Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:05:25 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15594
#KOTW15594
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 17, 2015
ரியாத் கா.ந. மன்றத்தின் 49ஆவது பொதுக்குழுக் கூட்டம்! திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3774 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் 49ஆவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-

எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்ற 49ஆவது பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 06ஆம் நாள் வெள்ளிகிழமையன்று மஃரிப் தொழுகைக்கு பின் ஃபத்ஹா Shifa Al Jaseera Polyclinic Party Hallஇல் பாளையம் முஹம்மத் சுலைமான் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்விட நுழைவாயிலில் வருகைப் பதிவு, நிலுவைச் சந்தா சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.





ஹாஃபிழ் பீ.எஸ்.ஜெ.ஜெய்னுல் ஆப்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மன்றச் செயலாளர் ஏ.டீ.ஸூஃபீ இப்ராஹீமின் மகன் ஹாஃபிழ் மாணவர் அபூதல்ஹா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் நயீமுல்லாஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மன்ற உறுப்பினர் ‘இன்னிசைத் தென்றல்’ அய்யம்பேட்டை பக்கீர் முஹ்யித்தீன் இனிய பாடல் ஒன்றைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.



தலைமையுரை:

கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்கு தாவூத் இத்ரீஸ் தலைமையுரையாற்றினார்.



மன்றச் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசிய அவர், உதவி கோரி மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு உரிய காலத்தில் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு, மன்றச் செயல்பாடுகள் இன்னும் மெருகேறி அமைந்திட, இதுவரை மன்றத்தில் உறுப்பினராகாதோர், கொள்கை மாச்சரியங்களை மறந்து, நகர்நலனை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு மன்றத்தில் இணைந்து செயல்பட முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஒற்றுமையின் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்திப் பேசினார்.

2014ஆம் ஆண்டின் மன்ற செயல்பாடுகள்:

2014இல் நகர்நலனுக்காக மன்றம் ஆற்றிய பணிகளை செயலாளர் ஸூஃபி இப்ராஹீம் விரிவாக விளக்கிப் பேசினார்.



தொகுப்புரை:

மன்ற ஆலோசகர் ஹைதர் அலீ தொகுப்புரையாற்றினார். தர்மத்தின் முக்கியத்துவம் குறித்து குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மேற்கோள் காட்டி அழகிய முறையில் மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



மன்றத்தின் வரலாறு மற்றும் செயல்பாடுகள் குறித்து, மன்ற ஆலோசகர் எம்.இ.எல்.செய்யித் அஹ்மத் நுஸ்கீ விரிவாக எடுத்துரைத்தார். ஜன்சேவா (வட்டியில்லா கடனுதவி அமைப்பு) நமதூரில் துவக்கப்பட்டுள்ளது குறித்தும், அதன் நன்மைகளை விளக்கியும் பேசிய அவர், அனைவரும் அதில் இணைந்து செயலாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

மன்றச் செயல்பாடுகளில் உறுப்பினர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து, மன்ற ஆலோசகர் கூஸ் எஸ்.ஏ.டீ.முஹம்மத் அபூபக்கர் விளக்கிப் பேசினார்.



புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:

மன்றத்தில் புதியதாக உறுப்பினராக இணைந்துள்ள காயலர்கள் மற்றும் காயலர் அல்லாதோர் அனைவரும் இக்கூட்டத்தில் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டனர்.

உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம்:

மன்றத்தின் பழைய உறுப்பினர்களான லால்பேட்டை நாஸர், ஷேக் அப்துல் காதிர், ஆதம் அபுல் ஹஸன் ஆகியோர் தமது கருத்துக்களையும், மன்றத்திற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி உரையாற்றினர்.



நன்றியுரை:

மன்ற துணைச் செயலாளர் நோனா செய்யித் இஸ்மாஈல் நன்றி கூற, உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.எல்.செய்யித் முஹம்மதின் இறைப்பிரார்த்தனையோடு கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



கலைந்து செல்லும் முன் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.





[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]

காயல் களரிக் கறி விருந்துடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.






இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் & படங்கள்:
நோனா செய்யித் இஸ்மாஈல்
(செய்தி தொடர்பாளர் - ரியாத் கா.ந.மன்றம்)


ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (48ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [17 March 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 39651

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்துஹு.

இறையருள் நிறைக.

அன்புள்ளம்கொண்ட காயல் மற்றும் இப்பொதுக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட இன்னும்வராது வைபவம் சிறப்புறநிகழந்து நிறைவேற வாழ்த்தி துஆச்செய்த அனைவருக்கும் எமது ரியாத் காயல்நலமன்றம் ரக்வாவின் சார்பில் எமதுமனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறோம் ஜஃஜாக்கலாஹ் க்ஹைரன்லகும்.

அன்றுஎனதுகருத்துரையில் தெரிவித்தது என்னவெனில் யார்யார் எந்தெந்தநாட்டிலிருந்து வேலைசெய்து ஈட்டிவரும் வருமானப்பணத்தில் நமது அன்றாடச்செலவுகள்போக மீதப்படும் ஒருரூபாயோ,ரியாலோ,திர்ஹமோ சில்லறைகளை ஒருபுறமாக ஒதுக்கிவைத்து சேர்த்துவந்தால் அதுஉண்டியலில் சேர்ப்பதுபோல் நாம்எதிர்பார்க்காத ஒரு கனிசமானதொகை சேர்ந்துவிடும் இன்னும் சில ம்மிடமுள்ள அறியாமைப்பழக்கவழக்கங்களுக்கு செலவிடுபவற்றை குறைத்துக்கொண்டாலேபொதும் (உதாரணமாக புகைப்பழக்கம்) இன்ஷா முயன்றுபாருங்கள் அல்லாஹ் வெற்றியைத்தருவான் ஆமீன். அல்ஹம்துலில்லாஹ் என்மனதில் உதித்தகருத்தை எடுத்துவைத்தேன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...பாராட்டுக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [17 March 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39652

நமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 49ஆவது பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள் எல்லாம் மிகவும் சிறப்பாக அமைந்து இருந்தது . அணைந்து நிகழ்சிகளும் அழகான முறையில் குறிப்பிட்ட நேரத்தில் திட்டமிட்டபடி நடத்தி முடித்தது மிகவும் பாராட்ட பட வேண்டிய ஓன்று .

பொதுகுழு நிகழ்சிகளை எல்லாம் சிறப்பாக குறித்த நேரத்தில் நடத்தி முடித்த ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயல் வீரர்கள் & பொது குழுவின் விழா குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் .

நமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக நல்ல பல செயல் திட்டங்கள் நமது காயல் நகர மக்கள் பயன் பெரும் வகையில் செயல் படுத்தி வருகின்றனர் . நமது மன்றத்தின் நல்ல பல செயல்கள் தொடர்ந்து தொய்வின்றி தொடர வல்ல நாயன் அருள் புரிவானாக . ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...எங்கேயும் எப்போதும்....
posted by mackie noohuthambi (colombo) [17 March 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39656

காயல் நலமன்ற கூட்டங்கள் எங்கே நடந்தாலும் எப்போது நடந்தாலும் அங்கே சொல்லப்படும் ஒரு அறிவுரை, "கொள்கை மாச்சரியங்களை மறந்து எல்லோரும் ஊர் நலனுக்காக பாடுபடுங்கள்"..

அப்படியானால் அப்படி ஒரு மாச்சரியம் இன்னும் இருந்து கொண்டே தொடர்ந்து கொண்டே வருகிறது என்றுதானே அர்த்தம். வேதனை கலந்த உண்மை.

நான் ரியாதிலே பணி புரிந்தபோது இப்படி ஒரு நிலை இருந்ததை அவதானித்து இரு சாரார்களுடனும் பேசினேன். ஆனால் உடன்பாடு காண முடிந்ததில்லை. "அன்பு தடிப்பமாக இருந்தால் குறைகள் மெல்லிதாக தெரியும். அன்பு மெல்லிதாக இருந்தால் குறைகள் தடிப்பமாக தெரியும்' இதுதான் உண்மை. காலப் போக்கில் அந்த வேற்றுமை காணாமல் போய் விட்டது. ஆனால் ஊர் வந்தவுடன் அது எங்கிருந்தோ முளை விட்டு கிளை விட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது என்பார்களே அப்படி ஆகி விடுகிறது.

தீபங்களே, இளைஞர்களே, தெரிந்து கொள்ளுங்கள்,புரிந்து கொள்ளுங்கள் திரிகள் மட்டுமே எரிகின்றன - தூண்டுகோல்கள் - அவை ஊதிவிட்டு - சுகமாக தூங்குகின்றன.

LET US THINK IN TERMS OF "WE " RATHER THAN " ME " . வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்ஷா அல்லாஹ் மாச்சர்யங்கள் ஆச்சரியங்களாகும்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [18 March 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39662

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

அன்புநிறைந்த மக்கி நூஹுத்தம்பிகாக்கா அவர்களின் கருத்துரைகள் எப்போதும் கருத்தைத்தூண்டுவதாகவே இருக்கும் அந்தவரிசையில் நமதுஇயல்பான நிலையைப்பற்றி இயல்பாக எத்திவைத்திருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் இன்ஷாஅல்லாஹ் நிலைமாறும் உலகில் நிறபேதங்கள் மாறும்காலங்கள் மலரும் யார் எங்கே குத்தினாலென்ன அரிசியாக வேண்டும், குருதியில் நிறபேதமில்லை குருதிவழங்குபவர்களிலும் பெறுவதிலும் நாம்குண,நிறபேதம்காண்பதில்லை.

இதயமென்பது வெறும்கல்லறையாகாமல் நல்லபயன்தரும் தோட்டமாகவேண்டும், யாரழுதாலும் அதுசோகமே யார்சிரித்தாலும் அதுமகிழ்ச்சியே அதில் இகழ்ச்சிஎன்பதுமட்டும் சம்பந்தமில்லாமல் புகுந்துகொண்டுவிளையாடுவதற்கு இடம்கொடுத்துக்கொண்டிருக்கிறோம் இன்ஷாஅல்லாஹ் முயற்சித்தால் அதைத்தடம்தெரியாமலாக்குவான் அல்லாஹ் ஆமீன்

தூண்டுகோலைத்தூண்டும் கரங்களும்,விரல்களும் ஓய்ந்துவிடக்கூடாது அப்படிஓய்ந்துவிட்டால் நன்மையெனும்நல்லபலன்தரும் நிகழ்வுகள் மாய்ந்துவிடும்

ஒருகை ஒசைதருவதில்லை
ஒருமரம்தோப்பாவதில்லை
அலையில்லாதகடலில் உயிர்வளிகள் பிறப்பதில்லை
பிரச்சினையிலாத மனிதன் முயற்சிப்பதில்லை
மனிதனும்கடலும் ஒன்றே
மகத்துவமேன்பது வெறும்தத்துவத்திலில்லை

செயல்வடிவம் கொடுக்கும்போதே தத்துவங்கள் மகத்துவம்பெறுகின்றன.

நூஹுத்தம்பிகாக்கா நானும் கடந்த பிரிந்திருந்தகாலங்களில் நமதுகருத்துக்களை பலபொதுக்குழு, செயற்குழுக்கூட்டங்களில் சொல்லவும்முடியாமல்,விழுங்ககவும்முடியாமல் வெல்லமுடியாமல் தோற்றிருக்கிறேன், தோற்றிருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ் அதிலிருந்து மீட்சிகிடைத்துத்தானிருக்கிறது. இறைவன் மிகப்பெரியவன்.

முகில்கவிந்திருக்கிறது,
வசந்தம் வாசலைத்தட்டுகிறது,
நல்ல மழைபொழியட்டும்,
வசந்தம் வாழ்வளிக்கட்டும்,
தூபங்கள் மறையும்போதே தீபங்கள் ஒளிவீசும்.

என்றும் இணைந்த கரங்களாகவும் இணைக்கும்பாலமாகவுமிருக்க வல்லஇறைவன் நமக்குவழிவகை செய்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெஇயவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஒரு (தன்னிலை)விளக்கம்! ..
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [18 March 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39682

நான் என்றும் மதிக்கும் மக்கி நூஹுதம்பி காக்கா ரியாதில் இருந்த காலத்தில்,ரியாதின் காயல்நல மன்றத்தின்செயலாளராக பணியாற்றிவந்தேன்.எங்கள் இயக்கத் தலைவர் இன்ஜினியர் லண்டன் அபுபக்கர் காக்கா அவர்கள் சீர்மிகு பணியாற்றினார்கள் அவரின் நடுநிலைமை நேர்மை நடவடிக்கை இன்றும் என் நெஞ்சை விட்டு அகலாதவை.

எங்களின் குறிக்கோள் காயலின் அனைத்து பகுதியிலுள்ள மக்களின் எளியவர்களின்,இயலாதவர்களின் துன்ப துயரங்களை எங்களால் இயன்றவரை போக்குவதே தலையாய கொள்கையாக இருந்ததது.அனைத்து காயல் நெஞ்சங்களும் எங்களின் சகோதர சகோதிரிகளே என்பதுதான் எங்களின் தாரக மந்திரம்.இதில் குறிப்பிட்ட எந்த கொள்கைக்கோ,ஜமாத்திற்க்கோ ,தரீக்காவிற்க்கோ என்ற எந்த சிறு முக்கியத்துவமும் இல்லாமல் செயல்பட்டுவந்தோம்.

ஒரு ஜனநாயக முறைப்படி இயங்கி வந்த இயக்கத்தில் ஒரு சிலர் எங்களையும் கட்டாயமாக முக்கிய நிர்வாகப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று நிர்பந்தித்ததால் அதை தலைவரும், மற்றைய செயற்குழு உறுபினர்களும் மறுத்து ஜனநாயக் முறைப்படிதான் தேர்வு நடக்கும் என்ற முடிவை சொன்னதால், அம்முடிவை ஏற்க மறுத்து அதனால் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு விரிசலாக மாறி தனி அணியாக ஒதுங்கியது

ஒரு பத்து சதவீதத்தினருக்கும் குறைவாக உள்ளவர்கள், எங்கள் கொள்கை ஜமாத்திற்கு போதிய மரியாதை இல்லை என்ற போர்வையில் பிரித்தாலும் முயற்சில் இறங்கி அது தோற்றுபோய் விடவே தனிமைபடுதப்பட்டார்கள்.ஒரு சிலர் நமதூருக்கு சில ஜமாத்து பள்ளிகளுக்கு கூட கடிதம் எழுதினார்கள் எந்த பருப்பும் வேகவில்லை.

இந்த காலகட்டத்தில்தான் சகோதரர் மக்கி நூஹுதம்பி காக்கா அவர்கள் பிரிந்து நின்ற அந்த பத்து சதவீததினரையும் ஒன்றிணைக்க பாடுபட்டார்கள்.உண்மை வழியில் நடப்பவர்கள் உளமார வரவேற்றோம்,ஒதுங்கியே இருக்கணும் என்ற ஒத்த முடிவுள்ளவர்களை ஒருங்கிணைக்க முடியுமா? மக்கி நூ.த.காக்காவிற்கு தோல்விதான் கிடைத்தது ஒற்றுமை விரும்பி.மக்கி நூ.த.அவர்களை உண்மை அணியின் உதவிதலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அப்படி பிரிந்தவர்கள் தனி அணியாக இயங்கி நம்மூரின் ஒரு குறிப்பிட்ட கொள்கை ஜமாத்தை சேர்ந்த மக்களுக்கு மாத்திரம் உதுவுவதென்ற குறிக்கோளுடன் சிறிது காலம் இயங்கியது.

முதன் முதலில் காயல் நலமன்றம் உதயமானதே ரியாதில்தான்.நமதூரின் ஏழை,எளிய நோயாளிகள், மாணவர்கள், மற்றும் வறுமையில் வாடுபவர்கள் அனைவர்களுக்கும் எங்களால் இயன்ற உதவிகளை செய்ததோடு KMT கட்ட கட்டிட வசூல்கமிட்டி முதன்முதலில் அமைத்தது ரியாத்தில்தான்.. நம் காயல் சகோதரர்களின் பல வேலையில்லாதவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்து அவர்களில் வாழ்வில் ஒளியேற்ற உறுதுணையாக இருந்தது ரியாது நலமான்றம்தான். தமாம்,கசீம்,மதினா போன்ற ஊர்களில்ருந்து கொத்து கொத்தாக வருபவர்களுக்கு உணவு இருப்பிடம் வழங்கி வேலையும் பலநூருபேர்களுக்கு வாங்கி கொடுத்த பெருமை அன்றைய ரியாது நகர் நல மன்றம் ஒன்றையே சாரும். அல்ஹம்திலில்லாஹ்!..

இப்படி வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உத்வு வதற்காகவே ரியாத்தில் முக்கிய இடத்தில ஒரு வீட்டையே வாடகைக்கு எடுத்து அதற்கு "காயல் முத்துசாவடி" என்று பெயரிட்டு அங்கு வேலைதேடுபவர்களுக்கு இருப்பிடம் மற்றும் உணவு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

நான் பணிபுரிந்த கம்பெனியில் மட்டும் சுமார் 50 நமதூர் பிள்ளைகளுக்கு வேலையும்,சுமார் பத்து பேர்களை நதூரிலிருந்து வரவழைத்தும் வேலையில் சேர்த்திருக்கிறேன்.இப்படிபல சகோதரர்கள் பலவகையிலும் உதவினார்கள் என்றால் அது மிகையல்ல.0

சகோதரர் மக்கி.நூ.த.காக்கா கேட்க்கிறார்கள் ,தற்போதுள்ள எல்லா நற்பணி மன்றங்க்களும் "கொள்கை மாச்சரியங்களை மறந்து" என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள் இன்னும் அந்த மாச்சரியங்கள் இருக்கிறதா? என்று.

உண்மையை சொல்லவந்தால் 100%க்கு100% சதவீதம் இங்கிருக்கின்ற வளைகுடா அனைத்து காயல் நல மன்றங்களில் எள் முனையளவுகூட கொள்கை மாச்சரியம் இல்லை,இல்லை,இல்லை. அந்த வார்த்தைகளை ஏன் சொல்கிறோம் என்றால் நாங்கள் இங்கு ஒருதாய் பிள்ளைகள்போல் ஒற்றுமையாய்,ஒருமாச்சரியமும் இல்லாமல் இருக்கிறோம்.

இதை கேள்வியுரும் ஊர்மக்களே, ஊரில் ஒருசில உதவாக்கரைகள் இந்த மாசசிரியத்துடன் வாழ்பார்களேயானால் நீங்களும் திருந்துங்கள் என்ற ஒரு மறைமுக வேண்டுகோளடங்கிய எச்சரிக்கையே தவிர வேறு ஒன்றுமில்லை.அல்லாஹ அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [18 March 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39684

அஸ்ஸலாமு அலைக்கும் .

நம்மை படைத்த வல்ல நாயன் அல்லாஹு ஒருவனுக்கே எல்லா புகழும் புகழ்ச்சியும் .

சகோதரர் ஆதம் சுல்தான் காக்கா அவர்கள் மிக தெளிவாக விளக்கம் தந்தார்கள் .

மாஷா அல்லாஹு .. இன்றைய கால சூழ்நிலையில் நமது காயல் நல மன்றங்களில் எந்த கொள்கை பிரச்னையும் சிறு கடுகு அளவு கூட இல்லாமல் , இந்த மன்றங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் மிகவும் தெளிவான முறையில் எல்லோரும் ஒற்றுமையுடன் ஓன்று இணைந்து நமது ஊரின் மக்களின் நலன்களில் மட்டுமே முக்கிய குறிகோலாகவும் , நமது ஊரின் மக்களுக்கு நல்லது செய்வதன் மூலம் ஏழை , எளியவர்களின் நல்ல துஆ வும் வல்ல நாயனின் திருபொருத்தமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணத்தில் தான் அவர்களின் கம்பெனி வேலை பழுவின் இடையில் கிடைக்கும் அந்த சிறிய நேரத்தை கூட இந்த மன்ற பணி களுக்காக ஒதுக்குகிறார்கள் .

இவரகளின் பனி மேலும் சிறக்க நாமும் அவர்களுடன் இணைந்து செயல் படுவோம் . அவர்களுக்காக வல்ல நாயனிடம் து ஆ செய்வோம் . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் சிறுமழை!  (17/3/2015) [Views - 2629; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved