Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:48:46 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13413
#KOTW13413
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 2, 2014
நகராட்சி தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம்???
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3706 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றிய ரோஜா சுய உதவிக் குழுவினர் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இன்று காலை 09.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சிக்குச் சென்று பார்த்தபோது, தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் சாதாரண உடையில் இருந்தனர்.





அவர்களுள் சிலரிடம் இதுகுறித்து வினவியபோது, காயல்பட்டினம் நகராட்சியில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களான அவர்களைப் பணி நீக்கம் செய்யுமாறு - சென்னையிலுள்ள மாநில நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திலிருந்து உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், எனவே இன்று (ஏப்ரல் 02) முதல் தற்காலிகப் பணியாளர்கள் பணிக்கு வர வேண்டாம் எனவும் ஆணையர் தெரிவித்ததாகவும், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் தற்காலிகப் பணியாளர்களிடம் கூறியுள்ளதாக அவர்கள் கூறினர்.

சுமார் 8 வருட காலமாக இந்த நகராட்சியில் பணியாற்றி வரும் தங்களை திடீரென வேலை நீக்கம் செய்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது என அவர்கள் மேலும் கூறினர்.

இது ஒருபுறமிருக்க, பொதுமக்களில் சிலர் நகராட்சி வளாகத்திற்கு முன் வந்து, நகராட்சியின் துப்புரவுப் பணிக்கான (திடக்கழிவு மேலாண்மை) வாகனங்களை, நகராட்சியில் ஓட்டுநர் தரத்திலுள்ள ஊழியர் மட்டுமே எடுக்க வேண்டும் எனவும், மற்றவர்கள் யாரும் அதை இயக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறி வாக்குவாதம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [02 April 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34095

முறைகேடாக உள்ளே வந்தால் இப்படி தான். அடித்த ஆப்பு ரெம்ப நாட்கள் கழித்து வலிக்க ஆரம்பித்து உள்ளது. இன்ஷா அல்லாஹ். நடப்பவைகள் நன்மையாக அமையட்டும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அட 8 ஆண்டுகளா.. நகராட்சி உறங்கி கொண்டு இருந்தது.
posted by செய்து அகமது (காயல்பட்டினம்.) [02 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34101

அடுத்தவனின் உரிமையை நீங்கள் பறித்தீர்கள் இன்று உங்கள் முறையற்ற பணியை நிர்வாகம் பறித்துள்ளது.

இதில் இரக்க பட நகரில் எவரும் மாட்டார்கள்.

போதும் 8 வருடம் நகர் மக்களை ஏமாற்றியது போதும். வேறு ஊரிலுள்ள நகராட்சியில் முயற்சி செய்து பணியில் சேருங்கள். நகராட்சியில் தனக்கு வேலை நடக்க வேண்டி யார் யார் இவர்களிடம் பணம் கொடுத்தார்களோ. இனி திரும்ப கிடைக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [02 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34103

ஏப்ரல் பூல் பரிசு

புத்தாண்டு புதுகணக்கு

இனியாவது நல்லகாலம் நகரமன்றம் பிறக்கட்டும். துப்பிரவு வாகன ஓட்டுனர் முதல், குடி தண்ணீர் திறப்பவர், ஆணை பிரபித்தல் வாசகம் பதிய முக்கிய பேரிட்சாளிகளே இவர்கள்தான். வந்தே மாத்திரம் ......................ஜெய் ஹிந்த்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பலகீனமானவனை ஏமாற்றி பணியில் சேர்ந்தால் இறுதியில் இது தான் நிலைமை...! அது என் பிள்ளையாக இருந்தாலும் சரியே..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [02 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34104

புதிய ஆணையரின் அதிரடி நடவடிக்கை ஏற்புடையது பாராட்டகூடியது..

நியாயத்தை விரும்பும் சமூக ஆர்வலர்கள் - பொது மக்கள் இந்த பணி நீக்கத்தை - ஆணையரின் அதிரடி நடவடிக்கையை ஏற்று கொள்வார்கள்..!

வேலைவாய்ப்பு அலுவகலத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்த பட்டதாரிகளின் சாபம் உங்களை விடுமா..!

எத்தனை ஆண்டுகள் தான் ஏமாற்றுவாய் இந்த நகராட்சியிலே..!

இந்த அநீதி காரர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்கும் நகரில் சில நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பல பொருளாதார நெருக்கடியில் படிக்க வசதியின்றி பலரிடம் கடன் பெற்று படித்து பட்டம் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே தனது பெயர் பதிவை பதிவு செய்து பல ஆண்டுகள் வேலைக்காக காத்திருப்பு பட்டியலில் இருப்பதை நினைத்து வேதனை அடைந்து வந்தோர் பலர் இருக்க நகராட்சியில் உள்ள சிலரை (சில்லறைக்கு) தாஜா பிடித்து கொண்டு அவர்கள் மூலம் அரசு விதிகளுக்கு புறம்பாக - முறையற்ற முறையில் ரோஜா, பூஜா, தாஜா, கூஜா, மாஜா என்று நகரில் முகவரியில்லாத குழுக்கள் மூலம் பணியில் அமர்த்தப்பட்டு 8 ஆண்டுகள் கடந்து தற்போது அது நகர் மக்கள் மத்தியிலும் படித்து வேலைக்காக முயற்சி செய்து பல ஏமாற்றங்களை எதிர் கொண்டவர்களின் மத்தியிலும் மிக பெரிய தாக்கத்தின் - எதிர்ப்புக்களின் காரணமாகவும் மேலும் நகரின் சமூக ஆர்வலர்கள் பலர் நகராட்சியில் தனது R T I யை பயன்படுத்தி பல தகவல்களை பெற்று அதன் துறை சார்ந்த தலைமைகளின் கவனத்திற்கும் பார்வைக்கும் (காயல்பட்டினம் நகராட்சி முறைகேடுகள் குறித்து) எடுத்து அனுப்பி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பணியில் சேர்வதை விரும்பும் விதமாக பலரின் முயற்சி இதன் மூலம் வெற்றி அடைந்துள்ளதாகவே உணர தோன்றுகிறது..

குறிப்பாக - வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து காத்திருந்து கவலை அடைந்தோர்களுக்கு இந்த முறையற்ற மோசடியான ரோஜா, பூஜா, தாஜா, கூஜா,மாஜா போன்ற முகவரியற்ற குழு பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கும் செய்தி மிகுந்த ஆறுதலை அளிக்கலாம்.

இந்த அதிரடி நடவடிக்கையால் படித்த பட்டதாரிகளின் பணி எதிர்பார்ப்பின் தேவை நிறைவேறலாம்.. இதுவே சரியான அணுகுமுறையும் ஆகும்.

படித்த பட்டதாரிகளே உங்கள் கனவு விரைவில் நிறைவேறும் இறைவன் உங்களுக்கு துணை புரிவானாக.. ஆமின்..

படித்து பட்டம் பெற்ற அணைத்து சமய சகோதரர்களும் இந்நகராட்சியில் பணி பெற வேண்டும்.. வாழ்த்துக்கள்.

படித்த பட்டதாரிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அதிரடி தீர்ப்பு... என்றே கருத முடிகின்றது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by மஹ்மூது ரஜ்வி (காயல்பட்டினம்) [03 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34107

காலையில் பணிநீக்கி மாலையில் மீண்டும் பணியில் சேர்த்தாச்சாமே

மஹ்மூது ரஜ்வி
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Shaik Dawood (sharjah) [03 April 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34108

அஸ்ஸலாமு அலைக்கும்

பஞ்சாயத் மற்றும் மத்திய மாநில அரசு வேலைகளுக்கு நம் மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய வேண்டும்.. ஏனென்றால் இவைகள் நம் மக்களுக்கு தெரிவதே இல்லை. kayalpatnam .com தான் விழிப்புணர்வும் உதவியும் செய்ய வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Shaik Dawood (Sharjah) [03 April 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34109

தம்பி இஸ்மாயில் சொன்னது போல் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே '


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved