Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:56:26 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15601
#KOTW15601
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 18, 2015
தம்மாம் கா.ந.மன்றத்தின் 70ஆவது பொதுக்குழு கூட்டம்! திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2972 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 70ஆவது பொதுக்கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

பொதுக்குழுக் கூட்டம்:

சவுதி அரேபியா, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 70 வது பொதுக்குழு கூட்டம், இறைவனின் அருளால் 06.03.2015 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில், தம்மாம் ரோஸ் உணவக அரங்கில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த கூட்டத்தை இளவல் அன்வர் சயீத் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். அவர் ஓதிய திருமறை வசனத்தை இளவல் யூசுப் சாஹிப் ஆங்கிலத்தில் மொழி பெயர்பை வழங்கினார். வந்திருந்த அனைவர்களையும் மன்றத்தின் துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் வரவேற்று உரை நிகழ்த்தினார்.



தலைமையுரை:

அவரைத் தொடர்ந்து மன்றதின் தலைவர் டாக்டர் முஹம்மது இத்ரீஸ் தலைமையுரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம்:-



• மன்றத்தின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜனாப் முஹம்மது இஸ்மாயில், செயற்குழு உறுப்பினர் ஜனாப் தல்.P.S.M. சேகு நூருத்தீன் ஆகியோரின் மகள்களின் திருமணங்கள் சென்ற மாதம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மன்றத்தின் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர்களின் மணவாழ்க்கை சிறப்பாக அமைய வல்ல அல்லாஹ்விடம் அனைவர்களும் பிராத்தித்தார்கள்.

• சென்ற பொதுக்குழுவில் தெரிவித்த நமதூர் மக்களுக்கு இரவு நேரங்களில் மற்றும் அவசரமான ஆபத்தான தருணங்களில் மருத்துவ உதவி கிடைப்பது கடினமாகிவிட்ட இக்கால கட்டத்தில், ஒரு எமெர்ஜென்சி சர்வீஸ் ( அவசர மருத்துவ உதவி ) ஏற்பாடு செய்ய நமதூர் கே.எம்.டி. மருத்துவ மனையின் உதவியை நாடுவது, இந்த இன்றியமையாத சேவையை சவூதி காயல் நற்பணி மன்றங்களும், கத்தார், துபாய், அபுதாபி மன்றங்களும் இணைந்து கே.எம்.டி. நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவு காண்பது என்பதின் தற்போதைய நிலமை, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை விவரித்து பேசினார்.

செயலர் உரை:

தலைவர் அவர்களின் உரையைத் தொடர்ந்து மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜனாப். அஹமது ரபீக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதன் சுருக்கம்.



• மன்றத்தின் செயல்பாடுகளில் தங்களை வீரியத்துடன் அர்ப்பணித்துக்கொண்ட சகோதரர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

• சென்ற பொதுக்குழுவிற்கும் இந்த பொதுக்குழுவிற்கும் இடையில் மன்றத்தால் செய்யப் பட்ட நல உதவிகளை பட்டியலிட்டார். அதில் குறிப்பாக மருத்துவ உதவிக்கு ஷிபா மூலமாக 60 ஆயிரம் ரூபாயும்,

• நம் காயல்பட்டினத்தில் அண்மையில் தொடராகப் பெய்த வடகிழக்குப் பருவமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்திடுவதற்காக ‘காயல்பட்டினம் மழை - வெள்ள நிவாரணக் குழு’ எனும் பெயரில் தற்காலிக அமைப்பு துவக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு நிலையான நிவாரண உதவிகளைச் செய்யவும், அவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டவும் முயற்சிகள் செய்து வரும் இந்தக் குழுவிற்கு மன்றத்தின் பங்களிப்பாக ஒரு வீடு கட்டும் முழுச் செலவை ஏற்றுக் கொண்டதை தெரிவித்தார்.

• மன்றதின் சார்பாக, மிகவும் நலிவடைந்த குடும்பங்களுக்கு மாதம் தோறும் உணவுப் பொருட்களை வழங்கும் திட்டம் சென்ற மாதம் முதல் தொடங்கி விட்டதை அறியத்தந்து, அதில் கூடுதல் சகோதரர்கள் பங்குபெற்று, வல்ல அல்லாஹ்வின் உவப்பை பெறுமாறு வேண்டுகோள் வைத்தார்.

நிதிநிலை அறிக்கை:

பின்பு, மன்றத்தின் பொருளாளர் ஜனாப் இப்ராஹிம் அவர்கள் நிதி நிலை அறிக்கையை சமர்பித்தார்.



புதிய உறுப்பினர் அறிமுகம்:

இவரின் உரையைத் தொடர்ந்து புதிய வரவான சகோதரர் ஷைக் நூருல் பாராஸ் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு மன்றத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.



நெறியாளர் உரை:

இந்த இந்த நிகழ்ச்சிகளை அருமையாக ஒருங்கினைத்துக்கொண்டு இருந்த துணை செயலாளர் ஜனாப் இஸ்மாயில் (தம்மாம் இஸ்மாயில்) அவர்கள், 2015 ஆண்டுக்கான மன்றத்தின் செயல்பாடுகளையும், ஊரில் நடைபெற்ற மன்ற செயல்பாடுகளையும் குறிப்பிட்டார்.



அதில் குறிப்பாக அவசர மருத்துவ உதவி திட்டத்திற்க்காக இது வரை எடுக்கப்பட நடவடிக்கைகளைப் பற்றியும், சுற்றுப்புறத் தூய்மைக்கு செயல்திட்டம் பற்றிவும் விளக்கம் கூறினார்.

வரும் ஆண்டு நடத்தப் போகும் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகளைப் பற்றியும், ரமளான் மாதத்தில் வழமையாக ஏழைகளுக்கு வழங்கும் உணவுப்பொருள் திட்டதைப் பற்றியும் விவரித்தார்.

உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:

இவர்களின் உரையை தொடர்ந்து உறுப்பினர்களின் கருத்துக்களை தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பல சகோதரர்கள் தங்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்தார்கள்.

குழந்தைகளுக்கான போட்டிகள்:

இந்நிகழ்வுக்கு பிறகு, குழந்தைகளுக்கான போட்டிகள் நடைபெற்றன. குழந்தைகளின் வயதை நிர்ணயித்து இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.



அல்குர்ஆன் வசனங்களை ஓதும் போட்டியும், துஆக்கள் ஓதும் போட்டியும் நடைபெற்றன. இந்த போட்டிகளை சகோதரர்கள் அன்வர், பஷீர் அலி, இம்தியாஸ் புஹாரி ஆகியோர் நடத்தினார்கள்.

அறிவுரை:

இதனைத்தொடர்ந்து தம்மாம் இஸ்லாமிய வழிகாட்டு மையத்தின் மூத்த மார்க்கப் பேரறிஞர் மௌலவி நூஹூ மஹ்லரி அவர்களின் மார்க்க உரை நடைபெற்றது.



இவர்களின் உரையில் சுவனத்தை அடையும் முறைகளைப் பற்றி மிக அருமையான முறையில் விளக்கிக் கூறினார்கள்.

பரிசளிப்பு:

அதன் பின், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றிக்கு முயன்றவர்களுக்கும், கூடவே ஊக்குவிக்கும் பொருட்டு அனைத்து குழந்தைகளையும் பரிசளிப்பில் இணைக்கப்பட்டார்கள்.

இவர்களுக்கான பரிசுகளை மன்றத்தின் தலைவர் டாக்டர் முஹம்மது இத்ரீஸ், செயலாளார் ஜனாப் அகமது ரபீக், துணைத்தலைவர் ஜனாப் சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன், மௌலவி நூஹூ மஹ்லரி ஆகியோர் வழங்கினார்கள்.



கூட்ட நிறைவு:

பின்பு, மன்றதின் தலைவர் டாக்டர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள், வல்ல இறைவனுக்கும், கலந்து சிறப்பித்த அனைவர்களுக்கும், விருந்து அனுசரணை வழங்கிய சகோதரர்கள் ஜனாப் தல்.P.S.M. சேகு நூருத்தீன் மற்றும் ஜனாப் தம்மாம் இஸ்மாயில் ஆகியோருக்கும் நன்றிகள் கூறி, துஆவுடன் இனிதே நிறைவு செய்தார். அல்ஹம்துலில்லாஹ். இக்கூட்டத்தில், மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.




இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மாம் காயல் நல மன்றத்தின் முந்தைய (69ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஆகாயம் உள்ள வரை அழியாமல் வாழ வாழ்த்துக்கள்...
posted by AnbinalA (Jaipur) [19 March 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 39709

தினசரிக் காலண்டர் தாள் கூட என்னை கிழிப்பவனே...!
நீ என்ன செய்து கிழித்தாய்...? என கேட்ப்பது நமது காதில் விழுகிறது...

உண்மையில் கடல் கடந்து காயல் மக்களின் துயர் துடைக்கும் உங்கள் தம்மாம் காயல் நல மன்ற அனைவர்களுமே பாராட்டுக்கூறியவர்களே...

பொது சேவையை கடமையாக செய்தால் வெற்றி
பொது சேவையை கடமைக்காக செய்தால் தோல்வி

பணத்தை மட்டும் உயிராக நேசிப்பவர்கள்
இருக்கையில் மக்கள் மனதில் இறக்கிறார்கள்...
பொது சேவையை உயிர்மூச்சா நினைப்பவர்கள்
இறக்கையில் மக்கள் மனதில் இருக்கிறார்கள்...

உங்கள் பணி தொடர படைத்தவனிடம்
பிராத்திப்போமாக...ஆமீன்....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் சிறுமழை!  (17/3/2015) [Views - 2634; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved