Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:44:23 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16765
#KOTW16765
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 29, 2015
நடவடிக்கைகளில் இருந்து தப்பும் நகராட்சி அலுவலர்கள் (பாகம் 1): முன்னாள் ஆணையர் கண்ணையா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை?!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2625 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் பல ஆண்டுகளாக, பல்வேறு முறைக்கேடுகள் நடந்து வருகின்றன. சில முறைக்கேடுகள் உள்ளாட்சி துறைகளுக்கான தணிக்கை குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில முறைக்கேடுகள் தற்போதைய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், ஊழல் எதிர்ப்பு இயக்கம் போன்ற சமூக நல அமைப்புகள் மற்றும் சில சமூக ஆர்வாலர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வாங்கப்படாத கணினிக்கு வழங்கப்பட்ட காசோலை குறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ள செய்தியினை காயல்பட்டணம்.காம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.

லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறித்த மாலை முரசு (19-10-2015) செய்தி



இருப்பினும், நகராட்சியில் நடந்துள்ள பிற முறைக்கேடுகளில் மேல் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவை நிலுவையில் உள்ளன.

காயல்பட்டினம் நகராட்சியின் புதிய நிர்வாகம் பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த 4 ஆண்டுகளில், நான்கு நகராட்சி ஆணையர்கள் பதவியில் இருந்துள்ளனர். அவர்கள் வி.கண்ணையா (3 மாதங்கள்), வி.எஸ்.சுப்புலெட்சுமி (3 மாதங்கள்), ஜி.அசோக் குமார் (22 மாதங்கள்) மற்றும் காந்திராஜன் (21 மாதங்கள்) ஆவர்.

இந்த நால்வரில், புதிய நகர்மன்றம் பொறுப்பேற்கும்போது பதவியில் இருந்த ஆணையர் வி.கண்ணையா. நகராட்சி பொறியாளரான (MUNICIPAL ENGINEER) இவர் ஆணையர் பொறுப்பையும் கவனித்து வந்தார். ஜனவரி 2012 இறுதியில் இவர் மாற்றலானார்.

இவர் பொறுப்பில் இருந்த காலத்தில் (2011-12 நிதியாண்டு) பல்வேறு முறைக்கேடுகள் காயல்பட்டினம் நகராட்சியில் நடந்ததாக உள்ளாட்சி துறையின் தணிக்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. கடுங்குறைப்பாடு என வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த முறைக்கேடுகளினால் நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.



இது குறித்து, இதற்கு காரணமான ஆணையர் வி.கண்ணையா மீது நடவடிக்கை எடுத்து, அந்த தகவலை வழங்க, நகராட்சி நிர்வாக இயக்குனர் (DIRECTOR OF MUNICIPAL ADMINISTRATION), காயல்பட்டினம் நகராட்சிக்கு தெரிவித்தும், இது வரை எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

[தொடரும்]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்...
posted by N.S.E.மஹ்மூது ( காயல்பட்டணம்) [29 October 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42116

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


பாகம் – 1 என்று இருப்பதால் இன்னும் பல பாகங்கள் வரும், வந்தபின் அல்லது தேவைப்படும்போது கருத்து பதியலாம் என்று கருதுகிறேன்.

என்னுடைய எதிர்பார்ப்பு குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி அதிலேதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் – வெளியாக வேண்டும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [30 October 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42117

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பாகம் – 1 என்று தொடருவதால் வரும் இன்னும் பல பாகங்களில் வெளியாகும் பல மர்ம முடிச்சிகள் குறித்தான தகவல்கள் வெளி வந்த பின் அல்லது தேவைப்படும்போது கருத்து பதியலாம் என்று கருதிகிறேன்.

என்னுடைய எதிர்பார்ப்பு அன்றைய ஒப்பந்தப் பணியாளர் ஒருவர் நகராட்சியின் வசூல் மையத்தில் வசூலான மக்கள் வரிபணத்தை வங்கியில் செலுத்தாமல் (சுமார் 2.50 லட்சம்) ஆட்டையை போட்டது அது குறித்த விசாரணை தற்போது கிடப்பில் கிடப்பது தொடர்பானதாகவும் மற்றும் இன்றைய ஆணையாளர் சர்வே எண் 278/1 யில் ரகசியமாக தொடங்கப்பட்டு முடங்கி கிடக்கும் பயோ கேஸ் கட்டிட பணியை செய்து வந்த S K கோ நிறுவனத்திற்கு இதுவரை நகராட்சியால் அளிக்கப்பட்ட காசோலை தொகை / வங்கியின் பெயர் / தேதி மாதம் குறித்த கேள்விகளுக்கு ஆணையரின் பதில் மவுனமாக இருப்பதால் அது குறித்த புதையல் வெளிவரலாம் என எதிர்பார்க்கிறேன் – வெளியாக வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S.J SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [31 October 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42118

மூன்று மாத காலம் காயல் நகரமன்றத்தை ஆண்ட ஆணையாளர் கண்ணையா அவர்கள் பாகம் 1 இல் வரும்போது 27 மாத காலம் நகரமன்றத்தை முடக்கிய இன்றைய ஆணையர் எந்த பாகத்தில் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved