Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:21:06 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13229
#KOTW13229
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 13, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: தூத்துக்குடி திமுக வேட்பாளர் ஜெகன் முஸ்லிம் லீக் தலைவரிடம் வாழ்த்து பெற்றார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3095 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் கீழ் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் இம்மாதம் 10ஆம் நாளன்று வெளியிடப்பட்டது. அப்பட்டியலின் படி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.

மார்ச் 10 அன்று 21.30 மணியளவில், கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமை அலுவலகமான - சென்னை மண்ணடியிலுள்ள காயிதேமில்லத் மன்ஸிலில், கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் காதர் மொகிதீனை அவர் - தன் தந்தையும், திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான என்.பெரியசாமியுடன் நேரில் சென்று, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில துணைத்தலைவர் மவ்லவீ தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான், மாநில செயலாளர்களான திருப்பூர் சத்தார், காயல் மகபூப், வெ.ஜீவகிரிதரன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.

தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. We have other option(s) too
posted by Abdul Wahid S. (Kaayalpattinam) [13 March 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 33692

நமதூரை மனதில் வைத்து நடைபெற்ற சந்திப்பு என்று எடுத்துக் கொள்ள தோன்றுகிறது.

வேட்பாளர் திரு பெரிய சாமியின் மகன். தி.மு. கவுக்கு (தூத்துக்குடி மாவட்டத்தில்) வேறு ஆள் கிடைக்கவில்லையா ? மறுபடியும் குடும்ப அரசியல்.

குடும்ப அரசியலை விட மதவாதம் மோசமானது. அந்த அடிப்படையில் தி மு கவின் ஆதரவு மோடிக்கு எந்த நிலையிலும் இல்லை என்ற வாக்குறுதி தி மு க வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுமேயானால், namathoorilulla முஸ்லிம் அ.தி மு க அனுதாபிகளின் ஓட்டுகளைக் கூட இந்த தி மு க வேட்பாளர் பெற வாய்ப்புள்ளது.

If not, "NOTA" is the better Choice at current scenario.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [13 March 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33695

அஸ்ஸலாமு அழைக்கும் ,

மஞ்சள் துண்டிடம் சரியான நிலைப்பாடு என்பது மிக குறைவு அம்மாவின் வேட்பாளர் அறிவிப்பை பார்த்து விட்டு அதற்கு கடும் சவால் விடும் அளவுக்கு தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் .

திருச்சி , தூத்துக்குடி போன்ற சில தொகுதிகளை கட்சியை தாண்டி மாவட்ட செயலாளர்கள் விருப்பத்தின்படி வேட்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.

மற்றபடி அறிவிக்கப்பட்டுள்ள தி . மு . க வின் அணைத்து வேட்பாளர்களும் கல்வி தகுதி மற்றும் அரசியல் குற்றம் ஊழல் கரைபடியாதவர்கள் என்று நம்பலாம் .

ஆ .ராசாவை தவிர மற்றவர்கள் புகார் இல்லாதவர்கள் என்று கொள்ளலாம் .

இன்றைய சூழ்நிலைக்கு நாம் தி . மு .க வை ஆதரிக்கநும் மற்றபடி அரசியல் கால சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நம் சமுதாயத்தின் முடிவுகள் அமைய வேண்டும் .

நல்ல நிலையான உறுதியான தலைமை இல்லாமை நம்முடைய சமுதாயதின் மிக பெரிய குறையாகும் .

அதையும் தாண்டி முஸ்லிம் பொது மக்கள் கால சூழ்நிலைகளை கூர்ந்து கவனித்து செயல்படுகிறார்கள் என்பதுதான் தமிழகத்தை பொறுத்தவரை உண்மை .

தமிழகத்தை பொறுத்தவரை நம் விகிதாசாரம் 7.5 சதவிகிதம் ( குறைவு ) என்றாளும் மக்களின் சாமர்தியதால் கல்வி மற்றும் ஓரளவு உசாராக இருப்பதால் நாம் நம்முடைய நிலைபாடுகளை ஓரளவு சாதிக்க முடிகிறது .

ஆனால் இந்த நிலை வட மாநில முஸ்லிம்களிடம் குறிப்பிட்டு சொல்லும் அளவில் இல்லை என்பது உண்மை காரணம் 28 , 30 , 32 என்ற சராசரி அளவு பல மாநிலகளில் முஸ்லிம் மக்கள் தொகையை வைத்து கொண்டு தங்களின் வலுவை தெரியாமல் உள்ளனர்.

பெரும்பாலும் கல்வி அறிவு இல்லாமைதான் இவைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

முஸ்லிம் கட்சிகள் இந்த பகுதிகளை ஒன்றும் செய்யவில்லையா என்ற கேள்விகளும் உள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் கேரளாம் மற்று தமிழகதில் மட்டும்தான் உள்ளதா ?................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தேர்தல் வருகிறது!
posted by Mauroof (Dubai) [13 March 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33696

வருகிறது – தேர்தல் வருகிறது
நம் ஐந்தாண்டுத் தலையெழுத்தை நிர்ணயிக்க வருகிறது.

அரசியல்வாதிகள் – இவர்கள் ஓட்டு வாங்கும் வரை நீலிக்கண்ணீர் வடித்துவிட்டு ஓட்டு வாங்கியவுடன் நோட்டை சுருட்டுவதிலேயே நோட்டம் பார்ப்பர்;

நாட்டைக் கவனியார்; நாட்டு மக்களையும் கவனியார்.

தொகுதிக்கே வராத, தொண்டு ஏதும் செய்யாத ஆவண அரசியல்வாதிகளும் இங்குண்டு.

பதநீர் பருகியபின் பனை ஓலைக்கு என்ன மதிப்பு? தேநீர் பருகியபின் காகிதக் கோப்பைக்கு என்ன மதிப்பு?

ஓட்டு வாங்கியபின் ஓட்டுப் போட்ட ஓட்டாண்டிகளுக்கு என்ன மதிப்பு – என எண்ணிக்கொள்ளும் அரசியல் குள்ளநரிகளே ஆட்சி தேடி வருகிறார்கள்.

நோட்டு வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடும் ஓட்டாண்டிகளே! – சில நோட்டைக் கொடுத்து நாட்டையே கைப்பற்றிக்கொள்ளும் நாட்டமுள்ளோர்க்கா உங்கள் ஓட்டு?

ஒரு ஓட்டைக் கொடுத்துவிட்டு ஒரு கோடி நோட்டாக உருவாக்கிக்கொள்ளும் ஊழல் பெருச்சாளிகளுக்கா உங்கள் ஓட்டு?

இந்திய நாட்டுச் சொத்தையெல்லாம் – தம் வீட்டுச் சொத்தாக்கும் நாட்டமுள்ளோர்க்கா உங்கள் ஓட்டு?

உங்கள் சொத்தை எடுத்துத் தம் உறவினரைத் தன்வந்தராக்கும் சுயநலவாதிகளுக்கா உங்கள் ஓட்டு?

இத்துணை காலம் சிந்திக்கவே நேரமில்லாமல் சீரழிந்துவிட்டோம். இனியாவது சிந்தித்துச் செயல்படுவோம்.

ஏழைகளின் நண்பனென்று சொல்லி முதுகில் குத்துவோரைப் புறக்கணிப்போம்!

ஏழைகளின் பாதுகாவலன் எனச்சொல்லி அவர்களின் வாழ்வையே வினாக் குறியாக்கும் வீணர்களைப் புறக்கணிப்போம்!

சாதி, மதம் பாராமல் பொதுத்தொண்டு செய்வோரைப் பொதுவாய்க் கண்டறிவோம்!

பொதுத்தொண்டு செய்வோருக்கே எங்களின் வாக்கு – எனப் பொது அறிவிப்புச் செய்திடுவோம்!

நம் ஒவ்வொரு வாக்கால் நாளைய இந்தியாவின் தலையெழுத்தையே தலைகிழாய் மாற்றிடுவோம்!

நன்றி : இனிய திசைகள், பிப்ரவரி 2014

எனது குறிப்பு: இந்த கவியாக்கம் இந்த செய்திக்கு மட்டும் உரியதன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. திமுக கூட்டணிதான் நாம் ஆதரிக்க தகுதியான அணி
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [13 March 2014]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 33698

குடும்ப அரசியல் , பெரியசாமி மகன் , எ ராசா ஊழல் என்றெல்லாம் நாம் சுற்றிவளைத்து மக்களை குழப்பத்தேவை இல்லை . இங்கு யாரும் சுத்தம் இல்லை . எங்கும் எதிலும் ஊழல்தான் .மதத்தை வைத்து ஜாதியை வைத்துதான் இந்த நாட்டில் பெரும்பாலும் அரசியல் செய்யப்படுகிறது. எனவே எல்லோருமே கெட்டவர்கள்தான்.

நம் முன்னாள் உள்ள கேள்வி இரண்டே இரண்டுதான் . முஸ்லிம்களுக்கு குறைந்த்த தீமை செய்பவர் யார் - அதிக தீமை செய்பவர் யார் . இதில் அதிக தீமை செய்பவர் வெற்றிபெறடியாமல் போக குறைந்த தீமை செய்பவராக நாம் கருதுபவரை ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

அந்தவகையில் திமுக கூட்டணிதான் நாம் ஆதரிக்க தகுதியான அணி . எனவே திமுக க கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என நாம் தெளிவாகவும் உறுதியாகவும் சொல்லவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by M. Sajith (DUBAI) [14 March 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33704

இருந்தாலும் நம்மவர்களின் கலைஞ்சர் பாசத்துக்கு ஒரு அளவே இல்லை...

ஒருத்தர் தலீவர் சொல்லாத 'மோடிக்கு ஆதரவு எப்போதும் இல்லை' என்று தேர்தல் அறிக்கைல சொல்லன்னும்ங்கிறார் - தேர்தல் அறிக்கையிலும் இரண்டாம் பதிப்பு வரும் என்ற நம்பிக்கையோ என்னவோ

மோடிக்கு அதரவு தருவீர்களா என்ற கேள்விக்குத்தான் தலீவர், அதுதான் மதசார்பில்லாத அரசுக்கு அதரவு என்று சொன்னபிறகும் கேட்கிறீர்களே என்று 'புத்திசலித்தனமாக' பதில் சொன்னாரே - இந்த உ.பி களுக்கு பிஜிபி தலைமையில் அமைந்த NDA அரசும் மதசார்பில்லாத அமைப்பகத்தனே ஆட்சியை சென்றமுறை கோரியது என்பது தெரியாதோ?

இன்னொருத்தர் இருக்கிறதுல குறைந்த்த தீமையான்னு பார்க்கணுமாம் -இந்த இரண்டிலும் இல்லாத வேட்பாளரை ஆதரிக்கவோ அல்லது இந்த தேர்தல 'யாருமே வேண்டாம்' - 'none of the above' பட்டனும் இருக்கே அதை அமுக்க சொல்லுவாருன்னு பார்த்தா இல்லையாம் திமுகவைத்தான் ஆதரிக்கனுமாம்.

திமுக அபிமானம் ஆறாவது கடமை என்ற நிலையில் பார்க்கிறது நமது உ.பிக்கள்.

எதுக்கும் தேர்தலுக்கு பிறகும் அண்ணாச்சிய வந்து போயி இருக்கு சொல்லிவையுங்க... மறந்துவிட போகிறார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இரு வேண்டுகோள்
posted by J,A,JALEEL. (HONGKONG) [14 March 2014]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 33705

வெற்றி வேட்பாளருக்கு வாழ்த்துக்கள். உங்களிடம் நம் ஊர் மக்கள் சார்பில் இரு வேண்டுகோள்கள். இந்த நாசகார DCW இடமிருந்து எங்களுக்கு விமோசனம் பெற்று தாருங்கள்.ECR கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டத்தையும் ECR சாலை திட்டத்தையும் நம் ஊர் அருகே அமைய ஆவன செய்யுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved