Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:35:14 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13421
#KOTW13421
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 4, 2014
நகரில் அமிலக் கழிவைக் கலக்கும் டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு அனுமதியளித்த மத்திய அரசைக் கண்டித்து KEPA அறிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2621 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை, தனது உற்பத்தியை இரு மடங்காக உயர்த்திட, சுற்றுவட்டாரப் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளையும் மீறி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளதைக் கண்டித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) சார்பில் கண்டனப் பிரசுரம் வெளியிட அதன் அவசர செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள கண்டனப் பிரசுரம்:-



இப்பிரசுரம், இன்று (ஏப்ரல் 04 - வெள்ளிக்கிழமை), காயல்பட்டினத்தின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் தொழுகைக்குப் பின் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [04 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34113

டி.சி.டபிள்யு ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு அனுமதியளித்த மத்திய அரசைக்கும், துணை நின்ற தி.மு.க.விற்கும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் காட்டி என்றுமே இனி இந்தியாவில் தலைதூக்காது இருக்க வழிவகை செய்யவும். சுற்று சூழல் அமைசகதை, பாதிக்க பட்ட நாம் மீண்டும் ஒருமுறை போராடி தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்ட முயற்சிக்க வேண்டாம்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [04 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34123

சந்தடி சாக்கில், சகோதரர் PS அப்துல் காதிர், காங்கிரஸ் மற்றும் திமுக மீதுள்ள ஆத்திரத்தில், தான் சார்ந்திருக்கும் அதிமுக -க்கு ஆதரவு சேகரிக்க நினைக்கிறார். இதை தான், 'சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுறது',

தேர்தலுக்குள், அந்த விரிவாக்க ஒப்புதலுக்கு, தடை கிடைக்கவில்லையென்றால், தேர்தலை புறக்கணிக்க வேண்டுமே தவிர, அதிமுக என்ன? ஆம் ஆத்மிக்கு கூட ஆதரவு தெரிவிக்க கூடாது. ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர், இந்த ஆலைக்கு எதிராக இருந்தாலும், நமது எதிர்ப்பை காட்ட சரியான ஆயுதம், தேர்தல் புறக்கணிப்பு ஒன்றே.

KEPA, இந்த அறிக்கையை நோட்டிஸ் வாயிலாக பொதுமக்களுக்கு கொடுத்து இருந்தாலும், உள்ளூர் தொலைகாட்சி சேனல்கள் மூலமாக, செய்தியை ஓட விடலாம். இது மக்களுக்கு நல்ல ரீச் ஆகும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Rilwan (TX) [05 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34129

அதிமுக அடிமைகளையும் திமுக அடிமைகளையும் மன மாற்றம் செய்வது கஷ்டமான விசயம்தான் சகோதரர் லுக்மானின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது .

காலம் காலமாய் உங்களை வைத்து வியாபாரம் செய்யப்படுவது இன்னும் புரியவில்லை என்றால் எருமை மாட்டுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?

இன்னொரு வாசகர் ஏதோ மக்கள் அயிக்கிய ஜமாஅத் மீது அர்த்தமின்றி எதிர்ப்பது போல எழுதி இருந்தார் ,,, அயிக்கிய ஜமாஅத் போன்ற அமைப்பு ஊருக்கு தேவை தான் ஆனால் அதை நடத்தும் முறையை தான் ஊர் மக்கள் எதிர்க்கிறார்கள் . நாட்டமை முறையை மக்கள் ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டார்கள் . அயிக்கிய ஜமாஅத் ஊர் மக்களுக்கு பொதுவானதாக இருக்க வேண்டும் . சிலர் கைக்குள் அடங்கி இருப்பதை மக்கள் எதிர்ப்பார்கள் .

oorum, ஊர் நலனும் சிலர் தனிப்பட்டவர்களுக்கு சொந்தமானது இல்லை . ஊரு க்கு பொது வானது .. எந்த ஒரு விசயமும் பொது வாதத்திற்கு விடப்பட்டு மக்களின் ஆதரவை நியாயமான முறையில் பெறப்பட்டு நடத்தப்படுமானால் அயிக்கிய ஜமாத்தை அனைவரும் எற்றுக்கொல்வார்கள் .

ஆனால் அயிக்கிய ஜமாஅத் இல்லாமல் ஒன்றும் நடக்காது என்று மட்டும் நினைக்க வேண்டாம் . சூடு சொரணை உன்னர்ச்சி என்று இருக்கு ம் வரை நியாயமான காரணங்களுக்கு மக்கள் போராடுவார்கள

கூடம்குலம் மக்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [05 April 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 34130

தமிழர்க்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் விளைவிக்கும் அரசுதான் காங்கிரஸ் கட்சி. இந்த காங்கிரஸ் கட்சி பிரதமரை அடையாளம் காட்டியவர்தான் தி.மு.க. தலைவர். இன்னும்மா தி.மு.க. தலைவர் இந்த நாட்டு பிரதமரை சுற்றி காட்டவேண்டும். காயல் மக்களின் உரிமை காப்பாட்ட வேணும் என்றால், வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க தேர்தலுக்கு முன் போராட்டம் நடத்தி காட்டவேண்டும். நம்மவரை ஏமாட்ட நினைக்கும் இந்த காங்கிரஸ் அரசுக்கும் துணை நின்ற தி மு க விற்கு ஓட்டு போடுவதை தவிர்க்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. முட்டும் போது மூலையை (மறைவை) தேடி அலையும் முட்டாள்கள்.
posted by s.s.md meerasahib (TVM) [05 April 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34132

அன்பு இஸ்லாமியர்களே........... இந்த நாடாளுமன்ற தேர்தல் நம் சுய பரிசோதனை செய்து கொள்ளும் தேர்தல் இல்லை. முஸ்லீம்களின் சக்தியை நிரூபிச்சி காட்டும் தேர்தல். நம் எதிரிகளுக்கு பாடம் புகுட்டும் தேர்தல். இந்த சமயத்தில் DCW வை காரணம் காட்டி தேர்தலை புறக்கணிப்பது என்பது. இந்திய முஸ்லிம்களின் நிலைமையை சிந்திக்கும் போது....... நம் புறக்கணிப்பு என்ற முடிவு தவறான ஒன்று.

நாம் தேர்தலை புறக்கணித்தாலும்......... நம் எதிரிகளின் கையில் தான் ஆட்சி போகும். அந்த சமயத்தில் நாம் நம் உரிமைகளை அவர்களிடம் முறையிட எந்த ஒரு அதிகாரமும் நமக்கு கிடையாது ஏனெனில் நாம் உரிமை ஓட்டை...... ஜனநாயகத்தை புறம் தள்ளிய காரணத்தால்.

அன்பு நண்பர்களே......... நாம் பாலஸ்தீனியர்களை போல ஆகிவிடாமல் புத்தி பூர்வம் சிந்தித்து செயல் பாடவும். பாலஸ்தீனில் நடப்பது போல அbப்துக்கும்,காதருக்கும்...... ஆசனத்தில் ஐஸ் டியூப் ஏத்தும் போதுதான் தெரியும் எனில்...... " படிச்சவன் பாட்டை கெடுத்தான். எழுதினவன் ஏட்டை கெடுத்தான்" "ஆத்திர காரனுக்கும் புத்தி மட்டு" என்ற பழமொழிக்கு சொந்தக்காரர்களாகி விடுவோம். எச்சரிக்கை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [05 April 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34134

தம்பி மீரா சாஹிபின் ஆதங்கம் சரியே என்றாலும் தேர்தல் புறகணிப்பு என்று நம் அறிவிப்பு கொடுத்தாலே அனைத்து அதிகாரிகள், அரசியல் கட்சிகள் பார்வை திரும்பும். அதற்கு இது தான் நல்ல நேரம். நமது எதிர்ப்பை பதிவு செய்ய நல்ல நேரம் என்று எண்ணுகிறேன்.இதற்கு மேல் விளக்கம் தேவை இல்லை . புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.தயவு செய்து ஒன்று சேர்ந்து ஒரே உணர்வை வெளிபடுதுவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் யாவருக்கும் ஒற்றுமையை தருவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. உண்மை விழித்தெழும் காலம் கண தூரமல்ல!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [05 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34137

"KEPA " வின் ஆர்வமுடைய அவசர கூட்டத்தையும் அதனால் வெளிவந்த ஆட்கொல்லி நச்சு ஆலைக்கெதிரான பிரசுரம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட நடவடிக்கையையும் பாராட்டுகிறேன். இந்த ஆலையின் அங்குள,அங்குள நடவடிக்கையை நுண்ணிப்பாக கவனிக்கும் நம்"KEPA ". அமைப்புக்கு நம் அனைவர்களின் ஒத்துழைப்பையும் ஒருசேர கொடுப்பது காயலர்களின் தார்மீக கடமையாகும்!

நாம் எந்த தனிப்பட்ட அரசியல் கட்சியையும் நம்பி நிற்காமல் நம்மை நாமே நம்பி நம்மால் ஏற்படுத்தப்பட்ட "KEPA " அமைப்பையே நாம் ஒற்றுமையுடன் வலிமைபடுத்தி முன்னெடுத்துச் சென்று முயற்சிப்போமேயானால் முன்னோனின் உதவியால் வெற்றி இலக்கை எட்டாலாம்

என்னை வெற்றிபெற வையுங்கள் நான் DCW யைப்பார்த்து கொள்கிறேன் என்று சுயேச்சை மற்றும் இன்று முளைத்து அறிமுகமாகிய கட்சி முதல் ஆண்டாண்டுகாலமாய் இருக்கும் கட்சிகள் வரை தங்கள் வெற்றிக்காக நம்மிடம் பல்லிளித்துக்கொண்டு பவனி வரும் நாடகங்கள் தான் அன்றாடம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது!

அன்பு காயல் சகோதரர்களே, ஆரம்பமுதல் எந்த சுயநலமும் பாராமல் இரவு பகலாக நம்மூர் நன்மைக்காக இக்கொடிய ஆலையின் கழிவுகளால் ஏற்ப்பட்ட உயிர்பலி முதல் அத்தனை துன்பங்களையும் அக்குவேறு ஆணிவேராக பிரித்தறிவித்து இன்றுவரை போராடும் புண்ணிய அமைப்பான "KEPA" அமைப்பு ஒன்றை மட்டும் நாம் நம்பி நம் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை அவர்களுக்கு தெரிவிப்போமாக,வல்ல இறைவன் உண்மையின் பக்கமுமாகவும் ,நமதூர்மக்களின்இன்னல்களுக்கு எதிரானதொருதாகவும் நல்லதொரு தீர்ப்பை தந்தருள்வானாக ஆமீன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. தேர்தல் புறக்கணிப்பின் அர்த்தம் புரிந்து கருத்து பதிவு செய்யுங்கள்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [05 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34138

இப்போ நடக்கும் தேர்தல், பஞ்சாயத்து தேர்தல் இல்லை. இந்த நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 9-10 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். நமது ஊரில் உள்ள வாக்குகள் சுமார் 30 ஆயிரம் மட்டுமே.

நாம் புறக்கணிப்பதால், எதிரி வென்று விடுவார் என்று பூச்சாண்டி காட்ட வேண்டாம். ஒரு ஊரே தேர்தல் புறக்கணிப்பு செய்தால், அது இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கும். அப்படி ஒரு சூழலை எந்த அரசியல் கட்சியோ, அரசாங்கமோ விரும்பாது. அப்படி புறக்கணிப்பு என்று ஊரே முடிவெடுத்தால், அதன் பின்னர் இந்த அரசு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? என்று பொறுத்திருந்து பாருங்கள்.

இப்போது பழைய சம்பவத்தையும் நினைவு படுத்துகிறேன். நான் இன்றும் ஐக்கிய பேரவைக்கு ஆதரவாளன்தான். ஆனால், 169 சுனாமி தொகுப்பு வீடு திட்ட பிரச்சனையில், பேரவை முதலில் எடுத்த, 2011 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்ற முடிவில் உறுதியாக இருந்திருந்தால், அன்றே அந்த பிரச்சனை முடிந்திருக்கும்.

ஆனால், பேரவை சில காரணங்களுக்காக அந்த முடிவில் உறுதியாக இல்லாமல், தேர்தலுக்கு பிறகு பார்க்கலாம் என்று தள்ளி போட்டதன் விளைவு, இன்னும் அந்த பிரச்சனை 'நம் தலை மீது தொங்கும் கத்தி போல தொங்கிக் கொண்டு இருக்கிறது'. 3-4 மாதங்களுக்கு முன்னர் கூட, நம் மாவட்ட ஆட்சியர், நம் நகர்மன்றத்துக்கு இந்த விஷயமாக கடிதம் எழுதினார். இதை குறிப்பிடுவதற்கு காரணம், தேர்தல் முடிந்து விட்டால், நமக்கு 'அல்வா' தான்.

சகோதரர் மீரா சாஹிப் அவர்கள், உலக சரித்திரத்தை தவறாக புரிந்துள்ளார். அதனால் தான் பாலஸ்தீன பிரச்சனையுடன் ஒப்பிட்டுள்ளார். பாலஸ்தீன பிரச்சனையில், 'பெரிய அண்ணன்' அமெரிக்கா நடுநிலையாக இருந்திருந்தாலே, எப்போதோ தீர்வு ஏற்பட்டிருக்கும். இந்த பாலஸ்தீன பிரச்னையை பற்றி மேலும் சிலர் கருத்து பதிந்து, இந்த தலைப்பின் கருவை திருப்பி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

KEPA ஒருங்கிணைப்பில், அனைவரும் எடுக்கும் நல்ல முடிவுக்கு ஆதரவு தெரிவிப்போம். தயவு செய்து, இந்த விஷயத்திலாவது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Rilwan (TX) [06 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34153

. திமுகா விற்கு ஒட்டுபோடுவதுதான் அறிவு என எழுதி இருக்கிறார்

. எப்படி என்று விளக்கவும் . நாங்கள் தான் அறிவில்லாமல் திமுகாவை எதிர்க்கிறோம் ....கருணாநிதி முஸ்லிம்களை இரச்சிக்கபோகிராரா ?



இதுவரை கருணாநிதி செய்த நன்மைகள் ஒரு ஐந்து சொல்லுங்களேன்?



கோவை கலவரம் , குஜராத் கலவரத்தின் பொது பாஜாகாவிர்க்கு ஆதரவு , சமீபத்தில் மோடிக்கு திமுக தலைவர் கொடுத்த நர்ச்சான்றிதல் ... இதப்பத்தில்லாம் நான் பேசல ..

2ஜீ ஊழல் உட்பட எதையும் கேட்கல .. கனிமொழி ராசாஉக்கு மந்திரி பதவி கேட்டு பேரம் பேசியது , அறுநூறு கோடி கைமாறியது என எதையும் கேக்கலே .

திமுக பாஜாகாவுடன் கூட்டநிவைக்காது என்று உத்திரவாதம் தர திமுக தலைமை தயார ?

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved