Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:37:42 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13044
#KOTW13044
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 18, 2014
பிப். 23இல் ரயில் மறியல் போராட்டம்! வீட்டுக்கு ஒருவர் என 10 ஆயிரம் பேர் திரள வேண்டும்!! அனைத்துக் கட்சிகளின் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3211 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதைக் கண்டித்து, வரும் பிப்ரவரி 23ஆம் நாளன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும், வீட்டுக்கு ஒருவர் என குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் கலந்துகொள்ளுமாறும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில் - நகரின் அனைத்து அரசியல் கட்சியிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை வருமாறு:-

காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகளும் துவங்கிய நிலையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்கவும் கோரும் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம், இம்மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 08.15 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.

முஸ்லிம் லீக் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் கிராஅத் ஓதினார். நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு கூட்ட அறிமுகவுரையாற்றினார்.

எஸ்.கே.ஸாலிஹ் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்), ஆர்.எஸ்.கோபால் (திமுக), அப்துல் அஜீஸ் (சமத்துவ மக்கள் கட்சி), என்.டி.ஸலாஹுத்தீன் (அஹ்மத் நெய்னார் பள்ளி), எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ (காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை), ஜெயக்குமார் (உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு), எஸ்.கே.செய்யித் இப்றாஹீம், இ.எம்.சாமி (காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்), ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் (காங்கிரஸ்), காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் (மதிமுக), பண்டாரம் (பாஜக), எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் (அதிமுக), என்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன் (ஜலாலிய்யா சங்கம்), மு.த.ஜெய்னுத்தீன் (திமுக), எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் (முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர்), பன்னீர் செல்வம் (மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), எல்.எஸ்.அன்வர் (அதிமுக), மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ (ஐக்கிய சமாதானப் பேரவை) ஆகியோர் கருத்துரையாற்றினர்.





திருநெல்வேலி, காயல்பட்டினம், குரும்பூர் ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூபாய் 1 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டு, காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் பணிகளும் துவக்கப்பட்ட நிலையில் அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிப் பேசிய அவர்கள், ரயில் நிலையத்தின் வருமான அளவை வெகுவாகக் குறைத்து, காலப்போக்கில் இந்த ரயில் நிலையமே இல்லாத நிலையை உருவாக்க ரயில்வே துறை அதிகாரிகள் திட்டமிட்டு செயலாற்றி வருவதாகவும்,, காயல்பட்டினம் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்துவோர் அனைவருமே தொடர்ந்து பாதிப்பிற்குள்ளவாதாகவும் கூறினர்.

பிப்ரவரி 18 அன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறுமென நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட பின்னர், பிப்ரவரி 05ஆம் தேதியன்று திருச்செந்தூர் வட்டாட்சியர் அழைத்துப் பேசியதாகவும், பிப்ரவரி 11 அன்று மறுகூட்டம் நடத்தி, ரயில்வே துறை அதிகாரிகளிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றுத் தருவதாகவும் அவர் கூறியதாகவும், ஆனால் மறுகூட்டம் நடத்தப்படாததால், திட்டமிட்ட படி போராட்டத்தை நடத்திட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திப் பேசினர்.

நிறைவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-



இந்தக் கூட்டத்தில் விருப்பு - வெறுப்பு, கொள்கை வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, முஸ்லிம் லீக் - பாஜக, திமுக - அதிமுக, காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சிகளுமே ஒன்றிணைந்ததிலிருந்து, இப்போராட்டத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்த உறுதியும், ஒன்றுபட்ட உணர்வும் வருங்காலங்களில் ஊர் பிரச்சினைகளில் தொடர வேண்டும் என்ற அவாவை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

2009ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி, அப்போது மத்திய ரயில்வே இணையமைச்சராக இருந்த இ.அஹ்மது ஸாஹிப் நமதூருக்கு வருகை தந்தார். காயல்பட்டினம் ரயில்வே நிலையத்தைப் பார்வையிட்ட பின், ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் ஊர் மக்கள் சார்பில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டு, ரயில்வே நிலைய மேம்பாட்டுப் பணிகள் பற்றிய கோரிக்கைகளை முன்வைத்ததும், அதை நிறைவேற்றித் தருவதாக வாக்களித்து - சொன்னபடியே அதற்கான உத்தரவையும் அவர் பிறப்பித்தார்.

இதனால், காயல்பட்டினம் ரயில் நிலையத்திற்கு மட்டுமின்றி, செய்துங்கநல்லூர் வரையிலான ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றன. காயல்பட்டினம் ரயில் நிலையத்தைப் பொருத்த வரை,- 24 பெட்டிகள் நிற்குமளவுக்கு நடைமேடை நீளத்தை அதிகரித்து உயர்த்துதல், மேற்கூரையமைத்தல், அணுகுசாலை அமைத்தல், குடிநீர் - மின் விளக்கு - சுகாதார வசதிகளைச் செய்தல் ஆகிய பணிகளுக்காக 70 லட்ச ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டது.

அந்த டெண்டரை எடுத்த திருச்சி வின்சென்ட் நிறுவனம் - சில பணிகளை மட்டும் செய்துவிட்டு, மற்ற பணிகளை அப்படியே நிறுத்திவிட்டது. இதுகுறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்டத்துடன் பலமுறை முயற்சி மேற்கொண்டும் பலன் கிடைக்காததால், 26.05.2012 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன் பின்னரும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் வேறு வழியின்றி, மறியல் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

எதிர்வரும் பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணிக்கு, நமதூர் ரயில் நிலையத்திற்கு வரும் திருச்செந்தூர் - பழனி பயணியர் ரயிலை மறிக்கவுள்ளோம். இதற்காக, அன்று காலை 09.00 மணிக்கு அனைவரும் வள்ளல் சீதக்காதி திடலுக்கு வருகை தர வேண்டும். வீட்டுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் - 12 ஆயிரம் வீடுகளைக் கொண்ட காயல்பட்டினத்திலிருந்து குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேராவது திரள வேண்டும். நம்மைக் கைது செய்தாலும், அடைப்பதற்கு இடமில்லை என்ற வகையில், ரயில் நிலையத்திலேயே நம்மை வைக்க வேண்டும்.

இந்தப் போராட்டம் ஒரு ஊரின் போராட்டமாக மட்டுமின்றி, சர்வதேச அளவுக்கு நடத்தப்படும் போராட்டமாக - வெளிநாடு, வெளியூர்களில் வாழுகின்ற காயல் வாசிகள் அனைவரும் 23.02.2014 அன்று காயல்பட்டினத்தில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்... அப்போராட்டத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தாருங்கள் என்று, மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கும், சென்னையிலுள்ள தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் மின்னஞ்சல் மூலம் மனுக்களை அனுப்ப வேண்டும்.


இவ்வாறு அவர் பேசினார். முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ அனைவருக்கும் நன்றி கூறி, துஆவுடன் கூட்டத்தை நிறைவு செய்தார். இக்கூட்டத்தில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.




இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
S.K.ஸாலிஹ்
(தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் - இ.யூ.முஸ்லிம் லீக்)

படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்


இதுகுறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ரயில் மறியல் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [18 February 2014]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33221

மறியல் போராட்டம் நடைபெற வேண்டும். நமது ஒற்றுமை மற்றும் உறுதியை அதிகாரவர்கத்திற்கு நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த போராட்டத்தை வெற்றியாக்கி, எந்த நோக்கத்திற்காக போரடப்படுகிறதோ, அதை அடைய உதவி புரிவானாக! ஆமீன்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நகர் நலனுக்காக மட்டுமே என உண்மையிலேயே செயல்படுங்கள் கண்டிப்பாக இதற்க்கு வழி பிறக்கும்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [18 February 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 33222

கடந்த 3 நாடாளுமன்ற தேர்தலில், இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க உறுப்பினர்கள் நகருக்கு நல திட்டம் என்று என்ன செய்து விட்டார்கள்..! சிலருக்கு சுயநல திட்டத்திற்கு பல செய்து கொடுத்திருப்பதை எப்படி மறக்க முடியும்...! எல்லா விசியதிலும் தான் மட்டும் சுய லாபமாய் வாழ நகரின் பிற மக்களை இந்நகர் பெரியவர்கள் என்ற போர்வையில் நன்கு பயன்படுத்தி வந்த காலம் முடிவு பெரும் காலமும் நேரமும் நெருங்கி விட்டது என்பதே உண்மை..!

வந்தார்கள் ஓட்டு கேட்டார்கள் வெற்றி பெற்றார்கள்...! MP பதவி சுகம் அனுபவித்தார்கள் 5 ஆண்டு முடிய போகிறது மறு தேர்தலும் வருகிறது - இனி அடுத்து வேட்பாளர் பெயர் மாறவும் போகிறது நமது ஊருக்கும் வருவார்கள் காயலின் மக்கள் செம்மறி ஆட்டு கூட்டம்போல் அவர் பின்னாடி அவரின் கட்சிக்காக - வெற்றிக்காக நகரில் ஓட்டுக்காக பிரச்சாரமும் செய்வார்கள்..

இது காயலில் வழமையான செம்மறி ஆட்டு கூட்டம் என்றே நானும் உரக்க சொல்வேன்..! மேலும் இதையே அந்த அரசியல் கட்சியின் வட்டமும் - சதுரமும் - மாவட்டமும் - மாநில தலைமையும் நமது காயலை அது ஒரு செம்மறி ஆட்டு கூட்டமே தான் என நினைத்தும் வைத்துள்ளார்கள்..!

நாமும் அவர்களின் அந்த நினைப்பை மாற்ற நமது மக்கள் ஒரு நிமிடம் நினைத்தால் மட்டும் போதுமானது..

5 வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் வருகிறது கூடுகிறோம் பேசுகிறோம் கலைகிறோம் இது தானே நமக்குள் வழமையாக உள்ளது..! நமது அடிப்படை உரிமை - தேவை நம்மிடத்திலிருந்து பறிக்கப்படும் போது நாம் ஏன் வருகிற தேர்தலை புறக்களிக்க கூடாது என வருத்ததோடு நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...

வேற்றுமைகளை களையுங்கள் - சிந்தியுங்கள் - மக்களை ஒருங்கிணையுங்கள் - நகர் நலனுக்காக மட்டுமே என உண்மையிலேயே செயல்படுங்கள் கண்டிப்பாக இதற்க்கு வழி பிறக்கும்..

வீட்டுக்கு ஒருவர் என 10 ஆயிரம் பேர் திரள வேண்டும் என அழைப்பு விடுக்கும் இந்த நல்ல தருணத்தில் இன்ஷா அல்லாஹ் எனது ஒருவீட்டில் நான் உட்பட 4 நபர்களை அழைத்து வருவது உறுதி.. நகரில் அன்றைய தினம் அணைத்து வணிக கடைகளை அடைத்து நமது கண்டனத்தையும் பதிவு செய்வோமாக இன்ஷா அல்லாஹ்,,

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இப்படை தோற்கின் எப்ப்டை வெல்லும்!
posted by mackie noohuthambi (chennai) [18 February 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 33223

அதிகாரிகளின் ஆணவ பேச்சா அல்லது ஆட்சியை இழக்கப்போகிறோம் என்ற விரக்தியின் வெளிப்பாடா, ஊழல்களின் ஊற்றுக் கண்ணாக மாறிவிட்ட அரசு அதிகாரிகள் "புலி பதுங்குவது பாய்வதற்குதான்" என்று அறியாமல் உளறி இருக்கிறார்கள்.

23ம் திகதி நடக்கவிருக்கும் ரயில் மறியல் போராட்டம் அறுபடை வீடுகளின் நாயகன் முருகன் பழனியில் இருந்து மயிலேறி வந்து செந்தூரை அடைவானோ என்னவோ அந்த வழியாக ரயிலில் பயணம் செய்து நொந்து நூலாகி இந்த அதிகாரிகளின் கண்களை திறப்பான், அதில் பயணம் செய்யும் மக்களும் நமது நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள்.

போராட்டம் ரயில் நிலைய வாசலோடு நிறுத்துவதற்கு இந்த அரசு முன்னேற்பாடு செய்யக் கூடும். கல்லக்குடி போராட்டம்போல் தண்டவாளத்தில் தலைவைக்கும் இளைஞர்களை மிக கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு முஸ்லிம் லீக்குக்கு உள்ளது. எந்த காரணம் கொண்டும் பெண்களையும் சிறுவர்களையும் இதில் ஈடுபடுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

திருச்செந்தூர் செல்லும் ரயில் காயல்பட்டினத்தில் நின்று செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஏற்பாடு செய்த ரயில் நிறுத்த போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அப்போது இப்படிதான், ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்ல விடாமல் தெருவில் நின்றே கோஷம் போட்டு விட்டு கலைந்து செல்லுங்கள் என்று கூறி போராட்டத்தை பிசுபிசுக்க செய்து விட்டார்கள். 10,000 பேர் என்ற இலக்கு மிகவும் பாராட்டுக்குரியது. அன்று நமதூரில் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தால் அதுவும் போராட்டத்துக்கு வலு சேர்க்கும்.நமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நாடாளு மன்ற தேர்தலில் யாருக்கும் வாக்களிப்பதில்லை என்ற நிலைப்பாடும் நல்ல பலனை தரும்.

23ம் திகதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் ரயிலில் கூட்டம் இருக்காதே, பொது மக்களுக்கு நமது போராட்டம் சென்றடைய ஒரு வேலை - நாள் (working day) அல்லது கோயில் விசேஷ நாளை தேர்ந்து எடுத்து இருக்கலாமே என்றும் மனம் விரும்புகிறது. சர்வ கட்சி அமைப்புக்கள் கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் அதைப் பற்றி பேச மனம் விரும்பவில்லை.

போராட்ட நாள் விடியுமுன் இந்த விவகாரத்துக்கு ஒரு விடிவு - ஒரு முடிவு வர வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மாற்றான் தாய் பிள்ளை எனும் மனோபாவம்.
posted by Mohamed Rafeeq (Singapore.) [18 February 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 33224

எனக்கு நினைவு தெரிந்த நளில் இருந்தே நமதூர் இரயில் நிலையத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. நடை மேடை இல்லாமல் முதியோர்கள் இரயில் ஏற்படும் அவதியை சொல்லி மாளாது. அருகில் உள்ள குரும்பூர் நிலையத்தில் நடைமேடை மற்றும் இரயில் பெட்டிகளுக்கான எண் அறிவிப்பு கம்பம் என அநேக வசதிகள் இருக்கின்றன.

நமதூர் இரயில் நிலையம் மட்டும் ஏன் இப்படி மாற்றான் தாய் பிள்ளையைப்போல் புறக்கனிக்கப்பாடுள்ளது? ஏன் இந்த பாகுபாடு என வேதனையாக உள்ளது. தாய்ச்சபையின் இந்த போராட்டத்திற்குப் பிறகாவது ஏதேனும் மாற்றம் ஏற்பட வேண்டும். போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

-ஹிஜாஸ் மைந்தன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [18 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33225

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இப்போராட்டத்தில் அனைவரும் ஒன்று திரன்று நம் வலிமையை அரசாங்கத்திற்கு காட்டி நம் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். இது ஒன்றே நமது குறிக்கோள்.

எதிர்காலத்தில் எந்த ஒரு பொது பிரச்சனை சம்பதமாக அரசாங்கத்தை அணுகும்போதும் காயளர்கள் ஒன்று திரண்டு விடுவார்கள் என்ற பயம் ஆட்சியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஏற்படவேண்டும். இதுவே அதற்கு அச்சாரமாக அமையவேண்டும்.

முன்னெச்சரிக்கையாக சிலர் கைதுசெய்யப்பட்டாலும் அதை முறியடித்து வழி நடத்த இளைஞர்கள் தயாராக இருந்து இதில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mohamed Salih (chennai) [18 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33226

இன்ஷா அல்லாஹ்.. வெற்றி நிச்சியம் ..

எல்லோரும் கலந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ் ..

வெற்றி பெற வாழ்த்துக்கள் //

சென்னை இல் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.yes


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by kudack buhari (kuala lumpur) [18 February 2014]
IP: 203.*.*.* Malaysia | Comment Reference Number: 33227

போராட்டம் மிக சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ,

மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் , சென்னையிலுள்ள தென்னக ரயில்வே பொது மேலாளர் மின்னஞ்சல் முகவரியை தெரிய படுத்துங்கள், இங்கே நண்பர்கள் தெரிவித்ததை போன்று நமதூரில் அனைத்து வணிக நிருவனம்கலும் பகுதி நேர கடை அடைப்பை நடத்தி நமது ஒட்டுமொத்த கண்டனத்தையும் தெரியபடுத்த வேண்டும்,

ஏதோ அங்கே போனோம் வந்தோம் என்று இல்லாமல் முழு ஈடுபாட்டுடன் உள்ளுணர்வோடு போராட்டத்த பதிவு செய்ய வேண்டும்,

இன்ஷாஅல்லா இறைவன் நமக்கு வெற்றியை தருவான், இந்த போராட்டம் அதிகாரிகளின் செவிகளுக்கு சென்றடைந்து துரித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனில் வரும் நாடாளுமன்ற தேர்தலை நமதூர் மக்கள் புறக்கணிக்கவும் தயங்கமாட்டோம் என்று பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு நாம் உறக்க சொல்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by ASHIK RAHMAN (Mikhwa AL BAHA K.S.A) [18 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33228

போர் முரசு கொட்டட்டும் இன்ஷா அல்லாஹ் வெற்றி நமதே அல்லாஹ் அருள் பாலிப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by SOLUKKU.ME.Syed Moosa (Qatar) [18 February 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 33229

அஸ்ஸலாமுஅலைக்கும்.நகர மக்கள் நலனில் அக்கரைக்கொண்டு, நடைபெறும் இந்த மாபெரும் போராட்டம் வெற்றி பெற, இறைவனிடம் இரு கரம் ஏந்தி துவா செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by moosa fs (karunagappally) [18 February 2014]
IP: 202.*.*.* India | Comment Reference Number: 33230

வெற்றி பெற வாழ்த்துக்கள்.எல்லோரும் கலந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. செய்யும் வேலையை திருந்த செய்.
posted by s.s.md meerasahib (TVM) [19 February 2014]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 33231

இந்த போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். உங்களின் இந்த அறிவிப்பின்படி வீட்டுக்கு ஒருவர் வந்தால் காயல் ரயிவே ஸ்டேஷன் பஞ்சராவிரும். இதை ஒரு சவாலாக வைத்து தெருவுக்கு ஒரு மென்பரை ஏற்ப்படுத்தி ஆட்களை அழைத்து வர சொல்லவும். எல்லா கச்சி கொடியும், எழுத்து தட்டிகளும் ரெடி பண்ணவும்.

"செய்யும் வேலையே திருந்த செய்" என்பார்கள் தமிழில். நாம் இந்த போராட்ட வேலையே திருந்த செய்தால்.......... அதிகாரிகளின் வேலைகளை "திருத்த" செய்யலாம். இதுதான் உண்மை.

வெற்றி நிச்சயம். ஒற்றுமை முக்கியம். இனி களத்தில் சந்திக்கலாம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by mohmed younus (dammam ) [19 February 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33232

இன்ஷா அல்லாஹ் வெற்றி கிடைக்கும். இந்த போராட்டத்திற்கு முழு காரணமான இந்திய யூனியன் முஸ்லிம் லீகை மனதார பாராட்டுகிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. காயலின் கிஜரிவாள்கள் புறப்பட்டுவிட்டார்கள் ஊழல் மற்றும் பிரிவினை மிக்க அதிகாரிகளை விரட்டியடிக்க!!!
posted by MOHIDEEN ABDUL KADER (KAYALPATNAM) [19 February 2014]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33233

அஸ்ஸலாமு அலைக்கும்.

இப்போராட்டம் முழுமையாக வெற்றிபெற்றிட வாழ்த்துகள். இப்போராட்டம் அலட்சியப்படுத்தும் அதிகாரிகளையும் இஸ்லாமியர்களை பாகுபாடு பார்த்து பிரிக்கும் பிரிவினைவாதிகளுக்கும் செருப்படியாக இருக்கவேண்டும்.

அவ்விடத்திலேயே வந்திருப்போருக்கு தந்திவசதி மூலம் ஜனாதிபதி,பிரதமர், மத்திய மற்றும் மாநில அதிகாரிகள், ரயில்வே அமைச்சர் என்று அனைவருக்கும் தந்திமூலம் தெரியபடுத்தவேண்டும்.

போராட்டத்திற்கும் முன் NDTV போன்ற அனைத்து மீடியாக்களுக்கு முன்னறிவிப்பு தெரியபடுத்தவேண்டும். இப்போராட்டம் ரயில் கதவு வரை இல்லாமல் தண்டவாளம் வரை இருக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

கண்டிப்பாக அகிம்சை வழியில் எந்த விதமான அசம்பாவிதம் இல்லாதவாறு தர்நாவாக இருக்க வேண்டும். அவ்விடத்திலேயே எழுத்துபூர்வமாக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் திகதி குறிப்பிட்டு அரசானை பிறப்பித்து வெற்றிக்கான வேண்டும். இல்லையேல் முழுக்க முழுக்க இத்தேர்தலை புறக்கணிப்போம் என்ற DISPLAY BOARD உடன் இருந்து செயல்படுத்தியும் காண்பிக்க வேண்டும்.

மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் , சென்னையிலுள்ள தென்னக ரயில்வே பொது மேலாளர் மின்னஞ்சல் முகவரியை தெரிய படுத்துங்கள்.

ஓர் சின்ன ஆதங்கம். இவ்வளவு பெரிய முயற்ச்சிகள் செய்த முஸ்லிம் லீக்கிற்கு எனது வாழ்த்துகள் அதேவேளையில் இதன் தொடர்ச்சியை அவர்களின் MP [ DMK ] அப்துல் ரஹ்மான் மற்றும் உயர்மட்ட பொறுப்பாளிகள் பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் இதை எழுப்பாதது ஓர் ஏமாற்றம்,

ரயில்வே துறை அமைச்சரின் கவனத்திற்கு தொடர்ச்சியாக கொண்டு சென்று மத்தியில் இருந்து இங்குள்ள அலட்சிய படுத்தும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved