Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:01:05 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13420
#KOTW13420
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 4, 2014
டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து KEPA அவசர செயற்குழு கூடியது! அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் கூட்டத்தைக் கூட்ட தீர்மானம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2732 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து KEPA அவசர செயற்குழுவில், அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டியினர், நகர்மன்ற அங்கத்தினர் கூட்டத்தைக் கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாண்டு காலமாக நிலம், நீர், காற்றில் தனது அமிலக் கழிவைக் கலந்து மாசு ஏற்படுத்தி வருகிறது - காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை.

இத்தொழிற்சாலை தனது உற்பத்தியை இரு மடங்காக உயர்த்திட அரசு அனுமதியை எதிர்பார்த்திருப்பது ஒரு புறமிருக்க, ஆலையைச் சுற்றியுள்ள மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை அனுமதியளிக்கக் கூடாது என, காயல்பட்டினம் அனைத்து தரப்பு மக்களின் சார்பில் - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA பல வழிகளிலும் அரசை வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், அமிலக் கழிவைக் கொண்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வரும் டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அண்மையில் அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விவாதிப்பதற்காக - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA)வின் அவசர செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 03ஆம் நாள் வியாழக்கிழமை 20.30 மணிக்கு, அதன் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் தலைமையில், துணைத்தலைவர் என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோர் முன்னிலையின், KEPA அலுவலகத்தில் நடைபெற்றது.



பொருளாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா கூட்ட அறிமுகவுரையாற்றினார்.



தொடர்ந்து, டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது குறித்தும், அமைப்பின் சார்பில் மேற்கொண்டு செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நீண்ட நேரம் கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 - மத்திய அமைச்சகத்திற்கு கண்டனம்:

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை, தனது உற்பத்தியை இரு மடங்காக உயர்த்திட, சுற்றுவட்டாரப் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளையும் மீறி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 2 - பொதுப்பிரசுரம் வெளியீடு:

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை, தனது உற்பத்தியை இரு மடங்காக உயர்த்திட, சுற்றுவட்டாரப் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளையும் மீறி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளதைக் கண்டித்து, பொதுப்பிரசுரம் அச்சிட்டு, நகரின் அனைத்துப் பொதுமக்களுக்கும் வினியோகிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3 – அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டம்:

டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக, நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகள், நகர்மன்ற அங்கத்தினர் கலந்தாலோசனைக் கூட்டத்தை விரைவாகக் கூட்ட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரைக்குப் பின், KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத் - கஃப்பாராவுடன் - 22.30 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [04 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34114

முக்கிய பிரதிநிதிகள் கூடிய அமர்வு நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாற்று அரசியல் கட்சிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் - அல்லது தேர்தலை புறக்கணிப்பு செய்ய பட வேண்டும்... இந்த இரண்டில் ஒன்றே தீர்வு..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [04 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34116

மாற்று அரசியல் கட்சிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் - அல்லது தேர்தலை புறக்கணிப்பு செய்ய பட வேண்டும்... இந்த இரண்டில் ஒன்றே தீர்வு..

அணைத்து ஜமாஅதுக்களும் ஓன்று கூடி இத்தேர்தலை புறக்கணிப்பு செய்வதை தவிர வேறு தீர்வு எதுவும்ல்லை..! அல்லது அதற்க்கு மாற்றமாக மாற்று அரசியில் கட்சியிலுள்ள நபரை MP யாக்கி நமது குரலை மக்களவையில் ஒலிக்க செய்வோம்.. எதற்காவது ஒன்றுக்கு வாருங்கள்..

இது முன் இருந்த MP இந்த ஆலைக்கு எதிராக மக்களவையில் ஏதும் பேசியதுண்டா..? பிறகு ஏன் திரும்ப திரும்ப நாம் 5 ஆண்டுக்கு ஒருமுறை இவர்களின் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்..

இனி தேர்தலுக்கு பிறகு நாம் பேசி புலம்புவதற்கு அர்த்தமில்லை. இனியும் 5 ஆண்டுகாலம் எதிர்பார்த்து இருக்க வேண்டுமா..?

வாக்கு சாவடி வெறிச்சோடி கிடக்க வேண்டும்..! தேர்தல் ஆணையம் நமதூர் மீது திரும்பி பார்க்க பட வேண்டும்...!

புறக்கணிப்பு செய்தி உலக மக்களுக்கு பரவ வேண்டும்..!

புறக்கணிப்புக்கு தயாரில்லை எனில் ஆலைக்கு எதிராக போராடும் ஒரு மாற்று வேட்பாளரை நமது தொகுதிக்கு தேர்ந்தெடுக்க பட வேண்டும்.

எந்த அரசும் மக்களின் நன்மையை சிந்தித்ததாக இல்லை..

முதலில் நமது தொகுதியில் ஒரு மாற்றம் வேண்டும்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சரியான பாதையில் KEPA
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [04 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34119

அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க கூட்டிய KEPA அமைப்புக்கு துஆவுடன் கூடிய வாழ்த்துக்கள். தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளது. இன்ஷா அல்லாஹ், வரும் வெள்ளிக்கிழமைக்குள், நமதூர் அனைத்து ஜமாத்துக்கள், புறநகர், குறிப்பாக, இந்த நச்சு ஆலையினால் பாதிக்கப்படும் அனைவரையும் கூட்டி நல்ல முடிவு எடுங்கள்.

பலரின் கருத்துக்களின் அடிப்படையில், தேர்தல் புறக்கணிப்பு நல்ல தீர்வாக இருக்கலாம். நாட்கள் கடந்தால், தேர்தல் முடியட்டும் முடிவு எடுக்கலாம் என்று நமது தலையில் 'காரமான மிளகாய்' அரைப்பார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவு எடுக்கப்பட்டால், அதில் உறுதியாக இருப்போம். 'மஷூரா' செய்யும் முன், அல்லாஹ்விடம் துஆ செய்து, அவனின் பொருத்தத்தை நாடி முடிவு எடுங்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ், நம் உயிரோடு விளையாடும் இந்த விஷயத்திலாவது ஒற்றுமை ஏற்படுத்த போதுமானவன்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [05 April 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34133

அனைத்து ஜமாஅத், பொது நல அமைப்பு, புறநகர் அமைப்பு மட்டுமின்றி அனைத்து காயல் அரசியல் கட்சிகளையும் அழைக்க வேண்டும். யார் யார் எல்லாம் வருகிறார்கள். யார் யார் எல்லாம் வரவில்லை என்பதை அறிய முடியும். இந்த தேர்தல் நமக்கு நல்ல சந்தர்ப்பம். நழுவ விட்டு விடகூடாது. காலம் தாழ்த்தாமல் நடத்தப்பட வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் மேற்கொள்ளும் இம்முயற்சி வெற்றி பெற நல்லருள் புரிவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [05 April 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34142

மாற்று அணி என்று யாரை தேர்ந்தெடுத்தாலும் தொழிற்சாலை பெரும் பண முதலைக்கு சொந்தமானது என அறிகிறோம்.

இப்போதைய நம் ஆயுதம் தேர்தலை புறக்கணிப்பது மட்டும் தான். இதில் ஒற்றுமையோடு செயல் பட்டால், இப்போதே இதை பிரகடன படுத்தி நாளேடு தொலைக்காட்சி மூலம் ஆளுபவர்கள் மற்றும் அதுகாரிகள் காதில் ஏற்றினால் இறையருளால் வெற்றி கிடைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...எனதன்பு உடன்பிறப்புக்களே...
posted by AnbinalA (Jaipur) [05 April 2014]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 34146

தேர்தல் காற்றை சுவாசிக்கும் காயல் மக்களே
வாழும் வரை சுகாதார காற்றை சுவசிக்க இந்த
தேர்தலை ஒட்டுமொத்தமா புறக்கணிப்போமா
ஆலை முன் சாலையில் உண்ணாவிரதம் இருப்போமா...

கூடங்குளம் போன்று போராடாத வரை தீர்வு என்பது
தீபந்தம் போன்றே நம்மை எரித்துக்கொண்டே இருக்கும்
பகலில் கூடி பேசுவதால் தொழில் நஷ்டம்
இரவில் கூடி பேசுவதால் தூக்கம் நஷ்டம்
களத்தில் இறங்கி கரை கணாத வரை
DCWவால் நமது வாழ்க்கையே நஷ்டம்...

ஆலை நிரர்வாகம் குற்றம் செய்கிறது என்றால்
ஆலை மட்டும் குற்றம் செய்யவில்லை
அந்த குற்றத்தை தட்டிக் கேட்காமல்
எடடி நிற்பவர்களும் குற்றவாளிகளே...

மனிதன் மட்டுமே சிந்திக்கிறான்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நல்ல முயற்சி
posted by Salai Sheikh Saleem (Dubai) [05 April 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34147

வெளிநாட்டில் வாழும் என்னை போன்றோர்கள் எதிர்பார்த்த நிகழ்வு இது. நல்ல முயற்சி - நாம் ஒன்றுகூடி கலந்தாலோசித்து எடுக்கும் முயற்சிகள்தான் தான் நல்ல முடிவை நோக்கி நகரும். நீங்கள் இப்படி ஓன்று கூடி கலந்தலோசித்ததே பெரிய மன நிறைவை தருகிறது.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் கூடி என்ன முடிவு எடுத்தாலும் அது ஊர் நன்மைக்கே என்று எந்த வித மாற்றுக்கருத்தும் இன்றி எல்லோரும் வழிமொழிய வேண்டும். இன்ஷா அல்லாஹ் ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved