Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:50:33 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18120
#KOTW18120
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 23, 2016
வெள்ளிக்கிழமைகளில் மாதாந்திர பராமரிப்பு தவிர்த்திட முடிவு: நடப்பது என்ன? சமூக ஊடக குழும மனுவிற்கு மின்வாரியம் பதில்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2660 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடப்பது என்ன? வாட்ஸ் அப் குழுமம் சார்பாக - ஜூலை 4 அன்று - மாவட்ட ஆட்சியரிடம்,

காயல்பட்டினம் பகுதியில் - பண்டிகை தினங்களில் பலமுறை மின்வெட்டு ஏற்படுவது குறித்தும்,

வெள்ளிக்கிழமைகளில் மாதாந்திர பராமரிப்பு என நாள் முழுவதும் மின்வெட்டுகள் செய்யப்படுவது குறித்தும்,

காயல்பட்டினம் அப்பாபள்ளி - ரெட் ஸ்டார் அருகில் உள்ள மின்கம்பம் பழுதடைந்துள்ளது குறித்தும் - மனு வழங்கப்பட்டது.

இம்மனுவினை - குழுமம் சார்பாக அந்த குழும உறுப்பினர்கள் நெட்காம் புஹாரி, வக்கீல் ரபீக் மற்றும் முத்து இஸ்மாயில் ஆகியோர் சமர்ப்பித்திருந்தனர்.

இந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் - ஜூலை 18 அன்று மீண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் நினைவூட்டல் மனு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து - அந்த மனுக்களுக்கான பதில்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.

அந்த இரு மனுக்களையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மின்வாரியம் அதிகாரி,

>>> வெள்ளிக்கிழமைகளில் இனி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,

>>> அப்பாபள்ளி அருகில் உள்ள இரு மின்கம்பங்களில் ஒரு மின்கம்பம் - சிமெண்ட் கொண்டு பூசப்படும் என்றும், மற்றொரு மின்கம்பம் விரைவில் மாற்றப்படும்

என்றும் தெரித்துள்ளார்.

வெள்ளிக்கிழமைகளில் மாதாந்திர பராமரிப்பு கூடாது என்றும், பண்டிகை தினங்களில் மின்வெட்டு தவிர்க்கவேண்டும் என்றும் கொடுக்கப்பட்ட மனு



மேலே உள்ள மனு குறித்து மின்வாரியம் வழங்கியுள்ள பதில்



அப்பாபள்ளி - ரெட் ஸ்டார் சங்கம் அருகில் மின்கம்பம் பழுதடைந்துள்ள காட்சி



மின்கம்பங்களை சரிசெய்வது குறித்து மின்வாரியம் வழங்கியுள்ள பதில்



தகவல்:
நடப்பது என்ன? சமூக ஊடக குழுமத்தின் முகநூல் பக்கம்
https://www.facebook.com/nadappathuenna.kpm


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:. விடிவெள்ளியின் வெளிச்சம் !
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [24 July 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44294

'நடப்பது என்ன "குழுமத்தின் மற்றுமொரு மைல்கல் வெற்றி! மௌனமாகவே ஒரு புண்ணிய புரட்சி புடைசூழ வலம்வந்து கொண்டிருக்கிறது!

கண்ணிய மிகு காயல்பதி நெஞ்சங்களே- உங்களின் உள்ளக்கதவுகளையும், இல்லக்கதவுகளையும் திறந்து வைத்து வரவேற்க காத்திருங்கள்!

வேதனையை விலக்கும் விடிவெள்ளியின் வெளிச்சம் உங்களை நோக்கி கண்சிமிட்டுகிறது! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...தொடரட்டும் நல்ல முயற்சிகள்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [24 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44297

வாழ்த்துக்கள்.

பேருந்துகள் நமதூர் வழியாக செல்வதை தவிர்த்து வந்ததை கண்டித்து மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்து அதில் வெற்றி கண்டவர்கள் இப்போது வெள்ளிக்கிழமை, மின்கம்பம் பிரச்சினைகளை சம்பந்தப் பட்டவர்களுக்கு கடிதம் எழுதியும் நேரில் சென்றும் வலியுறுத்தி அந்த விஷயத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இந்த மாதிரி நல்ல விஷயங்கள் ஊருக்கும் பொதுமக்களுக்கும் நன்மை பயக்கும் விஷயங்களை கையில் எடுத்து அமைதியாக பணியாற்ற சமூக சேவை ஆற்ற வந்திருப்பவர்களை பாராட்டுகிறோம்.

இந்த வேலைகளுக்கு பொருளாதார உதவிகள் தேவைப் படுமே அதற்கு என்ன ஏற்பாடு செய்கிறீர்கள் என்பதையும் அறிய தாருங்கள். மக்கள் இலவசங்கள் வாங்கியே பழக்கப் பட்டு விட்டதால் உங்கள் கை காசுகளை செலவழிப்பதை பற்றி அவர்கள் கவலை பட மாட்டார்கள்.

கொஞ்ச நாளைக்கு இந்த சுய செலவு சேவை தொடரும். பின்னர் கையைக் கடிக்கும். எனவே மக்களிடமே இதற்கான குறைந்த பட்ச செலவு தொகையையும் வசூலிக்க ஒரு திட்டம் வகுத்து மக்கள் மத்தியில் அறிவியுங்கள். நிச்சயம் செய்வார்கள்.நேரம் ஒதுக்குவதும் அதற்காக மெனக்கெட்டு ஆட்சியரை அதிகாரிகளை சந்திக்க செல்வதும் பெரிய விஷயம்.

யார் மனமும் புண்படும்படி கருத்துக்கள் தெரிவிப்பதையும் விமர்சனம் செய்வதையும் எல்லோரும் தவிர்த்துக் கொள்வது நல்லது. செய்யும் பணி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, அவனே அதற்கு நற்கூலியும் தருவான் என்ற நல்லெண்ணத்தில் செய்யுங்கள். செய்வோரை பாராட்டுங்கள் என்று இணையதளத்தில் கருத்து பதிவு செய்வோரை வேண்டிக் கொள்கிறோம்.

அல்லாஹ் உங்கள் நல்ல சேவைகளை பொருந்திக் கொள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இறைவனிடத்தில் நடக்க போவது என்ன ...??
posted by முத்துவாப்பா (அல் கோபர்) [24 July 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44299

நடப்பது என்ன ...??? மறுமையில் இறைவனிடத்தில் நடக்க போவது என்ன ...?? என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு ... அஞ்சிவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவனுக்கே என்ற கொள்கையோடு காயலின் சமூக பிரச்சனைகளை கையில் எடுத்து துணிச்சலோடு போராடுவது கண்டு மிக்க மகிழ்ச்சி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:... கிரேட் ஜுபி...
posted by Koos Aboobacker (Riyadh) [24 July 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44300

Hats -Off to நடப்பது என்ன வாட்ஸ் அப் குழுமம்... அருமையான காரியங்களை செய்கிறீர்கள்... நம் ஊர் மக்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை முறையாக, அழகாக, விரைவாக முடித்து வைக்கிறீர்கள்... மிக்க நன்றி... தங்களின் பயணம் என்றும் வெற்றியில் முடியட்டுமாக ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வெற்றி இலக்கை எட்டுவோமாக!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [25 July 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44301

சகோதரர் மக்கி நூஹுத்தம்பி காக்கா அவர்களின் அன்பொழுகும் ஆதங்கம் தெரிகிறது. பொருளாதாரத்திற்கு இந்த குழுமம் என்ன செய்யப்போகிறது என்ற பெருந்தன்மை வினாவை எழுப்பி இருக்கிறீர்கள்! பாராட்டுக்கள் பெரியவர்களின் பண்பின் பிரதிபலிப்பு பிரகாசிக்கிறது!

இதே கேள்வியை இந்த குழும உறுப்பினர்களாலும் இதன் ஆதரவாளர்களாலும் கேட்கப்பட்ட கேள்விகள்தான்! அதற்கு அவர்களின் பதில் ஒரு மழுப்பலான பதிலாகவே இருந்தது.

அதாவது தேவைபடும் பொழுது கட்டாயம் கேட்கிறோம் என்பதே!

சில அமைப்புகள் போல வசூல் அமைப்பாகவே ஆகிவிடக்கூடாது என்ற எண்ணமோ, அல்லது ஆரம்பித்த ஒருசில மாதத்திலேயே மெது ,மெதுவாக இதற்கு தாருங்கள் ,அதற்கு தாருங்கள் என்ற பொச்சரிப்புக்கு பலியாகி விடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையின் காரணமாகவோ,(என்னமோ)

நம்முடைய முதல் இலட்சியம் நாம் எடுத்திருக்கும் நன்மையாக காரியத்தின் வெற்றி இலக்கே, பின்னர் மற்றைய விஷயத்தைப்பார்த்துக் கொள்ளலாம் என்று இந்த குழும முக்கிய நிறுவனர்களில் கண்ணியமான பதிலாலையே என்னைப்போன்ற பலரின் கைகளும் கட்டப்பட்டுவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை!

அல்லாஹ் உங்களுடைய பேருதவி புரியவேண்டும் என்ற எண்ணத்திற்குறிய கூலியைதந்தருள்வான்!.

இந்த குழுமம் எடுத்திருக்கும் ஊர் நன்மையான காரியங்களும் நல்லமுறையில் ஒற்றுமை உணர்வோடு ஒருங்கிணைந்து செல்லும் பாதையை வெற்றி இலக்கை அடையும் இடமாக ஆக்கியருள துவா செய்யவும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மாஷா அல்லாஹ் துஆக்களுடன் வாழ்த்துக்கள்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [25 July 2016]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44302

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

மாஷா அல்லாஹ் வாட்ஸ் அப் குழுமம் நமது ஊர்க்குக்கு நல்லதொரு கலங்கரைவிளக்கமாக செயல்படுகிறது அதன் ஒளியாற்றலை வல்ல நாயன் அல்லாஹ் உயர்த்தி அவர்களுடைய அணுகுமுறைகளை இலகுவாக்கி எளிதில் வெற்றியையடைந்து உறவுகளும்,ஊரும் நலமும்,வளமும் பெற்று நற்பயனடைய துஆசெய்துவாழ்த்துவோம் ஆமீன்.

ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்பதற்கு வாட்ஸ் அப் குழுமம் நல்லதொரு எடுத்துக்காட்டாக செயலாற்றிவருகிறது அவர்களுடன் நாமும் ஒன்றுகூடி குழுமத்தினருடன் உறுதுணையாக நின்று நமது உரிமைகளையும்,தேவைகளையும் செவ்வனே பெற்றுப்பயனடைவோம் ஏக நாயன் அல்லாஹ் நம் யாவருக்கும் இருலோக வெற்றியையும் தந்தருள்வானாக ஆமீன் இன்ஷா அல்லாஹ் அல்லாஹும்ம ஆமீன்.

நானென்ற இருளிலிருந்து நாமென்ற வெளிச்சத்திற்கு வருவோம் இன்ஷா அல்லாஹ் இறைவன் துணைபுரிவான்.ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved