதற்கும் மேற்கூரை அமைத்தல், தொடர்வண்டி நிலைய நுழைவுப்பாதையில் தார் சாலை அமைத்தல், அதன் ஒரு பகுதிக்கு மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கென முதற்கட்டமாக ரூ.50 லட்சம் தொகை ஒதுக்கப்பட்டு ஆகஸ்ட் 8, 2010 முதல் முதல் பணிகள் துவக்கப்படும் என்று தெரிவித்தனர்.

பணிகளின் நடப்பு நிலையினை கண்டறிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமையிலான குழு, செப்டம்பர் 26, 2010 அன்று காயல்பட்டினம் ரயில் நிலையத்திற்கு நேரடியாக சென்றது.







நிலையத்தின் நடப்பு மேம்பாட்டுப் பணிகள் திருச்சியைச் சார்ந்த ஜேம்சிங் என்ற ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் சார்பில் இப்பணியைக் கண்காணித்து வந்த கண்காணிப்பாளர் ஜான் வின்ஸென்ட்டிடம் நடப்பு பணிகள் குறித்து அப்போது கேட்கப்பட்டது.

நிலையத்தின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைய மேலாளர் அறை, பயணியர் காத்திருப்பறை ஆகிய பகுதிகளில் டைல்ஸ் பொருத்தப்பட்டுள்ளதாகவும்,

நிலைய அலுவலகத்திற்கு நேரே தெரியும் நடைமேடையில் சுமார் 40 அடி நீளத்திற்கு மேற்கூரை அமைக்கப்படவுள்ளது என்றும்,

நிலையத்திற்குள் நுழைவதற்கான சாலை (அப்ரோச் ரோடு) தார்சாலையாக்கப்பட்டு வருவதாகவும்,

நடைமேடை இன்னும் இரண்டரை அடி உயர்த்தப்பட்டு உயர்நிலை நடைமேடையாக (ஹை லெவல் ப்ளாட்ஃபார்ம்) ஆக்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

இப்பணிகள் 6 மாத கால அளவைக் கொண்டது என்றும், இரண்டு மாத பணிகள் முடிவுற்றுள்ளதாகவும், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் செய்து முடிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த சில மாதங்களில் (ஜனவரி 24, 2011 முதல்) - ரயில்வே துறை இணை அமைச்சராக இருந்த, இ.அஹமத், வெளியுறவு துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து - காயல்பட்டினம் ரயில் நிலைய பணிகள் தாமதப்பட துவங்கியதாக தெரிகிறது.

அஹமத் - வெளியுறவு துறை அமைச்சராகி ஓர் ஆண்டுக்கு பிறகு, ஜனவரி 30, 2012 அன்று நடந்த காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழு ஊழியர் கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் இடைநின்றுபோயுள்ளது. நிறைவேற்றப்பட வேண்டிய எஞ்சிய பணிகள் குறித்த நிலவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டுப் பெறவும், அப்பணிகள் விரைந்து நிறைவேற்றி முடிக்கப்படாவிடில், நகர பொதுமக்கள் அனைவரையும் திரட்டி, மார்ச் மாதத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

மார்ச் 2012 இல் நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டம், மே 26, 2012 அன்று நடத்தப்பட்டது.





அக்கூட்டத்தில் - காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் ரூ.70 லட்சம் செலவில் செய்ய திட்டமிடப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைந்து முடிக்காவிடில், தூத்துக்குடி - நெல்லை - கன்னியாகுமரி மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் லீக் கிளைகளை ஒருங்கிணைத்து, தென்மாவட்ட அளவிலான இரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளில் எவ்வித முன்னேற்றமும் நடைபெறவில்லை.

செப்டம்பர் 17, 2012 அன்று காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையினர் - மதுரையில் தென்னக ரயில்வே அதிகாரிகளை சந்தித்து, மீண்டும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



ஜனவரி 22, 2013 அன்று திருச்செந்தூர் வந்திருந்த தென்னக ரயில்வே அதிகாரியிடன் இக்கோரிக்கைகள் குறித்து மீண்டும் நினைவு கூறப்பட்டு, மனு வழங்கப்பட்டது.



அதன் பிறகும் எந்த முன்னேற்றமும் இவ்விஷயத்தில் இல்லை.

ஏறத்தாழ ஓர் ஆண்டுகள் கழித்து, இவ்வாண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் - பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று, ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக, முடிவு செய்யப்பட்டது.





இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பினை தொடர்ந்து, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான தி.மு.க.வின் ஜெயதுரை அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அது ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஜனவரி 16, 2014 பதிப்பில் வெளியாகியிருந்தது. அதில் ஜெயதுரை - தான், மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்துப்பேசியதாகவும், இப்பணி தொடர தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரும் உறுதியளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.



இதற்கிடையில் - பிப்ரவரி 5 அன்று திருச்செந்தூர் வட்டாட்சியர் அழைப்பு விடுத்ததன் அடிப்படையில், வட்டாட்சியர் நல்லசிவன் தலைமையில், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தென்னக ரெயில்வே திருநெல்வேலி மண்டல வணிக மேலாளர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார். அப்பேச்சுவார்த்தைகளின் முடிவில், பிப்ரவரி 11 அன்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிப்ரவரி 11 அன்று பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

பிப்ரவரி 12 அன்று வெளியிடப்பட்ட மத்திய ரயில்வே இடைக்கால பட்ஜெட் அறிவிப்பும் வந்தது. பாராளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை தெரிவித்தது போல் - அதன் மூலமும் - காயல்பட்டினத்தில் தடைப்பட்ட பணிகளுக்கு நிதி ஏற்பாடாகியதாக தெரியவில்லை.

இப்பணிகள் தடைப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒப்பந்ததாரர் - தனக்கு ரயில்வே துறையினால், பணம் வழங்கப்படாததால், பணிகளை முன்னரே - முடித்து கொண்டுவிட்டதாக (Foreclosure) கூறப்பட்டது. இப்பணிகளுக்கான நிதி இல்லை என்று கூறப்படுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு புறம் இருக்க, காயல்பட்டினம் ரயில்வே நிலையம் சம்பந்தமான கோரிக்கைகள் அனைத்தும் - மதுரை மண்டல அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சகம் அளவில் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இ.அஹமத் - ரயில்வே துறையில் இருந்து, வெளியுறவு துறைக்கு மாற்றப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் - மத்தியில் கூட்டணியில் தொடர்ந்த, முஸ்லிம் லீக் கட்சி சார்பாகவோ, தி.மு.க. சார்பாகவோ - புதிதாக பொறுப்புக்கு வந்த ரயில்வே அமைச்சர்களிடம் இந்த கோரிக்கை கொண்டு செல்லப்பட்டதாக தெரியவில்லை. இது குறித்து - முஸ்லிம் லீக் கட்சியினரிடம் விசாரித்ததில், ரயில்வே அமைச்சராக இருந்த மமதா பானர்ஜி மாற்றலாகிய பிறகு, கோரிக்கையை எடுத்து செல்ல நிலையான சூழல் மத்தியில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்விஷயத்தில் கேள்விக்குரியது - தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான தி.மு.க.வை சார்ந்த ஜெயதுரையின் பங்கு. ஜெயதுரை - 58% சதவீத தினங்களே, பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துக்கொண்டதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டிற்காக மத்திய அரசு வழங்கிய 19 கோடி ரூபாய் நிதியில், 16 கோடி ரூபாய் மட்டுமே இவர் பயன்படுத்தியதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே சம்பந்தமான கேள்விகளே சுமார் 40 உட்பட - தனது பதவி காலத்தில் - ஏறத்தாழ 650 கேள்விகளை பாராளுமன்றத்தில் இவர் எழுத்துப்பூர்வமாக எழுப்பியுள்ளார். அவற்றில் ஒன்று - ஆந்திர மாநிலத்தில் உள்ள தணுக்கு என்ற ஊரில் உள்ள ரயில் நிலையம் குறித்தது என ஆவணங்கள் தெரிவிக்கின்றன! ஆனால் - அவரை தேர்ந்தெடுத்த தொகுதியில் உள்ள காயல்பட்டினம் ரயில் நிலையம் குறித்து அவரோ, இந்த கோரிக்கைகளுக்கு 2010 இல் முதலில் ஒப்புதல் பெற்றுதந்த முஸ்லிம் லீகை சார்ந்த பிற பாராளுமன்ற உறுப்பினர்களோ, பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இவ்விஷயத்தில் தற்போது காணப்படும் தெளிவற்ற நிலை சில கேள்விகளை எழுப்புகிறது.

ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்போது - அத்துறையினால், முதலில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன் பிறகே - ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும். ஏப்ரல் 2010 ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டப்போது, 3 ஊர்களுக்கான மொத்த மதிப்பீடான ரூபாய் 1.81 கோடி ஒதுக்கப்படாமல், ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டதா?

அவ்வாறு ஒதுக்கப்பட்டிருந்தால், பாதியில் தன் பணியை நிறுத்திக்கொண்ட ஒப்பந்ததாரருக்கு, அவர் செய்த பணியளவிற்கு தானே பணம் வழங்கப்பட்டிருக்கும். ஒதுக்கப்பட்ட மீதி தொகை என்னவாயிற்று?

ஏப்ரல் 2010 இல் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள்படி திருநெல்வேலி மற்றும் குரும்பூர் பணிகள் நிறைவுற்றதாக தெரிகிறது. காயல்பட்டினத்தில் திட்டமிடப்பட்ட பணிகளில் - கட்டிடம் புனரமைப்பு, சாலை அமைத்தல், கூரை அமைத்தல் போன்ற பணிகள் நிறைவுற்றுள்ளன. காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நடைமேடையின் தற்போதைய நீளம் 270 மீட்டர். இதனை 405 மீட்டர் அளவிற்கு நீட்டிப்பதே கோரிக்கை. ஒப்பந்தப்புள்ளிகள் தெளிவாக கூறும் - கீழ் அளவிலான நடைமேடையை - 18 பெட்டிகள் தாங்கக்கூடிய அளவுக்கு நீட்டிக்கும் பணி மட்டும் ஏன் நடைபெறவில்லை? அதற்கான நிதி - வேறு திட்டத்திற்கு மாற்றி வழங்கப்பட்டதா?

இத்திட்டம் குறித்து காயல்பட்டணம்.காம், தென்னக ரயில்வேயிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முழு விபரம் கேட்டிருந்தது. சென்னை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்ட கேள்விகளை, மதுரை மண்டல அலுவலகத்திற்கு மாற்றி அனுப்பி - பிப்ரவரி 7ம் தேதிக்குள் பதில் வழங்கவேண்டும் என்று சென்னை தலைமையகம் தெரிவித்திருந்தது. இருப்பினும் - இது வரை, இது சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் பெறப்படவில்லை.

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 7:55 pm / 18.02.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தெளிவான விளக்கம் & கேள்விகள்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [18 February 2014]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33217

உனக்கும் பெப்பே, உங்க அப்பனுக்கும் பெப்பே!. நல்லாத்தான் நாடகம் ஆடுறாங்க.

இப்போதைய குளறுபடிகளுக்கு என்ன காரணங்கள் என்று தெளிவான விளக்கம் தந்த இந்த இணையதளத்துக்கு நன்றி!

‘தற்போதைய சூழ்நிலையில் இரயில்வே துறையிலிருந்து நிதி ஒதிக்கீடு செய்ய இயலாது எனவும், ஏனைய கோரிக்கைகளை தவிர்த்து, நடை மேடையை உயர்த்தி, விரிவாக்கம் செய்ய மட்டும், சுமார் ரூபாய் 15 இலட்சத்தில் மதிப்பீடு செய்து தருவதாகவும், அதற்குரிய பணத்தை நண்கொடையாக நாமே வழங்க வேண்டுமெனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் அறிகிறோம்.

ஏற்கனவே டெண்டர் விட்டதெல்லாம் என்னவாம்?. நிதி இல்லாமலா டெண்டர் விட்டார்கள்? ஏற்கனவே இந்த பணிகளுக்காக ஒதுக்கிய நிதி எங்கே போனது?

கொஞ்சம் விட்டால் நீங்களே நன்கொடை அளித்து, புதிய ரயிலும் விட்டுருங்களேன் என்று சொன்னாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. இவர்களுக்கு காயலர்கள் என்றால் நக்கலாகத்தான் இருக்கிறது.

அடுத்தது, நமது தொகுதியின் கழக MP. இவர் 1 மாதத்திற்கு முன்பு, நாம் வைத்திருக்கும் கோரிக்கை விஷயமாக, அதை நிறைவேற்றக் கோரி ரயில்வே அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விட்டார்.

இப்போது என்னவென்றால், ‘நாடளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதி, தன்னிடத்தில் இருப்பு இல்லை எனவும், எனவே ராஜ்ய சபை உறுப்பினரிடத்தில் முயற்சியுங்கள்’ என்று ஆலோசனை வழங்கி உள்ளார்.

ஓட்டு கேட்க மட்டும் தெரியும். தேர்தல் நேரத்தில், காயல்பட்டினம், கலைஞர்பட்டினம்(?) உங்கள் ஓட்டை “சிந்தாமல் சிதறாமல்” தி.மு.க உக்கு அளியுங்க என்று சொல்ல தெரியும்.

இப்போ என்னடா என்றால், ராஜ்ய சபை உறுப்பினரிடத்தில் முயற்சியுங்கள்’ என்கிறார். ராஜ்ய சபை உறுப்பினரிடம் கேட்க, இவர் என்ன சொல்வது? எங்களுக்கு தெரியாதா?

ஏற்கனவே, இந்த தொகுதியில் தி.மு.க வின் நிலைமை பரிதாபம். இந்த மாதிரி செய்தால், “டெபாசிட்” கூட தேறாது. இந்த லட்சணத்தில், நமதூர் கழக அனுதாபிகள், தி.மு.க ஆட்சியில்தான் நமதூருக்கு நலத்திட்டங்கள் கிடைத்தனவாம்.

ஒரு சாதாரண, ரயில் நடைமேடை (platform) உயர்த்துதல் மற்றும் அதை சார்ந்த பணிகளுக்கு, இந்த தி.மு.க MP யால் முடியவில்லை. வேற என்னத்தை செய்ய போகிறார்?.

கடந்த 3 நாடாளுமன்ற தேர்தலில், இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க உறுப்பினர்களால் (திரு.ஜெயசீலன், திருமதி.ராதிகா செல்வி மற்றும் திரு.ஜெயதுரை) நமதூருக்கு செய்த சாதனைகள் என்ன? என்று இவர்களால் ஒரு நல திட்டத்தையாவது சொல்ல முடியுமா? திரு.ஜெயசீலன் அவர்களின் சொந்த ஊரான நாசரேத் ரயில் நிலையத்தை பாருங்கள். எவ்வளவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று கவனியுங்கள்.

நமதூருக்கு தி.மு.க சட்டமன்ற /நாடாளுமன்ற பிரதிநிதிகளால் (அனிதா அண்ணாச்சி விதிவிலக்கு) ஒரு பயனும் இல்லை என்பதே சரி.

நமதூரின் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரு கேள்வி. இந்த பிரச்சனை பற்றி முஸ்லிம் லீக் மட்டும்தான் இதற்காக முயற்சி எடுக்க வேண்டுமா? மற்றவர்களுக்கு இதில் அக்கறை இல்லையா? முஸ்லிம் லீக் சார்பாக இவ்வளவு முயற்சி எடுத்த பின்பும், இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் இது விஷயமாக எடுத்த முயற்சிதான் என்ன?

மக்களே சிந்திப்பீர்! வரும் தேர்தலில் செயல்படுவீர்!

ஏற்கனவே அறிவித்த படி, மறியல் போராட்டம் நடைபெற வேண்டும். நமது ஒற்றுமை மற்றும் உறுதியை அதிகாரவர்கத்திற்கு நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த போராட்டத்தை வெற்றியாக்கி, எந்த நோக்கத்திற்காக போரடப்படுகிறதோ, அதை அடைய உதவி புரிவானாக! ஆமீன்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வருவார்கள் வெற்றி பெறுவார்கள்... இனி நாம் மறப்போம் பிறகு போராடுவோம் இது நமக்கு தேவையா... ஒரே வழி தேர்தல் புறக்களிப்பு மட்டுமே..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [18 February 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33218

வந்தார்கள் ஓட்டு கேட்டார்கள் வெற்றி பெற்றார்கள்...! MP பதவி சுகம் அனுபவித்தார்கள் 5 ஆண்டு முடிய போகிறது மறு தேர்தலும் வருகிறது இனி அடுத்து வேட்பாளர் பெயர் மாறவும் போகிறது நமது ஊருக்கும் வருவார்கள் காயலின் மக்கள் செம்மறி ஆட்டு கூட்டம்போல் அவர் பின்னாடி அவரின் கட்சிக்காக நகரில் ஓட்டுக்காக பிரச்சாரமும் செய்வார்கள்..

இது காயலில் வழமையான செம்மறி ஆட்டு கூட்டம் என்றே நானும் உரக்க சொல்வேன்..! மேலும் இதையே அந்த அரசியல் கட்சியின் வட்டமும் - சதுரமும் மாவட்டமும் - மாநில தலைமையும் நமது காயலை அது ஒரு செம்மறி ஆட்டு கூட்டமே தான் என நினைத்தும் வைத்துள்ளார்கள்..!

நாமும் அவர்களின் அந்த நினைப்பை மாற்ற நமது மக்கள் ஒரு நிமிடம் நினைத்தால் மட்டும் போதுமானது..

ஊரை ஒருகிணைத்து போராட்டம் அறிவிக்கும் தலைமையை நான் கேட்கிறேன் ஓட்டு கேட்க வரும் வேட்பாளரிடம் நகரில் கிடப்பிலுள்ள நடைமேடையை நான் வெற்றி பெற்றால் அனைத்தையும் செய்து தருகிறேன் என உறுதி மொழி எழுதி கேட்போமா..? போராட்டத்தை அறிவித்து இருக்கும் தலைமை இதற்க்கு முன் வருவீர்களா..? வர மாட்டீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும்..! மேடையில் பேசிக்கொள்ள மட்டும் தான் ஊர் முக்கியம் என்பீர்கள்.. அணைத்து ஜமாஅதுக்களையும் கொள்கை பாராமல் கலந்து பேசி உங்களால் இதை அறிவிக்க முடியுமா...? உறுதி மொழி எழுதி தந்தாள் மட்டுமே ஓட்டுபோடுவோம் இல்லையெனில் எங்கள் ஓட்டை புறக்களிப்போம் அதாவது தேர்தலை புறக்களிப்போம் என பொது கூட்டம் போட்டு அறிவிப்பு செய்ய முடியுமா...?

5 வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் வருகிறது கூடுகிறோம் பேசுகிறோம் கலைகிறோம் இது தானே நமக்குள் வழமையாக உள்ளது..! நமது அடிப்படை உரிமை - தேவை நம்மிடத்திலிருந்து பறிக்கப்படும் போது நாம் ஏன் வருகிற தேர்தலை புறக்களிக்க கூடாது என வருத்ததோடு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...

வேற்றுமைகளை களையுங்கள் - சிந்தியுங்கள் மக்களை ஒருங்கிணையுங்கள் - நகர் நலனுக்காக மட்டுமே என உண்மையிலேயே செயல்படுங்கள் கண்டிப்பாக இதற்க்கு வழி பிறக்கும்..

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved