Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:53:51 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13040
#KOTW13040
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 17, 2014
மத்திய பட்ஜெட் தாக்கல்: புதிய வரி எதுவுமில்லை, கார் - பைக் - சோப்பு - மொபைல் விலை குறைகிறது! பட்ஜெட் முழு உரை!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2155 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>



2014- 2015 ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

அமெரிக்க, ஐரோப்போ, ஜப்பான் , சீனா போன்ற நாடுகளுக்கு உள்ளது போல பொருளாதார நெருக்கடி சூழல் இந்தியாவுக்கும் இருக்கிறது. இருப்பினும் இந்தியாவின் பொருளாதாரம் சீரான நிலையில் சிறப்பாக உள்ளது. 2013 - 14 ல் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 4.6 சதமாக உள்ளது. ஏற்றுமதியும், இறக்குமதியும் மீண்டு வந்து கொண்டு வருகிறது. கணிசமாக உயர்ந்துள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை 45 பில்லியன் டாலராக உள்ளது. இரும்பு, சிமென்ட், மத்திய அரசின் கொள்கைகள் காரணமாக சிறு தொழிற் கூடங்கள் அதிகரித்துள்ளன. 20 ஆயிரம் கி.மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. நாட்டின் வறுமை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. பண வீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொருளாதார சூழல் காரணமாக பண மதிப்பு சற்று குறைந்தது. எண்ணெய் ,எரிவாயு துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.



உணவு பொருள் பணவீக்கம் கவலை அளிப்பதாக உள்ளது. வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. 67 சதிவீத நிலக்கரி உற்பத்தி 554 டன்னாக அதிகரித்துள்ளது. 7 புதிய விமான நிலையங்கள் கட்டுமான பணியில் இருந்து வருகிறது. 296 புதிய திட்டங்கள் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. சுகாதாதர துறை பணிக்கான நிதி ஒதுக்கீடு காரணமாக அபார நன்மை பெற்றுள்ளது. உணவு தானிய உற்பத்தி , சென்னை- பெங்களூரை இணைக்கு சரக்கு பாதை பணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம். செவ்வாய்கிரகம் ஆய்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது பெருமைக்குரியது. கடந்த 10 ஆண்டில் 2 லட்சத்து , 34 ஆயிரத்து 600 மெகா வாட் மின்சார உற்பத்தி உயர்ந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி கடந்த 10 ஆண்டில் 6.2 சதம் எட்டியுள்ளது.

சென்னைக்கு தொழிலக சாலை:

சென்னை - பெங்களூரூ, பெங்களூரூ - மும்பை, அமிர்தசரஸ் - கோல்கட்டா இடையிலான தொழிலக சாலைகள் உருவாக்கப்படும்.

57 கோடி பேருக்கு ஆதார் கார்டு :

சோலார் அமைப்பு இரண்டாவது கட்டத்தில் இறங்கியிருக்கிறோம். ஒரு மில்லியன் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டமிட்டுளோம். கூடங்குளம் அணு உலை மூலம் மின் உற்பத்தி பெருக்கப்பட்டுள்ளது. மற்றும் கல்பாக்கம் மூலம் மின்சாரம் பெறும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. வரும் ஆண்டில் 4 சோலார் மின் ஆலைகள் அமைக்கப்படும். புதிய நில மசோதா உருவாக்கியுள்ளோம். ஆதார் கார்டு திட்டம் மூலம் பலரை வங்கி கணக்கில் இணைத்துள்ளோம். 57 கோடி பேருக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஆதார் கார்டு முழுமை அடைய முழு நடவடிக்கை எடுத்து வருகிறோம். உணவு மானியத்திற்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவத்தில் இளைஞர்கள் அதிகம் படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் ஒன் ரேங் ஒன் பென்சன் என்ற திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளோம்.

10 கோடி பேருக்கு வேலை :

அரசும், ரிசர்வ்வங்கிகியும் போதிய நடவடிக்கை எடுத்து பண வீக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது. உணவு, உரம் மற்றும் எரிபொருள் மானியத்திற்கு 2லட்சத்து 46 ஆயிரத்து 397 கோடி ஒதுக்கீடு, கான்ட்ராக்ட் தொடர்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பரிந்துரைத்துள்ளேன். தொழிற்சாலை மூலம் வரும் 10 ஆண்டில் 10 கோடி பேருக்கு வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல் 10 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 8.4 சதமாகவும், ஐ.மு., கூட்டணி இரண்டாம் ஆட்சியில் 6. 6 சதமாகவும் இருந்தது. தேசிய வேளாண் வளர்ச்சி கொள்கை துவக்கப்படும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், சமையல் காஸ் விஷயத்தில் நேரடி மானிய திட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பினும், இவை விரைவில் சீர்செய்யப்படும்.

பாதுகாப்பு துறைக்கான நிதியை 10 சதம் அதிகரித்துள்ளோம். வரும் நிதி ஆண்டில் 2.24 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். ரயில்வேக்கு 29 ஆயிரம் கோடியாக உயர்த்தியுள்ளோம். குடிநீர் 15 லட்சத்து 260 கோடி , கடந்த ஆண்டில் 43 லட்சத்து 52 ஆயிரம் புதிய வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. 2009 மார்ச் 31 க்கு முன்னதாக வங்கிமூலம் கல்விக்கடன் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான வட்டிச்சலுகை அளிக்கப்படுகிறது. இதன் க்கடன் மூலம் 9 லட்சம் பேர் பயன் பெறுவர். சிறுபான்மை மக்களுக்கென 2 லட்சத்து 11 ஆயிரத்து 451 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 5 ஆயிரத்து, 207 புதிய வங்கிகள் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் எட்டாயிரம் வங்கி கிளைகள் துவக்க திட்டமிட்டுள்ளோம். திட்டமில்லா செலவுக்கு 12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டு மொத்த திட்டச்செலவு ரூ,. 5 லட்சத்து 55ஆயிரத்து 322 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை 4. 6 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநில வளர்ச்சிக்கு ஆயிரத்து 200 கோடி. சரக்கு சேவை வரி அமல்படுத்தப்படாமல் இருப்பது கவலை அளிக்கிறது. இதற்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.



புதிய வரிகள் எதுவுமில்லை:

கார்- மற்றும் பைக் உற்பத்தி வரி குறைப்பு , மருத்துவ சேவைக்கு வரி குறைப்பு ,நெல்லுக்கான சேவை வரி நீக்கம், நடுத்தர கார் உற்பத்தி 24 சதவீத்தில் இருந்து 20 சதமாக குறைப்பு, சிறுகார்கள் உற்பத்தி வரி 12 சதவீதத்தில் இருந்து 8 சதமாக குறைக்கப்பட்டுள்ளது. சுங்கவரி 12 சதவீதத்தில் இருந்து 10 ஆக குறைப்பு, மொபைல் போன் வரி குறைப்பு, சோப்பு, டி.வி., பிரிட்ஜ் வரி குறைப்பு, அரிசிக்கு சேவை வரிஇல்லை, வருமான வரியில் எவ்வித மாற்றமுமில்லை. நுகர்வோர் பொருள் வரி 12 சதத்திலிருந்து 10 சதமாக குறைப்பு , ரத்த வங்கி சேவை வரி முழுமையாக நீக்கம், பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா நிதிக்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு , இன்னும் 7 மின் அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மேம்பாடு துறைக்கு 82 ஆயிரத்து 2002 கோடி ஒதுக்கீடு,

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு; மனித வள மேம்பாடு அமைச்சகத்திற்கு ரூ.67,398 கோடி ஒதுக்கீடு; திட்டமிடாத செலவுகளுக்காக 5 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு; குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு ரூ.15,260 கோடி; சமூக நீதி மற்றும் அதிகாரத்துறைக்கு ரூ.6730 கோடி.


இவ்வாறு தனதுரையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மொத்த செலவீனம் 17 லட்சத்து 63 ஆயிரத்து 214 கோடி : மொத்த வருவாய், 17 லட்சத்து 63 ஆயிரத்து 214 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வருவாய் வரவு, 11 லட்சத்து 67 ஆயிரத்து 131 கோடி ரூபாய் மற்றும் மூலதன வருவாய், 5 லட்சத்து 96 ஆயிரத்து 83 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த செலவீனக் கணக்கும் 17 லட்சத்து 63 ஆயிரத்து 214 கோடி ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டு, திட்டமிடப்பட்ட செலவாக, 5 லட்சத்து 55 ஆயிரத்து 322 கோடி ரூபாய் எனவும், திட்டமிடப்படாத செலவில் 12 லட்சத்து 7 ஆயிரத்து 892 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 3 லட்சத்து 82 ஆயிரத்து 923 கோடி ரூபாய், நிதி பற்றாக்குறை, 5 லட்சத்து 28 ஆயிரத்து 631 கோடி ரூபாய் மற்றும் முதன்மை பற்றாக்குறை 1 லட்சத்து 1 ஆயிரத்து 83 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>

தகவல்:
தினமலர்

புகைப்படங்கள்:
PRESS INFORMATION BUREAU


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [17 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33211

அஸ்ஸலாமு அலைக்கும்

பொதுவாக பொது மக்கள் இந்த பட்ஜெட்டை பற்றி பெருமை பட ஒன்றுமே இல்லை .....காரணம் இந்த பட்ஜெட்டின் காலம் கொஞ்சம் தானே .....ஆதலால் பொது மக்கள் இந்த பட்ஜெட்டின் .. + .. - ( நல்லது / கேட்டது ) பற்றி கொஞ்சம்மும் யோசிக்க தேவையே இல்லை .....

காலம் இன்னும் கொஞ்சகாலத்தில் பொது மக்களால் சரியானதோர் பதில் சொல்லும் .....

இன்ஷா அல்லாஹ்.... அனைத்து பொது மக்களின் நலன் காட்க கூடிய ஒரு நல்ல ஆட்சி வரணும் ....இது தான் யாவர்களின் எண்ணம் ......

அல்லாஹ் நல்லதையே சிறப்பாக்கி வைப்பனாகவும் ..........

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [18 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33215

அஸ்ஸலாமு அழைக்கும்,

இந்த பட்ஜெட் பத்மநாபன் தன் தொகுதிக்கு வேண்டிய காரியங்கள் எதையும் செய்வதில்லை . அது போல தமிழ் மாநில நலனிலும் எந்த அக்கரையும் காட்டுவதில்லை இவர் தன் தொகுதியை மொத்தமாக மறந்து விட்டு நாட்டை மட்டும் பற்றி சிந்தித்து கொண்டு இருப்பவர் பதவி காலம் முடிந்தால் தொகுதிபக்கம் வருவார் இந்த முறை தன் சொந்த தொகுதிக்கும் வர முடியாது தொகுதில நின்னாலும் வரமாட்டார். தமிழகத்தில் நிற்கும் வாய்பு கிடைதால் சீட்டு கிடைக்காது டப்பாவும் கிடைக்காது மொத்தத்தில் டெபாசீட்டும் கிடைக்காது.

இவர் நினைதிருந்தால் குறைந்த பாட்சம் தன் தொகுதியையாவது சிறப்பாக வைக்க வேண்டிய நடவடிக்கைகளை செய்து இருக்கலாம் .

சொல்லும் அளவுக்கு இவர் செய்த காரியம் என்றால் அது கல்வி கடன்தான் இந்தியா முழுவதும் இந்த திட்டம் பல கோடி எழை மாணவர்களுக்கு பயனான உதவிகளை செய்துள்ளது இது ஒரு தூர நோக்கு பார்வையான திட்டம் இதன் முலம் கண்டிப்பாக சமூக தரம் கண்டிப்பாக உயரும் ஆனால் சில ஆண்டுகள் எடுக்கும் .

இந்த கல்வி கடன் திட்டத்தின் மூலம் நம் ஊர் மக்கள் குறிப்பாக எழை மக்கள் எந்த அளவுக்கு பயன் அடைந்து உள்ளனர் என்பது யார் அறிவார்கள் வாங்கி இருந்தால் மகிழ்ச்சிதான் நமக்கு என்ன சலுகைகள் இருக்கிறது என்பதும் நாம் அறிவதில்லை , அறிந்தாலும் அதனை வாங்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை .

தாழ்த்தபட்ட சமுதாயம் எடுக்கும் முயற்சிகளை கூட நம் சமுதாயம் எடுக்கவில்லை . தொண்டு நிறுவனம் மற்றும் அணைத்து அமைப்புகளும் இதில் ஆர்வம் காண்பிக்கணும் .

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved