Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:16:42 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17862
#KOTW17862
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 3, 2016
கத்தர் கா.ந.மன்ற செயற்குழுவில் நகர்நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2539 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கத்தர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் நகர்நலத் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 83ஆவது செயற்குழுக் கூட்டம், 28.05.2016. சனிக்கிழமையன்று, கத்தர் மன்ஸூராவிலுள்ள காயல் நண்பர்கள் இல்லத்தில், மன்ற ஆலோசகர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தலைமையில், தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் முன்னிலையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் மீரான் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

நகர்நலன் குறித்த - செயற்குழு உறுப்பினர்களின் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 - மன்ற அபிமானியின் மறைவுக்கு இரங்கல்:



கத்தர் காயல் நல மன்றத்தால் அண்மையில் நடத்தப்பட்ட மாடித்தோட்ட பயிற்சி முகாம் உள்ளிட்ட - நகர்நலத் திட்டங்கள் அனைத்திலும் தன்னார்வத்துடன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் களப்பணியாற்றிய அன்புச் சகோதரர் அல்ஹாஜ் பாளையம் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிப் அவர்கள் அண்மையில் விபத்தில் காலமான செய்தி...

எம் மன்றத்தின் மூத்த உறுப்பினர் சோனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் மச்சான் கூஸ் ஷாஹுல் ஹமீத் ஸலீம் அவர்களின் மறைவுச் செய்தி...

ஆகியன எமக்கு மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளது. அன்னவர்களின் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்களது மண்ணறை - மறுமை நல்வாழ்வுகளுக்காக உளமாரப் பிரார்த்திக்கிறது.

அவர்களது குடும்பத்தாருக்கு எல்லாம்வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்கியருள இக்கூட்டம் உருக்கமுடன் பிரார்த்திக்கிறது.

தீர்மானம் 2 - பள்ளிச் சீருடை இலவச வினியோகம்:

நடப்பு கல்வியாண்டில், நகரிலுள்ள ஏழை - எளிய மாணவ-மாணவியர் 100 பேருக்கு, கத்தர் காயல் நல மன்றம், ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம் (KWAUK), சிங்கப்பூர் காயல் நல மன்றம் (KWAS), பஹ்ரைன் காயல் நல மன்றம் (BAKWA) ஆகிய அமைப்புகளுடன் (அவர்களின் ஒப்புதல் ஏற்கனவே பெறப்பட்டதன் அடிப்படையில்) இணைந்து, பள்ளிச் சீருடைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை, இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் நடைமுறைப்படுத்த இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

மன்றத்தின் இத்திட்டத்தில் இணைந்து செயல்படவும், இக்ராஃ மூலம் இத்திட்டத்தை செயல்படுத்திடவும் இசைந்துள்ள மேற்படி அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் கத்தர் காயல் நல மன்றம் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.

தீர்மானம் 3 - நகரின் முதல் சட்டமன்ற உறுப்பினருக்குப் பாராட்டு:

அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - காயல்பட்டினத்தின் முதலாவது சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றைப் பதிவு செய்துள்ள அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களை இக்கூட்டம் மனதாரப் பாராட்டுவதோடு, அவரது பணிகள் சிறக்க வாழ்த்திப் பிரார்த்திக்கிறது.

தீர்மானம் 4 - இமாம் - முஅத்தின் நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகைக்கு பங்களிப்பு:

தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) ஒருங்கிணைப்பில் கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் - நகர பள்ளிவாசல்களின் இமாம் - முஅத்தின் நோன்புப் பெருநாள் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தில் இணையவும், அவ்வகைக்காக 15 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்தும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 5 - சாதனை மாணவ-மாணவியருக்கு பாராட்டு:

அண்மையில் வெளியான SSLC, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளின்படி, காயல்பட்டினத்திலுள்ள பள்ளிகளில் பயின்று மாநில - மாவட்ட - நகர அளவில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற சாதனை மாணவ-மாணவியர் அனைவரையும் இக்கூட்டம் மனதாரப் பாராட்டி மகிழ்வதோடு, அவர்களின் உயர்கல்வியும், வருங்காலமும் சிறக்க வாழ்த்திப் பிரார்த்திக்கிறது.

அதே நேரத்தில், இம்முறை சுமார் 46 பேர் தேர்ச்சி பெறாமல் போனதையறிந்து இக்கூட்டம் கவலை கொள்கிறது. இது தொடர்பாக அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இக்ராஃ நிர்வாகி அல்ஹாஜ் ஏ.தர்வேஷ் முஹம்மத் அவர்களுடன் தொலைபேசியில் பேசப்பட்டுள்ளதையும் இக்கூட்டம் பதிவு செய்கிறது.

தீர்மானம் 6 - இஃப்தாருடன் வருடாந்திர பொதுக்குழு:

மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் இணைத்து, இன்ஷாஅல்லாஹ் வரும் 10.06.2016. அன்று நடத்திட இக்கூட்டம் தீர்மானிப்பதோடு, நிகழ்விடம் குறித்து உறுப்பினர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறாக தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஹாஃபிழ் ஏ.எச்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் காயல் நல மன்றம்)


கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய (79ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா) [03 June 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 43995

அனைத்துத் தீர்மானங்களிலும் மிகக் குறிப்பிடத்தக்க ஒன்று தீர்மானம் 5 ன் இரண்டாம் பத்தி தான். (முத்தாய்ப்பான அது, தனி தீர்மானமாக இருந்திருக்கலாம்)

கல்விப்பணிக்காக எண்ணிலடங்கா அமைப்புகளை நெறிப்படுத்தி வரும் நமதூரில் இந்த வருட 10 ஆம் வகுப்பு அரசுத் தேர்வில் 42 பேர்களும், +2 அரசுப் பொதுத்தேர்வில் 16 பேர்களும் தேர்ச்சி இழந்திருக்கின்றனர் என்பது எவ்வளவு வருத்தத்துக்குரியது....

10 ஆம் வகுப்புத் தேர்வில், LKMS & CMS மட்டுமே முழுத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

LK HSS - 31 [165 / 196]
CHSS. - 7 [71 / 78]
GGHSS - 2 [124 / 126]
MMHSS - 1 [33 / 34]
ZGHSS - 1 [79 / 80]

அதே போன்று, இந்த வருட +2 தேர்வில் 16 பேர் தேர்ச்சி இழந்திருக்கின்றனர்...

LK HSS - 14 [144/158]
MMHSS - 1 [23 / 24]
GGHSS - 1 [106 / 107]

விழாக்களிலும், நிகழ்ச்சிகளும் காட்டும் அதீத அக்கறையை விட, தேர்ச்சி விகிதம் படுவீழ்ச்சியில் வீழ்ந்துருக்கிறதே என்பதை உணர்ந்து, மேலும் வீழாவண்ணம் தாங்கிப் பிடிப்பதும், அதற்கான வழிமுறைகளைக் கையாள்வதும் தான் தகைமை. கல்விக்கான அமைப்பினை பல்லாண்டுக்கு முன்பே நெறிப்படுத்தி வந்துள்ள நாம் 2016ல் கூட தேர்ச்சி படுவீழ்ச்சியைப் பற்றி அலச வேண்டிய நிலையில் இருக்கிறோம் :-(

இது 100% என் தனிப்பட்ட எண்ணம், இந்த தேர்வு முடிவுகளைக் கண்டவுடன் தோன்றியது....

அலசத் துவங்குவோமா...?

தீர்வுகள் எட்டப்படும் இன் ஷா அல்லாஹ்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.K.Salih (Kayalpatnam) [03 June 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 43997

“விழாக்களிலும், நிகழ்ச்சிகளும் காட்டும் அதீத அக்கறையை விட, தேர்ச்சி விகிதம் படுவீழ்ச்சியில் வீழ்ந்துருக்கிறதே என்பதை உணர்ந்து, மேலும் வீழாவண்ணம் தாங்கிப் பிடிப்பதும், அதற்கான வழிமுறைகளைக் கையாள்வதும் தான் தகைமை. கல்விக்கான அமைப்பினை பல்லாண்டுக்கு முன்பே நெறிப்படுத்தி வந்துள்ள நாம் 2016ல் கூட தேர்ச்சி படுவீழ்ச்சியைப் பற்றி அலச வேண்டிய நிலையில் இருக்கிறோம் :-( ” C & P

மேற்கண்டது நண்பர் கத்தீபு அவர்களின் கருத்து. இதற்கு அடியேனின் பணிவான விளக்கம்:-

ப்ளஸ் 2வில் 900 மதிப்பெண்கள் எடுத்தவர்களும், 10ஆம் வகுப்பில் 300 மதிப்பெண்களைப் பெற்றவர்களும் காலரைத் தூக்கிப் பிதற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட், அதனுடன் இணைந்து (2006ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட) இக்ராஃ கல்விச் சங்கம், உலக காயல் நல மன்றங்களின் முழு ஒத்துழைப்புகளைப் பெற்று - அன்று முதல் இன்று வரை நடத்திய விழாக்களின் காரணமாக, இன்று 1200க்கு 1160 எடுத்த மாணவ-மாணவியரும், 500க்கு 490 எடுத்த மாணவ-மாணவியரும் தன் மதிப்பெண்கள் குறைந்துவிட்டதாகக் கண்ணீர் வடிப்பதை நேரில் ஆண்டுதோறும் பார்த்து வருகிறேன்.

உயர்மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியரையும் கூட இன்னும் பெற்றிருக்கலாமே என்று ஆதங்கப்பட வைத்தது இதுபோன்ற விழாக்கள்தான்!

“நான் கெட்ட கேட்டுக்கு எனக்கு 800 மார்க் போதும்” என்றிருந்த என்னைப் போன்ற கல்வித் தரம் கொண்ட மாணவ-மாணவியரை, “குறைந்தபட்சம் ஒரு 1000 மதிப்பெண்களையாவது பெற்றால், மேடையேறி மெடல் அணியலாம்” என்று சிந்திக்க வைத்ததும் இந்த நிகழ்ச்சிதான்!

“அதெல்லாம் சரிதான்! ஃபெயிலானவங்களுக்கு என்ன செஞ்சீங்க?” என்று கேட்டால், இலங்கை காயல் நல மன்றம் - இக்ராஃ கல்விச் சங்கம் இணைந்து, தேர்ச்சியைத் தவறவிட்ட மாணவர்களுக்கு ரகசியமாக சிறப்பு அழைப்புக் கடிதம் அனுப்பி, அவர்கள் வருட இழப்பின்றி படிப்பைத் தொடர வழிகாட்டவிருந்தனர். எனக்குத் தெரிந்து அந்நேரத்தில் ப்ளஸ்2வில் ஃபெயிலான 18 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். (அவர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதிமொழியோடு!) நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோ வெறும் 3 பேர் மட்டுமே! பார்க்க:-
http://www.kayalpatnam.com/shownews.asp?id=8643

“பெயிலான பிறகு அழைப்பதை விட, ஃபெயிலாகாமல் பாதுகாக்க என்ன முயற்சி எடுக்கப்பட்டது?” என்று கேள்வி எழலாம்.

மாணவ-மாணவியரின் எண்ணவோட்டங்கள், பலவீனங்களை - அவர்களை அன்றாடம் பார்த்து அறிந்துணர்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் கேட்டறிந்து, அதற்கேற்ப செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பார்க்க:-

http://www.kayalpatnam.com/shownews.asp?id=17112

“விழாக்களிலும், நிகழ்ச்சிகளும் காட்டும் அதீத அக்கறையை விட”
என்ற வாசகம் என்னைப் பெரிதும் பாதித்ததாலேயே இவ்வளவு விளக்கம் கூற வேண்டியதாயிற்று!

நண்பர் என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்குமாறும் வேண்டிக் கொள்கிறேன். நன்றி!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா) [03 June 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 43998

நன்றி அன்பின் நண்பர் ஸாலிஹ்...,

இது உண்மையில், யாரையும் தனிப்பட்ட நோக்கில் சுட்டும் வகையில் பதியப்பட்டதல்ல...

குறிப்பாக, ( மிக அருகிலிருப்பதனால்...) கல்வி,மருத்துவ மேம்பாட்டுக்காக எமது மன்றத்தலைவர் யூனுஸ் காக்காவின் நேரிய வழிநடத்தலில் அவற்றிற்கான குழுவினரின் இக்லாஸான சேவை உணர்வையும், இதுபோன்ற அனைத்து நலமன்றங்களின் உள்ளக்கிடக்கையை, தமது பல்வேறு பணிச்சுமைக்கு இடையிலும், செயல்வடிவமாக்குவதில் தன்னார்வப் பணியாற்றும் உங்களைப் போன்றோரின் பணிகளையும் (ஊரில் இருந்த காலங்களில்) அறிந்திருக்கிறேன்... அல்ஹம்து லில்லாஹ்...

ஆனால்..

கலைஞர் போல் புள்ளிவிபரக் கணக்கு பார்த்தோம் என்றால், இந்த தேர்ச்சி வீழ்ச்சி விகிதம் மிக அதிகம், அதுவும் கல்வி ஆர்வம் செறிவு பெற்றிருக்கும் நம் ஊரில்...

எங்கே இந்த பிழை...?

வெறுமனே, மாணவர்கள் மட்டும் இதற்கு காரணம் என்று சொல்லி விட இயலாது...

அலசுவோம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved