Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:14:12 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13409
#KOTW13409
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 1, 2014
கருவி வந்தது! ஆனால் தொடரும் குடிநீர் குழப்பம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3169 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகருக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவைக் கணிக்கிட அளவு கருவி பொருத்த - கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நகர்மன்றத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டது. 3.2 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான அளவு கருவி பொருத்தும் பணிக்கு இருவரிடம் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டது. இருவரில் குறைந்த ஒப்பந்தப்புள்ளி வழங்கிய RESI ENGINEERING என்ற மதுரை நிறுவனத்திற்கு வேலை ஆணை வழங்கப்பட்டது.



வேலை ஆணை வழங்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பணி துவக்கப்படாமல் இருந்தது. பொருட்கள் கிடைப்பதில் கால தாமதம் ஆவதால் - பணிகளைத் துவக்கவில்லை என ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் பிப்ரவரி மாதம் நடுவில் - இக்கருவி காயல்பட்டினம் நகராட்சி வந்தடைந்தது.



அதன் பிறகு - அதற்கு என தேர்வு செய்யப்பட்டு, காயல்பட்டினம் புறவழிச் சாலையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடத்தில் இக்கருவி பொருத்தும் பணிகள் நடைபெற்றன.















பணிகள் நிறைவுற்ற பின் - கருவி பரிசோதனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதில் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மேல ஆத்தூர் நீர்தேக்கத்தில் இருந்து வழங்குவதாகக் கூறும் 21 லட்ச லிட்டர் அளவில் இருந்து குறைந்தே குடிநீர் பெறப்படுவதாக நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து காயல்பட்டணம்.காம் நகராட்சியின் ஆணையர் - ம.காந்திராஜிடம் வினவியபோது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் குறிப்பிடும் அளவை விட 3 - 3.5 லட்சம் லிட்டர் அளவு குறைந்தே தண்ணீர் வருவதாக கருவி காண்பிப்பதாக அவர் தெரிவித்தார்.

காயல்பட்டணம்.காம் - மேல ஆத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் பாலசுப்ரமணிமிடம் இதுகுறித்து விசாரித்தது. கருவியைப் பொருத்தியவுடன் - நகராட்சி தரப்பில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர்தான் வருவதாகக் கூறப்பட்டது என்றும், நகராட்சி அலுவலர்கள் ஆத்தூரில் உள்ள நீர்த்தேக்கத்திற்கு வந்தபோது - அவர்களிடம் அங்குள்ள கருவி காண்பிக்கப்பட்டதாகவும், அக்கருவியோ 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவதைக் காண்பிப்பதாகவும் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

தற்போது சுமார் 17 லட்சம் லிட்டர் தண்ணீர் வருவதாக நகராட்சி தரப்பில் கூறப்படுவதாகவும், தங்கள் தரப்பில் 21 லட்சம் லிட்டர் வழங்கப்படுவதாகவும், சில நாட்களாக - அணையில் தண்ணீர் அளவு குறைந்து வருவதால் - 50,000 லிட்டர் குறைத்து 20.5 லட்சம் லிட்டர் வழங்கப்படுவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

3.5 லட்சம் லிட்டர் அளவில் வேறுபாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும், இதனை ஆய்வு செய்ய தூத்துக்குடி நகராட்சியில் உள்ள மொபைல் கருவி ஒன்று மூலம் பரிசோதனை செய்யலாம் என்று தான் பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையில் இந்தக் கருவி நிறுவப்பட்டது. இருப்பினும் - தொடர்ந்து குடிநீர் விநியோகம் குறித்து பிரச்சனை தொடர்வது வேடிக்கையாக உள்ளது.

காயல்பட்டினம் நகராட்சியின் தொடரும் குடிநீர் பிரச்சனை மூன்று கேள்விகளை எழுப்புகிறது.

இத்தனை நாட்களாக குறைந்த அளவே குடிநீர் - ஆத்தூரில் இருந்து வழங்கப்பட்டு வந்தால், பெறப்படாத தண்ணீருக்கா காயல்பட்டினம் நகராட்சி பணம் செலுத்தி வந்தது? இதனால் யாருக்கு லாபம்?

மேல ஆத்தூரில் இருந்து அனுப்பப்படும் தண்ணீர் இடையில் மாயமாக மறைகிறதா? ஆம் எனில் - யார் அதற்குக் காரணம்?

மேல ஆத்தூரில் உள்ள கருவியிலோ, அல்லது காயல்பட்டினம் நகராட்சி அண்மையில் பொருத்தப்பட்ட கருவியிலோ பிரச்சனை உள்ளதா? ஆம் எனில் எந்தக் கருவியில் பிரச்சனை உள்ளது என்பதை எப்படி கண்டுப்பிடிப்பது?


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [02 April 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34093

அதான் பல காலமாக பலரும் சொல்லி வருவது தானே.

வழியில், எதோ ஒரு நீர் யானை நம் தண்ணீரை பல பல வருடங்களாக உறிஞ்சி வருவதாக சந்தேகப்படுகிறார்கள்.

இதை காப்பதற்காக தான், அந்த தொகுதி முன்னாள் உறுப்பினர் வெறி கொண்டு நகராட்சி தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே ஆகனும் என்று கங்கணம் கட்டி இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இனி என்ன..! எதோ கருவிக் கொண்டு கண்டுபிடிக்கப் போகிறார்களாமே.! கவனமாக இருங்கள்.. உறிஞ்சுகின்ற நீர் யானை உஷாராகி கனக்சனை கட் பண்ணும்.

கையும் களவுமாக பிடித்து....ஐம்பது வருட தண்ணீர் உரிஞ்சலுக்கு அபராதம் விதித்து, நம் மண்ணை விட்டு அந்த யானையை விரட்ட வேண்டும்...!!

வல்ல அல்லாஹ் துணை இருப்பான்.

ஊர் நலனில் அக்கறை கொண்டு தீயாய் வேலை பார்க்கும் நம் சகோதரர்களுக்கும், நம் வலை தளத்திற்கும் நன்றிகளை பல கோடி.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Abu Rushda (Dubai) [02 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34097

As the installed flow meter is new, the chances of error is very minimal. As a standard practice, flow meters are factory set and sealed. Still, independent third party inspection bodies like TUV, Lloyds can be contacted to calibrate and certify the flow meter.

The suggested mobile flow meter from Tuticorin , which is commonly known as mobile flow meter provers is used to calibrate / check the existing flow meter in situ. Since that mobile prover too is coming from a government source…..the doubt remains.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பீச் பாரடைஸ்! (?!)  (31/3/2014) [Views - 3698; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved